மொழியியல் தொடக்கநிலையினருக்கு

மொழியியல் தொடக்கநிலையினருக்கு, டெரன்ஸ் கோர்டொன், தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை, விளக்கப்படம் சூசன் வில்மார்த், அடையாளம் பதிப்பகம், திருச்சி, விலை160ரூ. மொழியியல் ஓர் அறிமுகம் தமிழுக்கு மொழியியல் தேவை இல்லை என்பது போன்ற கருத்துகள் இங்கு உண்டு. இந்தப் பார்வைகளைப் புரட்டிப்போடுகிறது அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மொழியியல் தொடக்கநிலையினருக்கு புத்தகம். டெரன்ஸ் கோர்டொனின் நூலைத் தமிழிச் சூழலுக்கு ஏற்ப, குறிப்பாக இளைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் மொழியியலை எளிமைப்படுத்தித் தந்திருக்கிறார் நாகேஸ்வரி அண்ணாமலை. மொழிகள் செயல்படும் விதத்தில் தொடங்கி, மனிதர்கள் தங்கள் மொழியைக் கற்றுக்கொள்ளும் விதம், […]

Read more

நக்சல் பாரி முன்பும் பின்பும்

 நக்சல் பாரி முன்பும் பின்பும், ஆங்கில மூலம் சுனிதிகுமார் கோஷ், தமிழில் கோவேந்தன் விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர். ஒரு கம்யூனிஸ்ட் வாக்குமூலம் இந்திய மக்களுக்கு இன்னமும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் துர்த்துக் கொள்வதற்காக அவர்கள் பல்வேறு வண்ணங்களில் அரசியல் இயக்கங்களைச் சமுதாயத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் நக்சல் பாரி இயக்கமும் ஒன்று. அதன் முக்கிய பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றியவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுனிதிகுமார் கோஷ். சில மாதங்களுக்கு முன்புதான்96 வயதில் அவர் காலமானார். அவர் தனது இறுதிக் காலத்தில் […]

Read more

அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய மருத்துவ முறைகள்

அனைத்து நோய்களுக்கும் செலவு இல்லாத எளிய மருத்துவ முறைகள், டாக்டர் ஜெ. ஜெயலட்சுமி, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, பக். 975, விலை 750ரூ. இவ்வளவு பெரிய நூலா என்று மலைப்பு ஏற்பட்டாலும் புரட்டிப் பார்த்தவுடன் முழுவதையும் படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. காரணம், பைசா செலவில்லாமல் நமது நோய்களை நாமே தீர்த்துக் கொள்ளும் எளிய மருத்துவ முறைகளை வரைபடம், புகைப்படம், செய்முளை என்று மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. ஹோமியோபதி, அக்குபங்சர், அக்குபிரஷர், யோகா, முத்திரைகள், நேச்சுபதி, ஆரிகுலோதெரபி, பிரானிக் ஹீலிங், ரெய்கி என்று […]

Read more

மண்ணுக்கேற்ற மார்க்சியம்

மண்ணுக்கேற்ற மார்க்சியம், அருணன், வசந்தம் வெளியீட்டகம், மதுரை, பக். 752, விலை 400ரூ. அருணனி எழுத்து வலிமையான தர்க்க முறைகளைக் கொண்டது. இந்தத் தொகுப்பின் முதல் பார்வையிலேயே அதை உணர முடியும். இலக்கியம், அரசியல், சமூகம், பொருளாதாரம் என எண்ணற்ற விவாதங்களை அவர் இத்தொகுதியில் நிகழ்த்துகிறார். 750 பக்கங்களுக்கு விரிவ9டகின்ற இந்நூல் 103 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. சோவித் யூனியன் சரிந்து விழுந்த பின்னரும் மார்க்சீயம் சார்ந்த தன்னுடைய உறுதியை அது வெல்லும் என்ற நம்பிக்கையை அருணன் தொடர்ந்து எழுதிவருகிறார். மார்க்சியம் வெறும் தத்துவமாக மட்டுமில்லாது […]

Read more

கம்பனில் சட்டமும் நீதியும்

கம்பனில் சட்டமும் நீதியும், நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன், வானதி வெளியீடு, பக். 196, விலை 150ரூ. To buy this Tamil book : https://www.nhm.in/shop/100-00-0002-278-0.html ராமாயணத்தில் சட்டம் கம்பன் கழகத்தின் பிரபல பேச்சாளரும், நாளிதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருபவருமான நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியன் கடந்த முப்பது ஆண்டகளாக நீதித்துறையில் முழுமூச்சாகச் செயல்பட்டு வருகிறார். ராமாயணம் என்னும் கதைக் களத்தின் வெளியில் நின்று விமர்சிக்காமல் உள்ளே நின்று, இடம் சுட்டிப் பொருள் விளக்க முயன்றுள்ளார் நூலாசிரியர். முதல் கேள்வி சட்டம் […]

Read more

பஞ்ச லட்சணதிருமுக விலாசம்

பஞ்ச லட்சணதிருமுக விலாசம், பிரமனூர் வில்லியப்ப பிள்ளை, பதிப்பாசிரியர் ம.பெ. சீனிவாசன், கவிதா பதிப்பகம், பக். 353, விலை 200ரூ. 96 வகை சிற்றிலக்கியங்களை பட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால் பிற்காலத்தில் பல்கிப் பெருகிய பல்வேறு சிற்றிலக்கியங்களில் விலாசம் உட்பட சிற்றிலக்கிய வகை 417 என்று ச.சிதம்பரம் கூறியுள்ளார். அந்த வகையில் சிற்றிலக்கியங்கள் 96 வகைதான் எனப் பாட்டியல்கள் வரையறை செய்திருப்பது பொருந்தாது என்கிறார் பதிப்பாசிரியர். அத்தகைய சிற்றிலக்கியங்களுள் ஒன்றுதான் விலாசம். அவற்றுள் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை, சிவகங்கை துரைசிங் மன்னரைப் பாட்டுரைத் தலைவனாகக் […]

Read more

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா, ஆலிஸ் கெ.ஜோஸ், நோஷன் பிரஸ், சென்னை, பக். 398, விலை 350ரூ. பெண்களுக்கு உகந்தது ஆசிரியர் அல்லது மருத்துவர் பணி என்பார்கள். இவ்விரு பணிகளும் அறம் சார்ந்தவை என்பதுதான் அதற்கு காரணம். நூலாசிரியரான ஆலிஸ் கெ. ஜோஸ், 40 ஆண்டுகள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெற்றவர். அவரே தனது சுய சரிதையை எழுதியுள்ளார். புகழ்பெற்ற தலைவர்கள், சான்றோர்கள் அல்லது சாதனையாளர்களின் சுயசரிதையின் நோக்கம் தனி மனிதனோ அல்லது ஒரு சமூகமோ கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதில் இருக்கும் என்பதுதான். ஆனால் […]

Read more

முதுமையை வெல்வோம்

முதுமையை வெல்வோம், டாக்டர் வ.செ.நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், திருப்பூர், சென்னை, விலை 100ரூ. முதியோர் நல மருத்துவரான நூலாசிரியர் முதியோர்கள் தங்களை உணர்ந்து கொள்ளவும், தங்கள் வீட்டிலுள்ள முதியவர்களை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள உதவும் ஒரு கையேடாகவே இதனை தொகுத்துள்ளார். அத்துடன் முதியோருக்கு தேவையான மனநல ஆலோசனைகள், முதிய பருவத்தில் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி கடைபிக்க வேண்டிய உணவுப்பழக்கம், நோய்களைத் தவிர்க்கும் வாழ்க்கை முறை, ஏற்கனே வந்துவிட்ட நோய்களுக்கான சிகிச்சைகள், குறிப்பாக முதிய வயதில் பெண்களைத் தாக்கும் பிரத்யேகப் பிரச்சினைகள் என […]

Read more

என் ஆசிரியப்பிரான்

என் ஆசிரியப்பிரான், எசென்சியல் பப்ளிகேஷன்ஸ், கோவை, விலை 145ரூ. ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பல இலக்கியங்கள் அழிந்துபோகாமல் காத்த பெருமை உ.வே. சாமிநாதய்யருக்கு உண்டு. கிராமம் கிராமமாக அலைந்து திரிந்து, ஓலைச்சுவடிகளை தேடிக்கண்டுபிடித்து அச்சடித்து வெளியிட்டார். அவர் இப்படி ஓலைச்சுவடிகளை சேகரித்து அச்சிடாமல் இருந்தால், பல சுவடிகள் அழிந்து போயிருக்கும். உ.வே.சாமிநாதய்யரின் சேவைகளையும், பெருமைகளையும் அவருடைய மாணவரும், கலைமகள்இலக்கிய இதழின் முன்னாள் ஆசிரியருமான கி.வா.ஜகந்நாதன் இந்நூலில் எழுதியுள்ளார். அத்துடன் இலக்கியம் பற்றியும், புலவர்கள் பற்றியும் பல அரிய செய்திகள் இந்நூலில் நிறைந்துள்ளன. – நன்றி: தினத்தந்தி, […]

Read more

வெ. இறையன்பு எழுதிய வேர்வையின் வெகுமதி

வேர்வையின் வெகுமதி, வெ. இறையன்பு, குமுதம் பதிப்பகம். தவத்தை விட வேலையே முக்தி தரும் உழைப்பை போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும், வெ. இறையன்பு எழுதிய வேர்வையின் வெகுமதி என்ற நூலை அண்மையில் படித்தேன். குமுதம் பப்ளிகேஷன், நூலை வெளியிட்டுள்ளது. உழைப்பின் பெருமையை, மகத்துவத்தை நூலின் ஒவ்வொரு பக்கமும் போற்றுகிறது. புராணங்கள், வரலாறு, தற்கால நிகழ்வுகள் மூலம், உழைப்பின் முக்கியத்துவத்தை நூலாசிரியர் விளக்குகிறார். ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை செய்தால் அவர் வேலையின் விசுவாசி. அவரே 12 மணி நேரம் வேலை […]

Read more
1 2 3 4 8