கேம் சேஞ்சர்ஸ்

கேம் சேஞ்சர்ஸ், உலகை மாற்றயி ஸ்டார்ட் அப்களின் கதை, கார்க்கிபவா, விகடன் வெளியீடு, விலை 240ரூ. மின்னல் போன மனதில் சட்டென்று தோன்றும் வித்தியாசமான யோசனையை ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்தி, முன்னேற்றம் காணும் தொழில்நுட்பம் ஸ்டார்ட் அப் என்று கொண்டாடப்படுகிறது என்பதை இந்த நூல் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறது. தற்காலத்தில் தவிர்க்க முடியாத சேவைகளாக விளங்குவதோடு, ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, மிக அதிக அளவு பொருளீட்டும் நிறுவனங்களான ஊபர், ஸ்விக்கி, பிளிப்கார்ட், அமேசான், பே டிஎம் மற்றும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரெட் […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, விலை 170ரூ. ஏழைக் குழந்தைகளுக்கு கல்விப் பணி, நோயுற்றவர்களுக்கு மருத்துவ வசதி என்று ஏராளமான அன்புப் பணிகளைச் செய்த கிறிஸ்தவ அருளாளர்களை இந்த நூல் சிறப்பாக அடையாளம் காட்டி இருக்கிறது. தந்தை லெவே, புனிதர் அல்போன்ஸ், தேவசகாயம் பிள்ளை, அன்னை தெரசா, இறை ஊழியர் ஞானம்மா ஆகிய ஐவரின் வாழ்க்கைக் குறிப்பு, அவர்கள் ஆற்றிய தொண்டுகள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், துயரங்கள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/10/19 இந்தப் புத்தகத்தை […]

Read more

இனிய இணையதள நூலகம்

இனிய இணையதள நூலகம், ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 110ரூ. நூலகம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழக அரசுதான் 1948 ம் ஆண்டு சென்னைப் பொது நூலக சட்டத்தை இயற்றி நூலகப் பணிகளைச் சீராக்க முயற்சி மேற்கொண்டது என்பது போன்ற பல செய்திகள் இந்த நூலில் இருக்கின்றன. நூலகப் பணிக்கு இணையதளம் எவ்வாறு பயன்படுகிறது? தமிழ் இணையம் எவ்வாறு செயல்படுகிறது? மின் நூல் எனப்படுவது என்ன? என்பது போன்ற பல விவரங்கள் நன்றாகத் தொகுத்துத் தரப்பட்டு […]

Read more

மகாரதத்தில் குறளின் குரல்

மகாரதத்தில் குறளின் குரல், கு.பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. மகாபாரதமும், திருக்குறளும் பல நூற்றாண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை என்றாலும், இரண்டு நூல்களிலும் உள்ள பல கருத்துக்கள் ஒன்றாக இருக்கின்றன என்பதை இந்த நூல் சிறப்பாக விளக்கி இருக்கிறது. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, அதில் மகாபாரதம் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள சம்பவங்கள், சிறுகதைகள் ஆகியவற்றைக் கூறி, அதே கருத்தை சுருக்கமாக விளக்கும் திருக்குறளை அடையாளப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க முயற்சி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 30 கட்டுரைகளும், நீதி […]

Read more

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள்

கவிதைக் களத்தில் முப்பெருங் கவிஞர்கள், ப.முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக்.526, விலை ரூ.430. பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் ஆகிய மூவரும் மிகச் சிறந்த தமிழ்க் கவிஞர்கள் எனினும், மூவரின் காலமும், பின்னணியும் வேறுபாடுகள் உடையவை. பாரதியாரின் காலம் சுதந்திரப் போராட்ட காலம். அந்தப் பின்புலத்தில் பாரதியார் சிந்தித்தவை, எழுதியவை இருந்தன. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்டு, தமிழ் இனம், மொழி சார்ந்த அரசியல் பார்வையில் பாரதிதாசனின் கவிதைகள் தோன்றின. கண்ணதாசன் எழுதிய கவிதைகளில் பாரதிதாசனின் தொடர்ச்சி இருந்தாலும் கண்ணதாசனின் அரசியல் பார்வை […]

Read more

சட்டத்தின் ஆன்மா

சட்டத்தின் ஆன்மா, எம்.குமார், வானதி பதிப்பகம், பக்.384, விலை ரூ.280, அரசு என்றால் என்ன, உலகளாவிய பல்வேறு ஆட்சிமுறைகள், அவற்றின் தன்மைகள், அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு, அமெரிக்க அரசியலமைப்பின் தோற்றம், சுவிட்சர்லாந்து அரசியல் அமைப்பு உள்ளிட்ட 13 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்த நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி பேசியுள்ளது. குறிப்பாக நல்ல எண்ணம் கொண்ட மக்கள் அதிகம் வாழும் நாட்டில் மட்டுமே நல்லதொரு ஆட்சியும் நிர்வாகமும் நடப்பது சாத்தியம் என்பதை உணர்ந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், புலவர் நன்னன், நன்னன் குடி வெளியீடு, விலை: ரூ.400 நன்னனின் 95-வது பிறந்தநாளையொட்டி வெளிவந்துள்ள இத்தொகுப்பில், திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள், தமிழறிஞர்கள், சட்டத் துறையினர், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், குடும்பத்தினர் என்று பலரும் அவரைக் குறித்து எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நன்னன் தம்மைப் பற்றி எழுதியவையும் அவரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளும் இதில் அடக்கம். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி தமிழாசிரியராகவும், பின்பு கல்லூரிப் பேராசிரியராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் கல்வித் துறையில் தடம்பதித்தவர் நன்னன். தொலைக்காட்சியின் வாயிலாக […]

Read more

தமிழ் விருந்து

தமிழ் விருந்து, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. அறுசுவை விருந்து உண்டிருக்கலாம். அருந்தமிழ் விருந்து உண்டதுண்டா? அத்தகைய ஆனந்த அனுபவத்தை அளிக்கும் அற்புதமான தொகுப்பு நூல். சங்கத் தமிழ் முதல் இன்றைய ஹைகூ வரை பலப்பல கவிஞர்களின் கற்பனையில் ஊற்றெடுத்த உவகைத் தமிழின் உயர்வுகளை உணர்வுகளை உதாரணங்களுடன் சொல்லியிருக்கும் விதம் அருமை. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029544.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

நம் காலத்துக் கவிதை

நம் காலத்துக் கவிதை, (நவீன கவிதை குறித்த கட்டுரைகள்), விக்ரமாதித்யன், படைப்புப் பதிப்பகம், விலை: ரூ.150 . கவிதை எழுதுபவர்கள் அதிகரித்திருக்கும் தற்காலத்தில் கவிதை விமர்சகர்கள் அருகிவருகிறார்கள். எனினும், பல்லாண்டுகளாகக் கவிதை எழுதுவதுடன் கவிதை விமர்சனங்களும் எழுதிவருபவர் கவிஞர் விக்ரமாதித்யன். முன்னோடிகள், தன் சம வயது கவிகள் பற்றி எழுதுவதுடன் இளம் கவிகளைப் பற்றியும் தொடர்ந்து ஆதுரத்துடன் எழுதிவருகிறார். அவரது கவிதை விமர்சன நூல்களின் வரிசையில் தற்போது இந்நூல் வெளியாகியிருக்கிறது. ந.பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன் தொடங்கி தற்காலக் கவிஞர்கள் பிரான்ஸிஸ் கிருபா, அ.வெண்ணிலா இன்னும் இளைய கவிகள் பலரையும் பற்றி எழுதியிருக்கிறார். […]

Read more

கம்பர் சில கண்ணோட்டம்

கம்பர் சில கண்ணோட்டம், சு.அட்சயா, காவ்யா, பக்.167, விலை ரூ.170. கம்பனை வித்தியாசமான கோணங்களில் இந்நூல் அணுகுகிறது. கம்பராமாயணத்தில் இடம் பெற்றுள்ள இசைக் கருவிகளைப் பற்றிய விரிவாக எடுத்துரைக்கும் கட்டுரை, தற்கால உளவியலில் நினைவின் வகைகளாகக் கூறப்படும் நினைவின் பகுதியை மனத்திருத்தல், மீட்டுக் கொணர்தல் அல்லது மீட்டறிதல் ஆகிய கோட்பாடுகள் கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருப்பதைக் கூறும் கம்பரின் உளவியல் சிந்தனைகள் கட்டுரை நம்மை வியக்க வைக்கின்றன. கம்பராமாயணத்தில் கூறப்படும் நீர்வளம், நெல் வளம், மன்னரின் நல்லாட்சி, மக்களின் இன்ப வாழ்வு, மாதர்களின் மாண்பு ஆகியவற்றைப் பற்றிய […]

Read more
1 36 37 38 39 40 88