காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்கலாம்

காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களை குணமாக்கலாம், டாக்டர்.எம்.ஜி.அண்ணாதுரை, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. ஹோமியோபதி மருத்துவத்துடன், அக்குபிரஷர் முறையும் கலந்து பலதரப்பட்ட நோய்களை காந்தம் கலந்து குணப்படுத்த முடியும் என கூறும் நுால். நோய்கள் விரைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை என்பதை கண்டுபிடித்த பின் தான், காந்த சக்தியாலும் நோய்களை சரி செய்யலாம் என்ற உறுதி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த புத்தகம் எழுத முடிந்தது என உறுதிப்படுத்தியுள்ளார். வாத பித்தம், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், முகச் சுருக்கம், கருவளையம் போன்ற நோய்களை காந்த சிகிச்சையால் […]

Read more

பிச்சிப் பூ

பிச்சிப் பூ, பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.70. பிச்சிப்பூ என்னும் பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாவல். பாதிக்குப் பின் தான் தோன்றுகிறாள் பிச்சிப்பூ. அதுவரை அவளது கணவன் மூர்த்தியார் பற்றியும், மீட் பாதிரியார் பற்றியும், சாதி முறைகள் பற்றியும் தான் விலா வாரியாக எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவர்களுக்கும், உயர் சாதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வேலை ஹிந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இல்லாமல் இருந்த உண்மையை எடுத்துரைத்துள்ளார். குமாரகோவிலில் நாடார் சமுதாயத்தினர் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தையும், அதில் பிச்சிப் பூ காட்டிய வீர தீரத்தையும் […]

Read more

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.100. இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது சிந்துவெளி நாகரிக கண்டுபிடிப்பு. அதன் தொன்மையையும், பண்பட்ட வாழ்க்கை முறையையும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த பழமையான நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய நுால் இது. இந்த நுாலில், ஏழு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் சிந்து எனும் புதிர் என்ற தலைப்பில் துவங்குகிறது. அடுத்து, வரலாற்றின் ரயில்பாதை, முதல் முத்திரை, முதல் பானை ஓடு என கட்டுரைகளில் தலைப்புக்கு ஏற்ப தகவல்கள் […]

Read more

சிறிது சிறிதாய்… பெரிது பெரிதாய்…

சிறிது சிறிதாய்… பெரிது பெரிதாய்…, தஞ்சை எழிலன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.125. அறிவியல், ஆன்மிக செய்திகள் என திரட்டி நுால் வடிவமாக்கப்பட்டுள்ளது. நேர்மறை சிந்தனைகள் தான் வளத்தை தரும் என்பதை சொல்லும் குட்டிக் கதைகளும் உள்ளன. மக்களின் நேர்மையை சோதிக்க நினைத்த மன்னன் நடமாடும் தெருவில் கற்குவியலை போட்டான். வண்டி ஓட்டிகள் ஒதுங்கிச் சென்றனர். நடுரோட்டில் கற்குவியல் போட்டவனை வசைபாடி சென்றனர் சிலர். அதை அகற்ற யாரும் முயலவில்லை. நெல் மூட்டையை சுமந்து வந்த விவசாயி கற்குவியலை ஒதுக்கினார். விவசாயியின் நெல் மூட்டை பக்கத்தில் […]

Read more

பீ கேர் ஃபுல்

பீ கேர் ஃபுல், மதுரை சத்யா, செங்கனி பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100. அனுபவங்களால் கற்றுக் கொண்டதை கவிதை போல் வெளிப்படுத்தும் முயற்சி. சொற்குவியலின் தொகுப்பு நுால். சிறிய கவிதை வடிவில் நடப்புகள் சொல்லப்பட்டுள்ளன. முதல் கவிதை, ‘அன்பின் கண்ணாடியை கழற்றிய பின்பே நம்மால் விரும்பப்பட்ட செயல்களை எல்லாம் குருட்டுத்தனம் என்கிறோம்’ என உள்ளது. இது போல் நேரடியாக கருத்துக்களை சொல்லும் கவிதைகள் அடங்கிய புத்தகம். ஒன்றை சொல்லும் முன் ஆயிரம் முறையும், எழுதும் முன் பல்லாயிரம் முறையும் யோசிக்க வேண்டும் என்ற முன்னுரையுடன் வெளிவந்துள்ள நுால். […]

Read more

இறையுரையிசை

இறையுரையிசை (பகவத் கீதை), ஹரிஹரன், சோலைப் பதிப்பகம், விலைரூ.100. ஹிந்து மதத்தின் உயரிய புனித நுால் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. பகவத் கீதை என்ற சொல்லுக்கு மாற்று வடிவமே, ‘இறையுரையிசை’ என அமைத்துள்ளார் நுாலாசிரியர். 18 அத்தியாயங்களில், 701 சிந்தியல் வெண்பாக்களால் அமைந்துள்ளது. அர்ச்சுனன் மகாபாரதத்தில் குருஷேத்திரப்போர் துவங்கும் முன், எதிரணியைப் பார்வையிட்டான். அவ்விடத்தில் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் இருப்பதைக் கண்டு போரிட மறுத்து கிருஷ்ணரிடம் உரையாடினான். அர்ச்சுனனின் தேரோட்டியான கிருஷ்ணர் தர்மத்திற்காகப் போரிடுகையில் உறவு முறைகளை, நட்பை, […]

Read more

நினைவில் வாழும் குழந்தை கவிஞர்

நினைவில் வாழும் குழந்தை கவிஞர், தேவி.நாச்சியப்பன், குழந்தைப் புத்தக நிலையம், விலைரூ.180. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவு நுாற்றாண்டு துவக்க விழாவையொட்டி வெளியிடப்பட்டு உள்ள நுால். கவிஞரின் மகளே தொகுத்து உள்ளார். மறுபதிப்பாக வந்துள்ளது. இந்த தொகுப்பு நுால் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் சில கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து கருத்துரை மற்றும் வாழ்த்துரைகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் அழ.வள்ளியப்பா கலந்து கொண்ட நிகழ்வுகளின் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பகுதியில் 81 கட்டுரைகள் இடம் பெற்றுஉள்ளன. அனைத்தும் கவிஞரின் […]

Read more

கிருஷ்ண காவியம்

கிருஷ்ண காவியம், எத்திராஜன் ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலைரூ.250. கிருஷ்ணரின் அவதார காலம் முதல், பாரதப் போர் முடிந்து தருமத்தை நிலைநாட்டிய வரை விந்தைகளை தரவு கொச்சகக் கலிப்பா வடிவில் இனிய சந்த பாடல்கள் கொண்ட நுால். எதுகை, மோனைகள், உவமைகள் பொதிந்த சந்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. துவக்கத்தில் வட மதுரையின் சிறப்புரைக்கும் பாடல்களில், கண்ணனின் இளம் பருவப் பெருமைகள், சிறையில் தேவகியின் துன்பம், பூதகியின் சதி, ஆயர்பாடியில் வளர்ப்பு, கண்ணன் விளையாட்டு, கம்சனின் மரணம், குருகுல வாசம், இளமை துள்ளும் கோபியர் களியாட்டங்கள், […]

Read more

சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்)

சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்), பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200. எழுமின், விழிமின் என முழங்கிய வீரத்துறவி; மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்ந்தவர்; சீர்திருத்தவாதியாகவும், ஜாதி மத இன வேறுபாடுகளைச் சாடிய ஆன்மிகவாதியாகவும், பொதுவுடைமைவாதியாகவும், இந்தியாவின் உயர்வு பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்த சிந்தனாவாதியாகவும் விளங்கியவர். இந்து மதத்தின் பெருமையை மீட்டெடுத்து அதற்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உலகின் பார்வையை இந்தியாவின் மீது திருப்பிய வீரத்துறவி. பாரதத்தின் புகழை வெளிநாடுகளில் பரப்பிய முன்னோடி. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 300 […]

Read more

மூன்றடிகளில் மலர்ந்த புறநானுாறு

மூன்றடிகளில் மலர்ந்த புறநானுாறு, கா.ந.கல்யாணசுந்தரம், கவிஓவியா பதிப்பகம், விலைரூ.150 புறநானுாற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பாடல்களுக்கு எளிய தமிழில் மூன்று அடி கவிதைகளாக வழங்கியுள்ள நுால். தேவைக்கேற்ப ஓவியங்களை அமைத்தும் சிறப்புற விளங்குகிறது. திணை, துறை விளக்கங்கள், புறநானுாற்று செய்யுள்களில் பாடப்பட்ட பெருஞ்சேரல் இரும்பொறை, கிள்ளி வளவன், அதியமான், குமணன், திருமுடிக்காரி, பேகன், வேள்பாரி, அறிவுடைநம்பி, ஓரி, கோப்பெருநள்ளி, ஆய், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, கரிகால் பெருவளத்தான், பள்ளி துஞ்சிய நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி, சேரல் இரும்பொறை போன்ற மன்னர்களின் வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. – முனைவர் […]

Read more
1 10 11 12 13 14 240