நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?, நோசன் பிரஸ், சென்னை, விலை 350ரூ. 40 ஆண்டுகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியை அலிஸ் கே. ஜோஸ்ன் வாழ்க்கை வரலாற்று நூல். ஒரு சாதாரணப் பெண் கூச்சமும், மிரட்சியும் மிக்க ஒரு சாதுப்பெண் எவ்வாறு இறையருளால் மன உரம் பெற்றாள் என்பதைக் கூறுவதே நூலாசிரியரின் நோக்கம். சுயநலத்தோடும், வன்முறையோடும் தீயவற்றைச் சொல்லிலும், செயலிலும் மறைவாகவும், வெளிப்படையாகவும் வெட்கமின்றி வெளிப்படுத்தும் மனிதர்களிடையே நன்மையில் நாட்டம் கொண்டு குற்றங்குறைகளை நீக்கி வாழ முயற்சிப்போர் பலர் உள்ளனர். அவவ்கையில் நல்ல ஆசிரியையாக வாழ்ந்து […]

Read more

பாரதிதாசன் யாப்பியல்

பாரதிதாசன் யாப்பியல், ய. மணிகண்டன், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 120ரூ. எட்டயபுரத்துக் கவிஞரின் அடியொற்றி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இரண்டாவது பெரும் கவிஞராகத் திகழ்ந்தவர் புதுவைக் குயில் பாவேந்தர் பாரதிதாசன். ஆனால் படைப்புகளின் எண்ணிக்கை என எடுத்துக்கொண்டால் பாரதியை விட அதிக படைப்புகளைத் தந்தவர் அவர். ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து, வண்ணம் என விதவிதமான யாப்பு வகைகளை தமது கவிதை இலக்கியங்களில் எழிலுறக் கையாண்டவர் அவர். மரபை அடியொற்றி மட்டுமின்றி, அதில் புதுமைகளைப் புகுத்தும் விதத்திலும் அந்தந்தச் சூழலுக்கு […]

Read more

கோழிப்பாட்டி

கோழிப்பட்டி, ஐ.சிவசுப்பிரமணி ஜெயசேகர், அய்யா நிலையம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 128, விலை 100ரூ. சமகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள், சமூக அவலங்களை இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வாயிலாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்துமே கற்பனை அல்ல. நெஞ்சை உலுக்கும் நிஜங்கள். ஒவ்வொரு சிறுகதையைப் படித்து முடிக்கும்போதும் சோகத்தால் மனம் கனத்துப் போகிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோழிப்பாட்டி கதையில் கொள்ளி வைக்க ஆம்புளப்புள்ள வேணும் என்று மார்தட்டும் கோழிப்பாட்டி, அதே ஆம்புளப்புள்ளைகளால் துன்புறுத்தப்படும்போது தானே தனக்குக் கொள்ளி […]

Read more

திருலோக சீதாராம்

திருலோக சீதாராம், ஏ.ஆர். இராஜமணி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 104, விலை 50ரூ. திருவையாறு லோகநாதய்யர் சீதாராமன் என்கிற திருலோக சீதாராம் அகத்திய முனிவரைப்போல் குள்ளமான உருவம் தாங்கியவர். பளிச்சென்று குங்குமப் பொட்டும் வெற்றிலைச் செல்லமுமாக எந்த நேரமும் உலா வந்தவர். கந்தர்வ கானம் என்னும் கவிதைப் படைப்பால் புகழ்பெற்றவர். சிறந்த மேடைப் பேச்சாளருமான அவர் சிவாஜி இதழின் ஆசிரியர். அவருடைய சித்தார்த்தன் மொழிபெயர்ப்பு சிறப்பு மிக்கது. பாரதி புகழ் பாடியும், பரப்பியும், பாரதி கவிதைகளை மேடையில் உணர்வுடன் பாடியும் பாரதிப் பித்தாக […]

Read more

மணிக்கொடி

மணிக்கொடி, சேது அலமி பிரசுரம், சென்னை, விலை 500ரூ. கல்கியின் பொன்விழாப் போட்யில் முதல் பரிசு பெற்ற நாவல் இது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது எனும் உயரிய கருத்துக்கு முழு வடிவம் கொடுத்து உருவான நாவல். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்று புதினத்தை படைத்திருக்கிறார் நேதிர்லதா கிரிஜா. இப்புதினம், விடுதலைக்காக நம் முன்னோர்கள் பட்ட வடுக்களின் […]

Read more

இணையில்லா இந்திய அறிவியல்

இணையில்லா இந்திய அறிவியல், கணித மன்றம், சென்னை, விலை 120ரூ. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் அறிவியல் சிந்தனைகள் தோன்றியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிரகங்களின் பெயர்களை, அவற்றின் அளவுக்கு ஏற்றவாறு பண்டைய இந்தியர்கள் அமைத்திருந்தனர். பிற்காலத்தில் கண்டறியப்பட்ட பல விஞ்ஞான தத்துவங்களை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிந்திருகிறார்கள். இந்த உண்மைகளை பழம்பெரும் நூல்களில் இருந்து அறிய முடிகிறது என்கிறார் கணிதப் பேராசிரியர் இரா. சிவராமன். புதிய கருத்துக்களைக் கூறும் சிறந்த ஆராய்ச்சி நூல். நன்றி: தினத்தந்தி, 24/9/2014.   —- […]

Read more

ஆதிமுதல் அந்தரங்கம் வரை ஹிட்லர்

ஆதிமுதல் அந்தரங்கம் வரை ஹிட்லர், சிக்ஸ்த் சென்ஸ், சென்னை, விலை 300ரூ. இந்த நூலில் சொல்லப்பட்டு இருப்பது ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு. ஆனால் அந்த வரலாற்றையே மர்ம நாவல்போல ஆக்கித்தந்து இருக்கிறார் ஆசிரியர். நாஜி என்ற பெயர், அதற்கான ஸ்வத்திக் சின்னம் ஆகியவை வந்தது எப்படி, அந்தக் கட்சி உருவான விதம் என்ன, இன்றைய அரசியல் பிரசார உத்திகளுக்கு ஹிட்லர் வழிகாட்டிய முறை, அவரது ஆளுமை, வக்கிர குணங்கள் என்று அனைத்தும் படித்து வியக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஜெர்மனியின் […]

Read more

நாகூர் குலாம் காதிறு நாவலர்

நாகூர் குலாம் காதிறு நாவலர், ஏவி.எம். நசீமுத்தீன், சாகித்திய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ஒரு நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த தமிழப் பெரும் புலவர் குலாம் காதிறு நாவலர். பாண்டித்துரை தேவர், பாஸ்கர சேருபதி, மு.ராகவையங்கார் போன்றோரோடு இணைந்து, மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டவர். புலமைத்திறம் மிக்கவராக, உரைநடை வல்லுனராக, மொழிப்பெயர்ப்பாளராக, நாவன்மை கொண்ட நாவலராக இயங்கிய, குலாம் காதிறுவின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கமும், அவர்தம் அளப்பரிய தமிழ்ப்பணிகளும், பெருங்குணங்களும் நூலில் குறிக்கப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் பல படைத்தவர். இவரது நாகூர்ப் புராணம் குறிப்பிடத்தக்கதொன்று. […]

Read more

உங்களின் முன் மாதிரி யார்?

உங்களின் முன் மாதிரி யார்?, பேரா. கு. நல்லதம்பி, விஜயா பதிப்பகம், கோவை. ஆசிரியர் பணி ஓர் அறம் என்ற நமக்குப் பரிச்சயமான தத்துவத்தை ஒரு புதிய கோணத்தில் புதிய வடிவத்தில் இந்த நூல் விவரிக்கிறது. அதே நேரத்தில் ஆசிரியரின் இலக்காகிய நன் மாணாக்கரையும் இணைத்துப் பேசுகிறது இந்த நூல். இருவரின் பரிணாம வளர்ச்சி பூரணத்துவம் பெறுவது எப்படி, எப்போது என்பதை ஆசிரியர் விரித்துரைத்துள்ளார். ஓர் அநை நூற்றாண்டுக்கும் முந்தைய கல்விக்கூடச் சூழலில், தமக்குக் கிடைத்த அனுபவங்களின் சாறு பிழிந்து, தம் ஆசிரியர்கள், மாணக்கர்களின் […]

Read more

தென்குமரியின் சரித்திரம்

தென்குமரியின் சரித்திரம், அ.கா. பெருமாள், சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில். நூலாசிரியர் அ.கா.பெருமாள் தமிழகம் அறிந்த ஆய்வாளர். அவர் எழுதிய இந்த நூலில் கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆய் அரசர்களின் காலம் துவங்கி, பாண்டியர் காலம், பிற்கால சோழர் காலம், வேணாட்டரசர்கள் காலம், திருவிதாங்கூர் அரசு காலம் என, 14 தலைப்புகளில், தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஏராளமான பழைய அரிய புகைப்படங்களும் தேவையான இடங்களில் தரப்பட்டுள்ளன. தகவல்களில் பல, யூகங்கள், கதைகள் சார்ந்தவை. நாஞ்சில்நாடு பற்றி பல இடங்களில் குறிப்புகள் வருகின்றன. கதை சார்ந்த குறிப்பும் உள்ளது. பல […]

Read more
1 152 153 154 155 156 223