கவியரசு கண்ணதாசன்

கவியரசு கண்ணதாசன், க.ஜெய்சங்கர்,  வசந்தவேல் பதிப்பகம், விலை 100ரூ. தமிழ்த் திரைப்படங்களுக்கு 5 ஆயிரம் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற கண்ணதாசன் வெறும் கவிஞர் மட்டும் அல்ல. கதை – வசனம், நாவல், வாழ்க்கை வரலாறு, திரைப்படத் தயாரிப்பு, அரசியல்… இப்படி பல துறைகளில் முத்திரை பதித்தவர். “நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் மரணம் இல்லை” என்று தன்னம்பிக்கையுடன் பாடினார் என்றாலும், அது உண்மை. கண்ணதாசனின் பாடல்கள் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது மட்மல்ல, என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும். கண்ணதாசன் வாழ்க்கையும் திருப்பங்கள் நிறைந்தது. […]

Read more

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்

வரலாற்று நாயகன் எம்.ஜி.ஆர்., முனைவர் க.பன்னீர்செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், விலை 190ரூ. ஒரு துணை நடிகராக சினிமா உலகில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர். கடும் உழைப்பினால் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் ‘வசூல் மன்னன்’ ஆனால். கலைஞருடன் ஏற்பட்ட மோதலால் தி.மு.க. வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை தொடங்கி, ஆட்சியைக் கைப்பற்றினார். 10 ஆண்டுகள் தமிழக முதல்- அமைச்சராக பதவி வகித்து, புகழின் உச்சியில் இருக்கும்போதே மறைந்தார். இது ஒரு புறம் இருக்க, துப்பாக்கியால் சுடப்பட்டு, யமனுடன் போராடி வெற்றி பெற்றார். ஏழை எளிய மக்களுக்கு உதவி, […]

Read more

பெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு)

பெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு), விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், விலை 110ரூ. பெருந்தலைவர், படிக்காத மேதை, பச்சைத் தமிழர், கர்ம வீரர், கறுப்பு காந்தி, கிங் மேக்கர் என்று மக்களால் மகிழ்வோடும், பெருமையோடும் அழைக்கப்பட்டவர்  காமராஜர். தனக்கென எதையும் தேடாமல் ஏழை மக்களின் நல்வாழ்வு மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு இறுதி வரை ஏழைப் பங்காளனாக வாழ்ந்தவர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். சுதந்திரம் பெற்ற பிறகு 9 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு முன்மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டியவர். ‘இன்றைக்கு […]

Read more

சிவகங்கைச் சரித்திரக் கும்மி

சிவகங்கைச் சரித்திரக் கும்மி, முனைவர் ஆ.மணி, காவ்யா, விலை 750ரூ. இந்திய மண்ணில் வெள்ளையர்களின் ஆதிக்கத்தைக் கண்டு பொறுக்காமல், விடுதலைக்காக போராடியவர்களில் முன்னோடியானவர் மருதுபாண்டியர். முக்குளத்தில் பிறந்து, சிவகங்கைக்கு வந்த மருது சகோதரர்கள் வேலு நாச்சியாருக்கு உறுதுணையாக இருந்து, அவரை ராணியாக அரியணையில் ஏற்றி, தளபதியாகவும் அமைச்சராகவும் இருந்தனர். அரசியல் மோதலினால் 1799ல் ஆங்கிலேயர்களுடன் போரிட்டு, 1801-ல் தூக்கிலிடப்பட்டனர். மருது சகோதரர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கும்மிப் பாடல்களாக மக்கள் கொண்டாடினார்கள். அவ்வகையில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிவகங்கை சரித்திரக்கும்மியை 63 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் […]

Read more

தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள்

தெரிந்த ஈரோடு தெரியாத செய்திகள், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், பக். 136, விலை 130ரூ. இவ்வூருக்கு இவ்வளவு பெருமைகளா என்று வியக்க வைக்கும் செய்திகள் ஏராளம். குறிப்பாக, நம் தேசப்பிதா காந்தி, நான்கு முறை ஈரோடுக்கு வந்துள்ளார் என்ற செய்தி, நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாத ஒன்று. இந்தியாவின் தொன்மையான பாலங்களில் காளிங்கராயன் வாய்க்காலும் ஒன்று உள்ளிட்ட தகவல்களைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 8/10/2017.

Read more

அழிவின் விளிம்பில் அந்தமான்

அழிவின் விளிம்பில் அந்தமான், பேரா.பொ.முத்துக்குமரன், முனைவர் ம.சாலமன் பெர்னாட்ஷா, என்.சி.பி.ஹெச்., விலை 370ரூ. இயற்கையின் தாய்மடியாக திகழ்ந்த அந்தமான் தீவு பற்றிய முழுமையான ஆவணம் இந்நூல். இயற்கை வளமிக்க ஒரு தீவு, பேராசையும் சுயநலமும் மட்டுமே கொண்ட மனிதர்களின் ஆக்கிரமிப்பால் இன்றைக்கு சிதைந்துபோன அவலத்தை தக்க வரலாற்று ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. வரலாற்றுச் சுவடுகளில் சோழர்களும் சைலேந்திர அரசர்களும் பலமுறை கடந்து சென்றபோதெல்லாம் சிதைவுறாத இந்த பூமி, ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின் எப்படியெல்லாம் சூறையாடப்பட்டது என்பதை தெளிவாக இந்த நூல் எடுத்துரைத்துள்ளது. படங்கள், வரைபடங்கள் யாவும் […]

Read more

நதியோடு நாமும்

நதியோடு நாமும், இராஜேஸ்வரி கோதண்டம், நிவேதிதா பதிப்பகம், விலை 160ரூ. தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலிருந்து நல்ல பல நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கும் ‘ராஜம்பாட்டி’ (இதுதான் நாவலாசிரியரின் புனைபெயர்) இந்திய நதிகளின் போக்கிலேயே தானும் பயணித்து, சுவைபட இந்நூலை எழுதியுள்ளார். கங்கை, ஹுக்ளி, கோதாவரி, கிருஷ்ணா, வைகை என இந்திய நதிகள் பலவற்றைப் பற்றியும் மனம் தோய்ந்து எழுதியுள்ளார். கங்கை பாயும் காசி பற்றி எழுதுகையில், மகாகவி பாரதியார் அங்கு வாழ்ந்த காலத்தைப் பற்றியும் சேர்த்தே பதிவு செய்துள்ளார். […]

Read more

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 175ரூ. சென்னை மாநகரின் முக்கிய அடையாளம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1640ம் ஆண்டு, வர்த்தக நோக்கில் இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் பாதுகாப்புக்காக கட்டிய கோட்டை இது.இன்று, தமிழக அரசு நிர்வாகம் செய்யும் முக்கிய கோட்டையாகவும் விளங்குகிறது.  அத்துடன், இந்திய ராணுவக் குடியிருப்பு மற்றும் இந்திய கடற்படை ஆகியவையும் இங்கு தான் அமைந்துள்ளன. பிரஞ்சுப் படையினர் இரு முறை ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டு, இக்கோட்டையைக் கைப்பற்றிய வரலாறும் இருக்கிறது! நானுாறு […]

Read more

பியாண்ட் டவுட் – எ டோஸியர் ஆன் காந்தி’ஸ் அசாசினேஷன்

பியாண்ட் டவுட் – எ டோஸியர் ஆன் காந்தி’ஸ் அசாசினேஷன், தொகுப்பு அறிமுகவுரை டீஸ்டா செடல்வாட், தூலிகா புக்ஸ், விலை 550ரூ. எம்மானை வீழ்த்திய மாயமான்! இந்திய நாட்டின் விடுதலைக்கு முன்பாக வேற்றுமைகளைக் கடந்து கோடானு கோடி மக்களை அணி திரட்டிய அண்ணல் காந்திக்கு எதிரான உருவான விஷமிக்க கசப்புணர்வு, அவர் காலம் எல்லாம் உறுதிபட முன்வைத்த கருத்துகளை அனைத்தையும் மறுதலித்தது ஆகிய அனைத்தையும் நினைவுபடுத்திக் கொள்வதன் மூலமே அண்ணலின் படுகொலையின் பின்னேயுள்ள அரசியல் தன்மையை நம்மால் உணர முடியும். கொலையுண்டவரின் மீது பழி […]

Read more

நொய்யல் இன்று பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்

நொய்யல் இன்று பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம், கா.சு.வேலாயுதன், சப்னா புக் ஹவுஸ், பக்.206, விலை ரூ.140. வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் தோன்றி வரும் ஆறுதான் நொய்யல் ஆறு. நீலியாறு, கோவை குற்றாலம், வைதேகி நீர் வீழ்ச்சி ஆகியவைதான் நொய்யல் ஆறாக மாறுகின்றன. இன்று காய்ந்து கிடக்கும் இந்த ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு பலமுறை ஏற்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டபோது, அவரே நேரடியாக வெள்ளநீரில் இறங்கி நடந்து மக்களைச் சந்தித்திருக்கிறார். இப்போது நொய்யல் ஆற்றின் பல பகுதிகள் […]

Read more
1 34 35 36 37 38 104