இந்த வானம் இந்த பூமி இந்த வாழ்வு இந்த மரணம்

இந்த வானம் இந்த பூமி இந்த வாழ்வு இந்த மரணம், ஏவியன், பத்திரிகையாளர் பதிப்பகம், விலை 200ரூ. மனிதனில் புதைந்திருக்கும் கெட்ட குணங்களை சுட்டிக்காட்டி அவனை திருத்த முயற்சிக்கும் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் ஏவியன். உலக மனித ஒட்டு மொத்த சமூகத்தின் சரியான விடியலைத் தேடும் முதல் தொடக்கமாக இதனைப் பிரகடனப்படுத்துகிறேன் என்கிறார் ஆசிரியர். பாராட்டுக்குரிய லட்சியம். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- வங்கமொழி சிறுகதைகள் தொகுதி 3, சாகித்ய அகாடமி, விலை 400ரூ. வங்க மொழியில் எழுதப்பட்ட 27 சிறுகதைகளின் தொகுப்பு நூல். […]

Read more

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்

உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், சீத்தாகந்த் மகாபாத்ரா, தமிழில் முனைவர் ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாடமி, பக். 208, விலை 125ரூ. பழங்குடி மக்களை விவரிக்கும் சிறுகதைகள்! இந்த நூல் 13 கதைகள் வழி, வித்தியாசமான பாடுபொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியர், புகழ்மிக்க கோபியாத் மொகந்தி, பழங்குடி மக்களின் வாழ்வியலைத் தம் கதைகளில் படம் பிடித்துக் காட்டுவதில் ஈடுபாடுடையவர். இந்த நூலிலும், ஒன்றிரண்டு கதைகள் அந்த பின்புலத்தில் அமைந்துள்ளன. இருப்பினும் குடும்பப் பாங்கான கதைகளும் இதில் உள்ளன. ‘அம்புப் படுக்கை, இருவீரர்கள், வீடு […]

Read more

மீரா

மீரா, இரா. மோகன், சாகித்ய அகாடமி, பக். 112, விலை 50ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024735.html ‘மரபில் பூத்த புதுமலர்’ என்றும், ‘காலத்தின் குரல்’ என்றும், ‘பாவேந்தரின் வாரிசு’ என்றும் திறனாய்வாளர்களால் மதிப்பிடப்பெற்ற மீரா (மீ.ராசேந்திரன்) இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிதை உலகில் தமக்கென தனியிடம் வகுத்துக்கொண்ட ஆற்றல்சால் ஆளுமையாளர். ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்’ எனும் புதுக்கவிதை நூல் மூலம், 1980களில், கல்லூரி மாணவர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்தவர். அவரது படைப்புகளில் அங்கதச் சுவை ஆழ்ந்து விரிந்து கிடக்கும். அரசியல்வாதியின் பதவி […]

Read more

மீறல்

மீறல், ஆங்கிலம் மாலதி ராவ், தமிழில் அக்களூர் இரவி, சாகித்ய அகாடமி, பக். 368, விலை 250ரூ. இந்த நாவல் 2007ம் ஆண்டின் சிறந்த ஆங்கில நூலுக்கான விருதைப் பெற்றது. 1930 மற்றும் 1940களில் இருந்த சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல், அந்தக் காலப் பெண்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அவல நிலையை வெளிச்சப்படுத்திக் காட்டும் ஓர் அற்புதச் சித்திரம். சுதந்திரப் போராட்ட காலத்தில்தான், இந்தியப் பெண்கள் தங்களுக்கான பொருளாதார சமூக விடுதலையைக் கனவு காணும் துணிச்சல் பெற்றனர். நாவலில் வரும் […]

Read more

அம்மா ஓர் உலகளாவிய தலைவி

அம்மா ஓர் உலகளாவிய தலைவி, ஸ்ரீ நித்யா பதிப்பகம், விலை 300ரூ. முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி, அ.இ.அ.தி.மு.க., தலைமைக் கழகப் பேச்சாளர் வி.ஜி.ஆர்.ராமதாஸ் எழுதிய புத்தகம். அன்னை தெரசா, ஜோன் ஆப் ஆர்க், விக்டோரியா மகாராணி, மார்க்ரெட் தாட்சர், இந்திரா காந்தி ஆகியோருடன் ஒப்பிட்டு ஜெயலலிதா சிறப்புகளை எடுத்துக்கூறுகிறார். தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளை, துணிச்சலுடன், தொலைநோக்குடனும் தீர்த்த அவர் மதிநுட்பத்தை போற்றுகிறார். சுருக்கமாகச் சொன்னால் ஜெயலலிதா பற்றிய சிறந்த புத்தகம், வண்ணப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 18/11/2015.   —- பெரியாழ்வார், […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள் – குமுதினி

இந்திய இலக்கியச் சிற்பிகள் – குமுதினி, பிரேமா நந்தகுமார், சாகித்ய அகாடமி, பக். 135, விலை 50ரூ. பிரிட்டிஷ் காலத்திய பெண்ணிய எழுத்தாளர்‘ பெரும்பாலான இந்திய பெண்கள் கல்வியறிவில்லாமல் இருந்த காலகட்டத்தில், மிகவும் ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர், குமுதினி என்று தமிழுலகால் அறியப்பட்ட, ரங்கநாயகி தாத்தம். அவரது குடும்பத்தில், ஆண்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்களாக இருந்தும், பெண்கள் கல்வியறிவற்றோராக வாழ்ந்தனர். அந்தக் கால குழந்தை திருமணத்திற்கு, குமுதினியும் விதிவிலக்கில்லை. இருந்தும் தன் தணியாத கல்வி தாகத்தாலும், தந்தையின் உதவியாலும், கணவரின் ஆதரவாலும், தானே […]

Read more

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 130ரூ. எக்காலத்தும் தனிப்பெருமையுடன் மேலோங்கி நிற்கும் இலக்கிய சிற்பிகளில் முதன்மையாக நிற்பவர் ரவிந்திரநாத் தாகூர். அவர்தம் படைப்புகள் ஓராயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சமயம், கல்வி, அரசியல், இலக்கியம் பற்றிய கட்டுரைகள் ஏராளம். அவற்றிலிருந்து தெரிந்து எடுக்கப்பட்ட சிந்தனை வரிகளின் தொகுப்பு நூல். தாகூரின்பால் ஈடுபாடு கொண்ட டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவரது படைப்புகள் ஒவ்வொன்றையும் படித்து இன்புற்றார். அவ்வாறு படித்ததில் பிடித்த முத்தான சத்தான வரிகளை அவ்வப்போது […]

Read more

தலித் சிறுகதைத் தொகுப்பு

தலித் சிறுகதைத் தொகுப்பு, ப. சிவகாமி, சாகித்ய அகாடமி, பக். 336, விலை 245ரூ. சமூகப் புறக்கணிப்பின் அவலம் தலித் இலக்கியப் பங்களிப்பு, தமிழ் இலக்கியத்தில் கவனத்திற்குரியதாகிறது. தலித் படைப்பாளிகள், தங்கள் சமூகத்திற்குரிய சிக்கல்களை அணுகியிருப்பதோடு, இலக்கியத்தில் தங்களுக்கான இடம் எது என்பதையும் மெய்ப்பித்து வருகின்றனர். இதில், மொத்தம் 26 கதைகள் உள்ளன. தலித் மக்கள், ஆதிக்க வர்க்கத்தால் எவ்வாறெல்லாம் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதையும், சமூக தளத்திசல் மட்டுமின்றி, அலுவலகங்களிலும் அவர்களுக்கான அடையாளங்களும், அங்கீகரிப்பும் எப்படி மறுக்கப்படுகின்றன என்பதையும், இதில் உள்ள பல கதைகள் தோலுரித்துக் […]

Read more

வையத் தலைமைகொள்

வையத் தலைமைகொள், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. எந்த ஒரு துறையில் யார் கால் பதித்தாலும், அது கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை எந்த இடம் என்றாலும், மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் திறமையோடு மிளிர்வதை காட்ட வேண்டும் என்ற இயல்பு உள்ளவர்கள் தான் சிறந்தவர் என்று பொருள்படுவர் ஆவார். அப்படி தனித்துவத்தை அடைய வேண்டும் என்றால் அந்த நிலை தானாக வந்துவிடாது. உழைப்பே உயர்ந்த ஓய்வு என்று தொடங்கி என்னென்ன வகை முயற்சிகளை மேற்கொண்டால் இறுதியாக […]

Read more

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?

இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, கவி காமு.ஷெரீப், கலாம் பதிப்பகம், சென்னை, விலை 35ரூ. இஸ்லாம் இந்து மதத்திற்கு மட்டுமின்றி வேறெந்த மதத்திற்கும் விரோதி அல்ல என்பதையும், வாள் கொண்டு இஸ்லாம் பரப்பப்படவில்லை என்பதையும் கவி காமு.ஷெரீப் ஆதாரங்களுடன் விளக்குகிறார். இந்து – முஸ்லிம் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —- ஆங்கிலத்தில் கு. அழகிரிசாமியின் சிறுகதைகள், சாகித்ய அகாடமி, சென்னை, விலை 130ரூ. மறைந்த தமிழ் எழுத்தாளர் கு. அழகிரிசாமி, சிறுகதைகள் எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் எழுதிய […]

Read more
1 2 3 4 5