சீனா ஒரு முடிவுறாத போர்

சீனா ஒரு முடிவுறாத போர், சீனா கலாச்சாரப் புரட்சி பற்றிய பதிவுகள், வில்லியம் ஹின்டன், தமிழில் கி. ரமேஷ், அலைகள் வெளியீட்டகம், பக். 212, விலை 150ரூ. சிகாகோவில் பிறந்த வில்லியம் ஹின்டன், ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணியாற்றியவர். அவர் சீனாவில் தங்கி இருந்தபோது நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புரட்சிக்குப் பின் சீனாவில் தனியுடைமை ஒழிக்கப்பட்டது. மக்களால் மக்களுக்கான ஆட்சி நடத்தப்பட்டது. எனினும் காலப்போக்கில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் அதிகார வர்க்கமாக உருமாறினர்கள். கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒவ்வாத பல நிகழ்வுகள் […]

Read more

கோவாவில் மதமாற்றம் துயரக் கதை

கோவாவில் மதமாற்றம் துயரக் கதை, மலையாள மூலம் ரங்கஹரி, தமிழில் அலமேலு கிருஷ்ணன், விஜயபாரதம் பதிப்பகம், பக். 200, விலை 120ரூ. உலக வரலாறு நெடுகிலும் கட்டாய மதமாற்றம் செய்யும்போது மானுடம் அடைந்த துயரங்கள் அளவிட முடியாதவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் “விச் ஹன்ட்’ எனப்படும் சூனியக்காரன் வேட்டை, “இன்குவிசிஷன்’‘ எனப்படும் சமயக்குற்ற விசாரணை ஆகிய கொடிய நிகழ்வுகளால், போர்ச்சுகலைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார்கள் கோவா மக்களை மிரட்டி கிறிஸ்தவர்களாக மாற்றினர். அப்போது நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளின் நாடு பிடிக்கும் […]

Read more

நின்று ஒளிரும் சுடர்கள்

நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 184, விலை 130ரூ. “தமிழ்த் திரையுலகில் நின்று ஒளிவீசிய தனிச்சுடர் எஸ்.வி.ரங்காராவ்; “ஏழை படும் பாடு‘’ படத்தில் கதாநாயகனாக, “கப்பலோட்டிய தமிழன்’‘ படத்தில் சிவாஜியின் தந்தையாக, மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகராக மிளிர்ந்த சித்தூர் வி.நாகையா; நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என எல்லா வேடத்திலும் புத்தொளி பாய்ச்சிய டி.எஸ்.பாலையா; 18வயதிலேயே 60வயது முதியவராக நடித்துப் புகழ்பெற்ற வி.கே.ராமசாமி; பாரதியார் வேடத்தில் நடித்த எஸ்.வி.சுப்பையா; வாய்ஸ் மாடுலேஷனில் வாத்தியாராகத் திகழ்ந்த எம்.ஆர்.ராதா; இயல்பான நடிப்பில் […]

Read more

சிவபெருமானுடன் ஒரு திருநடனம்

சிவபெருமானுடன் ஒரு திருநடனம், (ஆன்மீக உலகை வழிநடத்தும் இந்துமதம்), சத்குரு சிவாய் சுப்பிரமுனியசுவாமி, தமிழில் கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாசஸ், கண்ணதாசன் பதிப்பகம், பக். 648, விலை 425ரூ. இறைவனான நடராசப் பெருமான், ஐந்தெழுத்தில் (நமசிவாய) நடனமாடியே ஐந்தொழில்களையும் நடத்துகிறார் என்பது சைவ சித்தாந்தம் கூறும் உண்மை. உலகத் தோற்றத்திற்கு அவரது திருநடனமே மூலகாரணம். “ஞானியரும்,யோகியரும், முனிவரும் கடவுளை விவரிக்க இறைவனின் நடனத்தினையே தெரிவு செய்து கூறியதில் சிறந்த காரணங்கள் உள்ளன. நாம் இருக்கும் இருப்பின் அடிப்படையே, சலனம்தான் – அதாவது மூவ்மென்ட் . இந்த […]

Read more

நட்சத்திரங்கள் பறிப்போம்

நட்சத்திரங்கள் பறிப்போம், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கலைஞன் பதிப்பகம், பக்.184, விலை ரூ.175. நட்சத்திரங்களைப் பறிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் நூல். பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இருந்தாலும் எல்லாம் ஒரே குரலாகவே ஒலிக்கின்றன. “நம்பிக்கை மிக்க சிந்தனையோடு வாழ்வது எளிமையாக இருந்தாலும், உலகில் ஐந்து சதவிகித மக்களே நம்பிக்கை மிக்க சிந்தனையாளராக வாழ்கிறார்கள். அந்த ஐந்து சதவிகித மக்கள் கடினமாக உழைத்து அதிகமாகச் சம்பாதித்து உலகின் ஐம்பது சதவிகிதத்தை நிர்வாகம் செய்கிறார்கள்‘’ எனக் கூறும் நூலாசிரியர், ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் கடினமாக உழைத்து அதிகமாகச் சம்பாதித்து […]

Read more

குறிச்சி

குறிச்சி, காமராசு, காவ்யா,  பக். 244, விலை ரூ. 240. வரலாறு என்றாலே ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கியதுதான். நம்மைச் சுற்றி உள்ள இடங்களின் பின்னணியிலும் வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்த தகவல் பெட்டகமாக இந்த நூல் வெளியாகி உள்ளது. அத்ரி மலையில் உருவான கங்கை, நெல்லையப்பர் கோயிலில் உள்ள 1000 ஆண்டுகள் பழைமையான மணி, மணல் மூடிய மணல் மாதா ஆலயம், திருப்புடைமருதூர் கோயிலில் உள்ள மரச்சிற்பங்கள், பொதிகை மலையில் சித்தர்கள் பயன்படுத்திய […]

Read more

ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் உரைக்கோவை

ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் உரைக்கோவை, தொகுப்பாசிரியர் க.ஹரி தியாகராசன், வானதிபதிப்பகம், பக்.296, விலை ரூ.200. பண்பாட்டு நகரமாம் மதுரையில் கல்விச் சேவையுடன் தமிழ் தொண்டாற்றிய கருமுத்து தியாகராசரின் சொற்பொழிவுகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தியாகராசர் வெவ்வேறு விழாக்களில் ஆற்றிய உரைகளை கல்வி, இலக்கியம், ஆலை, மாநாடுகள், சங்கங்கள், பொது நிகழ்வுகள், வானொலி மற்றும் மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதங்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 37 கட்டுரைகளாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தேவகோட்டை தமிழிசைப் பள்ளியில் பேசிய தியாகராசர், இசை என்றால் என்ன? அதன் வளர்ச்சி, […]

Read more

குஜிலிப் பனுவல்கள்

குஜிலிப் பனுவல்கள், க.விஜயராஜ், நறுமுகை,  பக்.238, விலை 180ரூ. “குஜிலிக் கடை’‘ – அந்தி நேரக் கடை என்பது, பழைய சென்னைப் பட்டணத்தில் இருந்த கடைவீதியைக் குறிப்பிடுவது. வெகுஜன ரசனைக்கு ஏற்ப தயாரான புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் அங்கு கிடைக்கும். இந்தப் புத்தகம் அப்படிப்பட்ட புத்தகங்களைப் பற்றியதாகும். இவற்றில் பலவற்றின்நோக்கம் சிற்றின்பக் கிளர்ச்சி. ஆசிரியரின் தகவல் அடுக்குகளில் “தலைகாணி மந்திரம்’‘, “குடியர் ஆனந்தப்பதமும் கெஞ்சாவின் ஆனந்தக் களிப்பும்‘’, “புகையிலையின் வெண்பாவும்’‘ ஏன் காலம் கடந்து நிற்கவில்லை என்பதைப் பெயர்களைப் பார்த்தே முடிவு செய்து கொள்ளலாம். […]

Read more

பிரயாணம்

பிரயாணம், பாவண்ணன், காலச்சுவடு,  பக்.216, விலை ரூ.190. பாவண்ணன் 1984இல் இருந்து எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சிறுகதைகளின் தொகுப்பு. நம்மைச் சுற்றி வாழ்கிற பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை, மன உணர்வுகளை மிகவும் அற்புதமாகச் சித்திரிக்கும் சிறுகதைகள் ஒவ்வொன்றும் நமக்குக் காட்டும் உலகு வித்தியாசமானது. நாம் அறிந்து கொள்ள வேண்டியது. வயதான காலத்தில் எந்த வருமானமும் இல்லாமல், எந்த ஆதரவும் இல்லாமல், ரெஜிஸ்டர் ஆபிஸில் யாருக்காவது சாட்சிக் கையெழுத்துப் போட்டு அதில் எப்போதாவது கிடைக்கும் சொற்பக் காசில் தன்னுடைய, தன் மனைவியினுடைய பசியைப் போக்கும் […]

Read more

ஆண்ட்ராய்டின் கதை

ஆண்ட்ராய்டின் கதை, ஷான், யாவரும் பப்ளிஷர்ஸ், விலை 70ரூ. உலகின் திரைக்குப் பின்னால் நடக்கும் பல விஷயங்கள், கற்பனைக்கும் எட்டாத சுவாரசியம் நிறைந்தவை. தொழில் நுட்பம், எப்படியெல்லாம் உலகத்தை மாற்றியது என்ற சமூகப் புரிதல், ‘ஆண்ட்ராய்டின் கதை’ நூலின் மைய நீரோட்டம். இன்றைய சூழலில், 78 சதவீதம் பயனாளர்கள் கையில், ஏதோ ஒரு வடிவத்தில் உலாவும், ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பத்தின் தோற்றமும், வளர்ச்சியும், கூடவே மனித வாழ்வின், ‘டெக்’ பரிணாமச் சிதைவையும் பேசுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 7/1/2017.

Read more
1 6 7 8 9