காசியும் கங்கையும்

காசியும் கங்கையும், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், பக். 168, விலை 120ரூ. இந்திய கலாசாரத்தில், வரலாற்றில், சமய வாழ்வில், இலக்கியத்தில், மக்கள் சிந்தனையில் என அனைத்திலும் இடம் பெற்றுள்ள விஷயங்களில், காசியும் கங்கையும் குறிப்பிடத்தக்கவை. 1950களில் காசியில் கங்கையின் ஒரு கரையில் மக்கள் நீராட, மறுகரையில் நீர்யானைகளும் டால்பின்களும் மூழ்கி எழுந்த காலமாக இருந்தது. உலகின் முதல் நூலாக கருதப்படும் ரிக்வேதத்தில் காசியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காசி, கங்கை பற்றி வேத, புராண, இதிகாச, இலக்கியங்களில் வரும் குறிப்புகள் அனைத்தையும் நூலாசிரியர் தொகுத்து, […]

Read more

தெய்வம் தந்த தமிழ்

தெய்வம் தந்த தமிழ், முனைவர் மா.கி. ரமணன், பூங்கொடி பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. உலகின் எந்த மொழியையும் கடவுள் படைத்ததாகவோ, கடவுள் கவிதை எழுதி, இலக்கணம் எழுதி வளர்த்ததாகவோ வரலாறு இல்லை. ஆனால், தமிழுக்கு அத்தகு தனிப்பெருமையும் சிறப்பும் உண்டு. இறைவனே, இறையனார் அகப்பொருள் இலக்கணத்தை வழங்கியது, முதற் சங்கத்தில் அமர்ந்து தமிழாய்ந்தது, தருமிக்காக பாடல் எழுதி கொடுத்தது, சுந்தரர், சேக்கிழாருக்கு முதலடி எடுத்துக் கொடுத்து பாடச் சொன்னது ஆகியவை, நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதேபோல், முருகப் பெருமான் தன் அடியவருக்கு […]

Read more

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை, வீ. அன்பழகன், ச. இஞ்ஞாசிமுத்து, கண்ணதாசன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளில் தலையாயது பூச்சிகள். பாடுபட்டு வளர்த்த பயிரையும், மகசூலையும் பதம் பார்க்கும் பூச்சிகள் விவசாயத்திற்கு எதிரிகளாகத்தான் இருந்து வருகின்றன. அவற்றிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காகவே அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்தும், பூச்சிகளை கொல்கிறதோ இல்லையோ, கட்டாயம், தானயிங்களையும், காய்கறிகளையும் சாப்பிடும் மக்களையும் பதம் பார்க்கிறது. இதற்கு மாற்றாகதான், இயற்கை வேளாண்மையில், பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக பூச்சி […]

Read more

மனோதிடம்

மனோதிடம், பன்னாலால் படேல், தமிழில் ந. சுப்பிரமணியன், சாகித்ய அகாடமி, பக். 608, விலை 375ரூ. குஜராத்தில், மிகச்சிறந்த எழுத்தாளராக மதிக்கப்பெறும் பன்னாலால் எழுதிய ‘மாலேல ஜீவ்’ என்னும் இந்த நாவல் ஞான பீட விருதுபெற்றது. குஜராத்தில் 1900ல் நிகழ்ந்த கடுமையான பஞ்சம்தான் நாவலின் பின்புலம். கதாநாயகன் காலு, கதைத் தலைவி ராஜு இடையிலான காதல், நாவலின் மையம். அவர்களின் திருமணம் தடைபட்டதை வைத்து கதை பின்னப்பட்டுள்ளது. அவர்களின் திருமணத்தைத் தடுக்க முனைந்து அதில் வெற்றி காண்கிறது ஒரு குடும்பம். காலுவின் கிராமத்தில் கடும் […]

Read more

இது மடத்துக் குளத்து மீனு

இது மடத்துக் குளத்து மீனு, ஹாஜகான், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 215ரூ. மிதக்கும் நினைவுகள் சுயசரிதைக்கு இணையான பொறுப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த நினைவலைகள் தொகுப்பு. ஷாஜகான், தான் படித்து ரசித்தது, தான் அவமானப்பட்டது, தான் பாராட்டப்பட்டது அனைத்தையும் எளிமையான நடையில் பதிவு செய்திருக்கிறார். சாலை விபத்துகள், ‘தூல் கா ஃபோல்’ இந்திப் படப் பாடல், கடித இலக்கியம், தாராபுரத்தில் உள்ள சித்தி வீடு, கணக்கு வாத்தியார்… என்று அவரது நினைவலைகளில் மிதக்கும் தகவல்கள் சுவையான டைரிக் குறிப்புகளாகச் சுவையூட்டுகின்றன. -மானா. நன்றி: […]

Read more

ஹாஸ்ய வியாசங்கள்

ஹாஸ்ய வியாசங்கள், பம்மல் சம்பந்த முதலியார், சந்திரா பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. தமிழ்நாடகத் தந்தை என்று புகழப்படும் மறைந்த பம்மல் சம்பந்த முதலியாரின் நகைச்சுவைத் திறனுக்கு, பிற்காலத்தில் திரைப்படமாகவும் வெளிவந்த ‘சபாபதி’ மிகச் சிறந்த சான்று. அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பான ஹாஸ்ய வியாசங்கள் (முதல் பதிப்பு 1937) தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. 12 கட்டுரைகள் கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் நகைச்சுவை வீரியம் அதிகம். தண்ணீர் இல்லாத நீச்சல்குளம் (அக்காலத்திலும் இப்படித்தானா?) உள்ளிட்ட சென்னையின் விநோதங்களை முதல் கட்டுரை […]

Read more

பொன்னகரம்

பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், பக். 264, விலை 230ரூ. மண் வாசனை என்று வரும்போது சென்னையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நகரம், பல்வேறு ஊர்கள், மாநிலங்களைச் சேர்ந்த மக்களால் வளர்த்தெடுக்கப்பட்டது. சென்னைக்குள் பல உலகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை சற்றே அணுகிப்பார்க்கும் முயற்சியில் அந்த உலகின் யதார்த்தம், அதன் நுட்பங்களோடு இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் பார்த்திருந்த சென்னைக்கும் நேரில் காணும் காட்சிகளுக்கும் சம்பந்தமே இல்லாத பகவதிபுரம் என்ற இடத்துக்கு திருமணம் செய்து கொண்டு அத்தை மகன் முத்துக்கிருஷ்ணன் சகிதம், […]

Read more

தெய்வத்தமிழ்

தெய்வத்தமிழ், மரு. பரமரு, பழனியப்பா பிரதர்ஸ், பக். 184, விலை 145ரூ. தேவாரம் அருளிய சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரைப் பற்றியும், சைவ புராணங்களில் சிறப்பாகப் போற்றிப் புகழப்படும் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடற்புராணம் ஆகிய படைப்புகளில் இறைவனின் திருவருள் பற்றியும், மகாகவி பாரதியாரின் தெய்வப் பாடல்கள், அன்னை காரைக்கால் அம்மையார் பற்றியும் அழகுற ‘தெய்வத் தமிழ்’ என்னும் இந்த நூல் எடுத்துரைத்துள்ளது. கட்டுரை வடிவில் சமய ஆர்வலர்களும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களும் படித்துணரும் வகையில் அமையப் பெற்ற இந்த நூலில், […]

Read more

லால் பகதூர் சாஸ்திரி தலைமைப் பண்புகளின் பேராசான்

லால் பகதூர் சாஸ்திரி தலைமைப் பண்புகளின் பேராசான், ஆங்கிலம் அனிஸ் சாஸ்திரி, பவான் சவுத்திரி, தமிழில் பொன். சின்னத்தம்பி முருகேசன், விஸ்டம் வில்லேஜ் பப்ளிகேஷன்ஸ், பக். 372, விலை 245ரூ. இந்தியாவின் பிரதமமந்திரியாகப் பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரியின் தேவைகள் மிகவும் குறைவு. தன்னுடைய ருமானத்திற்குள் வாழ்க்கை நடத்துவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். தன்னிடம் எப்போதாவது உபரிநிதி ஆதாரங்கள் இருந்தால், அதை தேவைப்பட்டோருக்கு உதவும் வகையில் மீண்டும் சமுதாயத்திடமே சேர்ப்பதில் முனைப்பாக இருந்தார் என்பதை இந்த நூல் வாயிலாக அறிய முடிகிறது. இத்தனை […]

Read more

உறவுகள்

உறவுகள், வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், பக். 287, விலை 150ரூ. ‘வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் பெரும் சாதனைகள் புரிவதற்காக அதனைச் செலவிட வேண்டும்’ என்கிறார் மகாத்மா காந்தி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். உலகிலுள்ள 700 கோடி மக்களும் கூடி வாழ்வது எத்தனை பெரிய சிறப்பு! மகிழ்ச்சி, அன்பு, ஒற்றுமை, உறவு, உழைப்பு, உயர்வு போன்ற கொள்கைகளே உலக மக்களை ஒருங்கிணைக்கும் பாலங்களாக அமைய முடியும். எனவே, ஒற்றுமை என்பது அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றது. அவை பெரும்பாலும் குழுக்களாகவே இயங்குகின்றன. […]

Read more
1 498 499 500 501 502 841