ஆதிசைவர்கள் வரலாறு

ஆதிசைவர்கள் வரலாறு, தில்லை எஸ். கார்த்திகேய சிவம், ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு, விலை 200ரூ. ஆதிசைவர்களுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பையும், ஆதிசைவர்களுக்கும் சைவ சமயத்திற்கும் உள்ள தொடர்பையும் விளக்கும் நூல். ஆதிசைவர்களின் வரலாற்றை இதன் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 30/3/2016.   —- தந்தை கோரியோ, சாகித்திய அகாதெமி, விலை 220ரூ. 19ம் நூற்றாண்டில் பாரிசு நகரத்தின் நாகரீக வாழ்வு யார் யாரை எப்பாடுபடுத்தியது என்பதை விளக்குவதே இந்நாவலின் நோக்கம். பாரிசு நகர மக்களின் பண்பாடு, பழக்க […]

Read more

ஜுலியஸ் சீசர்

ஜுலியஸ் சீசர், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், விலை 110ரூ. அலெக்சாண்டரைப்போல் ஒரு மாவீரர் ஜுலியஸ் சீசர், ரோமாபுரி மன்னர். கிளியோபட்ராவின்மனம் கவர்ந்து அவளை மணந்தவர். இறுதியில் ரோமாபுரியின் பாராளுமன்றத்தில், அவர்களுடைய ஆதரவாளர்களாலேயே படுகொலை செய்யப்படுகிறார். ஜுலியஸ் சீசர் வரலாற்றை சுவையாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார் ஜனனி ரமேஷ். சீசர் காலத்து ரோமாபுரி பற்றி அவர் கூறியுள்ள தகவல்களில் சில- உடல் ஊத்தோடு பிறக்கும் குழந்தைகளை பெற்றோரை கொன்றுவிடலாம். இரவு நேரத்தில் கூட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை. நீதிபதிகள் லஞ்சம் வாங்கினால் மன்னிப்பே கிடையாது. […]

Read more

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம்

தமிழ் மக்கள் வரலாறு இக்காலம், தமிழ்க்கோட்டம், விலை 140ரூ. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன், தமிழ் மக்கள் வரலாற்றை இதுவரை 8 புத்தகங்களாக எழுதியுள்ளார். கடைசிப்பகுதியான 9வது நூல் இப்போது வெளிவந்துள்ளது. காலமாறுபாட்டால் தமிழர்களின் வாழ்விலும், பண்பாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை இதில் விவரிக்கிறார். தமிழர்களின் முன்னேற்றத்துக்கு பெருந்தடையாக இருப்பது சாதிப்பிரிவினையே என்று கூறுகிறார். “இன்றைக்கும் தன்னை வழி நடத்தக்கூடிய தமிழனை சினிமாத் துறையிலேயே தமிழன் தேடுகிறான்” என்று சுட்டிக்காட்டுகிறார். தமிழரிடம் காணப்படும் குறைபாடுகளை, குட்டவும் செய்கிறார், தன் மோதிரக் கையால்! […]

Read more

குமரப்பா கலைக்களஞ்சியம்

குமரப்பா கலைக்களஞ்சியம், மா.பா. குருசாமி, மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியீடு. உள்ளூரில் தோல்வியுள்ள ‘தாய்மை பொருளாதாரம்’ மா.பா. குருசாமி எழுதிய ‘குமரப்பா கலைக்களஞ்சியம்‘ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியிட்டு உள்ளது. எழுத்தாளர் குமாரசாமி, 80 வயது நிரம்பியவர். அவரது 150வது நூல் இது என்பது சிறப்பு அம்சம். ஜே.சி. குமரப்பா காந்தியின் சீடர். தஞ்சையில் பிறந்தவர். 1930களில், பட்டயக் கணக்கர் ஆவதற்கான சி.ஏ. தேர்வில் வெற்றிபெற்றார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், ‘இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் ஐரோப்பிய […]

Read more

ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம்

ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம், குருமலை சுந்தரம் பிள்ளை, பதிப்பாசிரியர் செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 124, விலை 90ரூ. புதிய விழிப்பின் ஆதின கர்த்தர்களில் ஒருவர் என்று பாரதியால் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். ஒரே நேரத்தில் அரசியல், சமூக சீர்திருத்தம், இதழியல் என பல நிலைகளில் செயல்பட்ட முன்னோடி. சமூக சீர்திருத்தத்தை வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி, நடைமுறை வாழவிலும் கடைப்பிடித்தவர். மூத்த மகள் தம் பன்னிரண்டாவது வயதில் கணவனையிழக்க அதே ஆண்டின் இறுதியில் அப்பெண்ணுக்கு அவர் மறுமணம் செய்து […]

Read more

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள்

வாழ்வியல் பண்பாட்டுத் தாளிகைகள், ச. வனிதா, காவ்யா, பக். 288, விலை 300ரூ. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறி வந்திருக்கின்றன. புதிய புதிய பொருட்கள் பயன்பாட்டுக்கு வரும்போது பழைய பொருட்களில் பல காணாமற் போய்விடுகின்றன. எவ்வளவுதான் வாழ்க்கை மாறி வந்தாலும் சில பண்பாட்டு வழிமுறைகள் தொடர்ந்து வருகின்றன. சிறு தெய்வ வழிபாடு, மஞ்சள் நீராட்டு விழா, திருமணம், வளைகாப்பு, கண்ணேறு கழித்தல் போன்ற பல நிகழ்வுகள் இன்றைய வாழவிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தமிழர்களின் அன்றாட வாழ்வில் புழங்கிய பொருட்கள், […]

Read more

வந்தே மாதரம்

வந்தே மாதரம் (ஒரு வரலாற்று கண்ணோட்டம்), ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 208, விலை 120ரூ. சுதந்திர போராட்ட காலத்தில், காங்கிரஸ் மேடைகளில் எதிரொலித்த வந்தே மாதரம், மதச்சாயம் பூசப்பட்டு நிறுத்தப்பட்டது. ஆனாலும், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘வந்தே மாதரத்தின்’ தாக்கம், மற்ற மொழி கவிஞர்களிடம் கொஞ்சமும் குறையவில்லை. வந்தே மாதரத்தின் உள்வாங்கல், தமிழ் கவிஞர்களிடமும், திரை இசைப் பாடல்களிலும் இருப்பதை உணர முடியும். வந்தே மாதரத்தின் வரலாற்றை, சுதந்திர போராட்டத்தின், பின்னி பிணைந்துள்ள அதன் வரலாற்றை விளக்கியுள்ளார். சுதேச இயக்கத்திற்கு வலுகொடுத்த […]

Read more

வ.உ.சி. வாலேஸ்வரன்

வ.உ.சி. வாலேஸ்வரன், செ.திவான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், சென்னை, விலை 100ரூ. “கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் மகன் பெயர் வாலேஸ்வரன். அவரைப் பற்றிய புத்தகம் இது. இவருக்கு வாலேஸ்வரன் என்ற பெயர் வந்தது எப்படித் தெரியுமா? சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்ட வ.உ.சிதம்பரனாருக்கு வெள்ளையர் ஆட்சி “இரட்டை ஆயுள் தண்டனை” விதித்தது. அத்துடன் அவர் பெற்ற வக்கீல் பட்டத்தை ரத்து செய்து, கோர்ட்டில் வழக்காட முடியாதபடி தடை விதித்தது. விடுதலையடைந்தபின், வ.உ.சி. வறுமையில் வாடினார். கோர்ட்டிற்கு சென்று வக்கீலாக வாதாடவும் முடியவில்லை. […]

Read more

தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனாரும்

தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனாரும், முனைவர்ச. கணபதிராமன், பூங்குன்றன் பதிப்பகம், விலை 50ரூ. தென்காசி கோபுரம் பற்றி அரிய புத்தகம் தென்காசி கோவிலில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட ராஜகோபுரம் சிதைந்துபோய், மொட்டை கோபுரமாக நின்றது. புதிய கோபுரம் கட்ட பல்வேறு கட்டங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அது நிறைவேறவில்லை. முடிவில், ராஜகோபுரம் கட்டும் பணியை டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் ஏற்று, பல லட்சம் ரூபாய் செலவில் 178அடி உயர ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார். 25/6/1990ல் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த வரலாற்று […]

Read more

உறவுகள்

உறவுகள், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், விலை 150ரூ. உழைப்பால் உயர்ந்து இன்று பெரும் தொழில் அதிபராக விளங்குபவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். அவருடைய பரந்து விரிந்த உலக அனுபவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், இந்த நூலை எழுதியுள்ளார். 108 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல உறவு முறைகள் பற்றி விவரிப்பதுடன், மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் நுட்பமான கருத்துக்களை கூறுகிறார் ஆசிரியர். சிலரைப்பற்றிய கட்டுரைகளில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது. “உறவுகள் […]

Read more
1 45 46 47 48 49 104