அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும், ஜி.எஸ்.எஸ். விகடன் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-284-4.html உலக அதிசயங்கள் ஏழு  என்கிறோம். ஆனால் இந்த 7 அதிசயங்களைத் தவிர வேறு பல அதிசயங்களும் இருக்கின்றன. அவற்றில் பல மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன. வடஅட்லாண்டிக் சமுத்திரத்தின் மேற்கு பகுதியில், பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் பகுதி உள்ளது. அந்த வழியாகச் செல்லும் விமானங்களும், கப்பல்களும் காணாமல் போகின்றன. அதற்குக் காரணம் என்ன? உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், நாகமணி மருத்துவமனை, சென்னை, விலை 1000ரூ. 1217 பக்கங்கள் கொண்ட பிரமாண்டமான மருத்துவ நூல் இது. நூலாசிரியர் டாக்டர் ஞானசவுந்தரி மகப்பேறு மருத்துவத்தில் நீண்ட அனுபவம் உடையவர் என்பதுடன் 30 ஆயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்தவர். திருமணத்தின்போதும், கர்பிணியாக இருக்கும்போதும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை தெளிவாகச் சொல்கிறார். சுகப்பிரசவத்துக்கான யோசனைகளைக் கூறுகிறார். நுட்பமான விஷயங்களை படத்துடன் விளக்குகிறார். இது மருத்துவத்துறையில் முக்கியமான புத்தகம். புத்தகத்தின் வடிவமைப்பு, மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு சவால் விடும் விதத்தில் சர்வதேசத் தரத்துடன் அமைந்துள்ளது. […]

Read more

மெய்நிகரி

மெய்நிகரி, கபிலன் வைரமுத்து, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. கபிலன் வைரமுத்து எழுதிய நாவல். தொலைக்காட்சி ஊடகத்தை மையப்படுத்தி முதன்முறையாக எழுதப்பட்ட நாவல் இது. காட்சி ஊடகக் கல்வி பயின்ற டெரன்ஸ்பால், மாடப்புறா தொலைக்காட்சியில் பணியாற்றுகிறான். அவனது குரலாக நினைவுகள் விரிகின்றன. அதில் கதை நகர்கிறது. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ உருவாகும் பின்னணியை சுவாரஸ்யமாக இந்த நாவல் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பும், உற்சாகமும் இறுதிவரை தொடர்கிறது. வித்தியாசமான நாவல். இது […]

Read more

கவிஞர் வாணிதாசனின் புலமை

கவிஞர் வாணிதாசனின் புலமை, தமிழ் ஐயா வெளியீட்டகம், தஞ்சாவூர் மாவட்டம், விலை 500ரூ. திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம் சார்பில் கவிதைத் தமிழ் 12வது ஆய்வு மாநாடும், கவிஞர் வாணிதாசனின் நூற்றாண்டு விழாவும் மதுரையில் நடந்தது. இந்த மாநாட்டு கருத்தரங்கு கட்டுரைகளைத் தொகுத்து, கவிஞர் வாணிதாசன் புலமையும் தமிழ் கவிஞர்களின் தனித்தன்மையும் என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் கவிஞர் வாணிதாசனின் கவிதை நயம் பற்றி பல்வேறு தலைப்புளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கவிஞர்கள் பாரதிதாசன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், சுரதா […]

Read more

உலகம் சுற்றும் தமிழன்

உலகம் சுற்றும் தமிழன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ. இப்போது உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதும் அந்த அனுபவங்கள் பற்றி கட்டுரை எழுதுவதும் எளிது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கப்பலில் உலகம் சுற்றுவது எளிதல்ல. மகாத்மா காந்தியைப் பற்றி முழு நீள திரைப்படம் (டாக்குமெண்டரி) தயாரித்த ஏ.கே. செட்டியார் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, இந்த புத்தகத்தை எழுதினார். அக்காலத்தில் வெளிநாடுகள் எவ்வாறு இருந்தன, அயல்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பதை எல்லாம் சுவைபட எழுதியுள்ளார் […]

Read more

உன்னால் முடியும்

உன்னால் முடியும், சந்தனம்மாள் பதிப்பகம், வி.ஜி.பி. தலைமை அலுவலகம், சென்னை, விலை 150ரூ. ஏழையாக இருந்தாலும், புத்திசாலித்தனமும், கடும் உழைப்பும் இருந்தால் உச்சியைத் தொடலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள் வி.ஜி.பி. சகோதரர்கள். மூத்தவர் பன்னீர்தாஸ் யாரும் எதிர்பாராத விதத்தில் இளமையிலேயே காலமாகிவிட, அந்த மாபெரும் நிறுவனத்தை கட்டிக்காத்து, மேலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். தன்னைப்போலவே மற்றவர்களும் வளரவேண்டும் என்ற பரந்த உள்ளம் படைத்த வி.ஜி.சந்தோஷம் அதற்கான வழிகளைக் கூறுகிறார் உன்னால் முடியும் என்ற இந்த நூலில். உழைப்பால் உயர்ந்தவர்களான […]

Read more

உளிகள் வடித்த துளிகள்

உளிகள் வடித்த துளிகள், தலைமையாசிரியர் யா.ச.யாகு அடிகள், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், சிவகங்கை மாவட்டம், விலை 100ரூ. சிவகங்கை மாவட்டம், தேகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் 27 ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள் அடங்கிய நூல். நல்லொழுக்கம் நலவாழ்வு, இதயம் ஒரு கோவில், ஏணியாய் தோணியாய என்ற தலைப்புகளில் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி.   —- வரலாற்று வெளிச்சத்தில் போர்த்துகீசியர்கள், குஞ்ஞாலிகள், சுகைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, விலை 500ரூ. இந்தியாவுக்கு வெள்ளையர்கள் வருவதற்கு முன்பே, வியாபாரம் செய்ய […]

Read more

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள்

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் பொன்மொழிகள், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. புதுவையில் ஆசிரமம் அமைத்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழி காட்டிய அரவிந்தர், அன்னை ஆகியோரின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகம். அழகிய கட்டமைப்புடன் கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. தினத்தந்தி.   —-   எளிய செரிமான உணவுகள், வை. குமரவேல் என்ற சகாதேவன், தாமரை  பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. உணவே மருந்து என்ற கருத்தை உணர்த்துவதற்காகவும், அன்றாடம் நம்முடைய உணவு முறைகளில் நாம் சேர்த்து கொள்ள வேண்டியது, தவிர்க்க வேண்டியதை […]

Read more

வளரிளம் பருவம்

வளரிளம் பருவம், சு. தமிழ்ச்செல்வி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், விலை 40ரூ. மனித வாழ்வில் வளரிளம் பருவம் முக்கியமான கால கட்டம். ஒருவர் வாழும் தகுதியை வளர்த்துக் கொள்ளவே இப்பருவம். வளரிளம் பருவத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு சிந்திக்க வேண்டிய கருத்துக்களை நூலாசிரியர் சு, தமிழ்ச்செல்வி பயனுள்ள வகையில் தொகுத்துள்ளார். தினத்தந்தி.   —- நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம், வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம், கிரிலா ஹவுஸ், சேலம், விலை 155ரூ. வழக்கறிஞர்களும், பொதுமக்களும் நீதிமன்றத்தில் வாதாடுவது எப்டி? என்பதற்கான வழிமுறைகளை கூறும் நூல். உரிமையியல் […]

Read more

தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல்,முனைவர் வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மிகப் பழங்காந்தொட்தே தமிழ் வாழ்வில் தகவல் தொடர்புகள் எவ்விதமெல்லாம் செழித்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது இந்த நூல். தகவலியல் என்னும் கண்ணோட்டத்தில் இத்தனை செய்திகள் நம் பரந்த பன்னெடுங்கால இலக்கிய நூல்களில் பொதிந்திருப்பது வியப்பு என்றால், அதை அழகுபட ஒரு முத்துமாலைப்போல் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் ஆற்றல் அதனினும் வியப்பு. சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு, அகநானூறு, முருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, தொல்காப்பியம் ஆகிய நூல்களில் […]

Read more
1 150 151 152 153 154 223