தங்க விலை ரகசியம்

தங்க விலை ரகசியம், கே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 204, விலை 90ரூ. சின்னச் சின்ன விஷயங்கள். ஆனால் அதில் அடங்கும் பெரிசு. அதை நேரடியாகச் சொல்லாமல் ஹாஸ்யமாக, படித்தால் சிரிப்பு வரும் வகையில் எளிய தமிழில், ஆங்கிலம் அதிகம் கலந்தாலும் நெருடல் இல்லாமல் தங்க விலை ரகசியமாக தந்துள்ளார் ஆசிரியர். கணவன் மனைவி அல்லது நண்பர்கள் இருவர் உரையாடலில் எவ்வளவு செய்தியை உட்புகுத்தித் தந்துள்ளார். அதிரசம் சொல்லும் ருசியும், தங்கவிலை தரும் நாட்டு நடப்பும், ரியல் எஸ்டேட் தகிடுதத்தம், ஆபீஸ் […]

Read more

பட்டினத்தார் (புதுக்கவிதை வடிவில்)

பட்டினத்தார் (புதுக்கவிதை வடிவில்), காவ்யா பதிப்பகம், சென்னை, பக். 1321, விலை 1300ரூ. பட்டினத்தார் இயற்றிய பாடல்களை இன்றைய தலைமுறையினரும் கற்றுணரும் வகையில் புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார் நுலாசிரியர். அதோடு பேரறிவுக் களஞ்சியம் எனும் ஏனைய பாடல்களையும் இந்நூலில் புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார். இந்த இரண்டையும் படைத்தது வெவ்வேறான பட்டினத்தார் என்ற வாதத்திற்குள் செல்லாமல் பாடல்களின் உட்கருத்தினை படிப்போர் உணரும் வகையில் எளிய நடையில் புதுக்கவிதை வடிவில் தந்திருப்பது புது முயற்சியே. புராணக் கதைகள், நாயன்மார் வாழ்க்கை கோயில்கள், கோயில்கள் பற்றிய செவிவழிச் செய்திகள் […]

Read more

வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்

வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள், வெளி ரங்கராஜன், அடையாளம் வெளியீடு, திருச்சி, விலை 100ரூ. அசலானவர்களின் ஆவணங்கள் நாடகத்துக்காக நாடகவெளி என்ற இதழைத் தொடர்ந்து நடத்தியவர் வெளி ரங்கராஜன். தீராநதியில் தொடராக வந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு இந்த புத்தகம். பேரா. இராமானுஜம் இயக்கிய வெறியாட்டம் நாடகத்தில் தன் அழுத்தமான நடிப்பாற்றலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் காந்திமேரி. ஆண்களே கொடிகட்டிப் பறந்து நாடக உலகில், முழுக்கப் பெண்களே பங்கேற்ற ஒரு குழுவை அமைத்து, சமூகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவர் கும்பகோணம் பாலாமணி. பாஸ்கரதாஸ் பாடல்களால் […]

Read more

அழுததும் சிரித்ததும்

அழுததும் சிரித்ததும், க. பஞ்சாங்கம், அன்னம் வெளியீடு, தஞ்சாவூர், விலை 140ரூ. கதைகளாக வேண்டிய கட்டுரைகள் யுகமாயினி இதழில் பேரா. க. பஞ்சாங்கம் எழுதிய பத்திக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். உண்மையில் பஞ்சாங்கம் பொறுமையைக் கைக்கொள்ளாமல் ரொம்பவும் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மிக மிக நல்ல சிறுகதைகளாகவோ நாவல்களாகவோ வந்திருக்க வேண்டிய பல கதைகள் வெறுமனே கட்டுரைகளாகக் கலைந்துவிட்டன. ஆசிரியர் கட்டுரையாகச் சொல்லும்போதே ஒரு பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களுமாய் இருக்கின்றன. சிறுகதை உலகம் பல அரிய முத்துக்களை இழந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. […]

Read more

உலகத் தமிழ்க் கவிதைகள்

உலகத் தமிழ்க் கவிதைகள், தொகுப்பு செல்வா கனகநாயகம், விகடன் பிரசுரம், சென்னை, விலை 250ரூ. உலகத்தின் பரப்பையும் எல்லையையும் மற்ற மனிதர்களின் வாசனையையும் சிந்தனையையும் உணர்ந்து உள்வாங்குவதற்கு முன்பே, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவன் தமிழன். அண்டிப் பிழைப்பது மட்டுமே புலவர்களின் இலக்கணமாக இருந்த காலத்தில் நீயோ மன்னன்? என்று கேள்வி கேட்கும் துணிச்சல் தமிழ்க் கவிதைக்கு இருந்தது. கலை கலைக்காகவே அழகியல் இல்லா இலக்கியம் அர்த்தமற்றது. கோஷம் போடுவதற்கும் கவிதைக்கும் வித்தியாசம் உண்டு மகனே என்றெல்லாம் விமர்சனப் புலிகள் தங்கள் […]

Read more

செம்மண் மடல்கள்

செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்), இரா. மீனாட்சி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, பக். 452, விலை 300ரூ. ஆரோவில் கிராமச் செய்தி மடலில் வாசகர்களுடன் உரையாடும் நோக்கில் எழுதப்பட்ட கடிதப்பாணிக் கட்டுரைகளின் தொகுப்பு. கடிதங்கள் நிதர்சனமானவை. அதிலும் ஒரு கவிஞரின் கடிதங்கள் என்பதால் ஆழ்மன உணர்வோடும் கவித்துவத்தோடும் எழுதப்பட்டுள்ளவை. கலை, அறிவியல், பண்பாஈடு, மொழி, பிரபஞ்ச நோக்கு என விரியும் இதன் பரிமாணம் வாசிப்போருக்கு அறிவுச்சுடரேற்றும் தன்மையுடையன. காஞ்சி மகா ஸ்வாமிகள் தனக்கு தந்த நெற்றுத் தேங்காய், சங்கரா என்னும் நாமம் தாங்கி […]

Read more

மொழியியல் தொடக்கநிலையினருக்கு

மொழியியல் தொடக்கநிலையினருக்கு, டெரன்ஸ் கோர்டொன், தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை, விளக்கப்படம் சூசன் வில்மார்த், அடையாளம் பதிப்பகம், திருச்சி, விலை160ரூ. மொழியியல் ஓர் அறிமுகம் தமிழுக்கு மொழியியல் தேவை இல்லை என்பது போன்ற கருத்துகள் இங்கு உண்டு. இந்தப் பார்வைகளைப் புரட்டிப்போடுகிறது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மொழியியல் தொடக்கநிலையினருக்கு புத்தகம். டெரன்ஸ் கோர்டொனின் நூலைத் தமிழிச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பாக இளைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் மொழியியலை எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை. மொழிகள் செயல்படும் விதத்தில் தொடங்கி, மனிதர்கள் தங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும் விதம், […]

Read more

நக்சல் பாரி முன்பும் பின்பும்

 நக்சல் பாரி முன்பும் பின்பும், ஆங்கில மூலம் சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன் விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர். ஒரு கம்யூனிஸ்ட் வாக்குமூலம் இந்திய மக்களுக்கு இன்னமும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் துர்த்துக் கொள்வதற்காக அவர்கள் பல்வேறு வண்ணங்களில் அரசியல் இயக்கங்களைச் சமுதாயத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் நக்சல் பாரி இயக்கமும் ஒன்று. அதன் முக்கிய பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுனிதிகுமார் கோஷ். சில மாதங்களுக்கு முன்புதான்96 வயதில் அவர் காலமானார். அவர் தனது இறுதிக் காலத்தில் […]

Read more

அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய மருத்துவ முறைகள்

அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய மருத்துவ முறைகள், டாக்டர் ஜெ. ஜெயலட்சுமி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 975, விலை 750ரூ. இவ்வளவு பெரிய நூலா என்று மலைப்பு ஏற்பட்டாலும் புரட்டிப் பார்த்தவுடன் முழுவதையும் படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. காரணம், பைசா செலவில்லாமல் நமது நோய்களை நாமே தீர்த்துக் கொள்ளும் எளிய மருத்துவ முறைகளை வரைபடம், புகைப்படம், செய்முளை என்று மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. ஹோமியோபதி, அக்குபங்சர், அக்குபிரஷர், யோகா, முத்திரைகள், நேச்சுபதி, ஆரிகுலோதெரபி, பிரானிக் ஹீலிங், ரெய்கி என்று […]

Read more

மண்ணுக்கேற்ற மார்க்சியம்

மண்ணுக்கேற்ற மார்க்சியம், அருணன், வசந்தம் வெளியீட்டகம், மதுரை, பக். 752, விலை 400ரூ. அருணனி எழுத்து வலிமையான தர்க்க முறைகளைக் கொண்டது. இந்தத் தொகுப்பின் முதல் பார்வையிலேயே அதை உணர முடியும். இலக்கியம், அரசியல், சமூகம், பொருளாதாரம் என எண்ணற்ற விவாதங்களை அவர் இத்தொகுதியில் நிகழ்த்துகிறார். 750 பக்கங்களுக்கு விரிவ9டகின்ற இந்நூல் 103 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. சோவித் யூனியன் சரிந்து விழுந்த பின்னரும் மார்க்சீயம் சார்ந்த தன்னுடைய உறுதியை அது வெல்லும் என்ற நம்பிக்கையை அருணன் தொடர்ந்து எழுதிவருகிறார். மார்க்சியம் வெறும் தத்துவமாக மட்டுமில்லாது […]

Read more
1 631 632 633 634 635 841