தொல்காப்பியத்தில் இசை

தொல்காப்பியத்தில் இசை, ஏழிசை இசை ஆய்வகம், தமிழ்க்கலையகம், மயிலாடுதுறை, விலை 350ரூ. தமிழிசையின் தொன்மையையும், தனித்தன்மையையும் தக்க சான்றுகளுடன் நிலைநாட்டும் ஓர் அரிய ஆய்வு நூல். தொல்காப்பியம் தொடங்கிச் செவ்வியல் இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் காணப்படும் இசைக்குறிப்புகள் குறித்த விரிவான ஆய்வு நூலாக விளங்குகிறது. இசை, பாவகை, பண்புகள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசை அழகணிகள், இசைக் கலைஞர்கள், கூத்துக்கள் ஆகிய எட்டுத் தலைப்புகளின் கீழ் தொகுத்தும், வகுத்தும் தந்திருக்கும் செய்திகள், ஆய்வு முடிவுகள் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாக விளங்குகின்றன. இலக்கண ஆய்வுகள் குறைந்து வரும் […]

Read more

கல்வியே மகாசக்தி

கல்வியே மகாசக்தி, நரேந்திர மோடி, சப்னா புக் ஹவுஸ், பக். 100, விலை 150ரூ. கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய பல விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கல்வி குறித்து அவர் சொன்ன விஷயங்கள் கல்வியாளர்களாலும் கருத்தாளர்களாலும் பாராட்டப்படுகின்றன. அவர் அன்று பேசிய பேச்சு, அவரது ஆழ்மனதில் பல வருடங்களாக உறங்கிக்கிடந்த எண்ணங்களின் எழுச்சியே. கல்வி குறித்து அவர் கொண்டிருந்த எண்ணங்களை அவ்வப்போது குறித்து வைத்திருப்பது வழக்கம். அந்த குறிப்புகள்தான் இந்த நூல். குஜராத்தி மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் […]

Read more

நடராஜ தரிசனம்

நடராஜ தரிசனம், டாக்டர் சி.எஸ். முருகேசன், பக். 400, விலை 275ரூ. ஆதியும் அந்தமும் முதல், எங்கும் சிதம்பரம் வரை, மொத்தம் 25 தலைப்புகள் இந்த நூலில் உள்ளன. அசையாத ஐந்தெழுத்து மந்திரத்தின் அசையும் வடிவம்தான் அவர் நடனம் என்ற ஆய்வுக் குறிப்பும், இறைவன் ஆடிய ஆதி நடனம் எது என்ற கேள்விக்கு, சங்க இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பதும் சுவையானவை. இறைவன் ஆடிய ஆதிக்கூத்து, மூவகை தாண்டவத்திலிருந்து நூற்றெட்டு தாண்டவ வகை வரை அனைத்தையும் வரிசைப்படுத்தி, படங்களோடு பல செய்திகளை நூலாசிரியர் […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கம்பன் காப்பியத்தை, இதுவரையில் யாரும் தொட்டு பார்க்காத அளவில் பல ஆழமான கருத்து பெட்டகங்களை வெளியே கொண்டு வந்து காட்டியிருக்கிறார் நூலாசிரியர் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன். இவர் சட்டத்தை கரைத்து குடித்தவர் என்பதால், கம்பனில் சட்டமும், நீதியும், நீதிபரிபாலனமும் எந்த அளவில் இருந்திருக்கிறது? என்பதை முழுமையாக ஆய்வு செய்து தெரிவித்துள்ளார். நீதி, மனுநீதி போன்ற சட்டம் தொடர்பான கருத்துக்களையெல்லாம் ஆழமாக எடுத்துக்காட்டியிருக்கிறார். […]

Read more

பாரதத்தின் பண்பாடு

பாரதத்தின் பண்பாடு, சுவாமி முருகானந்தா, காந்தலட்சுமி சந்திரமவுலி, வானதி பதிப்பகம், பக். 80, விலை 50ரூ. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், (1999 டிச. 5ம் தேதி) தென்னாப்ரிக்க நகரான கேப்டவுனில் நிகழ்ந்த, மூன்றாவது சர்வமத மாநாட்டில், நெல்சன் மண்டேலோவுடன் கலந்து கொண்டு, சுவாமிஜி ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம் இது. பாரதம், ஆன்மிகம், பகவத்கீதை பற்றிய மேன்மையான செய்திகள் பல, இதன் கண் ஒளி வீசுகின்றன. போரை உருவாக்குவதற்காக போதிக்கப்பட்டதல்ல பகவத்கீதை. நீங்கள் உங்கள் கடமைகளை எங்கு, எப்போது, எப்படி செய்ய வேண்டும் என, […]

Read more

போருக்குத் தயார்

போருக்குத் தயார், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், பக். 40, விலை 50ரூ. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை படிப்பவர்களுக்குதான் இது தெரியும். அந்த வரிசையில் வந்துள்ள நூல் இது. 1939ல் வெளியானதன் இரண்டாம் பதிப்பு இப்போது வந்துள்ளது. சுயநலம் வேண்டாம். தர்க்கம் வேண்டாம். நம் நாட்டு யுத்த மந்திரி காந்திஜியின் கட்டளை பிறந்துவிட்டது. தயார் தயார் என்று மார் தட்டுங்கள். உங்கள் பளிங்கு போன்ற இருதயத்திலே வீர உணர்ச்சி பீறிட்டு […]

Read more

மனத்தோட்டத்து மலர்கள்

மனத்தோட்டத்து மலர்கள், கொற்றவன், ஊற்று பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்கள் எப்போதுமே ருசிகரமானவை. முன்னணியில் இருந்த, இருக்கும் பிரபலங்களை பேட்டிக்காக நேரடியாக சந்தித்து அளவளாவிய அனுபவங்களை இந்த புத்தகத்தில் தனது இனிய அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறார் பத்திரிகையாளர் கொற்றவன். தமிழ் சினிமாவில் கலை இயக்கத்தில் கொடிகட்டிப் பறந்த பா. அங்கமுத்து தான் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. கட்சியின் கொடியை வடிவமைத்தவர் என்ற தகவல் ஆச்சரியமூட்டுகிறது. ஸ்டண்ட் இயக்குனர் என். சங்கர், எம்.ஜி.ஆர். மீது மோதாமல் கடைசி வினாடியில் தவிர்த்த அதிர்ச்சி […]

Read more

மங்கல இசை மன்னர்கள்

மங்கல இசை மன்னர்கள், டாக்டர் பி.எம். சுந்தரம், முத்துசுந்தரி பிரசுரம், பக். 416, விலை 270ரூ. திருமணங்களில் தவறாது ஒழிப்பது நாதசுர இசை. இந்த மங்கல இசையை இசைப்பதில் புகழ் பெற்ற கலைஞர்கள் பலர். இவர்களில் முடிசூடா மன்னராக விளங்கியவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவரைப்போலவே புகழ்பெற்று விளங்கிய காருகுறிச்சி அருணாசலம், திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, செம்பொன்னார்கோவில் தட்சிணாமூர்த்தி பிள்ளை, திருவிடை மருதூர் வீருசாமி பிள்ளை, ஷேக் சின்ன மவுலானா உள்பட 126 நாதசுர வித்துவான்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் இது. மிகவும் சிரமப்பட்டு […]

Read more

பரம(ன்) ரகசியம்

பரம(ன்) ரகசியம், என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 550ரூ. அளவிலும், எடையிலும் சிறியதான, ஆனால் அபூர்வ சக்தி கொண்ட ஒரு லிங்கத்தை அபகரிப்பதற்காக நடக்கும் ஒரு கொலையுடன் நாவல் தொடங்குகிறது. அந்தக் கொலையை செய்தவன், மறு நிமிடமே மர்மமாக இறந்து கிடப்பது முதல் நடைபெறும் ஒவ்வொரு திகில் சம்பவமும் பரபரப்பு நிறைந்த அத்தியாயங்களில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளன. அத்துடன், அமானுஷ்ய நிகழ்வுகள், ஆன்மிக விசாரம், விஞ்ஞான ஆராய்ச்சிகள் ஆகியவையும் கதையுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதால், படிக்க மேலும் சுவாரசியமாக உள்ளது. நன்றி: […]

Read more

முஸ்லிம் சட்டம்

முஸ்லிம் சட்டம், எஸ்.ஏ.சையது காசிம் அறக்கட்டளை, திரியெம்பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 300ரூ. திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும், நபித்தோழர்களின் விளக்கத்தையும், தீர்ப்புகளையும் ஆதாரமாகக் கொண்டது முஸ்லிம் ஷரியத் சட்டம். ஷரியத் என்றால் பாதை, நேரிய பாதை, சட்டம் என்று பெவாருள். திருமணம், திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு அளிக்கும் மஹர் (மணக்கொடை) திருமண முறிவு (தலாக்), ஜீவனாம்சம், காப்பாளர் பொறுப்பு, கொடை, உயில், சொத்துரிமை போன்ற முஸ்லிம் சட்ட கோட்பாடுகளை பேராசிரியர் எச்.எம்.அபுல்கலாம் முஸ்லிம்சட்டம் என்ற தலைப்பில் அழகிய முறையில் விளக்கி இருக்கிறார். மேலும் […]

Read more
1 153 154 155 156 157 223