நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர்

நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர், அ.மகபூப் பாட்சா, மதுரை சோக்கோ அறக்கட்டளை வெளியீடு. அவசர நிலை பிரகடனத்துக்கு காரணமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் தீர்ப்பு நூறு வயதை கடந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் நீதிபதி கிருஷ்ணய்யரின் வாழ்க்கை வரலாற்றை கூறும், நீதி வானில் ஒரு செந்தாரகை நீதி நாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற நூலை மீண்டும் படித்தேன். மதுரை சோக்கோ அறக்கட்டளை வெளியிட்டுள்ள நூலை அதன் நிர்வாக அறங்காவலர் அ.மகபூப் பாட்சா எழுதியுள்ளார். கிருஷ்ணய்யரின் அரசியல், சமூக பங்களிப்பை நூல் விவரிக்கிறது. 1915ல் பாலக்காடு […]

Read more

முதல் தலைமுறை

முதல் தலைமுறை, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், பக். 184, விலை 110ரூ. நூலாசிரியர் வெ. இறையன்பு, டில்லியில் தன் பயிற்சிக் காலத்தில் இந்தி மொழியின் எதேச்சதிகாரத்தையும், பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டதையும் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக, குறைந்த எல்லையில் தேர்ச்சி பெற்றதை இந்திக்கார்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என சாடுகிறார். உச்சத்தில் இருந்த சோழ சாம்ராஜ்யம் பின்னடைவு கண்ட காலத்தில், கம்பன் வாழ்ந்ததால், சோழநாட்டு இளைஞர்களின் இதயத்தில் மறுபடியும் போர்க்குணத்தைப் பாய்ச்ச, யுத்த காண்டத்தில் மட்டும் 4000த்திற்கும் மேற்பட்ட பாடல்களை படைத்துள்ளார் என்பதும், ‘முதலில் […]

Read more

தீப்பற்றிய பாதங்கள்

தீப்பற்றிய பாதங்கள், டி.ஆர்.நாகராஜ், தமிழாக்கம்-ராமாநுஜம், புலம், சென்னை, விலை 350ரூ. தாழ்த்தப்பட்ட மக்கள் கையேந்தவுமில்லை; அங்கீரம் கேட்கவுமில்லை. கன்னட எழுத்தாளர் டி.ஆர்.நாகாஜன் எழுதிய தீப்பற்றிய பாதங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் ராமானுஜம் என்பவரால் தமிழில் மொழிபெயர்த்து புலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. இரு மொழிகளைக் கடந்து, தமிழில் வந்தாலும், மண்ணின் மனம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. இந்நூலுக்கு ஆசிஷ் நந்தி முன்னுரை எழுதியுள்ளது, கூடுதல் பலமாக உள்ளது. பூர்வ குடிகளான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என, தனியான […]

Read more

லீகல் பிராட்டர்னிட்டி எம்ப்ரேஸ்டு மீடு

லீகல் பிராட்டர்னிட்டி எம்ப்ரேஸ்டு மீடு (ஆங்கிலம்), நீதியரசர் டி.எஸ். அருணாச்சலம், சட்ட உதவி ஆணையத்திற்கு நன்கொடையாக வெளியீடு, பக். 232. கீழமை நீதிமன்றம் தான் வழக்கறிஞர் தொழிலுக்கு அஸ்திவாரம் நீதியரசர் டி.எஸ். அருணாச்சலத்தால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல், விற்பனைக்கல்ல; எனினும் அச்சுக் கூலியாக 100ரூபாயை சட்ட உதவி ஆணையத்திற்கு நன்கொடையாக அளித்து பெற்றுக் கொள்ளலாம் என்ற குறிப்போடு இந்நூலை வழக்கறிஞர் சமூகத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அர்ப்பணித்துள்ளார். கடந்த 1948 முதல் 17/12/1998ல் திருவண்ணாமலையில் மகான் யோகிராம் சரத்குமார், தம்மை அடியவராக ஆட்கொண்டவது வரை, 50 ஆண்டுக்கால […]

Read more

கொங்கு வேளாளர் வரலாறு

கொங்குவேளாளர் வரலாறு, முதல்பாகம், புலவர் செ. ராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு 638011, பக். 330, விலை 350ரூ. மனைமேல் பணம் அளிப்பது ஏன்? கொங்கு நாட்டைப் பற்றியும், அதன் காணியாளர்களான, கொங்கு வேளாளர்களின் நாகரிக பண்பாட்டு பெருமைகள், வரலாற்று கீர்த்திகள், கொங்கு வேளாளர்களின் முக்கிய குலங்கள், கூட்டங்கள், குடிகள் மற்றும் அதன் உட்பிரிவுகள் ஆகியவை பற்றியும், மிக விரிவாகவும், துல்லியமாகவும் ஆய்வு செய்து தந்துள்ளார் நூலாசிரியர். தொல்பொருள் ஆய்வு, இலக்கியத் திறனாய்வு, தனிப்பாடல்கள், நாட்டுப்பாடல்கள், காணிப்பாடல்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் […]

Read more

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள், ரா. கிருஷ்ணன், விகடன் பிரசுரம், பக். 272, விலை 150ரூ. முருகப் பெருமானின், தொண்டர்களை பற்றி விவரிக்கும் நூல். அகத்தியர், நக்கீரர் துவங்கி, திருமுருக கிருபானந்த வாரியர் வரை, 37 முருக தொண்டர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பரவசத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. சக்தி விகடன் இதழில் இந்த கட்டுரைகள் தொடராக வெளிவந்த போதே, ஆன்மிக அன்பர்களின் பாராட்டைப் பெற்றது. இப்போது, புத்தக வடிவில் வெளிவந்திருக்கிறது. இறைவனை தன் உள்ளக் கமலத்துக்குள் அடக்கி வைத்திருக்கும், அவரது தொண்டர்களின் […]

Read more

முப்பருவம்

முப்பருவம், எஸ்.ஏ.வேணிற்செல்வன், சாரதி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. பேதைப் பருவம், பெதும்பைப் பருவம், மங்கைப் பருவம் எனும் முப்பருவம், இந்தப் புதினம். இன்றைய விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்து, கிராமத்து மண்ணும், குழந்தைகள் போன்ற அந்த மக்களின் வாழ்க்கையும் நன்றாகப் பதிவாகி இருக்கின்றன. அந்தக்கால குழந்தை திருமணம், எப்படி விமரிசையாக நடக்கும் என்பதையும், ஆசிரியர் நன்றாகப் படம் பிடித்துக்காட்டுகிறார். முருகையன், வள்ளியம்மாள், சுந்தரம், லட்சுமி இளவரசு, மங்கையர்க்கரசி பாத்திரப் படைப்புகள் அருமை. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முறை, கிராமத்திலே பல்துலக்க, […]

Read more

காகிதப் படகில் சாகசப் பயணம்

காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன், குன்றம் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. கடமையை மறந்த கொள்கையால் என்ன புண்ணியம்? தமிழ் பத்திரிகை உலகில் நடக்கும் சம்பவங்களை விவரிக்கும் புத்தகங்கள். தமிழில் வெகு குறைவாகவே வெளிவந்துள்ளன. அந்த புத்தகங்களும், 20 ஆண்டுகளுக்கு முன் வந்தவை. அந்த குறையை போக்கும் வகையில் வெளிவந்துள்ளது, இந்த நூல். கடந்த 25 ஆண்டுகளாக, பல்வேறு தமிழ் வார இதழ்களில் வெவ்வேறு காலகட்டங்களில் பணி புரிந்த, கருணாகரன் தமது அனுபவத்தை, 18 கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார். ஒரு […]

Read more

இராமன் கதை

இராமன் கதை, முனைவர் ச. லோகாம்பாள், அருள் பதிப்பகம், பக், 576, விலை 430ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0002-265-4.html ராமாயணத்தை பல கோணங்களிலும் நுணுக்கமாக ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றையும், கதைப்போக்குடன் தன் ஆய்வுக் கருத்துக்களை நிறுவுகிறார் நூலாசிரியர். ராமபிரானின் குணநலன்களை அடுக்கிக்கூறும் நூலாசிரியர், ராமன் மாபெரும் மன்னன் என்ற இறுமாப்பின் உருவமாகவே காட்சியளிக்கிறான்‘ என்றும், கோபத்தால் பொறுமை இழந்து அரக்கர் முதலானோரைக் கொன்று குவித்த கொடியவன் ராமன் என்றும் கூறும் […]

Read more

பேரறிஞர் அண்ணா களஞ்சியம்

பேரறிஞர் அண்ணா களஞ்சியம், குமுதவல்லி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. அப்பாவித் தோற்றமளித்த அறிஞன். எதிராளியையும் வசப்படுத்திய வசியன். குரலால், எழுத்தால் ஆண்ட மன்னன். தமிழ்நாட்டின் அண்ணன், சி.என்.ஏ. என்னும் மூன்றெழுத்தால் அறிமுகமான அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரைக் களஞ்சிய நூல். இந்நூல் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்று சுருக்கக் குறிப்பும், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அண்ணா பற்றி எழுதிய புகழ்மாலை தொகுப்பும், கவிஞர்களின் கவிதைத் தொகுப்பும், அண்ணாவின் மறைவுக்குப் பின் தலைவர்கள் தெரிவித்த இரங்கல் உரைகளும் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. திறனாய்வுச் செம்மல் எம்.எஸ்.தியாகராஜன் இத்தொகுப்பை செம்மைப்படுத்தியிருக்கிறார். […]

Read more
1 2 3 4 5 8