பனை மரமே பனை மரமே

பனை மரமே பனை மரமே, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், விலை 425ரூ. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப் பதிவுகளையும் இந்நூல் கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்கால கல்வெட்டுகள் வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி – வாய்மொழி இலக்கியம் – நவீன இலக்கியம் வரை என பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

வியப்பின் மறுபெயர் வீரமணி

வியப்பின் மறுபெயர் வீரமணி, மஞ்சை வசந்தன், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, விலை 250ரூ. திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். ஒரு காவிய நாயகரின் வரலாற்றை, காவியமாகவே படைத்திருக்கிறார் மஞ்சை வசந்தன். புத்தகத்தை கையில் எடுத்தால், கீழே வைக்க மணம் வராது. அந்த அளவுக்கு சுவை, விறுவிறுப்பு. புத்தகத்தில் உள்ள மறக்க முடியாத சில தவல்கள் பிறந்து 11 மாதமே ஆகி இருந்த நிலையில் வீரமணியின் தாயார் மறைந்தார். அதன் பின் சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். இவருடைய இயற்பெயர் சாரங்கபாணி. […]

Read more

விடுதலைப் போர் தெரிந்த பெயர்கள் தெரியாத தகவல்கள்

விடுதலைப் போர் தெரிந்த பெயர்கள் தெரியாத தகவல்கள், ஆர்.பி.வி.எஸ். மணியன், அத்வைத் பப்ளிஷர்ஸ், பக். 200, விலை 120ரூ. இன்றைய தலைமுறையினருக்கு அந்நியர்களிடம் குறிப்பாக வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நம்நாட்டை மீட்டெடுக்க உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த நம் விடுதலைப் போராட்ட வீரர்களின் அருமை, பெருமைகளை நினைவூட்டுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. காரணம், தேச விடுதலை என்றால் என்ன, அந்நியர்களிடம் தேசம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது நாட்டில் நடந்த நிகழ்வுகள் என்ன, அதனால் மக்கள் அன்றாடம் அடைந்த துயரங்கள் என்ன… என்பன போன்ற […]

Read more

இந்தியாவின் இலட்சிய மகளிர்

இந்தியாவின் இலட்சிய மகளிர், வசந்தநாயகன், ஸ்ரீகுருஇராகவன் பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. மாலவனுக்குத் தொண்டு செய்த ஆண்டாள் முதல் மக்களுக்கு சேவை செய்த மதர் தெரசா, ஜெயலலிதா வரை இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த மங்கையர்கள், பதினேழுபேரின் சுருக்கமான வரலாறு. ஜான்சிராணியின் இயற்பெயர் மணிகர்ணிகா என்பது போன்ற பலருக்கும் தெரியாத தகவல்களும் உண்டு. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ. பயணிகளால்தான் பாதை உருவானது. அதுதான் உருண்டையான உலகின் இரு முனைகளை இணைக்க உதவியது. வாஸ்கோடகாமா, மார்கோபோலோ, கொலம்பஸ் என பன்னிரண்டுபேர் கடலோடிகளாகப் பயணித்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடல்வழிப் பாதைகளையும் அதன் வழிசென்று பல நாடுகளையும் கண்டுபிடித்த வரலாறு. கதைபோல் சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யம்! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.144, விலை ரூ.130. உலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் நூல். வணிகம், புதையல், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, தேடல் என பல்வேறு காரணங்களுக்காக எத்தனையோ மனிதர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், சரித்திரத்தின் பக்கங்களை வசீகரித்த குறிப்பிடத்தக்க 13 பேரின் பயணங்கள் குறித்து இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. வாஸ்கோடகாமா போர்ச்சுகலில் இருந்து இந்தியாவைத் தேடி செயிண்ட் கேப்ரியல் என்ற கப்பலில் பயணிக்கிறார்; முதல் மூன்று மாதங்கள் நிலமே கண்ணில் படவில்லை. எங்கு திரும்பினாலும் […]

Read more

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்.

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்., முனைவர் க.பன்னீர் செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை190ரூ. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை மானசீகத் தலைவராக வரித்துக் கொண்டுள்ள நுாலாசிரியர், ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை திரட்டி, 44 தலைப்புகளில் எம்.ஜி.ஆரின் பிறப்பு முதல் இறுதிக்காலம் வரை அவரது வரலாற்றை எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரின், 23 பக்க உயிலை கூட தேடிப்பிடித்து, ஒரு அத்தியாயத்தில் சேர்த்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்கு ஒரு நல்விருந்து இந்நுால்! – கே.சி நன்றி: தினமலர், 26/11/2017.

Read more

முதல் விடுதலை வீரர் பூலித்தேவர்

முதல் விடுதலை வீரர் பூலித்தேவர், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம்,  காவ்யா, பக். 285, விலை ரூ.280. ‘ஆங்கிலேயரை மட்டுமல்லாது, நாயக்கர்களையும், நவாபுகளையும் எதிர்த்துப் போராடியவர் பூலித் தேவர்’. 1715 இல் பிறந்தவரான பூலித்தேவர் 1750 இல் இன்னிசு துரையுடன் போரிட்டார். அதற்குப் பின் 1767 இல் நடந்த போரில் அவர் மரணமடைவது வரை தொடர்ந்து அந்நிய ஆதிக்கங்களுக்கு எதிராகப் போரிட்டார். முதல் சுதந்திரப் போர் வீரராக அவர் திகழ்ந்தார். முதல் சுதந்திரப் போர் வீரர் பூலித்தேவரா, கட்டபொம்மனா என்ற கேள்விக்கு இந்நூல் விடையளிக்கிறது. இந்நூலில் துர்க்காதாஸ் […]

Read more

சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள்

சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள், பி.ஆர்.நடராஜன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ்(பி)லிட், விலை150ரூ. திருப்பூர் என்றதுமே கொடிகாத்த குமரனின் நினைவுதான் எல்லோருக்கும் வரும். கொடுங்கோல் அரசு புரிந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த சுதந்திரப்போரில் கலந்துகொண்ட திருப்பூர் குமரன் உள்ளிட்ட பல தியாகிகளின் வரலாற்றுத் தொகுப்பு. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

காந்தி வழியது உலகம்

காந்தி வழியது உலகம், பேராசிரியர் இராம் பொன்னு, சர்வோதையா இலக்கியப் பண்ணை, விலை 150ரூ. அகிம்சை வழியில் போராடி, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் மகாத்மா காந்தி. காந்தியின் அடிச்சுவட்டில், அமைதியான முறையில் தங்கள் நாட்டுக்கு பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. கறுப்பின மக்களின் விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையில் சித்ரவதை அனுபவித்தவர் மாண்டேலா. அவருடைய வாழ்க்கை வரலாறு உள்ளத்தை உருக்குகிறது, மற்றும் மார்டின் லூதர்கிங், தலாய்லாமா, “எல்லை காந்தி” கான் அப்துல் கபார்கான் உள்பட மொத்தம் 8 […]

Read more
1 32 33 34 35 36 104