கி.பி.1800இல் கொங்குநாடு

கி.பி.1800இல் கொங்குநாடு, புலவர் செ. இராசு, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், சேலம், பக். 352, விலை 195ரூ. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு கம்பெனி ஆட்சி நிலவிய காலத்தில் தமிழகம், ஆந்திரம், கேரளம், மைசூர் ப.கதிகள் எப்படி இருந்தன என்பதை பிரான்சிஸ் புக்கானன் என்பவர் அளித்த நிலைக் குறிப்புகள் வழியாக விளக்குகின்றனர் நூலாசிரியர்கள். டாக்டர் புக்கானன் சென்னையிலிருந்து கோவை வரையிலும், மைசூரிலிருந்து கரூர் வரையிலும் குறுக்கும் நெடுக்குமாக மேற்கொண்ட கள ஆய்வில் நேரடியாகக் கண்ட தகவல்களின் பதிவு மட்டுமின்றி, அந்த இடத்தின் அதற்கு […]

Read more

ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2)

ரகசியமாய் ஒரு ரகசியம் (பாகம் 2), ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 992, விலை 600ரூ. தலைப்புக்கேற்ற நூல் அல்ல. ரகசியம் என்று கூறிவிட்டு, பல ரகசியங்களை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டிருக்கிறார் தத்துவ ஞானி ஓஷோ. பெட்டைக் கோழியானது அதன் முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொரிக்க முடிகிறது. ஏனெனில், அதன் இதயம் எப்போதும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இது ஒரு முக்கியமான மந்திரச்சொல் என்று கூறும் ஓஷோ, இந்த மந்திரச் சொல்லின் ரகசியத்தைக் கதைப் பின்னலுடன் காது கொடுத்து […]

Read more

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 308, விலை 260ரூ. நெல்சன் மண்டேலாவை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் என்றோ, ஒரு போராளி என்றோ ஒரு சில வார்த்தைகளில் கூறிவிட முடியாது. நிற வெறியை எதிர்த்து தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களுக்காகப் பெரும் போராட்டமே நடத்தி, அதில் வெற்றியும் கண்டு, அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிய ஒரு மாமனிதர், ஒரு தியாகி. மண்டேலா சிறையில் இருந்தபோது அவரால் […]

Read more

மனித குல ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி

மனித குல ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி, ச. அய்யாதுரை, தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 104, விலை 80ரூ. வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் மரணம் இயற்கையானதாக இருக்க வேண்டும். விபத்துகளாலோ, இயற்கைச் சீற்றங்களாலோ, பகையாலோ, தற்கொலையாலோ, மனிதன் மரணமடையக்வடாது. மரணத்தை ஏற்படுத்தும் மனிதன் ஆபத்துகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்டுள்ள நூல். நீர், நெருப்பு, மின்சாரம் ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகள், இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், பிற உயிரினங்களால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்துகள், பிற மனிதர்களால் ஏற்படும் ஆபத்துகள், மனிதன் தனக்குத் தானே […]

Read more

கண் தெரியாத இசைஞன்

கண் தெரியாத இசைஞன், விளாதீமிர் கொரலேன்கோ, தமிழில் ரா.கிருஷ்னையா, விகடன் பிரசுரம், சென்னை, பக். 237, விலை 115ரூ. ரஷ்ய எழுத்தாளர் விளாதீமிர் கொரலேன்கோ எழுதிய புகழ்பெற்ற கதைகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுவது கண் தெரியாத இசைஞன். இந்தக் கதை 13 ஆண்டுகளாகச் சிந்தித்து ஓராண்டில் எழுதி முடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பார்வையற்ற நபர்களிடம் ஒளியைத் தேடும் வேட்டை இருப்பதையே இந்தக் கதை வலியுறுத்துகிறத. இது ஒரு கற்பனைக் கதை போலத் தோன்றினாலும், தாம் சந்தித்த பார்வையற்ற நபர்களில் திறமைசாலிகளை முன் வைத்தே இக்கதையை மெருகேற்றியதாக கொரலேன்கோ […]

Read more

கண்ணதாசன் முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்)

கண்ணதாசன் முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்), கல்பனாதாசன், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 200, விலை 125ரூ. கலைஞர்கள், அறிஞர்கள் எனப் பல பிரபல மனிதர்களின் நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு, புத்தக உருவம் பெற்றுள்ளது. இதில், மேண்டலின் ஸ்ரீநிவாஸ், கண்ணதாசன், கா.சிவத்தம்பி, கேப்டன் லட்சுமி முதலிய சிர் நம்மிடையே இல்லை. அதுவே இந்நூலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகிறது. கண்ணதாசனின் பேட்டியில் தொடங்கி, 22 பிரபலங்களின் விரிவான நேர்காணல்கள் இந்த நூலில் உள்ளன. நேர்காணல்களின் நோக்கம், ஒரு காலகட்டம், அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து […]

Read more

நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்)

நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்), ராம்குமார், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 360, விலை 225ரூ. தொல்லியல் ஆராய்ச்சியாளர் நாகசாமி, தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், கிருபானந்தவாரியார், தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் நேர்காணல்களைக் கொண்ட புத்தகம் இது. தண்ணீர் இல்லாமல் குழம்பு வைப்பதற்கான செய்முறையைக் கிருபானந்தவாரியார் சொல்லித் தருகிறார்.‘பச்சைக் குழந்தை அலங்காரத்தை விரும்புவதில்லை. தாய் அக்குழந்தையின் மீதுள்ள அன்பினால் அலங்காரம் பண்ணிப் பார்க்கிறாள். அதுபோலத்தான் கடவுளுக்க நாம் பால் போன்றவற்றைக் கொட்டி அபிஷேகங்களைச் செய்கிறோம்’ […]

Read more

அஷ்டாவக்ர மகாகீதை

அஷ்டாவக்ர மகாகீதை, ஓஷோ, தமிழில் என். ஸ்ரீதரன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 448, விலை 350ரூ. அஷ்டாவக்ர ஸம்ஹிதாவின் 298 சூத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது சூத்திரங்கள் சார்ந்து ஓஷோ நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். வடமொழி ஸ்லோகங்கள், அவற்றுக்கான விளக்கங்கள், முல்லா நசுருதீன் கதைகள், ஜென் கதைகள், சூஃபி மார்க்க கதைகள், பைபிள் கதைகள், திபேத்திய பழங்குடியினர் கதைகள், மகாபாரதக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், புத்தர், விவேகானந்தர் போன்றோரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், தனக்கே நேரிட்ட அனுபவங்கள் – இப்படி எல்லாவற்றையும் மேற்கோள் […]

Read more

குழந்தைகளின் அற்புத உலகில்

குழந்தைகளின் அற்புத உலகில், உதயசங்கர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 116, விலை 90ரூ. குழந்தைகளின் உலகில் அத்து மீறி பிரவேசிக்கக்கூடாது. அவர்கள் நாம் வைத்திருக்கும் பொம்மைகள் அல்ல என்று குழந்தைகளின் சுதந்திரம், அறிவாற்றல், சிந்தனை வளம், பெரியவர்கள் அவர்களை அணுக வேண்டிய முறை ஆகியவற்றை அலசுகிறது இந்த நூல். பொதுவாகவே குழந்தைகளுக்குக் கதை கேட்பதில் ஆர்வம் அதிகம். அவர்களுக்குக் கதைகள் சொல்ல வேண்டும். அந்த கதைகள் அவர்கள் புரிந்துகொள்ளும்படியான சாகசக் கதைகளாகவும், மலர்கள், விலங்குகள், பறவைகள், எளிய விஞ்ஞானம் தொடர்புடைய […]

Read more

ஜமாஅத் கடந்து வந்த பாதை

ஜமாஅத் கடந்து வந்த பாதை (மூன்றாம் தொகுதி), தமிழில்-டி.அஜிஸ்லுத்புல்லாஹ், இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட், பக். 432, விலை 160ரூ. சுதந்திரத்திற்கு முன்பு பிரிக்கப்படாத இந்தியாவில் ஜமாஅத்தே இஸ்லாமி என்ற இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. 1945இல் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், விவாதங்கள் குறித்த அரிய தொகுப்பு இந்நூல். தனிமனித ஒழுக்கம், ஆட்சி, சமூகத்தை கட்டமைத்தல் போன்றவற்றைப் பற்றி அந்த இயக்கம் என்ன விரும்புகிறது? அதனுடைய செயல்திட்டம், வழிமுறைகள் எவை என்பதே இந்நூல். நம்முடைய அழைப்பு என்ன? […]

Read more
1 130 131 132 133 134 180