சேரன் செங்குட்டுவன்

சேரன் செங்குட்டுவன், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, விலை 165ரூ. கற்புக்கரசி, கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலை வரை சென்று அங்கு இருந்து கல் எடுத்து வந்த சேர மன்னர் செங்குட்டுவன் பற்றிய முழு தகவல்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது. இமயமலையில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்லை, போரில தோற்கடித்த கனகவிஜயன் தலையில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுவதில், கனகவிஜயன் என்பது ஒரு மன்னர்தான், இருவர் அல்ல என்ற தகவலும் இந்த நூலில் காணப்படுகிறது. வரலாற்றுச் செய்திகளை நாவல் போல எழுதி இருப்பதால் படிக்க சுவாரசியமாக […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், விலை ரூ:80 முத்தத்தின் துயர மொழி, திரையிசைப் பாடல்களில் தனித்துவத்தோடு மிளிர்ந்த கவிஞர் பழநிபாரதி தனது ‘ஒளி உன்னால் அறியப்படுகிறது’ கவிதைத் தொகுப்பில் சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளால் எழுதியிருக்கிறார். பெரும்பாலான கவிதைகள் வாசகரின் மனசுக்குள் காட்சி கிளைகளாக விரிகின்றன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் எதிலும் அலங்கார வார்த்தைகள் இல்லை. ‘வீட்டின் வரவேற்பறையில்/ ஒரு பியானோ இருக்கிறது/ அதன் முன்னிருக்கையில் யாருமில்லை /நடுங்காத தீபத்தைப் போல /நின்றொளிரும் இசையில்/ நிரம்பி வழிகிறது/ வீடு’ எனும்போது நமக்குள்ளிருக்கும் இசை நம் வீட்டை […]

Read more

அத்திமலைத் தேவன் பாகம் 1

அத்திமலைத் தேவன் பாகம் 1, காலச்சக்கரம் நரசிம்மா, வானதி பதிப்பகம், விலை 425ரூ. அத்தி வரதர் வரலாறு என்ன? 40 ஆண்டுகளாக, ஏன் தண்ணீருக்குள் இருக்கிறார்? என, ‘காலச்சக்கரம்’ நரசிம்மா, 40 ஆண்டுகளாக திரட்டிய ஆய்வறிக்கை, சுவைபட, சுவாரஸ்யம் குன்றாமல், ‘அத்திமலைத் தேவன்’ என்ற நாவலாக வெளிவந்திருக்கிறது. கோவில்கள் நகரமான காஞ்சியில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலின், ஆனந்த புஷ்கரணியில் இருந்து, அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி, பக்தர்களுக்கு […]

Read more

நான் செய்வதைச் செய்கிறேன்

நான் செய்வதைச் செய்கிறேன், ரகுராம் ஜி.ராஜன், தமிழில்: ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, பக்.408, விலை ரூ.399. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக 2013 முதல் 2016 வரை பணியாற்றிய நூலாசிரியர், தான் பணியாற்றிய காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், சந்தித்த பிரச்னைகள் பற்றி இந்நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து நீண்டநாள் பயன்கள் இருக்கக் கூடும் என்றாலும், குறுகிய கால பொருளாதார இழப்புகள் அவற்றை மிஞ்சிவிடும் என்ற கருத்து நூலாசிரியருக்கு இருந்திருக்கிறது. பணவீக்கத்தை மேலாண்மை செய்வது, வாராக் கடன்கள் பிரச்னையைத் தீர்ப்பது, […]

Read more

தமிழ் இலக்கிய அகராதி

தமிழ் இலக்கிய அகராதி, பாலூர் கண்ணப்ப முதலியார், அர்ஜித் பதிப்பகம், விலை 460ரூ. பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும், உரைநடைகளிலும் உள்ள கடினமான சொற்களுக்குப் பொருள் தெரியாமல் இனியும் அவதிப்படத் தேவை இல்லை என்ற நிலையை இந்தப் புத்தகம் தருகிறது. தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள அருஞ்சொற்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அகர வரிசைப்படி ஆவணப்படுத்தி அந்தச் சொற்களுக்கு எளிய விளக்கத்தை இந்த நூல் தருகிறது. நல்ல வழிகாட்டி போல அமைந்து இருப்பதால், இந்த நூல், பழைய இலக்கியங்களைப் பொருள் உணர்ந்து படிக்க மிக்க பயன் உள்ளதாக இருக்கும். […]

Read more

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்

காவிரி நீரைப் பாதுகாப்போம் டெல்டா விவசாயத்தைக் காப்போம், சக்தி கதிரேசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 200ரூ. தமிழகம் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பங்கீடு, நமக்குக் கிடைக்கும் காவிரி நீரை எவ்வாறு சேதாரம் இல்லாமல் செலவு செய்து அதிக மகசூல் பெறுவது என்பவற்றை ருசிபடக் கூறுவதற்காக நாவல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூல், காவிரி நீர் தொடர்பான அத்தனை தகவல்களையும் தருகிறது. இந்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய காவிரி நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் அதிக நீரை பாதுகாத்து, நீலகிரி காவிரி திட்டம் மற்றும் […]

Read more

தமிழச்சி ஆண்டாள்

தமிழச்சி ஆண்டாள், மெய்சிலிர்க்கும் காவியம், ப்ரியா கல்யாணராமன், குமுதம் புத்தகம் வெளியீடு, விலை 290ரூ. ஆடியில் பிறந்து, ஆண்டவனுக்குத்தன் தோள் மாலையை சூடிக்கொடுத்தவள் ஆண்டாள். பகவானுக்கு பூமாலையோடு மணக்க மணக்க தமிழ்ப்பா மாலையும் சூட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்த தமிழச்சி. பெரியாழ்வார் மகளாய்ப் பிறந்து, பெருமாளையே மணந்தவள். குறையேதும் இல்லா கோவிந்தனைப் பாடிய தமிழச்சி ஆண்டாள் குறித்து தமிழில் விரிவான புத்தகம் எதுவும் இல்லை என்பது, பலகாலத்துக் குறை. அதைப் போக்குவதற்காகவே, குமுதத்தில் ஆசிரியர்ப்ரியா கல்யாணராமன் கைவண்ணத்தில் தொடங்கப்பட்டு பல்லாயிரம் வாசகர்களால் பக்தியோடம் தமிழ் […]

Read more

நான்காம் சுவர்

நான்காம் சுவர், பாக்யம் சங்கர், யாவரும் பதிப்பகம், விலை 375ரூ. சொற்களைக் கடந்த வாழ்வு வட சென்னை மக்களின் வாழ்க்கையை ஆழமாக நான்காம் சுவர் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் பாக்கியம் சங்கர். நல்ல குணாம்சம் கொண்டவர்கள் மட்டும்தான் நம்மைச் சுற்றி வாழ்கிறார்களா அல்லது நல்ல குணாம்சங்களுடன் மட்டும்தான் நாம் வாழ்கிறோமா என்ன? என்கிற கேள்விகளை இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் எழுப்புகின்றன. இளைய ராகங்கள் கட்டுரையில், ஒரு வேனில் ஒலிப்பெருக்கி சகிதம் அமர்ந்துகொண்டு பாடும் பார்வையற்றவர்களின் வாழ்க்கை அப்பட்டமாகச் சொல்லப்பட்டுள்ளது. மழுங்கிய விரலில் எவர்சில்வர் தூக்குச் சட்டியை […]

Read more

மனத்தின் குரலும் மக்கள் குரலும்

மனத்தின் குரலும் மக்கள் குரலும், பெ.சிதம்பரம், வானதி பதிப்பகம், விலை 150ரூ. பல்வேறு காலக்கட்டத்திற்கு தகுந்தபடி அவ்வப்போது எழுதி வெளியான 35 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. அயோத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண்பது எவ்வாறு, சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, நதிகள் இணைப்பு, கல்வியில் தாய்மொரீ உள்பட பல ஆக்கபூர்வமான கட்டுரைகள் சிந்தனைக்கும் விருந்தாக உள்ளன. நன்றி: தினத்தந்தி, 7/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிறவி என்பது?

பிறவி என்பது?, சம்பத்குமார், கங்கை புத்தக நிலையம், விலை 180ரூ. அமானுஷ்யமான விஷயங்களைப் படிப்பது போன்ற உணர்வு, இந்த நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது. நாம் பூமியில் பிறந்தது எதற்காக? எங்கிருந்து வந்தோம்? எங்கே போகப் போகிறோம்? என்பது போன்ற பல விஷயங்களை இந்த நூல் அலசுகிறது. மறு பிறப்பு உண்டா, சொர்க்கம் நரகம் என்பவை உண்டா போன்ற விஷயங்களும் 103 சிறு சிறு கட்டுரைகளில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 7/8/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more
1 9 10 11 12 13 23