வ.ரா. கதைக்களஞ்சியம்

வ.ரா. கதைக்களஞ்சியம், தொகுப்பாசிரியர் முனைவர் சு. சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, விலை 850ரூ. “அக்கிரகாரத்து அதிசய மனிதர்” என்று பேரறிஞர் அண்ணாவால் புகழப்பட்டவர் “வ.ரா.” (வ. ராமசாமி), 1889-ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். 1919?ல் மகாத்மா காந்தியும், மகாகவி பாரதியும் சந்தித்தபோது உடன் இருந்தவர். 1920 -ல் “சுதந்திரன்” என்ற சொந்த இதழை நடத்தியபோது, “கல்கி”யின் முதல் நாவலான “விமலா”வை தமது பத்திரிகையில் வெளியிட்டவர். 1933-ல் டி.எஸ். சொக்கலிங்கம், கு. சீனிவாசன் ஆகியோருடன் சேர்ந்து இவர் தொடங்கிய “மணிக்கொடி” இலக்கிய இதழ், புதுமைப்பித்தன் போன்றவர்களை […]

Read more

பால்வெளி (பேரண்டர் கவிதைகள்),

பால்வெளி (பேரண்டர் கவிதைகள்), கவிஞர் சி. ராமலிங்கம், மேன்மை வெளியீடு, பக். 192, விலை 150ரூ. மக்கள் மொழியில் மக்கள் பிரச்னையை முதன் முதலில் தமிழ்க் கவிதையில் பேசியவர் என்ற சிறப்பு பாரதிக்கே உண்டு. எதிலும் நடந்த வழியே நடந்து செல்லாமல் புதிய வழியில் செல்வோரைத்தான் வரலாறு பதிவு செய்யும், அந்த வகையில் தமிழ்க் கவிதையில் முதன் முதலில் அறிவியல் கருத்துக்களைப் பேசிய சிறப்பு இந்த நூலாசிரியர் கவிஞர் சி. ராமலிங்கத்தையே சேரும். பேரண்டம் குறித்த செய்திகளை இன்றைய செய்யுள் வடிவமான புதுக்கவிதையாகச் சொல்ல […]

Read more

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும்

கூட்டுறவு இயக்க முன்னோடிகள் வாழ்வும் தொண்டும், முனைவர் க. சிவாஜி, அலைகள், பக். 344, விலை 260ரூ. மனித உழைப்பின் கூட்டுச் சக்தியால் பொருட்கள், உணவு தானியங்கள் போன்ற அனைத்துப் பொருட்களும், உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது, பொதுவாக பலராலும் அறியப்பட்ட ஒன்றுதான்; என்றாலும், அந்தக் கூட்டுச் சக்தியை ஒன்று திரட்டி அதைச் செயலுக்குக் கொண்டு வந்தனர். அதாவது, முன்னோடிகளைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட முன்னோடிகளில் ஒன்பது பேரது வாழ்க்கை வரலாற்றையும், அவர்கள் ஆற்றிய பொதுத் தொண்டுகளையும் மிக விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். எல்.பி.சுவாமிக்கண்ணு […]

Read more

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு,

வரலாற்று உண்மைகள் தமிழ்மண், தமிழர், தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம். இந்நூல் தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித் துறை நிதியுதவி பெற்று வெளியிடப் பெற்றதாகும். இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து அமைக்கப்பட்டு உள்ளது. முதல் பகுதி வரலாற்றுப் பகுதி, 37 தலைப்புகளில் அமைகிறது. நூலாசிரியரின் புதிய கண்டுபிடிப்புகள் அடங்கிய கட்டுரைகள் உடுக்குறிகள் இட்டுக் காட்டப்பட்டுள்ளன. சேரன் செங்குட்டுவன் படையெடுப்பால் ஏற்பட்ட அவமானத்தைப் போக்கவே களப்பிரர் என்ற இனத்தினர், தமிழகத்தின் மீது போர் தொடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர் (பக். 50). இதுபோன்று வருவன […]

Read more

இந்தியாவின் தோற்றமும் வரலாறும்

இந்தியாவின் தோற்றமும் வரலாறும், கே. வெங்கட்ராமன், கவிதா பப்ளிகேஷன், பக். 352, விலை 250ரூ. ‘இந்தியா பிறந்தது’ முதல் ‘இந்தியா சுதந்திரம் அடைந்தது’ ஈறாக, 16 தலைப்புகளில் கற்கால மனிதர்கள், சிந்து சமவெளி நாகரிகம், வேத காலம், புத்த, ஜைன மத காலம், கிறிஸ்துவுக்குப் பின் இந்தியா, அரேபிய படையெடுப்பு, விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு, ஆங்கிலேயர் வருகை, இந்திய சுதந்திரம், செண்பகராமன் வரலாறு இப்படியாக நூலாசிரியர் தனக்குத் தெரிந்த கருத்துக்களை எல்லாம் இந்நூலில் பதிவு செய்துள்ளார். ‘இயக்கர்கள்’ என்ற பழங்குடியினர், ‘யக் ஷர்கள்’ […]

Read more

ஸ்ரீமத் இராமாயணத்தில் நங்கையர்

ஸ்ரீமத் இராமாயணத்தில் நங்கையர், தொகுப்பாசிரியர் ஜெ. சுவாமிநாதன், பக். 221, விலை 70ரூ. பெண்களுக்கு காலங்காலமாக அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, ஆசிரியர் இந்த நூலில் விளக்குகிறார்.‘தாய்மை’ என்பது பண்பையும், பாசத்தையும், ஒழுக்கத்தையும் தருவது என்ற விளக்கமும் உள்ளது. ராமபிரான் கானகம் சென்ற பின்னால், புயலுக்கு பின், அமைதியானவர் கைகேயி  என்றும், அவர் செய்த ஏற்க முடியாத செயலாக, மாங்கல்யத்தை கழற்றி எறிந்ததை புராணக் கருத்துக்களில் ஆசிரியர் விளக்குகிறார். அதே போல ராமாயணத்தில் திருப்புமுனைப் பாத்திரமாக, ‘கூனி’ வர்ணிக்கப்படுகிறார். இளமையிலே விதவையான சூர்ப்பனகை, ‘எதிர்நிலைப்பாத்திரம்’ என்று விளக்கி, […]

Read more

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்க

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம், அ.கா. பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 94, விலை 70ரூ. கடந்த, 47 ஆண்டுகளுக்கு முன், மனோன்மணியம் நாடக நூலில் பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய, ‘நீராடும் கடல் உடுத்த’ பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., அறிவித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் மோகன ராகத்தில் திஸ்ரம் தாளத்தில் இசையமைத்திருந்தார். இந்த செய்தியுடன், இந்நூல் துவங்குகிறது. சிலப்பதிகாரமும், பதிற்றுப்பத்தும் சேர நாட்டுக்கு உரியதாக இந்நூல் ஆய்கிறது. கேரளத்தில் ஆலப்புழை, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர் தமிழறிஞர் சுந்தரம் பிள்ளை. […]

Read more

அறிவியலுக்கு அப்பால்

அறிவியலுக்கு அப்பால், நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், வானதி பதிப்பகம், பக். 152, விலை 125ரூ. நம்மைச் சுற்றிலும் அறிவியலுக்கு அப்பாற்பட்டு எவ்வளவோ நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கே சவால் விடுபவை அவை. அவற்றில் சிலவற்றை அலசி, அவற்றை மூடத்தனம் என்று ஒதுக்காமல், அதில் உள்ள உண்மைத்தன்மையை தேட வைக்கும் முயற்சி இந்நூல். இசை ஞானமே இல்லாத ரோஸ்மேரி பிரவுன் – இசைமேதைகளின் ஆவியுலகில் இருந்து தரப்பட்ட புது கம்போசிஷன்களில் இசைத்தட்டுக்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது, அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி கொல்லப்படுவதை முன்கூட்டியே […]

Read more

ஜீன் ஆச்சர்யம்

ஜீன் ஆச்சர்யம், மொஹமத் சலீம், புலம், விலை 160ரூ. பிரமிக்க வைக்கும் அற்புத அறிவியல் குறித்த நூல். அற்ப கேள்விகள் என்று நாம் ஒதுக்கும் விஷயங்கள் தான் அறிவியலின் ஆதாரம் என்ற சுவாரஸ்யமான கருதுகோளில் இருந்து ஆரம்பிக்கிறது, ‘ஜீன் ஆச்சர்யம்’. கிரேக்க சிந்தனையாளன் பிதாகரசின் விநோதமான கேள்வியில் துவங்கும் மரபணு ஆராய்ச்சியின் வரலாறு, அரிஸ்டாட்டிலின் ஆதிக்கம், ஸ்வாமர்டாம் Vs கிராபின் சண்டை, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலீயின் மார்பக அறுவை சிகிச்சை என்று படிப்படியாக நகர்ந்து செல்கிறது. ‘குரோமோசோமின் உள்ளே மரபணு இருக்கிறது, மரபணு […]

Read more

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல், ஸ்ரீ ஸக்தி சுமனன். அகத்திய மகரிஷி, சித்தர்கள் கண்டறிந்த எல்லா வித்தைகளையும் தெளிவாக கூறியவர்களில் முதன்மை ஆனவர். அகத்திய மகரிஷி, தன் ஞானத்தை சுருக்கி, சித்தர் மார்க்கத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக, 30 பாடல்களில் அகத்தியர் ஞானம் 30 ஆக தந்திருக்கிறார். தற்காலத்தவர்கள் விளங்கி கொள்ளும்படி, தியான சாதனையில் சித்த வித்யா விளக்கவுரையாக ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்கள் எழுதிய விளக்கவுரையே, அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் எனும் இந்நூல். அகத்திய மகரிஷியை, குருவாக கொண்டு சாதனை செய்ய […]

Read more
1 2 3 9