அதிசய சித்தர் போகர்

அதிசய சித்தர் போகர், எஸ். சந்திரசேகரன், கற்பகம் புத்தகாலயம், விலை 90ரூ. தூய தவ வலிமையின் காரணமாக தெய்வநிலையை அடைந்துவிடும் மகான்களான சித்தர்கள் தங்களது அற்புத சக்திகளை, துன்பப்படுபவர்களின் துயரங்களைப் போக்குவதற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பதை நூலாசிரியர் விரிவாக எடுத்துக் கூறி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   —- இளவரைவியலும் தமிழ்நாவலும், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 155ரூ. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றிய இனவரைவியல் செய்திகளை மனதில்கொண்டு இனவரைவியலுக்கும் நாவலுக்குமான தொடர்பை இந்நூல் ஆராய்கிறது. நன்றி: தினத்தந்தி, 14/10/2015.   […]

Read more

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும், பா.சு. ரமணன், சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. நீர்க்குமிழி போன்ற இம்மானுட வாழ்க்கையில் ஒளிக்கீற்றாய், உலகை உய்விக்க, ஆங்காங்கே சில மாமனிதர்கள் தோன்றுவதுண்டு. அப்படித் தோன்றிய மகத்தான மாமனிதர்களுள் ஒருவர்தான் திருவருட் பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க வள்ளலார். வாழையடி வாழையென வந்த அடியார்கள் திருக்கூட்டத்தைச் சேர்ந்த வள்ளலார், தன்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த ஞானி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல், சாதி, சமய, மத, இன வேறுபாடுகளைச் சாடிய சமூக சீர்திருத்தவாதி. எல்லாரும் எல்லாமும் […]

Read more

கனடா நாட்குறிப்பு

கனடா நாட்குறிப்பு, சா. கந்தசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 110ரூ. 60 ஆண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர் சா. கந்தசாமி படைத்த பயணக் கட்டுரை நூல். கனடா நாட்குறிப்பு தனிப்பட்ட வாழ்க்கை என்பதைத் தாண்டி, பொதுவாகவே இருக்கிறது. வேறுநாடு, வேற்று மனிதர்கள் என்பதால் வாழ்க்கை அடியோடு மாறிவிடுவதில்லை. அது எப்போதும் போலவே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, தங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு, தாங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு வாழ்கிறார்கள். அதுவே வாழ்க்கை என்பதை […]

Read more

தாவூத் இப்ராகிம்

தாவூத் இப்ராகிம், ஆங்கிலத்தில் எஸ். ஹுசைன் ஸைதி, தமிழில் கார்த்திகா குமாரி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. மும்பை மாபியா என்றதும் நினைவுக்கு வரும் பெயர் தாவூத் இப்ராகிம். ஆனால் அவனுக்கு முன்பே மும்பை பல தாதாக்களை உருவாக்கி இருக்கிறது. ஹாஜி மஸ்தான், வரதா பாய் என்கிற வரதராஜ முதலியார், கரீம் லாலா ஆகியோர் தாவூத் இப்ராகிமின் முன்னோடிகள். இவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பத்திரிகையாளர் எஸ். ஹுசேன் ஸைதி ஆங்கிலத்தில் சுவையாக எழுதியுள்ளார். இதைத் தமிழில் கார்த்திகா குமாரி மொழிபெயர்த்துள்ளார். மும்பையில் தாதாயிசம் […]

Read more

ஜெயந்தி சங்கர் நாவல்கள்

ஜெயந்தி சங்கர் நாவல்கள், ஜெயந்தி சங்கர், காவ்யா, சென்னை, பக். 1014, விலை 1000ரூ. மலேசிய, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களிடம் பணம் இருக்கும். படைப்பாற்றல் இருக்காது என்ற சில இலக்கியவாதிகளின் கருத்து, ஜெயந்தி சங்கரின் திரிந்தலையும் திணைகள் என்ற நாவலைப் படித்தால் உடைந்துபோகும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருதுபெற்ற இந்த நாவல், தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் புலம்பெயர்ந்தும் வாழும் பல பெண்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. அவர்களது மனப்புண்களைக் காட்டிச் செல்வதோடு, வாசனையும் வலிகொள்ளச் செய்ய, கதாபாத்திரங்களை இன்னும்கொஞ்சம் கூடுதலாகப் பேசவிட்டிருக்கலாம். அல்லது வலியின் அடியாழத்துக்கு […]

Read more

தி.க.சி. என்றொரு தோழமை

தி.க.சி. என்றொரு தோழமை, தொகுப்பாசிரியர் கழனியூரன், காவ்யா, பக். 250, விலை 281ரூ. தோழர் தி.க.சி. என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் தி.க.சிவசங்கரன், 2014, மார்ச், 25ம் தேதி மறைந்தார். அவரது நினைவைப் போற்றும்வகையில், பல்வேறு அறிஞர்கள், அஞ்சலி செலுத்தினர். அவற்றை நூலாக்கம் செய்யவேண்டும் என்னும் ஆர்வத்தில் தொகுப்பாசிரியர், 52 கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். நாளிதழ்கள், பேரிதழ்கள், சிற்றிதழ்கள், மின்னிதழ்கள் என்று, அனைத்துவிதமான பத்திரிகைகளிலும், வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த தொகுப்பில் கி.ரா., பொன்னீலன், வண்ணநிலவன், பாவண்ணன் போன்ற எழுத்தாளர்கள் தி.க.சி. […]

Read more

பாவார்த்த ரத்னாகரம்

பாவார்த்த ரத்னாகரம், விருத்தியுரை எட்டயபுரம் க.கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், பக். 672, விலை 400ரூ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, தீண்டாமையை எதிர்த்துக் குரல் கொடுத்து, பெரும் மதப்புரட்சி செய்த ராமானுஜரால், இந்த ஜோதிட நூல் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது வியப்பான விஷயம். மொத்தம், 383 சமஸ்கிருத சுலோகங்களில், 14 நீண்ட அத்தியாயங்களில் லக்ன பலாபலன்கள், 12 பாவகங்களில் நவக்கிரகங்களின் பலம், பலவீனம், கிரக சேர்க்கைகளின் பலன்கள், காரக கிரகங்களின் வலிமை, தசாபுத்திப் பலன்கள், ராஜயோகங்கள், வாகன பாக்கிய யோகங்கள், மரணம் தரும் திசா புத்திகள் […]

Read more

பாண்டியர் வரலாறு

பாண்டியர் வரலாறு, பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 315ரூ. மூவேந்தர்களில் மிகப் பழமையானவர்கள் பாண்டியர்கள். நீண்ட காலம் ஆட்சி நடத்தியவர்கள். கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சிகள் முதலியவற்றால் இவர்களது வரலாற்றை அறிய முடிகிறது. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் ஆகியோர், பாண்டியர் வரலாறு பற்றி சிறந்த நூல்கள் எழுதியுள்ளனர். எனினும், அவர்கள் காலத்துக்குப்பின், புதிய கல்வெட்டுகள், செப்பேடுகள் பல கிடைத்துள்ளன. அவற்றையும் சேர்த்து, இந்த நூலை எழுதியுள்ளார், பேராசிரியர் ம.ராசசேகர தங்கமணி. அவர் தெரிவிக்கும் சில கல்வெட்டுச் செய்திகள் மூலம் […]

Read more

திரைப்படத் தணிக்கை முறை

திரைப்படத் தணிக்கை முறை, கமர்ஷியல் கிரியேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. திரைப்படங்களை எடுத்து முடித்தபின், பட அதிபர்களை எதிர்நோக்கி இருக்கும் அடுத்த முக்கியமான வேலை, படத்தை தணிக்கை (சென்சார்) குழுவுக்கு அனுப்பி சர்டிபிகேட் வாங்குவதாகும். ஆபாசம் என்றும், ஆட்சேபகரமானவை என்று தணிக்கைக் குழுவினர் கருதுகிற காட்சிகளை, வெட்டி எறிந்து விடுவார்கள். தணிக்கைக் குழுவின் முடிவு அநீதியானது என்று பட அதிபர் கருதினால், அதை எதிர்த்து அப்பீல் செய்யலாம். இதை எல்லாம் விளக்கமாக கூறுகிறது. நாம் அறிந்து கொள்வோம் – திரைபடத் தணிக்கை முறை என்ற […]

Read more

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி

புரட்சித்தலைவர் கண்ட புரட்சித்தலைவி, கலைமாமணி வி. ராமமூர்த்தி, வி.ஆர். பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் 40 ஆண்டு காலம் அனுபவம் உள்ள பத்திரிகையாளர் கலைமாமணி வி.ராமமூர்த்தி, எம்.ஜி.ஆருடனும், ஜெயலலிதாவுடனும் நெருங்கிப் பழகியவர். தனது 40 ஆண்டு அனுபவங்களை இப்புத்தகத்தில் சவைபட எழுதியிருக்கிறார். மைசூரில், பி.ஆர். பந்துலுவின் கங்காகவுரி படப்பிடிப்பு நடந்தபோது, அரிவாள் கத்தியுடன் வந்து கன்னடர்கள் கலாட்டா செய்தனர். ஜெயலலிதா அஞ்சா நெஞ்சத்துடன் எதிர்த்து நின்று, அவர்களை விரட்டி அடித்த அந்த சம்பவத்தைப் படிக்கிறபோது, சின்ன வயதிலேயே ஜெயலலிதாவிடம் வீரலட்சுமி குடிகொண்டிருந்ததை […]

Read more
1 2 3 4 5 6 8