எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம், பி.சி. கணேசன், நர்மதா பதிப்பகம், விலை 120ரூ. உலக மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி கற்பது அவசியம் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நூல். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே ஆங்கில இலக்கணத்தின் அமைப்பு முறைகளை தமிழில் விளக்கிச் சொல்லி எளிதில் புரிய வைக்கிறார் நூலாசிரியர் பி.சி. கணேசன், ஆங்கிலத்தை பயில விரும்பும் அனைவரும் இந்த நூலை பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- நவீன விருட்சம், அழகிய சிங்கர்,விலை 100ரூ. 1988ம் ஆண்டு […]

Read more

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், விலை 120ரூ. திக்குத் தெரியாமல் நிலை தடுமாறும் கப்பலுக்கு வழிகாட்டிக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கம் போலக் காட்சியை எப்படி நடத்த வேண்டுமென்று வழிகாட்டி, தன்னலமற்ற தியாகத்திற்கு வழிகாட்டி, பொது வாழ்க்கைக்கான தொண்டு எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கு வழிகாட்டி, நாட்டின் வளர்ச்சிக்குச் செயல் வீரவராக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டி, மக்கள் விரும்பும் தலைவராகவும் மக்களை நேசிக்கும் தொண்டராகவும் ஒரு மனிதன் ஆற்ற வேண்டிய பாங்கிற்கு வழிகாட்டி, உண்மையான நேர்மையான உழைப்புக்கு […]

Read more

மனிதப் பிறவிக்கு முக்தி தரும் ஞான வள்ளல்

மனிதப் பிறவிக்கு முக்தி தரும் ஞான வள்ளல், ஞானேஸ்வரி, ஓங்காரம் வெளியீடு, விலை 600ரூ. திருவருளை அடைய குருவருள் அவசியம் என்பார்கள், மெய்யன்பர்கள். இதைத்தான் ‘குருவின் திருமேனி கண்டாலே தெளிவு பிறக்கும்’ என்றார், திருமூலம். ஓங்காரநந்தா சுவாமிகளுடனான தனது நேரடி அனுபவங்கள், சுவாமிகளின் ஜீவகாருண்ய அனுபவங்கள், குருபக்தி, குருவின் பெருமைகள், குருவின் அவசியம் உள்ளிட்டவற்றையும் மகேஸ்வர புஜை, படி பூஜை, ஞானதீப வழிபாடு, குரு பூஜை போன்ற வழிபாடுகளை நடத்தும் முறைகளையும் நூலாசிரியர் ஞானேஸ்வரி எளிய தமிழில் விரிவாக விளக்கியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக […]

Read more

சொன்னால் நம்பமாட்டீர்கள்

சொன்னால் நம்பமாட்டீர்கள், தேசியச் செல்வர் சின்ன அண்ணாமலை, குமரன் பதிப்பகம், பக். 240, விலை 90ரூ. 1978-ல் குமுதம் போனஸ் வெளியீடாக சிறுசிறு புத்தகங்கள் வெளியிட்டது. அப்போது சின்ன அண்ணாமலை வாழ்வில் நடைபெற்ற நம்பமுடியாத சில சம்பவங்களை தொகுத்து குமுதத்தில் அவர் எழுதிய கட்டுரைகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. அவற்றின் தொகுப்பே இந்நூல். காந்திஜியை நேரில் சந்தித்தது, ஹரிஜன் இதழை தமிழில் நடத்த காந்தி அவருக்கு அனுமதி தந்து கடிதம் எழுதியது, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்றது, மக்களே சிறையை உடைத்து இவரை விடுதலை செய்தது, […]

Read more

பாண்டியர் கொற்கை

பாண்டியர் கொற்கை, செ.மா. கணபதி, சங்கத் தமிழ்ப் பதிப்பகம், பக். 412, விலை 250ரூ. மதுரையை ஆண்ட “அகுதை’ என்ற மரபினரிடமிருந்துதான் பாண்டியர்கள் மதுரையைக் கைப்பற்றினர் என்பதும், முதன்முதலில் கொற்கையில்தான் பாண்டியர்கள் ஆட்சி செய்தனர் என்பதும் பாண்டியர் வரலாறு கூறும் செய்தி. இராபர்ட் கால்டுவெல் என்பவர்தான் பாண்டியரின் கொற்கை பற்றிய ஆய்வினை முதன் முதலில் மேற்கொண்டவர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ள “கொற்கை’ என்னும் சிறிய கிராமம்தான் முன்பு, பாண்டிய அரசர்களின் சிறந்த நகரங்களுள் ஒன்றான கொற்கையாகத் திகழ்ந்தது. இக்கிராமம் குறித்த அறிமுகத்துடன் […]

Read more

முருகன் திருவிளையாடல்

முருகன் திருவிளையாடல், கங்கா ராமமூர்த்தி, கங்கை புத்தக நிலையம், விலை 130ரூ. இந்த நூலில் இடம்பெற்றுள்ள 27 கட்டுரைகள், சிவபக்தியின் களஞ்சியமாகத் திகழ்வதுடன், முருகப் பெருமான் புரிந்த திருவிளையாடல்களும் பக்தர்களின் நெஞ்சை உருக்கிப் பரவசம் தரும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- ஒப்பனைக்காரன், இள. அழகிரி, நக்கீரன் வெளியீடு, விலை 200ரூ. ஏவி.எம். ஸ்டூடியோவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக “மேக்கப்மேன்” ஆகப் பணியாற்றியவர் எஸ். முத்தப்பா. எம்.ஜி.ஆர். சிவாஜிகணேசன், ரஜிகாந்த், கமல்ஹாசன் உள்பட எல்லா பிரபல நட்சத்திரங்களுக்கும் “மேக்கப்” போட்டவர். […]

Read more

நான் இந்து அல்ல

நான் இந்து அல்ல, சி.கே. மதிவாணன், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. அம்பேத்கரின் கருத்தாக்கங்களை இன்றைய சூழலில் அனுபவத்தில் ஆய்வு செய்யும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- குமரித் தமிழன் தொல்காப்பியர், முதற்சங்கு பதிப்பகம், விலை 100ரூ. தொல்காப்பியர் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல், தொல்காப்பியர் குமரி மாவட்டத்தில்தான் தோன்றினார். அதுவும் காப்பிக் காட்டில்தான் தோன்றினார் என உறுதிபடக் கூறுகிறார் நூலாசிரியர் புலவர் சி. ஞானாமிர்தம். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more

பொய்கைக்கரைப்பட்டி

பொய்கைக்கரைப்பட்டி, எஸ். அர்ஷியா, புலம், விலை 130ரூ. ஏழை விவசாயிகளின் நிலங்களை லாபநெறி கொண்ட மனிதர்களால் அபகரிக்கப்பட்டு, சமூகத்தின் சொத்துடமையாளர்களிடம் மறுபங்கீடு செய்கிற அவலநிலையை சமகாலத்தின் அதிர்வுகளோடு எழுதப்பட்ட நாவலாகும். நன்றி: தினத்தந்தி, 17/8/2016.   —- ஒரு சாமானியனின் பார்வையில் கம்பன், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. தன் வாழ்வில் எப்போதோ நடந்த நிகழ்வுகளையும், சமூக நிகழ்வுகளையும் கம்பன் பாடலுடன் கொண்டு வந்து பொருத்திப் பார்த்து இந்நூலை படைத்துள்ளார் அந்தமான் கிருண்ணமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 17/8/2016.

Read more

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம், ஜெகவீர பாண்டியனார், தோழமை வெளியீடு, பக். 640, விலை 500ரூ. இந்தியாவை சுரண்டிய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, நாடு தழுவிய அளவில், 1857ல் நடந்த, முதல் இந்திய சுதந்திர போர், முதல் விடுதலை எழுச்சியாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு, 50 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே, தென் தமிழகத்தில் நடந்த பாளையக்காரர்களின் எழுச்சி மிகு போராட்டம், அதற்கு முன்னோட்டம். அவ்வகையில், தென்னிந்திய புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான ஊமைத்துரை மற்றும் அவரது சகோதரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு, கும்மி பாடல்கள் முதல் சினிமா வரையிலும் […]

Read more

நாகூர் இ.எம்.ஹனீபா

நாகூர் இ.எம்.ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ. செ. திவான் பாளையங்கோட்டைவாசி. படிப்பு, எழுத்து, மறுமலர்ச்சி எனத் தம் வாழ்நாளைக் கழித்துக் கெண்டிருப்பவர், அடுத்த தனது 100வது நூலை மலபார் மாப்பிள்ளை புரட்சி – 1921 என்ற பெயரில் அதுவும் 1000 பக்கங்களில் வெளியிட இருக்கிறார். சுஹைனா பதிப்பகம் இவரது சொந்தப் பதிப்பகம் திவானுக்கு ‘தி’வானே எல்லை. ஹனீபா இசை முரசு அல்ஹாஜ். இரவது பாடல்கள் ‘ஹனி’போல் மென்மையன்று, முரசுபோல் ஆரவாரமுடையது. திராவிடமும் தெய்வீகமும்(தீன்) இவரது இரண்டு கண்கள். பொருந்தவில்லையே என்று […]

Read more
1 19 20 21 22 23