நந்தனின் பிள்ளைகள் பறையர் வரலாறு 1850-1950,

நந்தனின் பிள்ளைகள் பறையர் வரலாறு 1850-1950, ராஜ்சேகர் பாசு, தமிழில் அ. குமரசேன், கிழக்கு பதிப்பகம், பக். 560, விலை 500ரூ. அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த பறையர்கள் வசதியற்றவர்களாக, நிலமற்றவர்களாக இருந்த தமிழக பறையர்கள் விவசாயிகளாக உயர்ந்து, பக்கத்து நாடுகளுக்குக் கூலித் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்து, பிறகு படிப்படியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய வரலாற்றை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் கொல்கத்தா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ராஜ்சேகர் பாசு. ஆய்வுக்காக அவர் எடுத்துக்கொண்ட காலகட்டம் 1850 முதல் 1956 வரை. ‘சேஜ் இந்தியா’ வெளியிட்டு வரும் நவீன […]

Read more

சினிமாவின் மறுபக்கம்

சினிமாவின் மறுபக்கம், ஆரூர்தாஸ், தினத்தந்தி பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ள ஆரூர்தாஸ், தான் சினிமா துறைக்குள் நுழைந்தது, தஞ்சை ராமையாதாஸை குருவாக ஏற்றுக்கொண்டு ஆரூர்தாஸ் ஆனது, ‘பாசமலர்’ படத்தின் வசனம் அவரை உச்சத்திற்குக்கொண்டு போனது முதல் இக்கால படங்கள் வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மறுபக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016.   —- உலகப்புரட்சியாளர்கள், ஆர்.கி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நாட்டுக்காக புரட்சிகள் செய்த […]

Read more

கலாம் என்னும் கலங்கரை விளக்கு

கலாம் என்னும் கலங்கரை விளக்கு, ஈரோடு தமிழன்பன், பூம்புகார் பதிப்பகம், விலை 160ரூ. ஒப்பற்ற குடியரசு தலைவராக விளங்கி இணையற்ற புகழ் படைத்தவர், அப்துல் கலாம். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தன் எளிமையால், நேர்மையால், இயல்பான மானுடத் தன்மையால் காந்தம்போல ஈர்த்தவர். வாழ்க்கையின் அடித்தட்டு நிலையில் இருந்து உழைத்தும், போராடியும் இந்தியாவில் உயர்ந்த பதவியாகிய ஜனாதிபதி பதவி என்னும் உச்சம் தொட்டவர். அவரது வாழ்க்கை வரலாற்று குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், அரசியல் மற்றும் ஆன்மிகவாதிகளுக்கும் பாடப்புத்தகமாக விளங்கக்கூடியது. எட்டு வயதில் வீடு வீடாகச் […]

Read more

சகோதரி நிவேதிதை

சகோதரி நிவேதிதை, பருத்தியூர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், விலை 35ரூ. சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடராக இந்தியாவிற்கு வந்து சேவையாற்றிய அயர்லாந்து பெண்மணி மார்கரெட் இசபெல் நோபிள், நிவேதிதையாக மாறிய வரலாறு சுருக்கமாக எளிய நடையில் எழுதப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —– இளநீர்க்காரி, அ.ஏ. பார்த்திபன், கலாநிதி ஸ்ரீநிதி பதிப்பகம், விலை 240ரூ. கவிஞர் அ.ஏ.பார்த்திபன் எழுதிய நாவல் இளநீர்க்காரி. பூ ஒன்று புயலாக மாறிய கதையை, விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.

Read more

உலக மக்கள் வரலாறு

உலக மக்கள் வரலாறு, ஹார்மன், தமிழில் மு. வசந்தகுமார், நிழல் வண்ணன், விடியல் பதிப்பகம், விலை 1100ரூ. உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறை தொடங்கி, மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், இனக்குழுக்கள், பொருளாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றிய கருத்துகள் அடங்கிய நூல். சமகால நிகழ்வுகளுடனான ஒப்பீட்டுடன் பழைய வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி: தி இந்து, 28/5/2016.   —- டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம், மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் […]

Read more

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்

பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், எதிர்வெளியீடு, பக். 895, விலை 950ரூ. நூலாசிரியர் பொறியாளர். அதனால், கணிதவியல் முறை சார்ந்த ஆய்வு மரபை முன்னெடுத்து, சங்கப் பிரதிகளை ஆய்வு செய்துள்ளார். இதற்கென அவர் மேற்கொண்ட உழைப்பு மலைக்கச் செய்கிறது என முன்னுரையில் பேராசிரியர் வீ. அரசு கூறுகிறார். சிவராஜப் பிள்ளை, கமில் சுவலபில் ஆகியோரை அடுத்து, தனக்கென தனி முறையியலை உருவாக்கிக் கொண்டு, அதன் அடிப்படையில், தமிழக வரலாற்றை கணியன் பாலன் ஆய்ந்துள்ளதாக, வீ. அரசு தெரிவிக்கிறார். நூலாசிரியர், சங்க இலக்கியத்தை கூர்ந்து […]

Read more

மாவீரன் சிவாஜி

மாவீரன் சிவாஜி, கோவிந்த் பன்சாரே, தமிழில் செ. நடேசன், விஜய் ஆனந்த் பதிப்பகம். கொள்ளையில் பங்கு இல்லை! கோவிந்த் பான்சாரே எழுதி, தமிழில் செ. நடேசன் மொழி பெயர்த்த,‘மாவீரன் சிவாஜி’ நூலை சமீபத்தில் படித்தேன். விஜய் ஆனந்த் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. சிவாஜியைப் பற்றி பல்வேறு கோணங்களில், பல்வேறு வரலாற்று செய்திகளை பலர் சொல்லியும், எழுதியும் உள்ளனர். இவற்றில், பெரும்பாலான செய்திகள், இட்டுக்கட்டி சொல்லப்பட்டதான கருத்தே நிலவுகிறது. இந்நிலையில், கோவிந்த் பன்சால் எழுதிய, இந்நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத்திய கால இந்திய வரலாற்றில், […]

Read more

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை

ஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, பேராசிரியர் கா. செல்லப்பன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், விலை 70ரூ. இலக்கிய சிறப்பு வாய்ந்த நூல் இது. இங்கிலாந்து இலக்கியத்தின் பிதாமகனான ஷேக்ஸ்பியர், மேல்நாட்டில் புரட்சிக்கவியாகத் திகழ்ந்த ஷெல்லி, இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் தாகூர் உள்பட 22 இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார் பேராசிரியர் கா. செல்லப்பன். மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, புதுமைப்பித்தன், டாக்டர் மு. வரதராசனார், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் ஆற்றலையும், அவர்களின் படைப்புகளின் […]

Read more

டெஸ்டினேஷன் போர்பந்தர்

டெஸ்டினேஷன் போர்பந்தர்(ஆங்கிலம்), பி. புருஷோத்தமன், காந்தி வேர்ல்ட் பவுண்டேஷன், பக். 104, விலை 120ரூ. நூலாசிரியர் காந்தியடிகள் மீது மட்டற்ற மரியாதையும், பக்தியும் கொண்டவர். நீண்ட நாட்களாக, காந்தியடிகள் அவதரித்த இடமான போர்பந்தரைச் சென்று தரிசிக்க வேண்டும் என்ற அவரது ஆவல், கடந்த 2011ம் ஆண்டில் நிறைவேறியது. அங்கு சென்று ஒவ்வோர் இடத்தையும் இவர் பார்வையிட்டபோது, காந்தியடிகளின் இளமைப் பருவத்தில் இருந்து அவரது இறுதி நாட்கள் வரை நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள், இவர் மனதில் நிழலாடின. அவற்றை ஒன்று விடாமல் போட்டோ பிடிப்பது போல் […]

Read more

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், டி.கே.இரவீந்திரன், விகடன் பிரசுரம், சென்னை, பக்.382, ரூ. 220. முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் இந்தோனேசியாவுக்கு அடுத்ததாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் சமூகம், கலை, மொழி, இலக்கியம், அரசியல், நிர்வாகம், பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட மொகலாயப் பேரரசு, கி.பி. 1526 முதல், 1857 வரை சுமார் 330 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. வடஇந்தியாவிலும், தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் பகுதிகளிலும் அவர்களது ஆதிக்கம் நிலை பெற்றிருந்தது. மொகலாயர் காலக் கட்டடக் கலையின் சிறப்பை, தில்லி செங்கோட்டை, தாஜ்மகால், ஜும்மா மசூதி […]

Read more
1 43 44 45 46 47 104