சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

சட்ட வல்லுநர் திருவள்ளுவர், டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி வெளியீடு, பக். 275, விலை 220ரூ. மேல் நாட்டவர்கள் தான் நம் நாட்டின் சட்டங்களை வடிவமைத்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன்… 1980 – 83ம் ஆண்டுவாக்கில், நம் சட்டக் கல்லூரிகளில் ரோமன், ஆங்கிலேய, லத்தீன், அமெரிக்கர்கள் மட்டுமே சட்ட அறிஞர்களாக அறிமுகம் செய்யப்பட்டனர். இந்தியாவிலிருந்து சட்ட அறிஞர்களாக ஏனோதானோவென்று அறிமுகம் செய்யப் பட்டவர்கள் மனுவும், சாணக்கியரும் (கவுடில்லியர்) மட்டுமே. தமிழில் நீதி நூல்கள் அதிகம் இருக்கின்றன என்ற உண்மையோ, தமிழ்மொழி சட்டக் கருத்துக்கள் […]

Read more

தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில்

தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுத் தடத்தில், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 60ரூ. ஹைக்கூ என்று அழைக்கப்படும் நவீனகால சுருக்கமான கவிதைகள் எப்போது, எவ்வாறு தோன்றியது? கடந்த நூறு ஆண்டுகளில் ஹைக்கூ எவ்வாறு தனது பயணத்தை வரலாற்றில் தடம் பதித்தது? ஹைக்கூ தமிழில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்று அனைத்தையும் விரிவாக அலசி ஆய்ந்து, ஹைக்கூக்களின் பொக்கிஷமாகத் தந்து இருக்கிறார், கவிஞர் மு.முருகேஷ். அவரை கவர்ந்த 100 ஹைக்கூ கவிதைகள் படித்து சுவைக்கத் தகுந்தவை. நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

ஆர்கொலோ சதுரர்?

ஆர்கொலோ சதுரர்?, பேரா. ஆதிமுருகவேள், ஆசிரியர் சங்கரதாண்டவம் அறக்கட்டளை, விலை 150ரூ. உலகத்து உயர்நெறியான சைவம் தழைத்து ஒங்க செய்வதற்காகவும், சிவலிங்க வழிபாட்டை உணர்த்துவதற்காகவும் சைவநெறிகளுடன் எழுதப்பட்ட 20 கட்டுரைகள் கொண்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- படித்துப்பழகு, மு.முருகேஷ், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 25ரூ. கற்பனை வளத்துடன், சுவாராசியமாக எழுதப்பட்ட குறுங்கதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.   —- 27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் பைரவர் வழிபாட்டின் பலன்களும், எஸ்.எல்.எஸ். பதிப்பகம், சிவகங்கை மாவட்டம், விலை […]

Read more

எரியத் துவங்கும் கடல்

எரியத் துவங்கும் கடல், அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 275ரூ. எளிமையான வார்த்தைகள் ஆனால் அவற்றில் ஏராளமான எண்ண ஓட்டங்களை பிரதிபலிக்கும் கருத்துகள் என்று இந்த புத்தகம் முழுவதும் உள்ள அனைதுது கவிதைகளும் படித்து சுவைக்கும் வண்ணம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த கவிதைகள் நான் வாழ்வதின் சாட்சியங்கள் என்று அதன் ஆசிரியர் அ. வெண்ணிலா கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்து உணர்ச்சிகள் பிரவாகம் எடுத்து ஓடுகின்றன. கவிதைகள் என்றவுடன் சற்று தயங்குபவர்களைக்கூட கட்டிப்போடும் வகையில் சிறிய வரிகளில் சிறந்த கருத்துக்களையும் […]

Read more

வடகரை

வடகரை, ஒரு வம்சத்தின் வரலாறு, டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 400ரூ. ஒரு வம்சம், 600 ஆண்டு காலத்தில் எப்படியெல்லாம் துளிர்த்தும் துவம்சம் ஆகியும் உருமாறிக்கொண்டு இருந்தது என்பதைச் சொல்லும் வரலாறு இது. புனைவுகளில் மட்டும்தான் திடுக்கிடும் திருப்பங்களும் அலற வைக்கும் அழுகைகளும் நல்லது கூடிவரும்போது குலமே கெட்டுப்போகும் அளவுக்கு இழப்புகளும் இருக்க முடியுமா? இல்லை, உண்மை வரலாற்றிலும் இப்படி படிநிலை வளர்ச்சியைப் போல நடக்கும் அல்லவா? அப்படி ஒரு குடும்பத்துக்காரராக டாக்டர் மு. ராஜேந்திரன் இருக்கிறார். எங்கோ […]

Read more

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில்

மறவர் சீமை ஒரு பாதிரியாரின் பார்வையில், தமிழில் மு.பாலகிருஷ்ணன், எஸ்.ஆர்.விவேகானந்தம், அகநி வெளியீடு, பக். 192, விலை 150ரூ. மருது பாண்டியர் குறித்து, ரெவரன்ட் பாதர் பாச்சி எழுதியுள்ள, மருதுபாண்டியன் தி பேட்புல் எய்ட்டீன்த் செஞ்சுரி எனும் இந்த நூல், குறிப்பிடத்தக்கது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழகத்தில் சமயப்பணி ஆற்றிய, கத்தோலிக்க பிரெஞ்சுப் பாதிரியாரான பாச்சி, ராமநாதபுரம் மற்றம் சிவகங்கை ஆட்சியாளர்களிடம் பழகியுள்ளார். அரசு நடவடிக்கைகள், ஆங்கிலேயர்களின் அதிகார குறுக்கீடுகள், பாளையக்காரர்களின் கிளர்ச்சிகள் என பலவற்றை, தன் குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளார். குறிப்பாக, மருது […]

Read more

கிளைக்குத் திரும்பும் இலைகள்

கிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. பட்டுப்போயின மரங்கள்! பாட்டெடுக்கும் குயில்கள்! மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-3.html தம்பி ராஜேந்திரன் அரைக்கால் சட்டைப் போட்டிருந்த காலத்திலேயே எனது சுட்டுவிரலைப் பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவன். தம்பி ராஜேந்திரன் கழகத்தால் வளர்ந்தவன் அல்ல. இந்தக் கழகத்தை வளர்ப்பதற்காகத் தன்னையே ஒப்படைத்துவிட்டவன். தமிழகத்தில் ஏன் உலகத்திலேயே ஒரு நடிகர் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் என்ற பெருமையும் தம்பிக்கு உண்டு என்றார் அறிஞர் அண்ணா. தனது கனிந்த முகத்தால், கணீர் குரலால், காந்தச் […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ். ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல். தமிழக வரலாற்றில் ஒரு நூற்றாண்டு கலை, அரசியலைப் புரிந்து கொள்வதற்கு, அவரது வாழ்வியல் அனுபவங்களுடன் சொல்லப்படும் இந்நூல் உதவக்கூடும். அவரது இளம்பிராயம், அவர் பிறந்த ஊர், படித்த பள்ளி, நாடக ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நாடகம் பயின்ற மதுரை பாய்ஸ் கம்பெனி,  அவரது அரசியல் பயணம் என்று எல்லாவற்றையும் படிப்பவர் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பெரியார், அண்ணா, என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, கருணாநிதி போன்றோருடனான […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. சமீபத்தில் மரணம் அடைந்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன், தனது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு போல இல்லாமல் நாடகம், சினிமா, ஆகியவற்றில் தொடக்கத்தில் இருந்து தான் சந்தித்த அனுபவங்கள் மற்றும், தான் அறிமுகம் செய்துவைத்த நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களை சுவைபட கொடுத்து இருக்கிறார். தன்னுடன் நடித்த ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் அவர் மயங்கிவிழுந்துவிட, அவரை கொலை செய்துவிட்டோமோ என்று பதறியதையும், பெரியார், முத்துராமலிங்கத்தேவர், […]

Read more
1 2 3 4