சிங்காரவேலர்
சிங்காரவேலர், பா.வீரமணி, சாகித்திய அகாதெமி, விலை 50ரூ. விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைச் சிந்தனையின் முன்னோடியுமான சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 28/2/2018.
Read moreசிங்காரவேலர், பா.வீரமணி, சாகித்திய அகாதெமி, விலை 50ரூ. விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமைச் சிந்தனையின் முன்னோடியுமான சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 28/2/2018.
Read moreஅண்ணன்மார் சுவாமிகள், பொன்னன் சங்கர் வீர வரலாறு, பாஸ்கரதாசன், கொங்குநூல் பதிப்பகம், விலை 240ரூ. கொங்கு நாட்டின் வீரகாவியம், அண்ணன்மார் சுவாமிகள் என்று போற்றப்படும் பொன்னர் சங்கரின் வீரமும் புனிதமும் நிறைந்த வரலாறு. எழுத்து நயமும் விறுவிறுப்பும் கொஞ்சமும் குறையாத புதினமாகப் புனையப்பட்டிருக்கும் விதம் அருமை. நன்றி: குமுதம், 21/3/2018.
Read moreவட இந்திய வரலாறு, இர.ஆலால சுந்தரம், சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 400ரூ. இந்தியாவின் வடக்கே, ஹர்ஷரின் ஆட்சிக்காலத்துக்குப் பின் நடந்த இந்து மன்னர்களின் ஆட்சிக் கால வரலாறும், கஜினி முகமது தொடங்கி குத்புதீன் ஐபக் வரையிலான முஸ்லிம் அரசர்களின் வரலாறும் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கும் நூல். மத்திய மாநில போட்டித் தேர்வுகளுக்கான பாடநூல் என்று குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருந்தும். நன்றி: குமுதம், 21/3/2018.
Read moreபெரியநாயகம் பிள்ளை வரலாறு, தொகுப்பாசிரியர்: ஜே.சந்திரபால், மதுரை சென்டர் ஆப் சோஷியல் அண்டு கல்ச்சுரல் டிரஸ்ட், பக்.238, விலை ரூ.150; . மதுரை அமெரிக்க மிசன் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர் பெரியநாயகம் பிள்ளை (1846 – 1923). அவர் தனது கைப்பட எழுதிய வாழ்கைக் குறிப்புகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தனி மனிதரின் ஒருவரின் வாழ்க்கைக் குறிப்புகள் என்பதைத் தாண்டி, 19 ஆம் நூற்றாண்டின் தமிழக மக்களின் வாழ்க்கையை மிக அற்புதமாக இந்நூல் சித்திரிக்கிறது. போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து திருநெல்வேலி வரை பெரியநாயகம் […]
Read moreகடைசி முகலாயன், வில்லியம் டேல்ரிம்பிள், தமிழில் ரா.செந்தில், எதிர் வெளியீடு, பக். 712, விலை 750ரூ. கடைசி முகலாய மன்னரான ஜாபரின், அரசாட்சி முடிவு வந்த காலத்தை, மிகையின்றி, சுவாரசியமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். கடைசி முகலாய மன்னரின் வரலாறு என்பதன் வழியே, அன்றைய காலத்தையும், நெறிகளையும், ஆவணங்கள் துணையுடன் இப்புத்தகத்தில் நிரூபித்து உள்ளார். நன்றி: தினமலர், 20/1/2018.
Read moreஇந்தியாவின் இருண்ட காலம், சசிதரூர்; தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்; கிழக்கு பதிப்பகம், பக்.384; விலை ரூ.350/ முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சமஸ்தானங்களாகச் சிதறுண்டு கிடந்த பல பகுதிகளை பிரிட்டிஷார் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது. கைப்பற்றிய பகுதிகளின் பொருளாதாரத்தைச் சுரண்டி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் வளர்ச்சிக்கு அதைப் பயன்படுத்தினர். இந்திய பருத்தியைக் கைப்பற்றிக் கொண்டு சென்று, முழுமை அடைந்த உடைகளாகத் திரும்பவும் இந்தியாவுக்கு இறக்குமதி செய்தனர்'. ரயில் போக்குவரத்து வந்த பிறகு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இருந்த உபரிகள் சுரண்டப்பட்டன. நகர்ப்புற பெரும் வணிகர்கள், ஏற்றுமதியாளர்களுடன் இந்திய […]
Read moreஜெர்மனி, முனைவர் சொ.சேதுபதி, டாக்டர் நா.மகாலிங்கம் மொழி பெயர்ப்பு மையம், பக். 206, விலை 200ரூ. வரலாற்று சுவடு நிறைந்த ஜெர்மனியின் இலக்கிய வளம், சுற்றுலா பகுதிகள், பண்பாடு, நோபல் பரிசு பெற்றவர்கள் என, வார்த்தைகள் வழியே, வாசகர்களுக்கு, ஜெர்மனியை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். தமிழகத்திற்கு வந்த ஜெர்மானிய கிறிஸ்தவர்கள்; ஜெர்மனிக்குப் போய் வந்த தமிழர்கள் பற்றியும் தகவல்கள் உள்ளன. தேசங்களின் வரலாறு அறிய விரும்புவோருக்கு, இந்நுால் பயனளிக்கும். நன்றி: தினமலர், 10/1/2018
Read moreவரலாறு உணர்த்தும் அறம், வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 50ரூ. வரலாற்றை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? என்பதற்கான பலவித வழிமுறைகளை இந்த நூல் மூலம் நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். வரலாறு என்பது என்ன? எதுவெல்லாம் வரலாறாகப் பார்க்கப்படுகிறது? எவற்றையெல்லாம் வரலாறு வசதியாக மறந்து விடுகிறது என்பதை விரிவாக ஆராயும் நூல். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான வெ.இறையன்பு இதை எழுதியுள்ளார். போரின் போதும் மற்றும் குற்றங்களுக்கான கொடூர தண்டனைகள் போன்ற அறப்பிறழ்வுகளில் இருந்தும் எது அறம் […]
Read moreசோழமண்டலக் கடற்கரையும் அதன் உள்நாடும், எஸ்.ஜெயசீல ஸ்டீபன், தமிழில் ரகு அந்தோணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 273, விலை 250ரூ. கி.பி., 1500 –- 1600 காலத்திற்குட்பட்ட சோழ மண்டலக் கடற்கரையும், அதன் உள்நாட்டு விபரங்களும் அடங்கிய முனைவர் பட்ட ஆய்வேட்டைச் சார்ந்த நுால் இது. சோழ மண்டலப் பகுதியின் பொருளாதார, சமூகத்தை ஆய்வு செய்கிறது; இதற்காக உள்நாட்டு, அயல்நாட்டுத் தரவுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அக்காலக்கட்டத்தில் தக்க வரலாற்று விளக்க நுால்கள் இல்லாத நிலையில், கல்வெட்டுகளின் தேதிகளும் தெளிவில்லாத நிலையில், தென்னகக் […]
Read moreதமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800- 1500), நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், பக்.84, விலை ரூ.70. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நொபொரு கராஷிமா ஒரு கல்வெட்டியியலாளர்; சமூக வரலாற்று ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தவர். எ.சுப்பராயலு சமூக வரலாற்று ஆய்வாளர். இவர்களிருவரும் தமிழகத்தில் சோழர் காலத்தில் (பொ.ஆ. 800 -1500) நிகழ்ந்த சமூக மாற்றங்களை ஆய்வு செய்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.‘ ‘தமிழ்நாட்டில் தீண்டாதார்‘, ‘புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்‘ என்ற நொபொரு கராஷிமாவின் […]
Read more