மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர், எஸ்.எல்.வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், பக். 312, விலை 235ரூ. ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் ஒன்றுதான்… கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டரின் வாழ்க்கையைப் படிப்பதும் ஒன்றுதான் என்ற வரிகளுடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை கட்டுரை வடிவிலேயே பார்த்து பழகிய நமக்கு, இந்தப் புத்தகம் சற்று மாறுபட்டதாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வையே தருகிறது இந்நூல். 33 யுகங்கள் எடுத்தாலும் அடைய முடியாத சாதனைகளை வெறும் 33 ஆண்டுகளில் வென்றெடுத்த […]

Read more

அதிசயங்களின் ரகசியங்கள்,

அதிசயங்களின் ரகசியங்கள், நெய்வேலி பாரதிக்குமார், தினத்தந்தி பதிப்பகம், விலை 160ரூ. உலகில் இறைவன் படைத்த அதிசயங்கள் ஒருவகை, மனிதன் உருவாக்கிய அதிசயங்கள் இன்னொரு வகை. உலக அதிசயங்கள் குறித்தும், அதில் புதைந்து கிடக்கின்ற ரகசியங்கள் பற்றியும் அதில் புதைந்துகிடைக்கின்ற ரகசியங்கள் பற்றியும் எழுத்தாளரும், பொறியாளருமான நெய்வேலி பாரதிக்குமார், தினத்தந்தி முத்துச்சரம் பகுதியில், ‘அதிசயங்களின் ரகசியங்கள்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்தார். பல சுவாரஸ்யமான வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய இந்தக் கட்டுரைத் தொடர் வாசகர்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்றது. தொடராக வந்ததைக் காட்டிலும் […]

Read more

லீ குவான்யூ சிங்கப்பூரின் சிற்பி

லீ குவான்யூ சிங்கப்பூரின் சிற்பி, எஸ்.எஸ்.வி, மூர்த்தி, கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. இன்று சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரியாக மாறி இருக்கிறதென்றால் அதற்கு ஒரே காரணம் லீ குவான் யூ. அந்த நாட்டின் பிரதமராக இருந்த அவர், தரமான கல்வி, நல்ல வாழ்க்கைத்தரம், வலுவான பொருளாதாரம், ஒழுங்கு, தூய்மை என உலகத்துக்கே ஒரு முன்மாதிரி நாடாக சிங்கப்பூரைக் கட்டமைத்தார். அவரது மன உறுதி, தொலை நோக்குப் பார்வை, திட்டமிடும் திறன் ஆகியவற்றை உலகமே வியந்து பாராட்டுகிறது. அத்தகைய லீ குவான் யூ வரலாற்றை, சிங்கப்பூரின் […]

Read more

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள்

ஒரு விற்பனையாளரின் வெற்றி ரகசியங்கள், சி.எஸ். தேவநாதன், சுரா பதிப்பகம், விலை 60ரூ. விற்பனையாளர், தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், சிறந்த குணங்களை முழுமையாய் வெளிப்படுத்தவும், அடுத்த வாய்ப்பை இன்னும் மகத்தானதாக்கிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களோடு நம்பிக்கையூட்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்நூலை எழுதியிருக்கிறார் சி.எஸ். தேவநாதன். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாதி புத்தகாலயம், விலை 150ரூ. சிந்து வெளியிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிலும் இன்றுவரை திராவிட இடப்பெயர்கள் […]

Read more

வெற்றித்திருமகன்

வெற்றித்திருமகன், ந. மணிவாசகம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 140ரூ. வெறும் பழையாறையுடன் இருந்த சோழ நாட்டை, தமிழகமெங்கும் பரந்து விரியச் செய்தவன் விஜயாலயன். அதற்காக அவன் அடைந்த இன்னல்களும், எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தனிச் சரித்திரமாகும். முழுக்க முழுக்க சரித்திரத்தை ஆதாரமாகக்கொண்டு, சில கற்பனைப் பாத்திரங்களோடு, கற்பனைச் சம்பவங்களையும் கலந்து விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் படைத்துள்ளார் நூலாசிரியர் ந.மணிவாசகம். நன்றி: தினத்தந்தி, 10/8/2016.   —- விநாயகர், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 24ரூ. திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய விநாயகர் வரலாறு […]

Read more

சுதந்திர சரித்திரம்

சுதந்திர சரித்திரம், எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், சந்தியா பதிப்பகம், பக். 344, விலை ரூ.270. 1953-இல் எழுதப்பட்டுள்ள நூலின் மறுபதிப்பு இந்நூல். வழக்கமாக, சுதந்திரப் போராட்டம் பற்றிய நூல்கள் எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் தொடங்கும். இந்த நூலில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க அரசரான அலெக்சாண்டர் படையெடுத்து வந்தது முதல் மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு நாட்டவர் போன்றவர்கள் அடுத்தடுத்து தேசத்தில் புகுந்து, நாட்டை அடிமைப்படுத்திய விதம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முகலாயர்கள் காலத்தில் முகமதியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுகளைச் சரி செய்யும் விதமாக […]

Read more

கெளதம புத்தர்

கெளதம புத்தர், மயிலை சீனி.வேங்கடசாமி, அலைகள் பதிப்பகம், பக்.144, விலைரூ.110. அகிம்சையின் அடையாளமாக அறியப்படும் கெளதம புத்தரின் பிறப்பு முதல் பரி நிர்வாணம் வரை அவர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் கால வரிசைப்படி இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கெளதம புத்தரின் வரலாறாயினும் அவருக்கு முந்தைய தலைமுறையினரான சுத்தோதனர், சிம்மஹணு, ஜயசேனன் ஆகிய மன்னர்களைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. குழந்தை சித்தார்த்தனைப் பார்த்த அரண்மனை நிமித்திகர்கள், முதுமை, நோய், மரணம், துறவு இவற்றை அறிந்தால் இவன் துறவியாவான் என்று கூற, சித்தார்த்தனின் […]

Read more

சுதந்திர சரித்திரம்

சுதந்திர சரித்திரம், எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், சந்தியா பதிப்பகம், பக். 344, விலை ரூ.270. 1953-இல் எழுதப்பட்டுள்ள நூலின் மறுபதிப்பு இந்நூல். வழக்கமாக, சுதந்திரப் போராட்டம் பற்றிய நூல்கள் எல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்துதான் தொடங்கும். இந்த நூலில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க அரசரான அலெக்சாண்டர் படையெடுத்து வந்தது முதல் மொகலாயர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு நாட்டவர் போன்றவர்கள் அடுத்தடுத்து தேசத்தில் புகுந்து, நாட்டை அடிமைப்படுத்திய விதம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முகலாயர்கள் காலத்தில் முகமதியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே தோன்றிய முரண்பாடுகளைச் சரி செய்யும் விதமாக […]

Read more

சயமாம் பர்மா மரண ரயில் பாதை

சயமாம் பர்மா மரண ரயில் பாதை, (மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு), சீ. அருண், தமிழோசை பதிப்பகம், பக். 232, விலை 180ரூ. நல்வாழ்வை நினைத்து நகரத்துக்கு போன கதை! ஒருமுறை சயாம் நாட்டுக்குச் சென்ற நம் தேசியகவி ரவீந்திரநாத் தாகூர், அந்த மண்ணைத் தொட்ட தும் காதலுக்கு நிகர்த்த ஒரு வாக்கியத்தைச் சொன்னார். ‘உன்னை என்னுடையதென்று நொடியில் கண்டுகொண்டேன்’. ஆனால், ஒவ்வொரு நாடும் ஒவ்வொருவருக்கும் வேறுவேறாகத்தான் இருக்கிறது. இந்த நூலிலே வரும் தொழிலாளக் கொத்தடிமைகள் சயாமுக்கு வைத்த பெயர், ‘சாவூர்’ என்பதாகும். மரண ரயில் […]

Read more

பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு

பாலஸ்தீனம் – நிகழ்ந்தபோதே எழுதப்பட்ட வரலாறு, வெ.சாமிநாத சர்மா,  இலக்கியச் சோலை, பக்.80, விலை ரூ.60 சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கத்திய, ஐரோப்பிய சக்திகளால் தொடங்கி வைக்கப்பட்டது பாலஸ்தீனப் பிரச்னை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த பாலஸ்தீனத்தில், உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து யூதர்களைக் கொண்டு வந்து குடியமரச் செய்தார்கள். குடியேறிய யூதர்கள் சொந்த மண்ணின் மக்களை அகதிகளாக்கினர். அவர்களின் உரிமைகளைப் பறித்தனர். இழந்த உரிமைகளையும் நிலங்களையும் பெறுவதற்காக பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னையை 75 ஆண்டுகளுக்கு முன்பே நூலாசிரியர் வெ.சாமிநாத […]

Read more
1 42 43 44 45 46 104