மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை)

மகடூஉ முன்னிலை (பெண் புலவர் களஞ்சியம் – ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரை), முனைவர் தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், சென்னை – 29, பக்கம் 704, விலை 300ரூ. இத்தனை நாள்களாக இப்படியொரு, ‘பெண்புலவர் களஞ்சியம்’ வெளிவராதா என்று ஏங்கியவர்களின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது இந்நூல். நூலகங்களில் மட்டுமே காணக்கிடைக்கக்கூடிய பெண்பாற் புலவர்கள் பற்றிய தகவல்களைக் களஞ்சியமாக்கியிருக்கிறார் நூலாசிரியை. அட்டைப்படமே அசத்துகிறது. நீண்ட நெடுங்காலமாக அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு உட்பட்ட ‘கயமனார்’ என்ற புலவர் ஆணா? பெண்ணா? என்ற சந்தேகத்தை – சர்ச்சையை இந்நூல் நிவர்த்தி செய்துள்ளது. அதுமட்டுமல்ல, […]

Read more

விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் (ஊர் வரலாறு)

  விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் (ஊர் வரலாறு), கோ. செங்குட்டுவன், பி.எஸ்.பப்ளிகேஷன், விழுப்புரம் 605, பக்கம் 225, விலை 150 ரூ. நூலாசிரியர், விழுப்புரத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் மட்டுமல்ல, வரலாற்று நிகழ்வுகளைத் தொகுப்பதிலும் கைதேர்ந்தவர். தான் வாழும் மண்ணின் பெருமை பேசும் விதத்தில் விழுப்புரம் பற்றிய முழு விவரங்களையும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார். கி.பி. 940 முதல் 2010 வரையிலான விழுப்புரத்தின் வரலாற்று நிகழ்வுகள் கோவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் ஓர் அறிமுகம். விடுதலை வேள்வியில் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகரானது, விழுப்புரம் நகராட்சி நிர்வாகம், பண்பாட்டு நோக்கில், நினைவிற்குரியவர்கள், […]

Read more

சங்க இலக்கியங்களில் மனித நேயம்

சங்க இலக்கியங்களில் மனித நேயம், முனைவர் முருகையன் பக்கிரிசாமி, வனிதா பதிப்பகம், சென்னை – 17,  பக்கம் 240, விலை 140 ரூ. மனிதநேயம் என்றால் என்ன விலை என்று கேட்கும் இன்றைய சமுதாயத்தில், சங்க இலக்கிய மக்கள் எவ்வளவு மனித நேயத்துடன் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைச் சங்க இலக்கியங்களிலிருந்து சான்றுகள் காட்டி விளக்கியுள்ளார். அகத்தின் தூய்மை, புறத்தின் மேன்மை, அறத்தின் மாண்பு, உலகப் பொதுமைச் சிந்தனை, உயிரிரக்கப் பண்பு, மனிதமும் மானமும் என்கிற ஆறு தலைப்புகளில் மனிதநேயத்தின் மகத்துவத்தைப் புரியவைத்துவிடுகிறார். ‘உயிரிரக்கப் பண்பு’ என்கிற இயல்தான் […]

Read more

நாடக மேடையும் திரை உலகமும்

நாடக மேடையும் திரை உலகமும், ஏ.எல்.எஸ். வீரய்யா, திருவரசு புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை – 17, விலை 75 ரூ கவிஞர் கண்ணதாசனின் பாசறையில் உருவான இந்நூலாசிரியர், சுமார் 50 ஆண்டுகள் சினிமாத் துறையிலும், அதற்கு முன் சில ஆண்டுகள் நாடகத் துறையிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவர். அந்த அடிப்படையில் இவ்விரு துறைகளைப் பற்றிய தனது சுவாரஸ்யமான அனுபவங்களையும், மற்ற பல செய்திகளையும் தொகுத்து அவ்வப்போது புத்தகங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இந்நூலிலும் வியப்பான, சுவையான பல செய்திகளை துணுக்கு வடிவிலும், சிலவற்றை […]

Read more

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மனிதனின் நிரந்தரத் தேடல்

மனிதனின் நிரந்தரத் தேடல் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 1, விலை 150 ரூ. நான் தியானம் செய்ய ஆரம்பித்த போது அதில் இவ்வளவு ஆனந்தம் காண்பேன் என நான் ஒருபோதும் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல எவ்வளவு அதிகமாக நான் தியானித்தேனோ அவ்வளவு எனது அமைதியும், ஆனந்தமும் அதிகரித்தன’ என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள், கட்டுரைகளின் தொகுப்பை அண்மையில கொல்கத்தாவிலுள்ள ‘யோகோதா சத்தங்க […]

Read more

ரெபிடெக்ஸ் கம்ப்யூட்டர் கோர்ஸ்

ரெபிடெக்ஸ் கம்ப்யூட்டர் கோர்ஸ்,  இ.ராமநாதன், ரெபிடெக்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 220 ரூ. கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், போன்றவற்றின் பயன்பாடுகளை அறியாமல், இனி எந்தவொரு இளைய தலைமுறையினராலும் எதிர்காலத்தை எதிர்கொள்வது என்பது மிகக் கடினம். அந்த அளவுக்கு இவற்றின் ஆதிக்கம் உள்ளது. அதே சமயம், இவற்றைப் பயன்படுத்த ஓரளவுக்கு ஆங்கில அறிவும், விஷய ஞானமும், பயிற்சியும் தேவை. ஆயினும் ஆங்கிலம் தெரியாதவர்களும் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் இலகுவான பயிற்சி முறையை எளிய தமிழில் இந்நூல் விளக்குகிறது. கம்ப்யூட்டர் என்றால் என்ன என்ற ஆரம்பப் பாடம் முதல், அதன் […]

Read more

இனி விதைகளே பேராயுதம்

இனி விதைகளே பேராயுதம், கோ. நம்மாழ்வார், இயல்வாகை பதிப்பகம், 25, மாந்தோப்பு, ப.உ.ச. நகர், போளூர் சாலை, திருவண்ணாமலை 1, பக்கங்கள் 96, விலை ரூ 60. இயற்கை உழவாண்மையின் கட்டாயத் தேவைபற்றி கூறும் புத்தகம். நம்மாழ்வாரின் சிந்தனைகள் எளிய தமிழில் மின்னுகின்றன. பூச்சிக்கொல்லிகள் சர்வசாதாரணமாக உபயோகப்படும் விதத்தில் மனிதர்களுக்கு நேரும் அபாயம், மரபு முறை வேளாண்மையை மறுக்கும் இன்றைய விசாயிகள், பச்சைப்புரட்சியில் ஏற்படும் லாபங்கள் என எல்லாவற்றுக்கும் அருமையான பதில்கள் தருகிறார். இயற்கையை எப்படி நாம் குலைக்காமல் இருக்க வேண்டும், நன்மை தரும் […]

Read more

மயிலிறகு மனசு

மயிலிறகு மனசு, தமிழ்ச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை – 600002, விலை 80 ரூ. “நெருக்கமான நண்பர்களிடத்தில் நாம் கொண்டிருக்கும் நட்பின் பிரதிபலிப்புகளை உளவியல் நோக்கோடு ஆராயும் நூல். சுட்டு வைத்த கனங்கிழங்கு வாசமும், குழிப்பணியாரத்தின் மென்மையும், காத்தாடி பார்க்கின்ற பரவசமும், சமயங்களில் சுடுமணல் பொறுக்காத தவிப்பும்… என்று தாயாய் வருடிக்கொடுக்கவும், குழந்தையைப் போல் அடம்பிடிக்கவும் கற்று வைத்திருக்கிறது தமிழச்சியின் தமிழ். அழகான வடிவமைப்பு, அரிய புகைப்படங்கள், மனித நேயமிக்க தகவல்களுடன் கூடிய இந்த நூல் ஒரு வரலாற்றுக் […]

Read more

1945ல் இப்படியெல்லாம் இருந்தது…

நினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை […]

Read more

கறை படிந்த கரங்களா?

கறை படிந்த கரங்களா?, (லார்டு ராபர்ட் கிளைவ்) ஆசிரியர் – சக்தி. கிருஷ்ணமூர்த்தி, பி,எஸ்.பவுண்டேஷன், பக்கங்கள் 78, விலை 45 ரூ.   இந்நூல் ராபர்ட் கிளைவ் பற்றிய வரலாற்று நாடகம். கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வருவதற்கும், ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் காலூன்றவும் காரணமாகத் திகழ்ந்தவர் கிளைவ். வங்காள கவர்னராக இருந்தபோது, அங்கு நடைபெற்ற கொலைகள், கொள்ளைகள், நிர்வாகச் சீர்கேடுகளுக்குக் காரணம் கிளைவ். இந்திய மன்னர்களிடம் லஞ்சம் பெற்று, தன்பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் லட்சக்கணக்கான இங்கிலாந்து கரன்சியான பவுண்டுகளை சேமித்தான். தன் உறவினர்களுக்குப் பதவிகளும், […]

Read more
1 834 835 836 837 838 841