போர்த் தொழில் பழகு

போர்த் தொழில் பழகு, வெ. இறையன்பு, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 156, விலை 250ரூ. இளைய தலைமுறை எப்படிப்பட்டதாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி வரும் இந்நூலாசிரியர், இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் உருவாக தன்னம்பிக்கையும், துணிவும் வேண்டும். அது உருவாக ‘போர்க் குணம்’ வேண்டும் என்கிறார். ’ரௌத்திரம் பழகு’ என்று மகாகவி பாரதியும் கூட வலியுறுத்தியுள்ளார். தீமைகளையும், அடக்குமுறைகளையும் கண்டு உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் நியாயமான கோபம்தான் போர்க்குணம். இக்குணம் உடையவர்களால்தான் உலகம் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைகிறது. […]

Read more

என் நாடு என் மக்கள் எனது போராட்டம்

என் நாடு என் மக்கள் எனது போராட்டம், அடால்ஃப் ஹிட்லர், தமிழில் ஆர்.சி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 352, விலை 175ரூ. உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் சுயசரிதை இந்நூல். அவருடைய இளமைக் காலம் முதல் 1918 வரையில் நிகழ்ந்த அவருடைய சொந்த வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாதாரண ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், உலகின் மாபெரும் சர்வாதிகாரியாக மாற அவருடைய கம்யூனிச எதிர்ப்பு சிந்தனை முறையே காரணமாக இருந்திருக்கிறது. “ஒரு கொள்கை பரவுவதைத் தடுக்க […]

Read more

சொல் புதிது பொருள் புதிது

சொல் புதிது பொருள் புதிது, ம. இராஜேந்திரன், கவிதா பதிப்பகம், பக். 224, விலை 170ரூ. நமது அன்றாடப் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறும் ஐம்பது ஆங்கிலச் சொற்களைத் தேர்வு செய்து அவற்றிற்கு நிகரான தமிழ்ச் சொற்களை ஆய்வு நோக்கில் நிறுவியிருக்கிறார் ம. இராசேந்திரன். ஆங்கிலத்தில் இன்ன சொல்லுக்கு இன்ன பொருள்; இதைத் தமிழில் இந்த சொல்லால் குறிக்கலாம் என்கிற பாணியில் இவர் எழுதவில்லை. ஆங்கிலச் சொல்லுக்குரிய பொருள்; அந்தப் பொருளையுணர்த்தும் தமிழ்ச் சொற்கள். அவை இலக்கியத்திலும் மக்கள் வழக்கிலும் எங்கெங்கெல்லாம் பயின்று வந்திருக்கின்றன; அவற்றில் மிகவும் […]

Read more

தத்துவ தரிசனங்கள்

தத்துவ தரிசனங்கள், பத்மன், கிழக்கு பதிப்பகம், பக். 352, விலை 300ரூ. கடவுள் உண்டா, இல்லையா என்ற வாதம் உலகம் தோன்றிய காலந்தொட்டே நடந்து வருகிறது. இது தொடர்பான ஆராய்ச்சியை பாரத நாட்டின் ரிஷிகளும், முனிவர்களும் மேற்கொள்வதுடன் அந்தந்த காலத்தில் சில தத்துவங்களை மக்களுக்கு வழங்கியுள்ளனர். நாத்திகம் பேசும் சார்வாகம், பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்னும் லோகாயதம், ஆன்மாவை ஏற்கும் சமணம், சாங்கியம், வாழ்வியலை போதிக்கும் பௌத்தம், அணுக்களின் சேர்க்கையாலேயே உலகம் என்று விவரிக்கும் வைசேஷிகம், காரண – காரியங்களை அலசும் நியாயம், உடல், […]

Read more

உபசாரம்

உபசாரம், சுகா, தடம் பதிப்பகம், பக். 151, விலை 130ரூ. மனிதர்களை கவனிக்கும் சுகாவின் ரசனைதான் ‘உபசாரம் தொகுப்பின் அடிநாதம். அது சினிமாவாகட்டும், படித்த நாவலாகட்டும், சாப்பிடப் போன விருகம்பாக்கம் ஹோட்டலாகட்டும், திருநெல்வேலி விருந்தாகட்டும், பெரிய எழுத்தாளர், ஆரம்ப எழுத்தாளராகட்டும் அவர்களின் மனதை அறிந்து, அதை எழுத்தில் தந்து நம்மையும் அங்கே பயணிக்க வைத்துவிடுகிறார். முதலில் இவர் தன் மனதை திறந்து வைத்திருக்கிறார் என்பதையே இவ்வனுபவக் கட்டுரைகள் உணர்த்துகின்றன. எழுத்தில் நெருடல் இல்லாத நகைச்சுவை இயல்பாய் வந்துவிட்டாலே எழுத்துக்கு ரசிகர்கள் பெருக்கம் உருவாகிவிடும். சுகாவுக்கு […]

Read more

ஆயிரம் தெய்வங்கள்

ஆயிரம் தெய்வங்கள், ஆர்.எஸ்.நாராயணன், யூனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், பக். 136, விலை 100ரூ, ஒரே தெய்வக் கோட்பாட்டைக் கொண்ட மற்ற மதங்களில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைவிட, ஆயிரம் தெய்வங்களைக் கும்பிடும் இந்தியாவில் – இந்து மதத்தில் வன்மை குறைவுதான். அதனால்தான் இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்து நிற்கிறது என்பதை ஒப்பீட்டு ஆய்வின் மூலம் விளக்கும் நூல். மதத்தையும் பக்தியையும் வித்தியாசமான கோணத்தில் அளவிட்டுள்ளார் இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ். நாராயணன். நன்றி: குமுதம், 25/1/2017.

Read more

மகாபாரதத்தில் வரமும் சாபமும்

மகாபாரதத்தில் வரமும் சாபமும், இ.எஸ். லலிதாமதி, கலைஞன் பதிப்பகம், பக். 176, விலை 165ரூ. மகாபாரத பாத்திரங்களை நம் வாழ்வில் நடக்கும் நன்மை தீமை, நட்பு துரோகம் என அனைத்து செயல்களுக்கும் உதாரணம் காட்ட முடியும். அந்த வகையில் மகாபாரதத்தில் உள்ள சில பாத்திரங்கள் – யயாதி முதல் விஸ்வாமித்திரர் வரை – பெற்ற வரங்களையும் சாபங்களையும் எளிய நடையில் கதைபோல் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர். ஏன் சாபம்? எதற்காக சாபம்? என்பதன் விளக்கம் படிக்கும் மனிதர்களுக்கு ஒரு படிப்பினையைத் தந்து நீதியை போதிக்க் உதவும். […]

Read more

டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம்

டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம், சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், பக். 397, விலை 600ரூ. டாக்டர் என். ரங்கபாஷ்யம் என்கிற டாக்டர் என்.ஆரின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்ல, மருத்துவத்துறையின் வளர்ச்சியையும் இந்நூலின் மூலம் அறிந்து கொள்ள முடியம். தந்தையைப் போல் தானும் மருத்துவராகி, சிரமப்படக் கூடாது என்று நினைத்து விமானியாக விருப்பப்பட்டவர் ரங்கபாஷ்யம். ஆனால் ரமணரின் ஆலோசனைப்படி மருத்துவம் படிக்கச் சென்றார். அதன் விளைவு, இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை என்ற துறையை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடங்கினார். இந்தப் பிரிவை […]

Read more

திரைக்கதை

திரைக்கதை (விரிவாக்கப் பதிப்பு), தர்மா, ரம்யா பதிப்பகம், பக். 320, விலை 200ரூ. கன்னடத் திரையுலகில் நீண்டகால அனுபவம் உள்ள ஒரு தயாரிப்பாளரால் தமிழில் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது இந்த நூல். “நம்மவள்’‘ என்ற கதையை எழுதி, அதை முழுத் திரைக்கதையாக்கித் தந்திருக்கும் முயற்சி புதியது; பாராட்டுக்குரியது. இன்று செல்லிடப்பேசி கேமராவில் குறும்படம் எடுத்தே பலரும் திரைக்கலையைக் கற்றுக் கொள்கிறார்கள். தனியார் திரைப்படக் கல்லூரிகளும் ஏராளம் உள்ளன. திரைக்கதை எழுதுவது எப்படி என்பதை அனுபவப்பூர்வமாக விவரிக்கும் இந்த நூல், மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பயன்படும். ஒரு […]

Read more

வெளிச்ச விதைகள்

வெளிச்ச விதைகள், கவிஞர் இரா. இரவி, வானதி பதிப்பகம், பக். 190, விலை 120ரூ. ‘உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் பெற்ற அம்மாவிற்கு, நிகர் ஏதுமில்லை’ என்று தாயையும் உலகை உணர்த்தும் ஆசான் என்று தந்தையையும் போற்றும் கவிஞர் இரவியின் கவிதைகள் போற்றுதலுக்குரியவை. பெண்மை, தமிழர், தமிழ்மொழி, இயற்கை, தன்னம்பிக்கை, சமூக அவலங்கள் என்று படிப்போர் மனதில் கவிதை கொண்டு உழவிட்டு வெளிச்ச விதைகளை கவிதைதோறும் விதைத்துப் போகிறார். -இரா. மணிகண்டன், நன்றி: குமுதம், 25/1/2017.

Read more
1 2 3 4 5 9