சொந்தச் சகோதரிகள்

சொந்தச் சகோதரிகள், கே. பாரதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. வலியின் கதைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்த தனது கதைகளை ‘சொந்தச் சகோதரிகள்’ என்ற தலைப்பில் தொகுத்தளித்திருக்கிறார் கே. பாரதி. எட்டு வயதில் திருமணம், 12 வயதில் கணவன் மரணம் என தன்னுடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தன்னுடைய நீண்ட கூந்தலை மழிப்பதற்காக உட்கார்ந்திருக்கும் பாகீரதியின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. பிராமணக் குடும்பங்களில் விதவைப் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை இந்தக் கதை கூர்மையாக விளக்குகிறது. ‘சுயம்’ எனும் […]

Read more

அறிவியல் எது?ஏன்?எப்படி?

அறிவியல் எது?ஏன்?எப்படி?, என். ராமதுரை, கிழக்கு பதிப்பகம், விலை 450ரூ. வலி இல்லாமல் அறிவியல் அறிவியல் செய்திகளை எளிமையாகவும் இனிமையாகவும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதுபவர் என்.ராமதுரை. அன்றாட வாழ்க்கையில் நடப்பவற்றை உதாரணங்களாகக் காட்டி அவற்றின் பின்னுள்ள அறிவியல் உண்மைகளை இந்த நூலில் புரிய வைக்கிறார் ராமதுரை. தமிழில் அறிவியலை சுலபமாக விளக்க முடியும் என்பதற்கான சான்றே இந்த நூல். முதல் பாகத்தில் 100 தலைப்புகள், இரண்டாவது பாகத்தில் 95 தலைப்புகள். தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல், வானியல், மருந்தியல் என்று எல்லாப் பிரிவுகளிலும் சிறு […]

Read more

சகலகலா வல்லபன்

சகலகலா வல்லபன், அருள்செல்வன், அபு மீடியாஸ், விலை 180ரூ. மீன்கொடி தேர்வலம் கவிஞர், பாடலாசிரியர், திரை இயக்குநர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் வாய்ந்த எம்.ஜி.வல்லபனைப் பற்றிய கட்டுரை தொகுப்பு இந்நூல். அவர் மறைந்து 13 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது சிஷ்யர் அருள்செல்வன் அவரை நினைவுகூறும் விதமாக கொண்டுவந்துள்ள இத்தொகுப்பில் எம்.ஜி.வல்லபனைப் பற்றிய முழு பரிமாணமும் வாசகர்களுக்குத் தெரியவருகிறது. தமிழ் பத்திரிகை உலகில் இன்றைக்கு மருத்துவம்,  சினிமா, ஜோதிடம், விளையாட்டு என்று தனித்தனியே நிறைய இதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ‘பிலிமாலயா’ என்கிற ஒரே […]

Read more

ஃபால்ட் லைன்ஸ்

ஃபால்ட் லைன்ஸ், ஹவ் ஹிடன் ஃப்ராக்சர்ஸ் ஸ்டில் த்ரெட்டன் த வேர்ல்ட் எகானமி, ரகுமாம் ஜி. ராஜன், ஹாப்பர் காலின்ஸ் பப்ளிஷர்ஸ், விலை 499ரூ. விரிந்த பார்வையில் உலகப் பொருளாதாரம் சீட்டுக்கட்டுக் கோட்டையைப் போல் 2008-ல் மளமளவெனச் சரிந்த உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை முன்னறிவித்த பெருமைக்குரியவர் ரகுராம்ராஜன். உலகப் பொருளாதாரத்தின் நலிவுற்ற பகுதிகளை சீர்செய்யவில்லை எனில் அதைவிட மோசமான பின்னடைவை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும் என இந்நூலில் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் நுகர்வுக் கலாச்சாரத்தையே நம் நாட்டு வளர்ச்சிக்கு ஆதாரமாகக் கொண்டு செயல்படுவது சரியான ஒன்றல்ல […]

Read more

த நிட்பிக்கர்ஸ் க்ரானிகிள்

த நிட்பிக்கர்ஸ் க்ரானிகிள், ஃபிளிப் சைட் ஸ்டோரி ஆஃப் இண்டியன் நேஷனல் மூவ்மெண்ட், சதிப்த மித்ரா, ஷுபி பப்ளிகேஷன்ஸ், விலை 599ரூ. வரலாற்றில் புதைந்த ரகசியங்கள் இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு நிகழ்வுகள் முழுமையான வடிவில் நம் தலைமுறையினருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் குறுக்குநெடுக்காக லட்சக்கணக்கான போராட்ட வீரர்களின் தியாகங்கள் இன்னமும் பதிவுசெய்யப்படாமலே இருந்துவருகின்றன. இந்தப் பின்னணியில் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய திருப்புமுனைகளுக்கு பின்னால் இருந்த, வெளியே தெரியாமலே போன ஒரு சில தகவல்களை மட்டும் நம் முன் […]

Read more

மருதநாயகம்

மருதநாயகம், தொகுப்பு பேரா.சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 500ரூ. மருதநாயகம் என்கிற ஒற்றைப் பெயரின் பின்னே இத்தனை ஆண்டுகளாக கவிழ்ந்துள்ள இருளின் மீது வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியில் தொகுக்கப்பட்டுள்ள நூலிது. மருதநாயகம் பற்றிப் பேசும்போதெல்லாம் அவர் ஒரு இந்துவா இஸ்லாமியரா விடுதலைப் போராளியா துரோகியா என்கிற பல கேள்விகள் முன்நிற்கின்றன. இப்படியான கேள்விகளுக்கான விடையை அ.மாதவையா, துர்க்காதாஸ், எஸ்.கே.ஸ்வாமி, ந.சஞ்சீவி, நா.வானமாமலை, ந.இராசையாவின் கட்டுரைகள் வழியாகத் தேடிக் கண்டெடுத்துள்ளார் காவ்யா சண்முகசுந்தரம். நன்றி: தி இந்து, 14/10/2017.

Read more

முன்னொரு காலத்தில்

முன்னொரு காலத்தில், உதயசங்கர், நூல்வனம், விலை 90ரூ. கோவில்பட்டி மண்ணில்தான் எத்தனையெத்தனை படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். 1980-களில் தீவிர இலக்கிய தேடலோடு இயங்கிய 20-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் சங்கமிக்கும் ஊராக கோவில்பட்டி விளங்கியது. எழுதுவதோடு மட்டுமே சுருங்கிவிடாமல், இலக்கிய நிகழ்வுகள், எழுத்தாளர் சந்திப்புகள் என தொடர்ந்து உயிர்ப்புடன் இயங்குவதற்கான ஒரு சூழல் அங்கே நிலவியிருக்கிறது. எழுத்தாளர் உதயசங்கர் தனது பின்னோக்கிய நினைவுகளைத் தொகுத்து எழுதியிருக்கிறார். இதில், கோவில்பட்டி எனும் ஊரில் பெருமை மட்டுமல்ல, எழுத்தாளர்களின் நட்பு மற்றும் சமூகம் குறித்த அக்கறையுள்ள மனிதர்களின் துடிப்பும் அடங்கியிருக்கிறது. […]

Read more

தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்பு

தனிநாயக அடிகளாரின் தமிழியல் பங்களிப்பு, இரா. காமராசு, சாகித்திய அகாதமி, விலை 200ரு. இலங்கியின் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்த சேவியர் நிக்கோலஸ் எனும் இயற்யெருடைய தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் நூலாக்கம் பெற்றுள்ளன. ப. மருதநாயகம், மு.இராமசாமி, வீ.அரசு, அ.க.இளங்கோவன், அமுதன் அடிகள், இரா. காமராசு உள்ளிட்டோர் எழுதிய 19 கட்டுரைகள் தனிநாயகம் அடிகளாரின் பன்முகப்பட்ட படைப்பாளுமையை பறை சாற்றுகின்றன. பேரா.கி. நாச்சிமுத்துவின் பதிவுகளும், பின்னிணைப்பிலுள்ள தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகளும் அவரது படைப்புகள் குறித்த பட்டியலும் மிகுந்த […]

Read more

பசித்த சிந்தனை

பசித்த சிந்தனை, புவியரசு, அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம், விலை 120ரூ. பூடக வேடம் பூணாத எதார்த்தம் – எளிமை விலகாத வெளிப்பாடு’ என கவிதை புனையும் கவிஞர் புவியரசு எழுதிய 68 கவிதைகளின் தொகுப்பு. சமூக விமர்சனப் பார்வையை எள்ளலோடு வெளிப்படுத்தும் கோபமான கவிதை மொழியால் கட்டமைக்கப்பட்டுள்ள கவிதைகளிவை. யாப்பு மரபைத் திறம்படக் கையாள்பவர் என்பதைச் சொல்லும் கவிதையொன்றும் உள்ளது. ‘எழுதுவதற்கு நீங்கள் ஒன்றும் கொடுப்பதில்லை’ என்று ஒரு கவிதையை தொடங்கியிருக்கும் கவிஞருக்கு, சமூக நிகழ்வுகள் ஏராளமான கவிதைகளைக் கொடுத்திருக்கின்றன. இவற்றைத் திங்கள் புரொமீதிசுகள், […]

Read more

பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை, பதிப்பாசிரியர் இராம லெட்சுமணன், சகுந்தலை நிலையம், விலை 1200ரூ. திருஞான சம்பந்தர் – திருநாவுக்கரசர் – சுந்தரர் ஆகியோரின் தேவாரம், மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார், திருவிசையப்பா, திருமூலர் திருமந்திரம் தொடங்கி பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் வரலாறு, அறுபத்து மூவர் வரலாறு என்று மொத்தம் 18,375 பாடல்கள் அனைத்தும் ஒரே புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கும் மாணவர்களுக்கும் சைவர்களுக்கும் நல்விருந்து என்றே சொல்ல வேண்டும். உரையையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் இன்னம் பெருவிருந்தாக அமைந்திருக்கும். தமிழுக்கு வைசம் செய்துள்ள அருந்தொண்டின் தொகுப்பே இந்நூல். […]

Read more
1 15 16 17 18 19 36