மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன்

மனிதன் வெற்றிக்காக படைக்கப்பட்டவன், டாக்டர் ஒய். லிவிங்ஸ்டன், ஆரோவ்ஸ் கிரியேஷன்ஸ், சென்னை, பக். 427, விலை 240ரூ. கடந்தகால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருப்பதோ, சிந்தித்துக் கொண்டிருப்பதோ வாழ்க்கை இல்லை. நாம் ஒவ்வொரு விநாடியும் எவ்வாறு சிந்தித்துச் செயலாற்றுகிறோமோ, அதுவே உண்மையான வாழ்க்கை என்று, அர்த்தமுள்ள வாழ்க்கை குறித்து நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் அலசி ஆராய்ந்து, ஒருவர் வெற்றியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது எப்படி? அவ்விதம் வெற்றியான வாழ்க்கையை அமைக்க முயல்வோர் சந்திக்கும் பிரச்னைகள் எவை? அதற்கான […]

Read more

தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4

தந்த்ரா ரகசியங்கள் பாகம் 4, (விஞ்ஞானி பைரவ் தந்த்ராவின் புதிய விளக்கம்), ஓஷோ, தமிழில் தியான் சித்தார்த், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 624, விலை 300ரூ. தந்த்ராவின் ரகசியங்களைப் பற்றி முதன் முதலில் படிக்கும் வாசகர்களுக்காக, இந்நூலின் முதல் பாகத்தில் உள்ள தந்த்ரா உலகம் என்ற முதல் அத்தியாயம் இதில் இணைக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான் பைரவ் தந்த்ரா என்ற வார்த்தைகளின் பொருள் உணர்வு தாண்டிப் போகும் யுக்தி. விஞ்ஞான் என்றால் உணர்வு. பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. தந்த்ரா என்றால் யுக்தி, வழி, […]

Read more

திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு

திருக்குறளில் யான் அறிந்தவையும் அறியாதவையும் மாணவர்களுக்கு, வக்கீல் செ. வந்தகுமாரி செல்லையா, டாக்டர் ஏ.இ. செல்லையா கல்வி அறக்கட்டளை, சென்னை, விலை 250ரூ. திருக்குறளை ஆராய்ந்து அதில் பல அறிஞர்களால் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை தொகுத்து தனது கருத்துக்களையும் இணைத்து அரிய நூலாக எழுதியுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வள்ளுவத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் எளியநடையில் தொகுத்துள்ளார். இந்த நூலைப் படிப்பதன் மூலம் திருக்குறள் பற்றி அறிந்த கருத்துக்களை ஆழப்படுத்திக் கொள்வதுடன், அறியாதவற்றை அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட பயனுள்ள நூலாகும். நன்றி: தினத்தந்தி, […]

Read more

கொண்டாடத்தான் வாழ்க்கை

கொண்டாடத்தான் வாழ்க்கை,  அமுதா பாலகிருஷ்ணன், அமுதா பதிப்பகம், சென்னை, விலை 85ரூ. மனித பிறவி எவ்வளவு இனிமையானது. அதை எப்படி கொண்டாடினால் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பதற்கு சில கருத்துக்களையும், வழிமுறைகளையும் 34 அத்தியாயங்களில் தொகுத்து அளித்துள்ளார் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் பளிச் பளிச் என்று சொல்லப்படும் குட்டிக் கதைகள் நூலை சுவாரஸ்யமாக ஆக்குகின்றன. நகைச்சுவையையும் ஒரு படிப்பினையையும் இணைத்தே சொல்லப்படும் அந்தக் கதைகள் தனி விறுவிறுப்பைத் தருகின்றன. படிக்கும் ஆவலைத் தூண்டிவிடும் ஜனரஞ்சக நடையில் எல்லோரது மனதைத் […]

Read more

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்

இயேசு இந்தியாவில் வாழ்ந்தார், தமிழில் – உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-345-3.html இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும், பின்பும் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி, புதிய தகவல்களைக் கூறும் நூல் இது. இதை எழுதியவர் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன். இயேசு இளம் வயதில் இந்தியாவுக்கு வந்து, இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆராய்ந்துவிட்டு திரும்பிச் சென்றார். சிலுவையில் அறையப்பட்ட அவர், அதில் இருந்து மீண்டு இந்தியா […]

Read more

மொழிப்போர் மறவர்

மொழிப்போர் மறவர், வெளியிட்டோர் ஊர்ச் செய்தி பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. தமிழைப் போற்றியி தகைமையாளர்கள் சிலரின் வாழ்க்கை வரலாற்றினை சுருக்கமாக தொகுத்தளிக்கிறது இந்நூல். தனித் தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், ச.சோமசுந்தர பாரதியார், தமிழ்ப் பெரியார் திரு.வி.க. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் உள்பட 14 தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்தளித்திருக்கிறார் ஓவியப் பாவலர் மு. வலவன். இந்தி […]

Read more

சாதியும் நானும்

சாதியும் நானும், பதிப்பாசிரியர்-பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 257, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-192-4.html இந்தியாவில் ஜாதியம் என்ற சமூக அவலம் இந்த நவீன காலத்திலும் ஆழ வேரூன்றியுள்ளது. இதனால் மனித சமூகம் சந்தித்து வரும் வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. இது தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்து வழங்கி, ஜாதியின் கொடூரத்தை இந்த உலகுக்கு மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளார் பதிப்பாசிரியர். குக்கிராமம், கிராமம், நகரம், மாநகரம் என எந்த ஓர் இடத்தையும் ஜாதிக்கொடுமை விட்டு […]

Read more

மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும்

மனோன்மணியம் சுந்தரனார் கலையும் கருத்தியலும், தொகுப்பும் பதிப்பும்- த. கருப்பையா, செம்மூதாய் பதிப்பகம், சென்னை, பக். 375, விலை 300ரூ. தமிழ் இலக்கிய வரலாற்றில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்கென்று ஒரு தனித்த இடம் உண்டு. கடந்த மாதம் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரி தமிழ்த்துறை நடத்திய மனோன்மணியம் சுந்தரனார் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பேராசிரியர் சுந்தரனாரால் இயற்றப்பட்ட மனோன்மணியம் நாடகம், தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்ச் சமூக வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மனோன்மணியத் தமிழ்த்தாய் வணக்கமும் திராவிட […]

Read more

2 ஸ்டேட்ஸ் என் திருமணத்தின் கதை

 ஸ்டேட்ஸ் என் திருமணத்தின் கதை, சேத்தன், ஜெய்கோ பப்ளிஷிங், மும்பை, பக். 362, விலை 199ரூ. 2 ஸ்டேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் என்ற 2009-இல் ஆங்கிலத்தில் வெளிவந்த நாவலின் தமிழ் வடிவம். இதன் கதை களம் பஞ்சாபியான க்ரிஷ், தமிழ்ப் பெண் அனன்யா இருவரும் ஐஐஎம் அகமதாபாதில் பயில்பவர்கள். இருவரும் நண்பர்கள். ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு படிப்பதோடு, காதலையும் வளர்க்கின்றனர். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர். அனன்யாவுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. கிர்ஷ்சிட்டி பேங்கில் வேலை செய்தாலும் சொந்த […]

Read more

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி

ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி, பி. வெங்கட்ராமன், மணிவாசகர் நூலகம், சென்னை, பக். 176, விலை 100ரூ. அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு இதழியல் கோட்டையாக விளங்கிய புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தாலும் அச்சக அதிபர் ஒருவருக்கு மகனாகப் பிறந்ததாலும் இந்நூலாசிரியருக்கு பத்திரிகைத் துறையில் சிறுவயது முதலே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தனது வாழ்வின் சில முக்கிய அனுபவங்கள் குறித்தும், தான் சந்தித்த சில பிரமுகர்கள் குறித்தும் கட்டுரையாகவும், துணுக்காகவும், கவிதையாகவும் சில இதழ்களிலும், சில சிறப்பு மலர்களிலும் அவர் எழுதியிருப்பதன் தொகுப்பு இந்நூல். ஆழமான விஷயங்கள் எதுவுமில்லாததாலும், […]

Read more
1 5 6 7 8