கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024447.html சிறு பத்திரிகைகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இலக்கியத்தைக் கற்று துறைபோன பேராசிரியர்கள், தற்கால நவீன இலக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்ளாதிருப்பதே ஞானம் என்று கருதிக்கொண்டிருந்தார்கள் (பக். 100). இந்தச் சூழ்நிலையில், இலக்கியத்தை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்களைப் பற்றிக் கவலையில்லை. இலக்கியத்தை வாழ்க்கையின் அனுபவப் பகிர்தலாக, முன்னோட்டமாகக் கருதுகிறவர்கள் ஒன்றுகூடி, சிறு பத்திரிகைகளைத் துவங்க நேர்ந்தது (பக். 101). என் நினைவிற்குத் தெரிந்த […]

Read more

வெளிச்சம் விற்க வந்தவன்

வெளிச்சம் விற்க வந்தவன், ராஜா செல்லமுத்து, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 320, விலை 200ரூ. மழை பொழிய ஆரம்பிக்கும் முன்னே வரும் மண்வாசனை மாதிரியான கதைகள் இவை. கதைக்களம், சித்தரிக்கும் மாந்தர்கள், ஊடாடும் விலங்குகள் எல்லாமே நம்முடன் நெருக்கமாக உறவாடியவையே. அன்றாடம் நம் கண்முன் நிகழ்ந்து மறைந்துபோன சம்பவங்களின் நினைவை மீட்டெடுக்கும் கதைகள் அதிகம். ஒரு கதையைப் படித்ததும் அடுத்த கதையையும் படிக்கலாமே என்று ஏங்க வைக்கும் யதார்த்த உந்துதல். இப்படி ராஜா செல்லமுத்துவின் இந்த சிறுகதைத் தொகுப்புக்கு பல சிறப்புகள். ஆடுகளை சுமந்து […]

Read more

தியாகராயநகர் அன்றும் இன்றும்

தியாகராயநகர் அன்றும் இன்றும், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ. சென்னையில் இதயம் போன்ற பகுதி தியாகராயநகர். நகைக்கடைகள், பெரிய பெரிய பட்டு ஜவுக்களிக்கடைகள் இங்கு அதிகம். அதுமட்டுமல்ல, சினிமா நட்சத்திரங்கள், வி.ஐ.பி.க்கள் நிறைய பேர் வகிக்கிறார்கள். தியாகராயநகர் முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை, அதே பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் நல்லி குப்புசாமி செட்டியார் இப்புத்தகத்தில் சுவைபட எழுதியுள்ளார். இங்கு வசித்த திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றிய விவரங்களும், மற்றும் ராஜாஜி, காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சத்தியமூர்த்தி, […]

Read more

கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. கதை, கவிதை, கட்டுரை, பேச்சு, பத்திரிகை என்று எழுத்துலகில் பன்முகத்தன்மையுடன் பயணிக்கும் இந்நூலாசிரியர், பல்வேறு சமயங்களில் எழுதிய இலக்கியத் தரம் வாய்ந்த 18 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலை வாசிக்கும்போதே இவருக்கு பாரதி மீதுள்ள ஈர்ப்பை உணர முடிகிறது. பாரதியும் பாரதமும், பாரதியும் இஸ்லாமும், பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள் முதலான கட்டுரைகளில் மட்டுமல்ல, இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளிலுமே பாரதியின் தாக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதி, வ.வே.சு.ஐயர், கல்கி, […]

Read more

வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை, ரமணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 225ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-459-2.html ரயில் வண்டியில் ஒரு தொழிற்சாலை சீனாவில் ஷ்யாங்கே நகரத்திலிருந்து கடலில் நகரும் தொழிற்சாலையாக ஒரு கப்பல் புறப்படுகிறதாம். நியூயார்க் செல்லும் வழியில், நிற்கும் இடங்களிலெல்லாம் பொருட்களை வாங்கிச் சேகரித்து, அவற்றைக்கொண்டு கப்பலிலேயே உற்பத்தியை முடித்து, நியூயார்க்கில் முழுமையடைந்த பொருட்களாக விற்பனை செய்கிறார்களாம். இப்படி உற்பத்தி நேரம், பயண நேரம் இரண்டையும் ஒன்றாக்க முயற்சிக்கிறார்களாம். நீண்ட ரயில் பாதைகள் உள்ள நம் நாட்டில் […]

Read more

ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2)

ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2), ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 992, விலை 600ரூ. தலைப்புக்கேற்ற நூல் அல்ல. ரகசியம் என்று கூறிவிட்டு, பல ரகசியங்களை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறார் தத்துவ ஞானி ஓஷோ. பெட்டைக் கோழியானது அதன் முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொரிக்க முடிகிறது. ஏனெனில், அதன் இதயம் எப்போதும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஒரு முக்கியமான மந்திரச்சொல் என்று கூறும் ஓஷோ, இந்த மந்திரச் சொல்லின் ரகசியத்தைக் கதைப் பின்னலுடன் காது கொடுத்து […]

Read more

அஷ்டாவக்ர மகாகீதை

அஷ்டாவக்ர மகாகீதை, ஓஷோ, தமிழில் என். ஸ்ரீதரன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 448, விலை 350ரூ. அஷ்டாவக்ர ஸம்ஹிதாவின் 298 சூத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது சூத்திரங்கள் சார்ந்து ஓஷோ நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். வடமொழி ஸ்லோகங்கள், அவற்றுக்கான விளக்கங்கள், முல்லா நசுருதீன் கதைகள், ஜென் கதைகள், சூஃபி மார்க்க கதைகள், பைபிள் கதைகள், திபேத்திய பழங்குடியினர் கதைகள், மகாபாரதக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், புத்தர், விவேகானந்தர் போன்றோரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், தனக்கே நேரிட்ட அனுபவங்கள் – இப்படி எல்லாவற்றையும் மேற்கோள் […]

Read more

சகுனி

சகுனி, விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 543, விலை 410ரூ. மாபெரும் இந்திய இதிகாசமான மகாபாரதத்தில், சகுனி கதாபாத்திரம் முக்கியமானது. சூது, வஞ்சத்தின் தலைவனாக, சகுனி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். சகுனியின் மறுபக்கத்தை அலசியிருக்கிறார் ஆசிரியர். காந்தார நாட்டுத் தலைவன், காந்தாரியின் மகன், துரியோதனனின் தாய் மாமன் சகுனி என்ற அறிமுகம் சிறப்பாக உள்ளது. தான் கொண்ட சபதத்தை நிறைவேற்ற, பொறுமை காப்பதிலும், திட்டமிடுவதிலும், செயல்படுத்துவதிலும் சகுனி தீர்க்கமானவர் என்கிறார் ஆசிரியர். தங்கையின் வாழ்விற்காக, சகுனி செய்யும் காரியங்கள் அனைத்தையும் வாசிப்பவர் ஏற்கும்படி தர்க்க ரீதியில் […]

Read more

கருத்தும் எழுத்தும்

கருத்தும் எழுத்தும், சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 208, விலை 150ரூ. புத்தக வாசிப்பு என்பது வாசகனுக்கு பல்வேறு அனுபவங்களையும், அறிவாற்றலையும் தரக்கூடியது. ஒரு வாசகனுக்கு வாசிப்பில் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடு வேறெதுவும் இல்லை. தேடித் தேடிப் படிக்கின்ற வாசகனுக்கு இன்னொரு தேடலையும் கொடுக்கின்ற நூல்தான் கருத்தும் எழுத்தும். பல கருத்துகளை, சிந்தனைகளை எத்தனையோ நூல்கள் பேசியிருக்கின்றன. ஆனால் எழுதப்பட்ட பல நூல்கள் பற்றி பேசுவதுதான் கருத்தும் எழுத்தும் என்ற இந்த நூல். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் தொடங்கி, ஜாக் லண்டன் […]

Read more

வியாசர் அருளிய மகாபாரதம்

வியாசர் அருளிய மகாபாரதம், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. மாபெரும் இந்திய இதிகாசங்களில் வியாசர் அருளிய மகாபாரதம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் நன்னூல். தர்மத்தை உயிர் மூச்சாய் கொண்ட யுதிஷ்டிரன், அநியாய அக்கிரமங்கள் செய்யத் தயங்காத துரியோதனன் இவர்களுக்கிடையே உருவாகிறது பகைமை. முடிவில் எது வெற்றி பெறுகிறது? தர்மமா, அதர்மமா என்ற கேள்வியும், அதற்கான பதிலுமே மிகப்பெரிய மகாபாரதமாய் விரிந்திருக்கிறது. இந்நூலின் சிறப்பு, கண்ணன், யுதிஷ்டிரன், அர்ச்சுனன், கர்ணன், சகுனி, விதுரன் என்று மாறுபட்ட ஆளுமைச் சிறப்புகளை, வாழ்வியல் நெறிகளை உள்ளடக்கியது என்பதுதான், […]

Read more
1 3 4 5 6 7 8