வாழ்விக்க வந்த காந்தி

வாழ்விக்க வந்த காந்தி, ரொமெய்ன் ரோலந்து, தமிழில் எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 150ரூ. ரொமெய்ன் ரோலந்து என்ற, பிரெஞ்சு பேரறிஞர் எழுதிய மகாத்மா காந்தி பற்றிய ஆங்கில நூலினை, புகழ்மிக்க எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழில் தந்திருக்கிறார். மொழிபெயர்க்கும் பணியில் தமது துணைவி திருமதி ஜெயஜனனி, பெரிதும் உதவியது பற்றி அவரே குறிப்பிட்டுள்ளார். மகாத்மாவின் அருங்குணங்கள், சுதந்திரப் போராட்டம் தொடர்பான அவருடை பல்வேறு செயற்பாடுகள், சத்யாக்கிரக நிகழ்வுகளில் அவர் பின்பற்றிய விதிமுறைகள், பிறர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு காந்தி அளித்த பதில்கள், […]

Read more

கம்பனைத் தேடி

கம்பனைத் தேடி, சாலமன் பாப்பையா, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 175ரூ. பிர்மஸ்ரீ வாசுதேவ் கோவிந்தாச்சார்யா, பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா உள்பட 9 பேரின் படைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கம்பனில் சட்டம் என்ற கட்டுரை, ராம காவியத்தில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் நிகழ்த்திய சூழ்ச்சிகள் எந்தெந்த குற்றப் பிரிவுகளில் வருகின்றன? தசரதன் கைகேயிக்குக் கொடுத்த வாய்மொழி ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகுமா? கம்பனின் படைப்பில், தசரதனின் காலத்திலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்தப்பட்டு வந்த விதம் போன்றவற்றை விளக்கி நம்மை வியக்க […]

Read more

புதையல் புத்தகம்

புதையல் புத்தகம், சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-813-0.html நானறிந்து தொடர்ந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர் சா. கந்தசாமி. புனைகதையோடு வேறு பல துறைகளிலும் அவர் மிகவும் மதிக்கப்படுபவர். ஓராண்டு அவர் சிறந்த ஓவிய விமர்சகர் என்று விருது வாங்கியிருக்கிறார். தொலைக்காட்சி வந்தபோது அவருடைய பங்களிப்பு, குறும்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என மாறியது. தொலைக்காட்சிக்கென அவர் எடுத்த ஒரு முழு நீளப்படம், மைசூர் இந்திய மொழிகள் […]

Read more

அனுபவச் சுருள்

அனுபவச் சுருள், டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா பப்ளிகேஷன்ஸ், தி.நகர், சென்னை, பக். 192, விலை 125ரூ. ஒரு வங்கி அதிகாரியின் அரசியல் அனுபவங்கள், இலக்கிய ரசனை, நனவோட்ட முறையிலான நிகழ்ச்சித் தொகுப்புகள். பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் எழுச்சி, மொழி பெயர்ப்பு அனுபவம், ஜெயகாந்தன், சி. சுப்ரமணியன், ராஜாஜி போன்றோர்களுடனான நேர்காணல், ஆங்காங்கே தலை தூக்கும் பாரதியின் கவிதை வரிகள் இப்படியே சுவாரஸ்யமாக 192 பக்கங்கள். எந்தத் தலைப்பை எடுத்துப் படித்தாலும் அதில் ஒரு ஆழ்ந்த கருத்தும், யதார்த்தமும் இழையோட அமைந்த அனுபவம். என்னைக் […]

Read more

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், தேவிகாபும் சிவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை 98, விலை 70ரூ. அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை கதைகளை மாணவர்களிடம் எளிமையாக அறிமுகப்படுத்தும்விதத்தில் எழுதப்பட்டிருககிறது இந்நூல். யூக்லிட்டில் ஆரம்பித்து ஸ்டீபன் ஹாக்கிங் வரை அறிவியல் வரலாற்றில் தடம் பதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: இந்தியாடுடே, 26/3/2014.   —- வண்டாடப் பூ மலர, பேரா. முனைவர் ம.பெ. சீனிவாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 125ரூ. ஐம்பது கட்டுரைகளைக் கொண்ட கருத்துப் பெட்டகம் இந்நூல். […]

Read more

மணிமேகலை காட்டும் மனிதவாழ்வு

மணிமேகலை காட்டும் மனிதவாழ்வு, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-207-4.html ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை 8ம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் சமுதாய அரசியல் நிலைமைகள் எப்படி இருந்தன என்பதை அறிவதற்கு உதவும் நூல். அதில் கூறப்படும் புத்த மத கருத்துகள். தமிழ்நாட்டின் நிலை, மக்களின் பழக்க வழக்கங்கள், இலக்கியச் சுவை போன்றவற்றை ஆசிரியர் சாமிசிதம்பரனார் ஆராய்ச்சி கண்ணோட்டத்துடன் வழங்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 26/2/2014. […]

Read more

என்மகஜெ

என்மகஜெ, அம்பிகாசுதன் மாங்காடு, தமிழில் சிற்பி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 288, விலை 200ரூ. கேரள மாநிலத்தின் வட கோடியில் உள்ள ஊரான என்மகஜெ, அரசு சுயநல அரசியல்வாதிகள், கார்ப்பரேட் கலாசாரம், விலைபோகும் விஞ்ஞானிகளின் கூட்டுச்சதி, முதலாளித்துவத்தின் சந்தைமயமாக்கல் வெறி போன்றவற்றுக்கு இலக்காகி, எப்படி உயிரினங்கள் அற்றப் போகும் அவலநிலைக்கு உள்ளானது என்பதை விளக்கும் நாவல் இது. முந்திரிக் காடுகளின் பெயரில் வனங்கள் அழிக்கப்படுதல், பின்னர் முந்திரி மரங்களை தேயிலைக் கொசுக்களிடமிருந்து காப்பதாகக்கூறி பல நாடுகளில் தடை செய்யப்பட்ட எண்டோசல்பான் என்னும் […]

Read more

என்மகஜெ

என்மகஜெ, மலையாளத்தில் அம்பிகாசுதன் மாங்காடு, தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 288, விலை 200ரூ. மலையாளச் சூழலியல் நாவல். மனச்சாட்சியை, அதிர வைக்கும் படைப்பு என்ற எச்சரிக்கை அறிவிப்புடன் ஆரம்பிக்கும், நாவலின் பக்கங்களை ஒவ்வொன்றாகப் படித்து செல்லுகையில், ஒரு மிகச் சிறந்த, தரமான புதினத்தைப் படித்து முடித்த நிறைவுடன், கண்களை மூடி சிந்திக்க ஆரம்பிக்கிறோம். பிரபஞ்சத்தின் ஐம்பூதங்களையும், நாசகார அறிவியல் வன்புணர்ச்சி செய்து கொண்டேயிருக்கிறது. தட்டிக் கேட்க யாருமில்லை என்ற துணிச்சலில் கைபேசிக் கோபுரங்களினால், குருவி இனத்தை டைனோஸருடன் சேர்த்து, அருங்காட்சியில் […]

Read more

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை ரூ.115. உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பதுதான் இறையன்புவின் பேச்சும் மூச்சும். அதற்கான உத்தரவாதத்தைத்தான் இந்நூலில் தந்துள்ளார். குமுதம் ரிப்போட்டரில் தொடராக வந்தபோது அதன் தலைப்பே கவனத்திற்குரியதாகி பலரைப் படிக்கத் தூண்டியது. இன்றைய மனிதனின் ஒவ்வொரு நொடி உழைப்பும் அடுத்த பல தலைமுறையினரின் உயர்வாக அமையும் என்பதை நூல் முழுதும் பதியன் போட்டுள்ளார். விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் வியர்வை, உழைப்பிற்காகச் சிந்தியதாக […]

Read more

தமிழ்ச்சுடர் மணிகள்

தமிழ்ச்சுடர் மணிகள், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 230ரூ. மறைந்த தமிழறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதிய இந்நூல் மிகப் புகழ் பெற்றது. தொல்காப்பியர், திருவள்ளுவர், கபிலர், கம்பர், சடையப்ப வள்ளல், பரிமேலழகர் உள்பட 24 தமிழ்ச்சான்றோர்களின் வரலாறுகளை விரிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் வையாபுரிப்பிள்ளை. நீண்ட இடைவெளிக்குப் பின் சிறந்த கட்டமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது. திருவள்ளுவர் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து இவர் எழுதிய வாழ்க்கைக்குறிப்பு குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பகுதி வருமாறு, இவர் வள்ளுவர் குடியிற் பிறந்தவர். […]

Read more
1 4 5 6 7 8