சர்தார் வல்லபாய் படேல்

சர்தார் வல்லபாய் படேல், அ.செல்வமணி, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 458, விலை 280ரூ. அசோகர், கனிஷ்கர், சந்திர குப்தர், சாணக்கியர், சத்ரபதி சிவாஜி, மேவார்ராணாக்கள், தாந்தியோதோபி, நானாசாகிப் போன்ற மாவீரர்கள் இந்த பாரத தேசத்தை வலிமைமிக்க நாடாக ஆக்க எடுத்த முயற்சிகள் தனித்தனியானவை. தனித்துவமானவை. ஆனால் பிரிந்து கடந்த இந்த பாரதத்தை செம்மைப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த மாவீரர் சர்தார் வல்லப பாய்படேல் என்ற ஒரு தனி மனிதரே. அவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாகத் தரும் நூல் இது. -இரா. […]

Read more

சங்ககால மறவர்

சங்ககால மறவர், செ.மா. கணபதி, சங்கத் தமிழ்ப் பதிப்பகம், பக். 640, விலை 400ரூ. சங்க காலத்தில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளை சிற்றரசர், குறுநிலைத் தலைவர் குடிகள், சிறுகுடிகள், பதினெண்குடிகள் என வகைப்படுத்தியுள்ளனர். இவர்களைப் பற்றி சுருக்கமாக இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்ககால மறவர்களின் போர் ஒழுக்கங்களையும், போர் முறைகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் எடுத்துரைப்பதற்காகவே இயற்றப்பட்டது புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூல். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இலக்கியங்களில் உள்ள சங்ககால மறவர் பற்றிய செய்திகளே இந்நூலில் அதிகம் இடம்பெற்றுள்ளன. பெருங்கற்காலச் சமுதாயம் […]

Read more

ஹிட்லரின் வதை முகாம்கள்

ஹிட்லரின் வதை முகாம்கள், மருதன், கிழக்கு, பக். 232, விலை 200ரூ. அறம், சட்டம், சுதந்திரம், உரிமை, மனித நேயங்களை உடைத்து, அதில், வதைமுகாம்கள் எழுப்பப்படுகின்றன. இதற்கு, வலுவான பேரினம், வலுவற்ற சிற்றினத்தை நசுக்குவது என்னும் சித்தாந்தமே, பெரிதாக உள்ளது. நாஜிகள், உலக யூதர்களை, ஐரோப்பிய வதை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்ததோடு அவர்களை கொன்றும் குவித்தனர். அப்படிப்பட்ட ஹிட்லரின் வதை முகாம்களை படம் பிடிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

பேரரசன் அசோகன்

பேரரசன் அசோகன், சார்லஸ் ஆலன், தமிழில் தருமி, எதிர் வெளியீடு, விலை 400ரூ. ‘சாலையெங்கும் மரங்களை நட்டார் அசோகர்’ என படித்தறியாத சிறுவர்கள் இங்கே எவரும் இருக்க முடியாது. அத்தகைய பேரரசன் அசோகனின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கிறது இந்நூல். அசோகன் வெறும் மன்னர் மட்டுமில்லை, அவனது மனச்சித்திரங்களாக காணக்கிடைப்பது ஆச்சர்யமூட்டுகிறது. அவர் ஒரு தேசாந்திரியாக இருந்திருக்கிறார். அவரது பயணங்கள் விசாலமானவை. வாழ்ந்த இடமே மறந்து போகிற அளவுக்கு பயணப்பட்டிருக்கிறார். அனைத்து மதங்களுமே மரியாதைக்குரியவை என நினைத்து வந்திருக்கிற அசோகனின் பெருந்தன்மை நினைவுகூரத்தக்கது. […]

Read more

குறிச்சி

குறிச்சி, காமராசு, காவ்யா,  பக். 244, விலை ரூ. 240. வரலாறு என்றாலே ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கியதுதான். நம்மைச் சுற்றி உள்ள இடங்களின் பின்னணியிலும் வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்த தகவல் பெட்டகமாக இந்த நூல் வெளியாகி உள்ளது. அத்ரி மலையில் உருவான கங்கை, நெல்லையப்பர் கோயிலில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான மணி, மணல் மூடிய மணல் மாதா ஆலயம், திருப்புடைமருதூர் கோயிலில் உள்ள மரச்சிற்பங்கள், பொதிகை மலையில் சித்தர்கள் பயன்படுத்திய […]

Read more

வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள்

வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் , ஜெகாதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம்,  பக்.128, விலை 80ரூ. வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் ஏற்கெனவே அ.கி. பரந்தாமனார் எழுதிய “மதுரை நாயக்க மன்னர் கால வரலாறு’‘ என்றநூலின் சுருக்கமாகவே இந்த நூல் உள்ளதாகக் கொள்ளலாம். வரலாற்றுச் செய்திகளை எந்த நூலாசிரியர் எழுதினாலும் ஒரே மாதிரியாகத்தான் விவரிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வரலாற்றை விவரிக்கும் முறையில் இந்நூலாசிரியர் தனது தனித்துவத்தை நிலைநிறுத்த தவறிவிட்டார் என்றே கூற வேண்டும். நூலில் ஆறுதலான விஷயங்களும் ஆங்காங்கே உள்ளதை மறுக்க […]

Read more

எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு

எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு, ஜோ.சம்பத் குமார், நெய்தல் பதிப்பகம், பக்.208, விலை ரூ.130. “பிரான்சில் ஒயிட் எல்லீஸ்‘’ தமிழ் ஒலிக்கேற்ப தன் பெயரை “எல்லீசன்‘’ என்று மாற்றிக் கொண்டவர். திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இவர், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறைத் துணைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், மசூலிப்பட்டின மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்டிரேட், நிலத்தீர்வை ஆட்சியர், சென்னை ஆட்சியர் முதலிய பல உயர் பதவிகளை வகித்தவர். தம் வாழ்நாளில் பெரும் பகுதியைச் சென்னையில் கழித்தவர். திருக்குறள் மேல் கொண்ட விருப்பத்தால், திருவள்ளுவரின் […]

Read more

பண்டைய இந்தியா

பண்டைய இந்தியா, (எதிர்நிலை கருத்துக்களுக்கான மறுப்புகள்), ஆர்.எஸ். சர்மா, தமிழில் சுவிதா முகில், புதுமை பதிப்பகம், விலை 35ரூ. கடந்த, 1977ல், ‘பண்டைய இந்தியா’ எனும் வரலாற்று நூல் ஆர்.எஸ். சர்மாவால் எழுதப்பட்டது. கல்வி ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலில், பிளஸ் 1 வகுப்பு வரலாற்று பாடப்புத்தகமாக பதிப்பிக்கப்பட்டது. இதில், பண்டைய இந்திய வரலாற்றை மிக எளிமையாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் எழுதிய நூல் பண்டைய இந்தியா. அதன் தமிழாக்கம் இது. நன்றி: தினமலர், 17/1/2017.

Read more

நினைவலைகளில் பாவேந்தர்

நினைவலைகளில் பாவேந்தர், கவிஞர் பொன்னடியார், வசந்தா பதிப்பகம், விலை 220ரூ. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்த நூல். காரணம், இதை எழுதியவர் பாரதிதாசனின் பிரதான மாணவரும் புரட்சிக்கவிஞரின் இறுதிக்காலம் வரை அவரது நிழலாக இருந்தவருமான பொன்னடியார். பாரதிதாசனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை, உள்ளத்தைத் தொடுகிற விதத்தில் விவரித்துள்ளார். “பண்டியன் பரிசு” என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு பாவேந்தர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அப்போது நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை இந்நூலில் ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளன. 1962-ம் ஆண்டில், […]

Read more

குளத்தூர் ஜமீன் கதை

குளத்தூர் ஜமீன் கதை, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, விலை 175ரூ. தமிழ்நாட்டின் முந்தைய ஜமீன்தார்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அதில் மக்களுக்கு நெருக்கமாகவும், அணுக்கமாகவும் வாழ்ந்தவர்கள் பலருண்டு. அவர்களை உள்ளது உள்ளபடி எழுதிப்போவதில் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னணியில் இருக்கிறார். ஆடம்பரம் இல்லாத எழுத்து அவரிடம் இருக்கிறது. பரபரக்கிற எளிய மொழி கைவசம் இருக்க, முழு வீச்சில் குளத்தூர் ஜமீன் கதையை எழுதியிருக்கிறார். ஜமீன்தார்களின் நேர்த்தி, நடைமுறை, பழக்கவழக்கங்கள் என எல்லாமே 162 பக்கங்களில் பரவிக்கிடக்கிறது. அவர்கள் பயன்படுத்திய ராலே சைக்கிள், கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. […]

Read more
1 38 39 40 41 42 104