ரசிகமணி ரசனைத் தடம்

ரசிகமணி ரசனைத் தடம், தொகுப்பாசிரியர் பேரா. சண்முக சுந்தரம், காவ்யா, விலை 250ரூ. கம்பராமாயணத்தை இன்று தமிழக மக்கள் அறிவதற்கும் ரசிப்பதற்கும் காரணமாக இருந்தவர் ரசிகமணி டி.கே.சி. 1881ல் பிறந்து 1945ல் மறைந்த டி.கே.சிதம்பரநாத முதலியார் தமிழிசை இயக்கத்தில் மிக முக்கியப் பங்கு வகித்தவர்.கடித இலக்கியம் மற்றும் கட்டுரைகளால் தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தவர். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தென்காசியில் வசித்படி, தமிழகம் முழுவதும் இருந்த தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ரசனையாளர்களை தன் வீட்டில் வரவேற்று உபசரித்து மகிழ்ந்த புரவலரும்கூட. தமிழில் கடித இலக்கியம் […]

Read more

ஸ்ரீஹரிவம்சம்

ஸ்ரீஹரிவம்சம், எல்.லக்ஷ்மி நரசிம்மன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், சென்னை, பக். 320, விலை 250ரூ. வைசம்பாயனரிடமிருந்து மகாபாரதத்தின் 18 பர்வங்களையும் பாராயணம் (ஸ்ரவணம்) செய்த பிறகு ஜனமேஜமன்னன், பரமாத்மாவின் வம்சத்தில் வந்த அரசர்களின் வைபவங்களைக் கேட்க ஆர்வம் எழுகிறது. ஸ்ரீகிருஷ்ணரின் கதையை இன்னும் விஸ்தாரமாகக் கேட்க வேண்டும் என்ற தாகம் எழுகிறது. கருணை புரிந்து அவற்றைச் சொல்ல வேண்டும் என்று அவரைக் கேட்க, வைசம்பாயனர் ஸ்ரீஹரியின் வம்சத்தில் வந்த ராஜாக்களின் வரலாறுகளைக் கூறத் தொடங்குகிறார். மகாபாரதத்தின் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களுடன் ஹரிவம்ஸ பர்வம், விஷ்ணு பர்வம், […]

Read more

கோரா

கோரா, இரவீந்திரநாத் தாகூர், தமிழில் கா. செல்லப்பன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 704, விலை 350ரூ. புதிய இலக்கிய வகையான நாவல் இந்தியாவில் அறிமுகமானபோது எழுதப்பட்ட ஆரம்பகாலப் புதினங்களுள் ரவீந்திரரின் கோராவுக்கு (1909) முக்கிய இடமுண்டு. விடுதலைப் போராட்டக் காலத்தில் உருவான பெரும்பாலான இலக்கியப் படைப்புகளைப் போலவே, ரவீந்திரரின் புதினத்திலும் சமூக அக்கறையும் தேசிய விழிப்புணர்வும் மிளிர்கின்றன. நாடு – உலகம், சாதி – மதம், ஆண் – பெண் உறவுகள், முற்போக்கு – பிற்போக்கு எனப் பலதரப்பட்ட வாழ்வின் அடிப்படை அடையாளச் […]

Read more

சவீதா நாவல்கள்

சவீதா நாவல்கள், சவீதா, நன்னூல் அகம் வெளியீடு, பக். 1264, விலை 800ரூ, ஐந்து தொகுதிகள், ஒவ்வொரு தனித் தொகுதியின் விலை 225ரூ. குறுகிய காலத்தில் பிரபலமாகி பெரும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர், சவீதா. பல்வேறு இதழ்களில் இவர் எழுதிய 18 புதினங்கள், 1264 பக்கங்கள் கொண்ட இந்த 5 தொகுதிகளில் வழங்கப்பட்டிருக்கின்றன. வாசிப்போர் மனதில் கதாபாத்திரங்கள் பதிந்து மறக்க முடியாதவர்களாக அவர்கள் மாறிவிட வேண்டும். அந்த வகையில் சவீதாவுக்கு வெற்றியே. திவ்யா, வேணி, பத்மா, அருண் போன்ற பல கதாபாத்திரங்கள் நாவலின் கடைசிப் […]

Read more

நலம் 360

நலம் 360, மருத்துவர் கு. சிவராமன், விகடன் பிரசுரம், பக். 120, விலை 192ரூ. நலம் 360 என்ற தலைப்பில் வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்ததோடு, தமிழர்கள் மறந்த பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும் 24 தலைப்புகளில் மிக விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர். ஒவ்வொரு உபாதை குறித்த விவரங்களும், அவற்றின் தன்மைகளும், தவிர்க்க வேண்டிய வழிமுறைகளும், அவற்றை தீர்ப்பதற்கான உணவு முறைகளுமாக, அனைத்து விவரங்களையும் அலசிச் செல்கிறார். பண்டைய கால உணவு முறைகளில், நலவாழ்வு எப்படி மக்களிடம் நெடுங்காலம் […]

Read more

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள், யசோதரை கருணாகரன், விகடன் பிரசுரம், விலை 115ரூ. நீரிழிவு நோய் பற்றிய நல்ல விளக்கம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த என்ன விதமான உணவைச் சாப்பிடலாம் என்பதுடன், அந்த உணவு வகைகளைத் தயாரிக்கும் முறையும் கொடுத்து இருப்பது பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- சோதிடப் பேரகராதி, சோதிட சாஸ்திரி எஸ். கூடலிங்கம் பிள்ளை, அழகு பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. சோதிட சாஸ்திரத்தில் இடம் பெற்றுள்ள செய்யுள் நடைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் […]

Read more

உதயணகுமார காவியம்

உதயணகுமார காவியம், உமா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான உதயணகுமார காவியம் சமண காப்பியத்தை குறிப்பது. இது விருத்தப்பாவில் அமைந்தது. ஆறு காண்டங்களில் 367 பாடல்களைக் கொண்டது. அப்பாடல்களுக்கு விளக்கவுரை கொடுத்திருக்கிறார் முனைவர் பழ. முத்தப்பன். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- திருக்குறள் சீர் ஏழுக்கு ஏழு வியனுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ. இதுவரை திருக்குறளுக்கு அரிய பெரிய சான்றோர்கள் உரை எழுதியுள்ளனர். ஒருவரி உரையும் எழுதியுள்ளனர் சிலர். இன்னும் எளிய […]

Read more

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள், டாக்டர் இரா. விருத்தகிரி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. குழந்தை வளர்ப்பு பற்றிய சிறந்த புத்தகம் இது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் எவை, அதற்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துள்ள உணவுகள் எவை என்பதையெல்லாம் விவரமாகப் படங்களுடன் விளக்குகிறார், டாக்டர் இரா. விருத்தகிரி.  ஆண், பெண் குழந்தைகள் வாலிப வயதை அடையும்போது, அவர்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அக்காலக்கட்டத்தில் பெற்றோர்களின் கடமை ஆகியவை பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். அளவிலும், […]

Read more

முதலுதவி

முதலுதவி, வாண்டுமாமா, தனலட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024807.html வெளிநாடுகளில் முதல் உதவி பற்றிய பாடங்களையும் பயிற்சிகளையும் பள்ளிகளில் பாடமாக வைத்துள்ளனர். ஆனால் இங்கே முதலுதவி குறித்து நாம் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அன்றாட வாழ்க்கையில் நிகழும் தீக்காயங்கள், விபத்துகள், எலும்பு முறிவுகள், விஷக்கடிகள் போன்றவற்றுக்கு எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை வாண்டுமாமா அருமையாக விளக்கியுள்ளார். சர்வ சாதாரணமான தலைவலியில் தொடங்கி விஷக்கடி வரையிலான ஆபத்தான முதலுதவி முறைகளை படங்களுடன் நுட்பமாக கூறியுள்ளார். […]

Read more

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, தமிழில் எஸ். ராமன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. ஒரு நகரத்தையே உருவாக்கிய இலங்கைத் தமிழரின் சாதனை! பிரமிப்பூட்டும் தன்னம்பிக்கை நாயகன், மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு. பசி, பட்டினியுடன் வளரும் இலங்கை அகதி தமிழரான அவரது மனதுக்குள் பெருங்கனவு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமயத்தில் வெறும் திட்டத்தைக் காட்டி, 3 ஆயிரம் ஏக்கர் இடத்தை ஒப்பந்தத்துடன் விலை பேசுகிறார். முதலீடு செய்பவர்களை ஈர்த்து, ஆஸ்திரேலியாவுக்கே பெருமை […]

Read more
1 5 6 7 8 9