தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும்

தடம் பதித்த தலைவர்கள் நினைவுகளும் நினைவகங்களும், எஸ். பி. எழிலழகன், சுரா பதிப்பகம், விலை 250ரூ. நூலாசிரியர் எழிலழகன் செய்தித்துறை அனுபவம் மிக்கவர் என்பதால், தமிழக மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்க வேண்டிய தகவல்களை, இந்த நூலில் சிறப்பாக தொகுத்திருக்கிறார். நாட்டுப்பற்றுமிக்க கருத்துக்கள், வரலாறு பேசும் தகவல் இதில் அடக்கம். ஆகவே, முதல் நூல் என்ற கருத்தை விட, கருத்துக்கள் கோர்வையாக உள்ளன. தமிழக அரசு பல்வேறு தலைவர்களின் நினைவகங்களை உருவாக்கிய போதும், அதன் தொடர்புடைய, தமிழக தலைவர்களை வரலாற்றுப் பார்வையில், இவர் பார்த்து […]

Read more

புனிதர் அன்னை தெரசா

புனிதர் அன்னை தெரசா, குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. கிறிஸ்தவ மதத்தில் இறை அருள் பெற்றவருக்கு, கத்தோலிக்க திருச்சபையால் வழங்கப்படுவதே ‘புனிதர்’ பட்டம். சமீபத்தில் அத்தகைய பட்டத்தைப் பெற்றவர் மறைந்த அன்னை தெரசா. தவிர, இவர் உலகின் மிக உயர்ந்த பரிசான அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றவர். அன்னை தெரசா, ‘நான் ஒரு இந்தியப் பெண். இந்தியா எனது நாடு. இந்தியர்கள் எனது சகோதரர்கள்’ என்று முழங்கியவர். இப்படி இந்தியாவுக்குப் பல பெருமைகளை சேர்த்துள்ள இவர் எப்படி இந்தியா […]

Read more

பாரதியார் சரித்திரம்

பாரதியார் சரித்திரம், பாரதியின் துணைவியார் செல்லம்மாள் பாரதி, அழகு பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. ‘‘அந்த நாளில் ‘கல்யாணராமன் ஸெட்’ என்ற கம்பெனி நடத்திய, ‘துரோபதி துகிலுரிதல்’ என்ற நாடகம் பாரதியின் மனதைக் கவர்ந்தது. பின்னாளில் உலகத்தார் வியக்கும் வண்ணம், அவர் இயற்றிய பாஞ்சாலி சபதத்திற்கு, சிறுவயதில் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியே காரணமாயிருந்து இருக்கிறது,’’ (பக்.23). ‘ராமாவதாரத்தில் கூனிப் போகும்படி செய்து, கூனியின் கூனலைக் கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் நிமிர்த்தினான். தன் கவிதா சக்தியால், மின்சார சக்தி கொண்ட பாக்களால், தமிழகத்தின் கூனலைப் பாரதி […]

Read more

குபேர் புதுச்சேரிப் புயல்

குபேர் புதுச்சேரிப் புயல், வில்லியனூர் பழனி, கனிமொழி வெளியீட்டகம், விலை 80ரூ. வெள்ளையரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, புதுச்சேரி பிரெஞ்ச ஆட்சியின் கீழ் இருந்தது. அது, பிரான்சு நாட்டிடம் இருந்து விடுதலை பெறவும், இந்தியாவின் ஒரு மாநிலமாக அமைக்கப்படவும் காரணமாக விளங்கியவர் குபேர். அதுபற்றிய விவரங்களை தெளிவாக விளக்குகிறது இந்நூல். புதுச்சேரி வரலாற்றை அறிந்து கொள்ள முக்கியமான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

அறத்தந்தை அண்ணாமலை அரசர்

அறத்தந்தை அண்ணாமலை அரசர், மு. அருணாசலம்பிள்ளை, முல்லை பதிப்பகம், பக். 144, விலை 100ரூ. அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தை நிறுவி, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி ஊட்டிய தனிப்பெரும் வள்ளல் டாக்டர் இராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தமிழ்மக்களும் மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்ட நூல். அண்ணாமலை அரசரின் கல்விப் பணியும் பொதுப் பணியும் பொதுப் பணியும் உலகம் நன்கு அறிந்த ஒன்றே என்றாலும் எதிர்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்து அவர்களை நெறிப்படுத்தும் நூல். நன்றி: குமுதம், 5/10/2016.

Read more

சின்னமனூரிலிருந்து சீனாவுக்கு

சின்னமனூரிலிருந்து சீனாவுக்கு, முனைவர் இரா. மனோகரன், காவ்யா, பக். 246, விலை 225ரூ. பயண நூல் ஒன்றை நாட்குறிப்புப் போல் எழுதி புதுமை செய்துள்ளார் முனைவர் இரா.மனோகரன். மஞ்சள் ஆறு பாயும் சீனாவைப் பற்றி தமிழருக்குத் தெரிவிக்கும் நூல் இது. பணி ஓய்வு பெற்றதும் சீனாவுக்குப் போய் நமக்காக அந்தப் பயண வரலாற்றைப் படைத்துத் தந்துள்ளார். நம் வீட்டின் வரவேற்பறையைப் போல் பராமரிக்கப்படும் சீனாவின் பொதுக் கழிப்பிடத்தையும் டாக்சிக்காரர் மீட்டர் கட்டணம் மட்டும் வாங்குவதையும் பார்க்கும்போது நமக்குப் பொறாமையாகத் தான் இருக்கிறது. சீனாவின் பாரம்பரியத்தை […]

Read more

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், பக். 96, விலை 85ரூ. மெட்ராஸ்காரர்கள் அயோக்கியர்கள் போலவும், அவர்கள் பேசும் மொழி கொச்சையானது என்றும், இந்த நகரத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் பேசுவது இந்த மண்ணின் பூர்வக்குடிகளை கேலி செய்வதாகும். எங்கெங்கிருந்தோ இந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்த, 90 சதவீதம் பேர் செய்யும் தவறுகளை, மெட்ராஸ் மக்கள் சுமக்கின்றனர்’ என, சித்திரை வெயிலாய் வறுத்தெடுக்கிறார், சென்னைவாசியான தமிழ்மகன். தமிழன் பெயரோடு, ‘துரை’ சேர்ந்த வரலாற்றிற்கு, வள்ளிமலை சுவாமிகளே காரணமாம். ஆம்… ஆங்கில புத்தாண்டில், […]

Read more

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், பக். 231, விலை 135ரூ. தமிழ்நாட்டை கி.பி. 300 முதல் கி.பி. 600 வரை களப்பிரர்கள் ஆண்டார்கள் என்று அறியப்படுகிறது. இந்த 300 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் வரலாறு எப்படி இருந்தது என்பதை அறியாத நிலை வரலாற்று ஆய்வாளர்களுக்கே இருந்து வந்தது. அதனால் அந்த காலகட்டத்தை ‘இருண்ட காலம்’ என்று வர்ணித்தனர். ‘வேள்விக்குடிச் செப்பேடு’ மூலமாக களப்பிரர் பற்றிய செய்திகளுக்கு விடை கிடைத்தது. அவர்கள் எங்கிருந்து வந்தனர்? அவர்கள் தமிழகத்தினுள் படையெடுத்த காலம், […]

Read more

லெனின்

லெனின், ஜீவபாரதி, குமரன் பதிப்பகம், விலை 100ரூ. மொழி பெயர்ப்பாக அல்லாமல், விரிவான தகவல்களுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட லெனின் வாழ்க்கை வரலாற்று நூல். அவர் வரலாறு ஒரு தனி மனித வரலாறாக இல்லாமல் புரட்சியின் வரலாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வரலாறாக அறியப்படுகிறது. லெனின் வரலாறு புரட்சியின் வரலாறாகவும், புரட்சியின் வரலாறு லெனின் வரலாறாகவும் விளங்கும் இந்த அற்புதத்தை ஆரவாரமற்ற நடையில் எளிதாகப் புரியும் விதத்தில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் ஜீவபாரதி. இன்றைய சூழலில் வளரும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் இனிய அரிய வரலாற்று […]

Read more

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் எழுபது மடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் எழுபது மடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு, ஆர். வைத்தியநாதன், ஸ்ரீசங்கராலயம், பக். 208, விலை 250ரூ. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தை நிர்மாணித்த ஆதிசங்கரர் முதல் அம்மடத்தின் தற்போதைய பீடாதிபதிகளான ஜயேந்திரர், விஜயேந்திரர் வரையிலான எழுபது குருமார்களின் வரலாற்றை எல்லாரும் புரிந்து கொள்ளும் வண்ணம் (குருரத்னமாலிகா பாணியில்) எளிய தமிழில் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். ஒவ்வோர் ஆச்சார்யாருடைய பூர்வாசிரம பெற்றோர், பிறந்த ஊர், ஆற்றிய பணிகள், முக்தியடைந்த ஊர், நாள் முதலிய செய்திகளைத் திரட்டிக் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க பணி. பெரும்பாலான ஆச்சார்யார்களைப் பற்றிய […]

Read more
1 40 41 42 43 44 104