இந்தப் பிறவியில் இவ்வளவுதான்

இந்தப் பிறவியில் இவ்வளவுதான், கமலாதாஸ், தமிழில் மு.ந.புகழேந்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 180, விலை 135ரூ. மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி என்ற கமலாதாஸின் படைப்புகள் அனைத்துமே உயிரோட்டமானவை. அன்றாடம் ஏதாவது ஒரு மூலையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அவை அமைந்திருக்கும். இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள குறுநாவல்கள், சுயசரிதை, சிறுகதைகள், கவிதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. காலங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. மன்னிக்க முடியாத பாவமா காதல்? இந்த மகளை மன்னித்து விடுங்கள் ஆகிய படைப்புகள் வெளிப்படுத்தும் யதார்த்தம் நம்மை […]

Read more

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், ப. மருதநாயகம், தமிழ்ப்பேராயம், காட்டாங்குளத்தூர், பக். 272, விலை 150ரூ. உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் மொழியேயாகும். தமிழ்ச் சொற்கள் பலவும் இன்றைக்கும் கிரேக்கம், சீனம், கொரியம், லத்தீன் முதலிய பிறமொழிகளிலும் காணப்படுகின்றன. பிறமொழிச் சொற்களுக்கு வேர்ச்சொல்லாக இருப்பது தமிழ்தான். தமிழர்களின் பண்பாடு, வாழ்வியல் போன்றவை உலக அளவிலும் பரவியிருக்கின்றன என்பதற்கு மொழியியலாளர்களின் ஆய்வுகளே தக்க சான்றாகத் திகழ்கின்றன. எபிரேய விவிலியத்துப் பழைய ஏற்பாட்டில் உள்ள சிறப்புக் கூறுகளை கைம் ராபின் என்பவர் கபிலரின் குறுந்தொகை, ஐங்குறுநூறு, […]

Read more

அஞ்சாத சிங்கம் சூர்யா

அஞ்சாத சிங்கம் சூர்யா, தொகுப்பாசிரியர் நா. சிபிச்சக்கரவர்த்தி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 160, விலை 100ரூ. அஞ்சாத சிங்கம் சூர்யா என்ற பெயரில் வெளியாகியிருக்கும் சூர்யாவின் திரைப்பட டைரி ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த சூர்யாவின் பேட்டிகள், அவரைப் பற்றிய செய்திக் கட்டுரைகள் மற்றும் அவர் நடித்த படங்களின் விமர்சனங்கள் அடங்கிய தொகுப்பாகும். சூர்யாவின் முதல் படத்திலிருந்து சமீபத்திய அஞ்சான் வரை அவரது திரையுலக வாழ்க்கை விவரிக்கும் இந்த நூலுக்கு சூர்யாவின் திரைப்பட டைரி 2014 என்று துணைத் தலைப்பு கொடுத்திருப்பது […]

Read more

சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம்

சிலம்புச் செல்வரின் தலையங்க இலக்கியம், மா.ரா. இளங்கோவன், அருள் பதிப்பகம், சென்னை, பக். 264, விலை 175ரூ. தமிழரகக் கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானம், அவர் நடத்திய கிராமணி குலம் (1936-37), தமிழ் முரசு (1946 – 51), தமிழன் குரல் (1954-55) ஆகிய இதழ்களில் எழுதிய தலையங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பாகவும், அவை பற்றிய அறிமுகமாகவும் இந்நூல் மலர்ந்திருக்கிறது. இக்காலகட்டத்தில் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டம், திராவிட இயக்கங்களின் கொள்கைகள், சுதந்திரத்திற்குப் பிறகான சூழ்நிலைகள் ஆகியவற்றைப் பற்றி ம.பொ.சி.யின் வித்தியாசமான கருத்துகள் நம்மை வியக்க வைக்கின்றன. சான்றாக, […]

Read more

சமூகம் வலைத்தளம் பெண்

சமூகம் வலைத்தளம் பெண், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 180ரூ. பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளரும், பள்ளி ஆசிரியையும், கவிஞருமான தி. பரமேசுவரி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் பேத்தி. இந்தத் தொகுப்பில், அரசியல் கட்டுரைகள், சங்க இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், பெண்ணியக் கட்டுரைகள், நூல் மதிப்பீடுகள் என்று நான்கு வகையான கட்டுரைகள் அவரது புலமையைப் புலப்படுத்துகிறது. நூல் மதிப்பீடுகள் அவரது நடுநிலைமையை நிலைநாட்டுகிறது. பெண்ணியக் கட்டுரைகளில் அவரது ஆதங்கம் தெரிகிறிது. அரசியல் கட்டுரைகளில் அவரது ஆவேசம் புரிகிறது. […]

Read more

மேலை அறிஞர் பார்வையில் தமிழ் நம் பார்வையில் அவர்கள்

மேலை அறிஞர் பார்வையில் தமிழ் நம் பார்வையில் அவர்கள் (பகுதி ஒன்று), தி. முருகானந்தம், தமிழ்ச்சோலை வெளியிடு, பக். 144, விலை 100ரூ. தமிழை ஆராய்ச்சி செய்த மேலைநாட்டு அறிஞர்கள் பலரையும் பற்றி எழுதத் துவங்கும் நூலாசிரியர், ஹார்டி (ஆர்டி) என்பவர் செய்த ஆய்வை குறித்து இந்நூலில் விரிவாக எழுதி உள்ளார். ஆர்டி ஜெர்மானியர். தமிழ் வழக்கறிஞராக திகழ்ந்தவர். சமயவியல் பேராசிரியர். கிருஷ்ண பக்தியை விரகபத்தி என்றும், கிருணவம் என்றும் குறிப்பிடுவது புதுமை. திருமாலை குறிக்கும் மாயோன், மாயவன் என்ற பெயர்கள் கருமை நிறத்தால் வந்த […]

Read more

உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும்

உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும், சி.எஸ். தேவநாதன், விஜயா பதிப்பகம். அறிவாற்றல், நினைவாற்றல் எனும் இரண்டு ஆளுமை ஆற்றல் அடிப்படைகளை, அறிவியல் பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் ஆராய்ந்து எழுதி உள்ள நூல் இது. முறையான கல்வியும், புத்தக வாசிப்பும் அறிவாற்றலுக்கு ஆதாரமாக உள்ளது, நினைவாற்றல் பற்றிய உளவியல் பூர்வமான விவரங்கள், நினைவாற்றலுக்கு தேவையான சில செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் விவரித்துள்ளார். நூல், ராஜா பர்த்ருஹரியின் சதகச் சாரத்தோடு துவங்குகிறது இடையில் விதுர நீதியைக் குறித்துப் பேசுகிறது. புத்தகப் பொக்கிஷமாக விளங்கும் புதுக்கோட்டை ஞானாலயாவை […]

Read more

பொன் அந்திச் சாரல் நீ

பொன் அந்திச் சாரல் நீ, ஸ்ரீஜா வெங்கடேண், வானதி பதிப்பகம், பக். 264, விலை 100ரூ. மாத நாவல் உலகில் கொடி போட்ட சாதனையாளர் ஸ்ரீஜா வெங்கடேஷ். நெல்லை மாவட்டம், ஆழ்வார் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர். பொன் அந்திச் சாரல் நீ என்ற அவர் எழுதிய நாவல், ஒரு தவறான தொலைபேசி அழைப்பால், ஒரு குடும்பம் சிதைவதையும், அதற்கு காரணமான மருத்துவரான தன் தாய்மாமனுக்காக, கதாநாயகன் தன் வாழ்க்கையே தியாகம் செய்வது பற்றியும் பேசுகிறது. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றொரு நாவல், நினைக்கவே […]

Read more

மூன்றாம் கதாநாயகன்

மூன்றாம் கதாநாயகன், ஏ. நடராஜன், கவிதா பப்ளிகேஷன், சென்னை, விலை 160ரூ. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 21 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அன்பு வேறு, காதல் வேறு என்பதை எடுத்துக்காட்டும் கதை மூன்றாம் கதாநாயகன். மனைவி இருக்க மற்றவள் மீது மோகம் கொண்டால் குடும்பம் என்னவாகும் என்கிறது என்ன குறை என்ற கதை. ஒரு குடும்பத்திற்கு கணவனோ, மனைவியோ நல்லவிதமாக அமையவில்லை என்றால் அந்த குடும்பத்தின் கதி என்னவாகும் என்பதை காட்டும் வித்தியாசமான நட்பு என்ற கதை. […]

Read more

மெய்வருத்தக் கூலி தரும்

மெய்வருத்தக் கூலி தரும், (வானொலி உரைகள்), த. ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 172, விலை 145ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-339-5.html கோவை மற்றும் சென்னை வானொலியில் இன்சொல் அமுது என்ற தலைப்பில் இந்நூலாசிரியரால் நிகழ்த்தப்பட்ட உரைகள், படித்ததில் பிடித்தவை, அனுபவங்கள், சந்திப்புகள், சுவாரஸ்யமான நிகழ்வுகள் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டுளள்ன. முதல் கட்டுரை ஓயாத ஒற்றர் படையில் சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய ஐ.என்.ஏ.வின் ஒற்றர் படைப் பிரிவில் இடம் […]

Read more
1 3 4 5 6 7 8