அம்மா

அம்மா, சுப்ரஜா, வாதினி, சென்னை, பக். 128, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-9.html ஜனரஞ்சகமான கதைகள் எழுதிவரும் சுப்ரஜா, ஒரு சுவாரஸ்யமான கதாசிரியர். வார்த்தைச் சிக்கனம், அந்தச் சிக்கனமான வார்த்தைகளுக்கும் ஒரு வசீகரம், கவர்ச்சி, மிக ஆழமான கதைக் கருவை லகுவாகக் கையாளும் எழுத்துத் திறன், ஐம்பது காசு என்ற கதையும், ஸ்டார்ட் ஆக்ஷன் கதையும் இவரது கதை எழுதும் நேரத்திற்கு கட்டியம் கூறுபவை. அமரர் சுஜாதாவின் சிஷ்யர் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன இவரது எழுத்து நடை. […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 300ரூ. புவியியல் வல்லுநர்கள் நிலங்களை, நாடுகளை, கண்டங்களை ஆராய்ந்தறிந்ததைப்போல, பால் ப்ரண்டன் இந்தியாவின் பாரம்பரியங்கள், அவற்றை நிலைநாட்டிய ஆன்மிகத் தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஒரு ஆன்மிக வரைபடத்தையே வரைந்து இந்தியாவை உலகிற்குக் காட்டியிருக்கிறார். 1900இல் இந்தியாவில் இரயில், கார், மாட்டு வண்டி பயணங்கள், போலிச்சாமியார்கள், கபட வேடதாரிகள், நல்லோர், உலகிற்கே தெரியாமல் வாழ்ந்த உண்மையான யோகிகள், யோக, தந்திரா ஆசான்கள், மக்களை […]

Read more

திருப்பதி ஒரு வாழ்க்கைக் கையேடு

திருப்பதி ஒரு வாழ்க்கைக் கையேடு, கோட்டா நீலிமா, மணிஜல் பப்ளிசிங் ஹவுஸ் (பி) லிட், 7/32, தரைத்தளம், அன்சாரி ரோடு, தர்யாகனிஜ், புதுடில்லி 110002, பக். 275, விலை 199ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-183-9.html கலியுக தெய்வமாகத் திகழும் திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் குறித்த விவரங்கள் அனைத்தும், இந்நூலில் உள்ளன. அனைத்துப் பாவங்களையும் போக்குபவன் என்று நினைத்தே, மக்கள் வேங்கடாசலபதியை வணங்குகின்றனர். இதற்கு ஆதரவாக இந்நூல் பல செய்திகளையும் கூறுகிறது எனலாம். திருப்பதியின் தோற்றம், சுவாமி வேங்கடாசலபதியின் தத்துவம், […]

Read more

பாரதி ஒரு திருப்புமுனை

பாரதி ஒரு திருப்புமுனை, முனைவர் அ. அறிவுநம்பி, சித்திரம், 15, கலைவாணி நகர், லாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ. பாரதியார் ஒரு வைரச் சுரங்கம். அவரது கவிதை வரிகளில் மின்சாரம் எடுக்கலாம். அந்த முயற்சியில் புதுவை ஆய்வு அறிஞர் அறிவு நம்பி புதுமை தோய்ந்து, பத்து கோணங்களில் பாரதியாரை பதிவு செய்துள்ளார். பாரதி உருவாக்கிய பாராட்டுப் பரம்பரை, புதுக்கவிதை முதலில் தந்தது, பாரதியின் பேனா புதுமையை நிரப்பி சிறுகதை புனைந்து, வேதத்தை புதுக்கியது, சோதனை முயல்வுகள் போன்ற கருத்துப் புரட்சியால், […]

Read more

அனுமனின் கதையே

அனுமனின் கதையே, இந்திரா சவுந்திரராஜன், சாருபிரபா, பக். 464, விலை 250ரூ. ஊழிதோறும் புதிது புதிது தோன்றும் சீர்த்தியன் என்று கம்பர் அனுமனைப் போற்றுவார். அது உண்மைதான். பல யுகங்கள் கடந்து, இன்றும் அனுமன் புதிய புதிய உருவப் பொலிவுடன் தோன்றி அருளுகிறார். பக்தியும், தொண்டும் தவிர ஏதும் அறியாத அனுமனின் ஆளுமையும், அதை வரிகளில் படம் பிடித்து, படிப்பவர் மனதில் திரைப்படமாய் காட்டும் இந்திரா சவுந்திரராஜனின் எழுத்தின் திறமை சிறப்பானது. இடை இடையே ஓவியங்கள், எழுத்துக் காவியத்தை தூக்கி நிறுத்துகின்றன. சீதையை கண்டு […]

Read more

கலாம்மின் திருப்புமுனைகள்

திருப்புமுனைகள், கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 120ரூ. சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகனாக தேர்ந்து எடுக்கப்பட்டு, மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்று இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திராமாக ஜொலிக்கும் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம். ஏற்கனவே அக்னி சிறகுகள் என்ற அற்புதமான படைப்பை கொடுத்து புத்தக உலகில் ஒரு சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார். இப்போது, அவரது சிறகுகள் மேலும் விரிவடைந்து பறந்ததன் மூலம் உருவாகி இருக்கிறது. திருப்புமுனைகள் என்ற அக்னி சிறகுகள் […]

Read more

இந்திய இன்ஷுரன்ஸ் கோடீஸ்வரர்கள்-உயர்ந்த மனிதர்களின் உண்மைக் கதைகள்

இந்திய இன்ஷுரன்ஸ் கோடீஸ்வரர்கள்-உயர்ந்த மனிதர்களின் உண்மைக் கதைகள், கனினிகா மிஸ்ரா, தமிழில்-உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், பக். 232, விலை 150ரூ. இந்திய மக்கள் தொகையில் மூன்று சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஆயுள் காப்பீடு செய்துள்ளனர். இந்த நிலையில் ஆயுள் காப்பீட்டுத் துறை வளர்ச்சியை மட்டுமே காண முடியும். இந்த துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பாதையில் முன்னேற்றம் என்பது மட்டுமே ஒரே வழியாக இருக்க முடியும் என்பது ஓரளவுக்கு உண்மை. காப்பீட்டுத் துறையில் முகவர்களாக வெற்றி கண்ட ஒன்பது பேர்களைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் இது. காப்பீடு முகவர்களான […]

Read more

வானொலி வளர்த்த தமிழ்

வானொலி வளர்த்த தமிழ், முனைவர் இளசை சுந்தரம், மீனாட்சி புத்தகம் நிலையம், பக். 150, விலை 260ரூ. காசிநகர்ப் புலவன் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்குவோம் என மகாகவி பாரதியார் கண்ட கனவை நனவாக்கிய கருவி வானொலி. அந்த வானொலி பற்றிய ஆய்வு நூலை, பாரதி பிறந்த எட்டையபுரத்து மண்ணின் மைந்தர், பாரதி வேடமிட்டு உலக மேடைகளில் உலா வரும் பேச்சாளர், எழுத்தாளர் இளசை சுந்தரம் எழுதியிருப்பது பொருத்தமானது. தகவல் தொடர்பியல் மாணவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். வானொலியின் வரலாறு, […]

Read more

இந்திய இன்சூரன்ஸ் கோடீஸ்வரர்கள்

இந்திய இன்சூரன்ஸ் கோடீஸ்வரர்கள், கனினிகா மிஸ்ரா, கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை 17, விலை 150ரூ. இன்சூரன்ஸ் துறையில் நுழைந்து கோடீஸ்வரர்களான 9 இந்தியர்கள், அவர்களுடைய தொழில் மீது கொண்ட ஆர்வத்தால், அடிமட்டத்திலிருந்து தொடங்கி வியாபாரத்தை மிகக்குறுகிய காலத்தில் வெற்றிகரமாக மாற்றினார்கள். அவர்களின் அனுபவம் நூலாக எழுதப்பட்டுள்ளது. நேர்மை, கடின உழைப்பு, தொலைநோக்குப் பார்வை ஆகிய மூனறும் வெற்றிக்கான மந்திரமாகும். அத்துடன் குரு மந்திரமும் தொழில் வெற்றிக்கு முக்கியமானதாகும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகிறார். இன்சூரன்ஸ் துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு […]

Read more

கவியரசு கண்ணதாசனின் சிங்காரி பார்த்த சென்னை

சிங்காரி பார்த்த சென்னை, கவியரசு கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை 600017, பக். 184, விலை 80ரூ. சினிமாவில் நடிக்க வந்து மானத்தோடு ஊர்திரும்பும் ஒரு கிராமத்து பெண் ணமையமாக கொண்ட நூல். 32 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பாக மலர்ந்திருக்கிறது. ஒன்று நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அல்லது நடுரோட்டில் அலைகிறார்கள். சில நடிகைகள் கடத்தல் மன்னர்களை கல்யாணம் செய்து கொண்டு, அவர்கள் சம்பாதிப்பதற்கு தங்கள் உடம்பைக் கொடுத்து, நானும் என் கணவரும் அமெரிக்காவிற்கு போகிறோம், ஜெனீவாவிற்கு போகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். […]

Read more
1 10 11 12 13 14 15