யார் தமிழர்?

யார் தமிழர்?, ஆர்.பி.வி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 200, விலை 140ரூ. ஆர்யமாம் திராவிடமாம் அத்தனையும் புளுகே’ என துவங்கி, ‘பாரதி பார்வையில் பிராமணர்கள்’ ஈறாக, 13 கட்டுரைகள் பெரும்பாலும் திராவிட இயக்க எதிர்ப்புக் கருத்துக்களை உள்ளடக்கியவையாகும். கடந்த, 1965ல் காங்கிரசை வீழ்த்த ராஜாஜி தான் ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகம் ஆடினார் -– பக்., 56. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் தேதியை, ராஜ்யோத்சவ நாளாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழக அரசு கொண்டாடவில்லை – பக்., […]

Read more

வீரப்பன்

வீரப்பன், (16000 சதுர கி.மீ. காடுகளை ஆண்ட காட்டு ராஜாவின் கதை), நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக். 456, விலை 360ரூ. கடந்த, 1988ம் ஆண்டு, வீரப்பன் குறித்த செய்திகள் பத்திரிகையில் வெளிவரத் துவங்கின. 1991ல் கர்நாடக மாநில, டி.எப்.ஓ.,வை கொடூரமாக கொலை செய்தது; 1993ல் வைத்த கண்ணிவெடியில், தமிழக கர்நாடக அதிரடி படை வீரர்கள், 22 பேரை பலியாக செய்தது உள்ளிட்ட சம்பவங்கள், இந்தியாவையே அதிர வைத்தன. யார் இந்த வீரப்பன் என்பதை அறியும் ஆர்வம், மக்களிடம் அதிகரித்தது. இங்ஙனம் ஆரம்பிக்கிறது, […]

Read more

இராமாயணக் கதைகள்

இராமாயணக் கதைகள், கல்யாணி மல்லி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. பாரத நாட்டின் இலக்கியச் செழுமைமிக்க உயரிய படைப்பாக கருதப்படுவது இராமாயணம். இராமாயணத்தின் பசுமையான கிளைகளாக விரியும் பரவசமான கதைகள், காலம் காலமாக பல தரப்பினராலும் படித்தும் கேட்டும் ரசிக்கப்படுகின்றன. எக்காலத்திய வாழ்வியலுக்கும் பொருந்தக்கூடிய தத்துவங்களும், வழிகாட்டுதல்களும் நிறைந்தவை என்பதால், அவற்றில் வரும் பல சம்பவங்கள் இன்றளவிலும் சிறுகதை வடிவங்களாக படிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னுமொரு நுால் இது. வழிப்பறி கொள்ளையர், வால்மீகி முனிவரானதும், இராமாயணம் எழுதியதும், இராமனின் பிறப்பும் மகிமையும் […]

Read more

ம்… நானும்…!

ம்… நானும்…!, மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 100ரூ. கொஞ்சம் குசும்பு முதல், கொஞ்சம் கெஞ்சல் வரை பல்வேறு நவீன கவிதைகள் பலரை ஈர்க்கும். நாகரிகக் காமம் என்ற கவிதையில், ‘நாயர் கடை ஸ்டிராங் டீ போல, உன் மாராப்பு இல்லா மேலும் கீழும் ஆட… என்பது போன்ற வரிகள் இளைஞர்களைக் கவரும். இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கருத்தைக்கவரும். நன்றி: தினமலர், 27/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

காலத்தை வென்ற காவிய மகளிர்

காலத்தை வென்ற காவிய மகளிர், கா.விசயரத்தினம், மணிமேகலை பிரசுரம், பக். 180,விலை 115ரூ. மகாபாரதத்தில் அம்பை, திரவுபதி, சுபத்திரை இப்படி, 16 மகளிரும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, மாதவி, கோப்பெருந்தேவி, கவுந்தியடிகள், தேவந்தி ஆகிய ஐவர் பற்றியும், மணிமேகலையில் மாதவி, சுதமதி, ஆதிரை என வரும் மகளிர் பற்றியும், சீவக சிந்தாமணியில் வரும் குணமாலை, விமலை, பதுமை, சுரமஞ்சரி இப்படி எட்டு மகளிர் பற்றியும், வளையாபதி, குண்டலகேசி, கம்ப ராமாயணம் ஆகிய காவியங்களில் வரும் மகளிர் சிறப்புகளையும், அந்தந்த காவியக் கவிதைகளைச் சுருங்கக் கூறி விவரித்திருப்பது […]

Read more

நீதிக்கதைகள்

நீதிக்கதைகள், சுவாமி கமலாத்மானந்தர், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், பக். 246, விலை 80ரூ. சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து நீதிக் கதைகள் நான்காம் தொகுப்பை எழுதியிருக்கிறார், மதுரை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர். எத்தனையோ நீதிக் கதைகளை படித்திருந்தாலும், இதில் உள்ள நீதிக் கதைகளை படிக்கும் போது, நமக்கு அந்தளவுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஏற்படுவது உறுதி. நீதிக் கதைகள் ஒவ்வொன்றையும் படிக்க அலுப்பு தட்டாத வகையில் தொகுத்து தந்துள்ளார். மகாபலிக்கு மகாலட்சுமி கட்டிய ரக் ஷை கயிறு, திருவிளையாடற்புராணத்தில் வரகுண பாண்டியனின் […]

Read more

வறுமையின் நிறம் பச்சை

வறுமையின் நிறம் பச்சை, ஆரூர் சலீம், வெம்மை பதிப்பகம், பக். 126, விலை 125ரூ. புத்தகத்தைப் படிக்கத் துவங்கியபோது, உடலில் திடீர் உஷ்ணம் பரவி, கடும் அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. என்ன சொல்ல வருகிறார் நுாலாசிரியர்? புவி வெப்பமயமாதல் என்ற விஷயமே கிடையாது என்பதை, எடுத்த எடுப்பிலேயே, வெட்ட வெளிச்சமாகப் போட்டுடைத்து விட்டாரே… அதை எப்படி, தர்க்க ரீதியாக விவரிக்கப் போகிறார், அப்படியெனில், வெப்பமயமாதல் தொடர்பான அனைத்து கட்டுரைகளும், கருத்துகளும், வெறும், ‘டுபாக்கூர்’ தானா, அப்படி யெனில், பூமி வெப்பம் அதிகரிப்பதேன், காலநிலை மாற்றத்தைப் […]

Read more

தமிழச்சி ஆண்டாள்

தமிழச்சி ஆண்டாள், ப்ரியா கல்யாணராமன், குமுதம் வெளியீடு, விலை 290ரூ. கடவுள் என்றால் நம்மை காப்பவன், நம் வேண்டுதலுக்கு, துயரங்களுக்கு ஆறுதல் அளிப்பவன், வரம் தருபவன், நமக்கு நல்லன எல்லாம் செய்பவன்… இப்படித்தான் கடவுளை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருத்தி மட்டும் கடவுளிடம் தனக்கு வேண்டியதை எதுவுமே கேட்கவில்லை. அவன் நன்றாக இருக்க வேண்டும் என, விரும்புகிறாள். அவன் நலனில் மட்டுமே அக்கறை கொள்கிறாள். அவனுக்கு உணவு படைக்கவில்லை என்றால், இவள் கவலை கொள்கிறாள். அவனுக்கு மாலை சூட நேரமானால் முகம் […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழனிபாரதி, பக்.104, விலை 80ரூ. நீ வரைந்த கோலம் தான் நீயே உன்னை வரைந்தது போல என்பது போன்ற பல அழகிய கதைகள் நிறைந்துள்ளன. கவிதைப் பிரியர்களக்கு இந்நுல் பிடிக்கும். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிலைத் திருடன்

சிலைத் திருடன், எஸ்.விஜயகுமார், தமிழில் பி.ஆர்.மகாதேவன், கிழக்கு பதிப்பகம், பக். 240, விலை 250ரூ. நம் கண் முன் நடந்துகொண்டிருக்கும், ஒரு குற்றச் செயலாக சிலைத்திருடன் நாவல், விறுவிறுப்பாக நகர்கிறது. இந்தியாவின், பழம்பெருமை பேசும் சிலைகள், மாயமாவதும், அவை உலக அருங்காட்சியங்களில் பளபள ஒளியில் மிளிர்வதும், அதைப் பற்றிய குறைந்தபட்ச வருத்தம் கூட இல்லாமல் நாம் இருப்பதும் எப்படி. இதைத்தான் சிலைத்திருடன் உரைக்கிறான். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184939491.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 75 76 77 78 79 240