திருவள்ளுவர் 2050 ஆண்டுகள்… அடைவுகள்

திருவள்ளுவர் 2050 ஆண்டுகள்… அடைவுகள், நூல் உருவாக்கக் குழு பொறுப்பாளர், பொழிலன், பாவலரேறு தமிழ்க்களம், பக்.984, விலை ரூ.900. திருக்குறள் தொடர்பான 2050 காலச் செயல்பாடுகளை இந்நூல் தொகுத்து வழங்கியிருக்கிறது. திருக்குறள் தோன்றிய காலத்தை ஆராயும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. திருவள்ளுரின் அறம், அரசியல், அவர் காட்டும் தமிழர் வாழ்வியல், வள்ளுவரின் கடவுள் சிந்தனை ஆகியவற்றைப் பற்றிச் சொல்லும் கட்டுரைகள், திருக்குறள் சமணம் சார்ந்ததா? புத்த மதம் சார்ந்ததா என ஆராயும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் வைதீகக் கருத்துகள், சைவ சித்தாந்த கருத்துகள், […]

Read more

கற்கோயிலும் சொற்கோயிலும்

கற்கோயிலும் சொற்கோயிலும், மா.கி.இரமணன், பூங்கொடி பதிப்பகம், விலை 150ரூ. ஆசிரியர் மா.கி.இரமணன், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர் என்று மிளிர்பவர். ஆம். அதற்கு அவர் எழுதிய கவிதையே சான்று. வாழ்வதற்குப் பொருள் வேண்டும் தான். ஆனாலும் வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற வரிகள், ஆழ்ந்த சிந்தனையைத் துாண்டும். உண்மையான பூங்கொடி மணக்கத்தானே செய்யும் நுாலின் பெயரே, முதல் கட்டுரையின் தலைப்பாக உள்ளது. ஐந்தெழுத்தை நெஞ்சழுத்தி எழுதிய அனைத்துக் கட்டுரைகளும், கன்னித் தமிழின் களி நடனம், சிந்தனை ஊற்றின் சிகரம் எனலாம். இந்தக் கட்டுரைகளின் மூலம் ஆசிரியர் […]

Read more

செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.ஜான் சாமுவேல், முல்லை நிலையம், பக்.172, விலை ரூ.120. தொன்மை, தனித்தன்மை, பலமொழிகளுக்கும் தாயாக அமைந்த தன்மை, நாகரிகம் மேம்பாடு அடைந்த ஓர் இனத்தின் பண்பாடு, கலை, அனுபவ உணர்வுகளின் முழுவெளிப்பாடாக அமைந்த இலக்கியங்களைப் பெற்றிருத்தல், தனித்து இயங்கும் ஆற்றல், தனித்தன்மை வாய்ந்த உயர்ந்த கலை, இலக்கிய வெளிப்பாடுகள், தனிச்சிறப்பான மொழிக் கோட்பாடுகள் கொண்டிருக்கும் ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படும். தமிழுக்கு அந்தத் தன்மைகள் எல்லாம் எவ்வாறு இருக்கின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது. வெறும் இலக்கியமொழியாக மட்டுமல்லாமல், நாட்டுப்புற இலக்கிய […]

Read more

திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை

திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை, பேரா.அர.வெங்கடாசலம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 432, விலை 385ரூ. திருக்குறளில், அரசியல், பொருளியல், சமயம், மெய்ப்பொருளியல், அளவையியல், மருத்துவ இயல், உளவியல், உழவியல் முதலான பல்துறைப் புலமைக் கூறுகளையும் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார். ஆன்மிகம் என்பதை நடுநிலையோடு விளக்கி, உளவியல் என்ற அறிவியல் சார்ந்த அனுபவத்தோடு ஆன்மிக உளவியல் நோக்கில் உரை கண்டுள்ளார், நுாலாசிரியர். சில குறட்பாக்களுக்கு, தான் கருதும் மாற்றுப் பொருளையும் வழங்கி, பின் ஆன்மிகம் சார்ந்த உளவியல் உரையை ஆய்வுரையாகத் தந்துள்ளார். ‘ஆன்மா’ என்னும் சொல்லை […]

Read more

கலைஞரின் நகைச்சுவை நயம்

கலைஞரின் நகைச்சுவை நயம், கவிஞர் தெய்வச்சிலை, நக்கீரன், பக். 224, விலை 150ரூ. மேடைப் பேச்சிலும், இயல்பான உரையாடல்களிலும் கலைஞரின் நகைச்சுவை நாடறிந்தது; நானிலம் அறிந்தது. முகவைக் கவிஞர் தெய்வச்சிலை கேட்ட மேடைப் பேச்சுகள், கவியரங்குகள், மாநாடுகள், அன்றாட நிகழ்வுகள் என எண்ணற்றவற்றில், 100 அளவில் நகைச்சுவை பகுதிகளைத் தொகுத்து, இந்நுாலைப் படைத்துள்ளார். ரு நிகழ்வு, நடிகர் விஜயகாந்த் தயாரித்த தமிழ்செல்வன் என்ற படத்தின் பெயரில் (தமிழ்ச்செல்வன்) ‘ச்’ இல்லையே, அது பிழையல்லவா என்று முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன் சொன்னபோது, அருகிலிருந்த கலைஞர், சற்றும் […]

Read more

தமிழகத்தில் முஸ்லிம்கள்

தமிழகத்தில் முஸ்லிம்கள், எஸ்.எம்.கமால், அடையாளம் பதிப்பகம், பக். 180, விலை150ரூ. வரலாற்று ஆய்வாளரான இந்நூலாசிரியர், தாம் ஆற்றிய வரலாற்றுப் பணிகளுக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தவிர விடுதலைப் போரில் சேதுபதி மன்னர், மாவீரர் மருது பாண்டியர், ராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், உள்ளிட்ட 18 நூல்களை இயற்றியவர். அந்த வகையில் தமிழக முஸ்லிம்களைப் பற்றி வரலாறு, இலக்கியம், செப்பேடு போன்ற தளங்களிலிருந்து அரிய தகவல்களைத் திரட்டி இந்நூலை இயற்றியுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கும் அரபு நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகத்தொடர்புகள், அதற்குப் […]

Read more

சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா

சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, கே.ஜீவபாரதி, அன்னம் (பி) லிட், பக்.118, விலை 100ரூ. ஆழியின் சீற்றத்தால் அழிந்த தமிழ் நுால்களை விட, அறியாமையாலும் கவனக்குறைவாலும் மறைந்து போன நுால்களும், அறிஞர்களும் ஏராளம். ‘இலக்கியத்தில் புதிய எதார்த்தவாதம்’ என்ற தலைப்பில் ஜீவா, ‘தாமரை’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். இந்நுாலைப் பயில்வதன் மூலம் மனிதகுல வளர்ச்சிக்கு இலக்கியத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பதையும், சோவியத் வளர்ச்சிக்கு வித்திட்ட கார்க்கி மற்றும் மாயக்கோவ்ஸ்கி வரலாற்று நாயகர்களின் இலக்கிய ஆளுமைகளையும், மார்க்ஸ், லெனின்,  போன்ற […]

Read more

தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு

தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. பழங்காலத் தமிழ் குடிமக்களின் மூலத் தமிழ்ப் பண்பாடு, பின்னர் முடியாட்சி நடைபெற்ற காலத்தில் ஆரியப் பண்பாடு எவ்வாறு தமிழகத்தில் ஊடுருவியது? தமிழ்ப் பண்பாட்டில் பெண்களைப் பற்றிய கருத்துக்கள், பெண்ணியம் மற்றும் தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு ஆகியவை இந்த நூலில் விளக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான கருத்துகளை, கட்டுரைகளாகத் தொகுத்து இருப்பதோடு, இருவருக்கு இடையே நடைபெறும் தலித் மொழியிலான உரையாடல்களாகவும் தந்து இருக்கும் புதிய முயற்சி பாராட்டப்படக்கூடியதாகும். […]

Read more

அகம் செய விரும்பு

அகம் செய விரும்பு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 130ரூ. பிறப்பு எனும் பெருந்தவம், யார் உங்கள் பிக்பாஸ்? நிம்மதி உங்களைத் தேடுகிறது என்பது உள்பட 16 தலைப்புகளில் சிறு கட்டுரைகளாக, கவிதை நடையும் சேர்த்து சிந்தனைக்கு விருந்தளிக்கும் விதத்தில் தொகுத்து தந்து இருக்கிறார், இந்த நூலின் ஆசிரியர் நா.சங்கரராமன். ஒவ்வொரு கட்டுரையையும் விளக்க படத்துடன் ஒரு சிறு கதையையும் சொல்லி சுவை ஊட்டி இருக்கிறார். நாம் எதிர்பாராத விஷயங்கள் இந்த நூலை படிக்கும்போது தெரிகிறது. நன்றி: தினத்தந்தி, 4/9/19. இந்தப் […]

Read more

வலி – இலக்கியம் – அரசியல்

வலி – இலக்கியம் – அரசியல், முனைவர் ஆ.ரேவதி, காவ்யா, பக். 136, விலை 140ரூ. இந்திய சமூகத்தில், ‘வேற்றுமை பார்க்கும் பண்பு’ ஆழமாக வேரூன்றிப் போயுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கொழுந்துவிட்டு எரியும், ‘சாதி’ என்ற தீ, சாதிக்குள் சாதி என்று சல்லி வேர்கள் போல் கிளை பரப்பி, இந்திய மனித சமூகத்தை வதைத்துக் கொண்டிருக்கிறது. மனிதருக்குள் மனிதரை வேற்றுமை பாராட்டி ஒடுக்கியும் விலக்கியும் வைப்பதற்கு எதிராக எழுத்து, ஆயுதமாக பல காலம் கையாளப்பட்டு வந்துள்ளது. இந்நுாலை உருவாக்கியுள்ள நுாலாசிரியர் ரேவதி, […]

Read more
1 37 38 39 40 41 88