உயிரே உனக்காக

உயிரே உனக்காக, எ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், த.பெ.எண். 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை – 17, பக்கம் 432, விலை 250 ரூ.   புதினங்கள், கட்டுரை எழுதுவதில் தனக்கென புதிய பாணியைப் படைத்து வாசகர் நெஞ்சில் இடம் பெற்றவர் நூல் ஆசிரியர். தினமலர் வாரமலரில் ஓராண்டுக்கும் மேலாக வெளிவந்த இந்தக் கதைக் கரு பலரது மனதை ஈர்த்திருக்கிறது. ஆசிரியர் நட்பு வட்டாரம் அளப்பரியது. ஆழமான மனவியல் உணர்வுகளை இதில் வரும் பாத்திரப்படைப்புகளில் எளிய தமிழில் புரிய வைத்திருக்கிறார். […]

Read more

வ.உ.சி. பற்றி ம.பொ.சி.

வ.உ.சி. பற்றி ம.பொ.சி., சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், தொகுத்தவர்- ம.பொ.சி. மாதவி பாஸ்கரன், சிலம்புச் செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம.பொ.சி. பதிப்பகம், பதிவு எண் 482/2010, 4/344 ஏ, சீஷெல் அவென்யூ, அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை – 41, பக்கம் 97, விலை 65 ரூ. வ.உ.சி. யை என் அரசியல் தந்தை என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. பெருமைபடக் கூறுவார். அவர் எத்தனையோ நூல்களை எழுதியிருந்தாலும், முதன் முதலில் எழுதி வெளியிட்ட நூல், கப்பலோட்டிய தமிழர் என்பதுதான். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதற்காக […]

Read more

மனுநீதி என்னும் மனு தர்மசாஸ்திரம் (மூலமும் உரையும்)

மு. வ. கட்டுரைக் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்), முனைவர் ச.சு. இளங்கோ, பாரி நிலையம் வெளியீடு, 184/88, பிராட்வே, சென்னை -108, பக்கம் 1656, விலை 1000 ரூ. அறிஞர் மு.வ. அவர்களின் நூலாக்கம் பெறாத கட்டுரைகளின் தொகுப்பாக, இவ்விரண்டு தொகுதிகளும் வெளிவந்துள்ளன. நிறைகுடமாக விளங்கிய மு.வ. அவர்கள் எளிமையாக வாழ்ந்து காட்டியவர். அன்னாரின் கட்டுரைகள் தமிழர்க்கும், தமிழ்மொழிக்கும் என்றென்றும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன என்றும் உறுதியாகக் கூறலாம். இந்நூலில், மொழி, தமிழ், சங்க இலக்கியம், திருக்குறள், சமயம், கலை, கவிதை, சிறுகதை, வாழ்வியல் […]

Read more

ஆன்மிக வினா விடை (ஐந்தாம் பாகம்)

ஆன்மிக வினா விடை (ஐந்தாம் பாகம்), சுவாமி கமலாத்மானந்தர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் – 641020, விலை 70 ரூ. ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற ஆன்மிக மாத இதழில் 2000 முதல் 2004 வரை வெளியான ஆன்மிக வினா-விடைகளின் தொகுப்பே இந்நூல். இதற்கு முன் வெளியான இந்நூலாசிரியரின் நான்கு பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதை முன்னிட்டு, ஐந்தாம் பாகமாக இந்நூல் வெளியாகியுள்ளது. இதுவும் ஹிந்து மதம் பற்றிய பொது அறிவு நூலாகும். இந்த நூலில் இறைவன், ஹிந்து மத தெய்வங்கள், மகான்கள், ஆன்மிகச் […]

Read more

நீதிமன்றங்களில் தமிழ்

நீதிமன்றங்களில் தமிழ், டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத், சட்டக்கதிர், 3/2 சுவாதி ராம் டவர்ஸ், 3, துர்காபாய் தேஷ்முக் சாலை, ராஜா அண்ணாமலைபுரம் , சென்னை – 28. புத்தக விலை ரூ. 400   கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றி சட்ட அறிஞர் மா.சண்முக சுப்பிரமணியன் ஒரு கருத்தை தனது புத்தகத்தில் எழுதினார். அந்த வழக்கில் குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டது என்பதைத் தன் வழக்கறிஞர் மூலமாக அறிந்த அந்தக் குற்றவாளி, ‘ஐட்ஜ் துரைங்களே! […]

Read more

களவுபோன என் கடவுளும் காணாமல்போன என் காதலியும்

களவுபோன என் கடவுளும் காணாமல்போன என் காதலியும், பேராசிரியர் ப. சந்திரசேகரன், ஆனந்து பப்ளிகேஷன்ஸ், 1, தாமஸ்நகர், சின்னமலை, சைதாப்பேட்டை, சென்னை – 15, விலை 500 ரூ. சிக்கலானதும் கண்டுபிடிக்க முடியாததுமான குற்ற வழக்குகள் வந்தால் அனைவரும் தேடும் நபர் பேராசிரியர் ப. சந்திரசேகரன். ‘தடய அறிவியல்’ சந்திரசேகரன் என்றால், அனைவருக்கும் தெரியும். ராஜீவ் காந்தி கொலை வழக்கு முதல் ஆட்டோ சங்கரின் கொலை வழக்கு வரை அவரால் மர்மம் அவிழ்க்கப்பட்ட முடிச்சுகள் ஏராளம். தமிழகத்தின் மிகமுக்கியமான தீ விபத்துக்கள் அனைத்துக்கும் முதல் புகையைக் […]

Read more

கங்கை கரையினிலே

கங்கை கரையினிலே, ப. முத்துக்குமாரசாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 600 014, பக்கம் 205, விலை 150 ரூ. எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள ப. முத்துக்குமாரசாமி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வம்சாவளி, தமிழை முறையாகப் படித்த ஆன்மிகவாதி. ஆன்மிகத்தை நல்ல தமிழில் வழங்கும் ஆற்றல் கைவரப்பெற்றவர். நூலாசிரியர் சென்ற ஆண்டு சதுர்தாம் தரிசனம் என்று அழைக்கப்படுகின்ற யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதாரிநாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய தலங்களுக்கு புனிதயாத்திரை செய்துவிட்டு, நம்மையெல்லாம் இந்த நூலின் வாயிலாக அத்துணை புண்ணிய தலங்களுக்கும் அழைத்தும் செல்லுகிறார். […]

Read more

இமய குருவின் இதய சீடன்

சூரியன், சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்தி சிவா பப்ளிகேஷன்ஸ், பக்கம் 176, விலை 120 ரூ. சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் என, இதுவரை 10 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் சாந்தகுமாரி சிவகடாட்சத்தின் புதிய நாவல் சூரியன். கிராமம், நகரம் என, இரண்டு வழிகளில் பயணிக்கும் இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களை, அவரவர் இருப்பிடத்திற்கே உரிய குணங்களோடு, ஒப்பனை இன்றி படைத்துள்ளார் ஆசிரியர். இன்றைய, இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப் போக்கின் மீது தனக்குள்ள வருத்தத்தை, ‘சூரியன்’ நாவலில் ஆழமாக பதிவு செய்துள்ளார். நாவல் பிரியர்களுக்கு நல்ல தீனி.   […]

Read more

குண்டலகேசி

அவஸ்தை – கன்னட நாவல், யு. ஆர். அனந்தமூர்த்தி, காலச்சுவடு பதிப்பகம், பக்கம் 207, விலை 150ரூ. கன்னட இலக்கிய உலகில் மரியாதைக்குரிய ஒரு இலக்கியவாதி, யு. ஆர். அனந்த மூர்த்தி. ஞானபீடம் உள்ளிட்ட, பல பெரிய இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவருடைய சமஸ்கர, பாரதிபுர என்ற இரண்டு புதினங்களும், இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் மாற்றம் பெற்றுள்ளன. இவருடைய ‘அவஸ்தை’ என்ற நாவலை நஞ்சுண்டன் மொழி பெயர்ப்பில் காலச்சுவடு கிளாசிக் நாவல் வரிசை வெளியீடாக வந்துள்ளது. இதற்கு முன்னரே, வேறு ஒரு […]

Read more

மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும்

மருத நிலமும் பட்டாம்பூச்சிகளும், சோலை சுந்தரபெருமாள், முற்றம், சென்னை – 14, பக்கம் 296, விலை 150 ரூ. நூலாசிரியரின் கருத்தரங்க உரைகள், இதழ்களில் வெளிவந்த அவருடைய கட்டுரைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூல். வண்டல் நிலப்பகுதியின் குறிப்பாக தஞ்சை மாவட்ட மக்களின் வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், தஞ்சை மண்ணின் சாதியப் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாடு ஆகிய எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அம்மண்ணில் வளம்பெற்றிருந்த நிலவுடைமைச் சமூக அமைப்பே இருந்தது என்பதைச் சொல்லும் நூல். தஞ்சை மாவட்ட எழுத்தாளர்களின் சிறப்பான […]

Read more
1 832 833 834 835 836 841