தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை, துரை.குணசேகரன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.148. விலை ரூ.140. இலக்கியப் பணிகள் (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை), இலக்கணம் (தொல்காப்பியம்), யாப்பிலக்கணம்(யாப்பருங்கலக்காரிகை), அகப்புற நூல்கள் (கலித்தொகை, புறநானூறு), அறநூல்கள் (நான்மணிக்கடிகை, ஏலாதி), பதிப்புப் பணிகள் (ச.மெய்யப்பன்), வள்ளுவம் (மூன்று கட்டுரைகள்), ஐக்கூ (கவிதை) எனப் பல்வேறு துறைகளில் அமைந்த, பல்வேறு கருத்தரங்களில் வாசிக்கப்பட்ட பன்னிரு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் இலக்கியப் பணிகள், தொல்காப்பிய மொழிமரபு, கலித்தொகையின் கருத்தும் காட்சியும், வள்ளுவத்தில் காணப்படும் ‘உடைமை 39‘, பண்புகள், நான்மணிக்கடிகை […]

Read more

மாஸ்தி சிறுகதைகள்

மாஸ்தி சிறுகதைகள், மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், தமிழில்: சேஷநாராயணா, சாகித்திய அகாதெமி, பக்.144, விலை ரூ. 120. சாகித்திய அகாதெமி விருதுபெற்ற, தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் கன்னடச் சிறுகதைகளின் எளிமையான, சிறப்பான மொழி பெயர்ப்பு இந்நூல். இதில் இடம்பெற்றுள்ள 15 சிறுகதைகளும் சுவாரஸ்யமானவையே. ‘எறும்புகளின் உலகம்39‘ சிறுகதை எறும்புகளின் வாழ்க்கை குறித்த வியக்கத்தக்க செய்திகளைக் கொண்டுள்ளது. ‘மண வாழ்க்கையில் புதுமை39‘ சிறுகதையில் பெண் சுதந்திரத்தின் கசப்பான மறுபக்கம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. ‘இதற்கு முன் சில காலம் […]

Read more

இலை உதிர்வதைப் போல

இலை உதிர்வதைப் போல, இரா.நாறும்பூநாதன், நூல் வனம், பக்.192, விலை ரூ.150. வாழ்க்கை முழுக்க மனிதன், சக மனிதர்களுடன், இடங்கள், மரங்கள், செடி, கொடிகளுடன், வளர்ப்பு பிராணிகளுடன் எல்லாம் தொடர்புடையவனாக இருக்கிறான். வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளினால் சில தொடர்புகளை மனிதர்கள் விட்டுப் பிரிகிறார்கள். புதிய தொடர்புகள் வாழ்க்கையில் ஏற்படுகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள 26 சிறுகதைகளில் வரும் மனிதர்கள் எல்லாரும் இந்தத் தொடர்புகளின் அருமையை உணர்ந்தவர்கள். தொடர்புகளைவிட்டுப் பிரிய மனமில்லாதவர்கள். சக மனிதர்களை மட்டுமல்ல, செடியை, மரத்தை, ஆடு, மாடுகளை, இடங்களைப் பிரிய நேர்ந்தால், […]

Read more

சிறிய தூண்டில் பெரிய மீன்

சிறிய தூண்டில் பெரிய மீன், மூ.இராசாராம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.174, விலை ரூ.155. சிறு சிறு முயற்சிகள் மூலம் பெரிய வெற்றிகளை எப்படிப் பெறுவது என்பதற்கான வழிமுறைகளைக் கூறும் நூல். நம்மிடம் அளவாக இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி அதிகமான பலன் பெறலாம் என்பதை சில முக்கிய மேற்கோள்கள் மூலம் சுவைபடக் கூறியுள்ளார். குறிப்பாக ரூ.1-க்கு விற்கப்படுகிறது என்ற பிரபல செய்தித்தாளின் விளம்பர உத்தி, ‘இந்த;டிசைன்&#39‘ சேலைகள் இன்னும் மூன்று மட்டுமே எஞ்சியுள்ளன' என்ற ஜவுளிக் கடைக்காரரின் விளம்பரத் தந்திரம் போன்றவை வாடிக்கையாளர்கள் என்ற பெரிய […]

Read more

இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள்

இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள், யசோதரை கருணாகரன், ஆனந்த விகடன், விலை 165ரூ. இதயத்தைக் காக்கும் உணவுகள் என்ற தலைப்பில், பல்வேறு உணவுகள் பாரம்பரிய பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் வகைகளை இதில் காணலாம். கொள்ளு ரசப்பொடி, முடக்கத்தான் இட்லி, இலந்தை வடை என்று பல ரெசிபிகள் இதில் அடக்கம். இந்த மூன்று நூல்களையும் வெளியிட்டு உணவுத் தயாரிப்பின் சிறப்பை ஆனந்த விகடன் பிரசுரம் வெளிப்படுத்தியிருக்கிறது. நன்றி: தினமலர், 9/4/2017.

Read more

நரகம்

நரகம், எதிர் வெளியீடு.தமிழில் இரா. செந்தில். உலகப்புகழ் பெற்ற நாவல் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள், அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்எ ழுதிய “டாவின்சி கோட்” என்ற நாவல் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 20 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன. சினிமாப் படமாகவும் வெளிவந்துள்ளது. அவர் சமீபத்தில் எழுதிய நாவல்தான் “நரகம்”. இதுவும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. வாழ்க்கையில் தான் சந்தித்த நபர்களை வைத்தே நாவல்களை சிறப்பாக எழுதுவதில் வல்லவர் டான் பிரவுன். “நரகம்” நாவலும் […]

Read more

பெண் எனும் பொருள்

பெண் எனும் பொருள், பெண்கள், குழந்தைகள் லிடியா காச்சோ, தமிழில் விஜயசாய், விடியல் பதிப்பகம், விலை 350ரூ. இது நாம் அறியாத உலகம். புலப்படாத புதிர். இடைவிடாது நடக்கும் பயங்கரம். நாளொன்றுக்கு உலகமெங்கும் பெண்களும், குழந்தைகளுமாக, இருக்கும் இடத்திலிருந்து அவர்கள் உணர்ந்து அறியாத மாய உலகிற்கு கடத்தப்படுகிறார்கள். படு பயங்கரமான வலைப்பின்னல் கொண்ட தொடர்ச்சி இது. இந்த பயங்கரங்களைக் கேட்டு உணர்ந்ததோடு நின்றுவிடாமல், தொடர்ந்து பயணித்து, துணிச்சலாக தகவல் சேகரித்து எழுதியிருக்கிறார் லிடியா. பெண்களைக் கடத்திச் செல்வது, விலைக்கு வாங்குவது, பாலியல் தொழிலுக்கு மூளைச்சலவை […]

Read more

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு உறவுகளை ஆய்வு செய்தல் ஒரு தகவல் கோட்பாடு அணுகுமுறை, சு. சீனிவாசன், அறிவில் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, பக். 264, விலை 250ரூ. இன்றைய சூழலில் கணினி நம் வாழ்வில் பெரும்பங்கு வகிக்கின்றது. ஆயினும் தமிழ்வழிக் கல்வி கற்ற ஒருவர் கணினிகளை எங்ஙனம் இயக்க இயலும் என்பதும், மொழி குறித்த ஆய்வுக்கு கணினி எவ்வகையில் துணைபுரியும் என்பதும் நீண்ட நாள்களாக நிலவிவரும் ஐயங்களாக இருக்கின்றன. இந்தப் பொருண்மையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே உள்ளன. தமிழில் மிக […]

Read more

வ.ரா. கதைக்களஞ்சியம்

வ.ரா. கதைக்களஞ்சியம், தொகுப்பாசிரியர் முனைவர் சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, விலை 850ரூ. “அக்கிரகாரத்து அதிசய மனிதர்” என்று பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர் “வ.ரா.” (வ. ராமசாமி), 1889-ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். 1919?ல் மகாத்மா காந்தியும், மகாகவி பாரதியும் சந்தித்தபோது உடன் இருந்தவர். 1920 -ல் “சுதந்திரன்” என்ற சொந்த இதழை நடத்தியபோது, “கல்கி”யின் முதல் நாவலான “விமலா”வை தமது பத்திரிகையில் வெளியிட்டவர். 1933-ல் டி.எஸ். சொக்கலிங்கம், கு. சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து இவர் தொடங்கிய “மணிக்கொடி” இலக்கிய இதழ், புதுமைப்பித்தன் போன்றவர்களை […]

Read more

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும், முனைவர் க. சிவாஜி, அலைகள், பக். 344, விலை 260ரூ. மனித உழைப்பின் கூட்டுச் சக்தியால் பொருட்கள், உணவு தானியங்கள் போன்ற அனைத்துப் பொருட்களும், உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது, பொதுவாக பலராலும் அறியப்பட்ட ஒன்றுதான்; என்றாலும், அந்தக் கூட்டுச் சக்தியை ஒன்று திரட்டி அதைச் செயலுக்குக் கொண்டு வந்தனர். அதாவது, முன்னோடிகளைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட முன்னோடிகளில் ஒன்பது பேரது வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் ஆற்றிய பொதுத் தொண்டுகளையும் மிக விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். எல்.பி.சுவாமிக்கண்ணு […]

Read more
1 17 18 19 20 21 23