நலம் காக்கும் சித்த மருத்துவம்

நலம் காக்கும் சித்த மருத்துவம், சித்த மருத்துவர் ப. செல்வசண்முகம், வலைத்தமிழ் பதிப்பகம், சென்னை, விலை 220ரூ. சித்தர்கள் கூறியுள்ள வாழ்வியல் நெறிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை மருத்துவர் ப. செல்வ சண்முகம் படைத்திருக்கிறார். நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளை தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கியுள்ளார். உடம்பைப் பற்றியி சித்தர்களின் விளக்கம், உடல் கட்டமைப்பு, குளிக்கும் முறை, உணவு அருந்தும் முறை, முறையான தூக்கம், தூக்கமின்மைக்கான தீர்வுகள் போன்ற தலைப்புகளில் பயனுள்ள கருத்துகளை வழங்கி இருக்கிறார். நன்றி: தினத்தந்தி. […]

Read more

கலாம் ஒரு சரித்திரம்

கலாம் ஒரு சரித்திரம், அமுதன், தந்தி பதிப்பகம், சென்னை, பக். 208, விலை 180ரூ. மக்களின் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், இளைஞர்களின் வழிகாட்டி என்று அழைக்கப்பட்டவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். மாணவர் சமுதாயத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்த அவரது இறுதி மூச்ச, மாணவர்கள் மத்தியிலேயே பிரிந்தது. எளிய குடும்பத்தில் பிறந்து மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப் பெற்ற அந்த மாமனிதருக்காக இந்தியாவே அழுதது. இன்னொரு மகாத்மாவாக வாழ்ந்த அவரது எளிமை, நேர்மை, தூய்மை போன்ற நெறிகளை எதிர்காலச் சந்ததியினர் பின்பற்றி நடக்க வேண்டும் […]

Read more

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, கோமல் அன்பரசன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய விவரங்கள் தினசரி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் எழுதியுள்ள இந்நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வழக்கின் தன்மை, சட்ட விளக்கங்கள், அன்றாட நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நடந்த சுவையான வாதங்கள் அனைத்தையும் ஒரு சாதாரண வாசகன் புரிந்துகொள்ளும் விதத்தில் விரிவாக அன்பரசன் எழுதியுள்ளார். 1991 முதல் 1996 ஜெயலலிதா தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தார். […]

Read more

மாரிஷஸ் ஹிந்திக் கதைகள்

மாரிஷஸ் ஹிந்திக் கதைகள், தொகுப்பாசிரியர் கமல் கிஷோர் கோயங்கா, தமிழில் மு. ஞானம், சாகித்ய அகாதெமி, பக். 576, விலை 330ரூ. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்த லட்சக்கணக்கானோரை இலங்கை, மொரிஷியஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு கப்பலில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். அப்படி வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், துயரங்கள், சுக துக்கங்கள் பல்வேறு இலக்கிய வடிவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொரிஷீயஸ் நாட்டில் அபிமன்யு அனத், ஜயதத் ஜீவுத், தீபந்த் பிஹாரி, தர்மவீர் கூரா, […]

Read more

கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 176, விலை 110ரூ. கனடாவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பிறக்காதவர்கள். அதாவது, 120 நாட்டு மக்கள், பிறந்த நாட்டைவிட்டு, இங்கு வந்து குடியேறியவர்கள் என்கிறார் நூலாசிரியர் சா. கந்தசாமி. இது வழக்கமான பயணக்கட்டுரை அல்ல. தகவல்கள், வரலாறுகளின் குவியல் இந்நூல். உதாரணத்திற்கு விமானத்தில் சிற்றுண்டியாக வறுத்த வேர்க்கடலையைத் தருகிறார்கள். உடனே நூலாசிரியரின் நினைவு வேர்க்கடலையின் தாயகமான மணிலாவுக்குப் போய்விடுகிறது. மணிலாவிலிருந்துதான் இந்த ‘peanut’  இன்று உலகம் முழுவதும் பரவி விளைவிக்கப்பட்டு, பணப்பயிராக மாறியிருப்பதன் வரலாற்றைக் […]

Read more

லட்சுமி என்ற பயணி

லட்சுமி என்ற பயணி, தொழிற்சங்கவாதி லட்சுமி, மைத்ரி பதிப்பகம். சிறை சென்று ஓய்வெடுக்க வேண்டும் தொழிற்சங்கவாதி லட்சுமி எழுதிய ‘லட்சுமி என்ற பயணி’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மைத்ரி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. திருச்சியில் உள்ள ‘டேன்டெக்ஸ்’ பனியன் நிறுவன தொழிலாளி, லட்சுமி. அறுபது வயதாகும் அவர், எமர்ஜென்சி காலத்தில் இடதுசாரி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ.வில் இருந்தார். அவரது கணவர் மணியரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார செயலராக பணியாற்றியவர். வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் லட்சுமிக்கு. கணவர் அரசியலில் இருப்பதால், […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள் – குமுதினி

இந்திய இலக்கியச் சிற்பிகள் – குமுதினி, பிரேமா நந்தகுமார், சாகித்ய அகாடமி, பக். 135, விலை 50ரூ. பிரிட்டிஷ் காலத்திய பெண்ணிய எழுத்தாளர்‘ பெரும்பாலான இந்திய பெண்கள் கல்வியறிவில்லாமல் இருந்த காலகட்டத்தில், மிகவும் ஆச்சாரமான அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர், குமுதினி என்று தமிழுலகால் அறியப்பட்ட, ரங்கநாயகி தாத்தம். அவரது குடும்பத்தில், ஆண்கள் அனைவரும் மெத்தப் படித்தவர்களாக இருந்தும், பெண்கள் கல்வியறிவற்றோராக வாழ்ந்தனர். அந்தக் கால குழந்தை திருமணத்திற்கு, குமுதினியும் விதிவிலக்கில்லை. இருந்தும் தன் தணியாத கல்வி தாகத்தாலும், தந்தையின் உதவியாலும், கணவரின் ஆதரவாலும், தானே […]

Read more

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே, ஆங்கிலம் ஆ. அலங்காரம், தமிழாக்கம் அ. அந்தோணி குருசு, என்.சி.பி.எச்., வெளியீடு, பக். 226, விலை 180ரூ. தீண்டாமை இன்னும் ஒழியவில்லை சமயங்களுக்கான விடுதலையை அடிநீரோட்டமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த நூல், பல தரவுகளையும் ஒருங்கிணைத்த ஆய்வு நூல். ஆறு இயல்கள் கொண்ட இந்த நூலின் முதல் இயலில், ஜாதி, சமயம் குறித்த விவேகானந்தரின் எண்ணங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான வெளிச்சக்கீற்றிற்கு அவை துணை செய்வனவாய் உள்ளன.ஆன்மிகமும் வேதாந்தமும் பின்னிப் பிணைந்த நவீன அறிவியலின் எல்லையை வரையறை […]

Read more

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நினைவுகள்

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நினைவுகள், கல்யாணி இராமசாமி, வசந்தா பதிப்பகம், பக். 160, விலை 200ரூ. திரைப்பட உலகில் இன்று நிலவும் பகுத்தறிவு கருத்துகளுக்கு, வித்திட்டவர், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. அண்ணாதுரையின் வலதுகரமாகச் செயல்பட்டவர், கே.ஆர். இராமசாமி. பராசக்தி மற்றும் மனோகரா திரைப்படங்களில் தனக்கு வந்த வாய்ப்பை, அண்ணாதுரை சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக, சிவாஜி கணேசனுக்கு விட்டுக்கொடுத்தவர், அண்ணாதுரையின் நிழலாக வாழ்ந்தவர். காலமெல்லாம் தாம் சம்பாதித்த வருவாயை, கழகம் வளரவே செலவழித்தார். தனக்கொரு குடும்பம் இருக்கிறது என்பதையே மறந்து, தூய கழகத் […]

Read more

எடர்னல் அண்டு எவர் குரோயிங் பிராப்ளம்ஸ் ஆப் என்க்ரோச் மென்ட்ஸ் (ஆங்கிலம்)

எடர்னல் அண்டு எவர் குரோயிங் பிராப்ளம்ஸ் ஆப் என்க்ரோச் மென்ட்ஸ் (ஆங்கிலம்), நீதியரசர் எஸ். ஜெகதீசன், பாரதி நிலையம், பக். 128, விலை 200ரூ. இந்த நூல், தமிழகத்தில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகளை பப்ற்றி பேசுகிறது. சாலையோரம், நடைமேடை என ஆக்கிரமிப்புகள் பற்றிய முதல் கட்டுரையில் துவங்கி, அரசு நிலங்கள், ஏரிகள், வழக்கறிஞர்களின் வரம்பு மீறிய செயல்பாடுகள், நீதிமன்ற ஆணைகளை புறக்கணிக்கும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகள் என, பல்வேறு விதமான பிரச்னைகளும், 12 கட்டுரைகளாக அலசப்பட்டுள்ளன. முதல் 72 பக்கங்கள் கட்டுரைகள், அடுத்த […]

Read more
1 2 3 4 5 8