தெருக்கூத்து பனுவலும் நிகழ்த்தலும்,

தெருக்கூத்து பனுவலும் நிகழ்த்தலும், கோ. பழனி, சென்னை பல்கலைக்கழகம் வெளியீடு, விலை 320ரூ. இந்நூல் தெருக்கூத்தின் பல்வேறு நுட்பங்களை விரிவாக எடுத்துரைக்கிறது. நவீன நாடகத்திற்கு, தெருக்கூத்து வழங்கிய வழிமுறை தொழில்நுட்பம் மற்றும் தெருக்கூத்து கலைஞர்களை வழி நடத்துபவர் யார், அவர்கள் எந்தெந்த வகைகளில் ஏமாற்றப்படுகின்றனர் என்பதை இந்நூல் ஆராய்கிறது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

வழிகாட்டும் கதைகள்

வழிகாட்டும் கதைகள், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெயின் பேங்க் வெளியீடு, பக். 224, விலை 150ரூ. சிறந்த தொழிலதிபரான இந்நூலாசிரியர் வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல் பற்றிய நூல்கள், மகா கவி பாரதியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களைப் பற்றிய நூல்கள் என நற்சிந்தனைகளைத் தூண்டும் 50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார். அந்த வகையில் இந்நூல் இன்றைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் 100 சிறுகதைகளைத் தொகுத்துள்ளார். குறிப்பாக, கடவுள் நம்பிக்கை, முயற்சி, புத்திசாலித்தனம், கருணை, மன்னிப்பு, ஞானம்… என்று நற்சிந்தனைகளைத் தூண்டும் சிறு […]

Read more

வாசிப்பு வசப்படும்

வாசிப்பு வசப்படும், ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 16, விலை 10ரூ. எந்த ஒரு கலையையும் கற்க, அறிந்து கொள்ள, நாம் செலவிட வேண்டிய மூன்று அடிப்படை விஷயங்கள், நேரம், உடல் நலன், மனரீதியான முயற்சி. புத்தக வாசிப்பிற்கு, ஆழமான மனவிருப்பம் முக்கியம். இன்னும் கொஞ்சம் கூடுதலாக வாசிப்போம் என்ற ஆசையை தூண்டும் புத்தகம் இது. நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

தொட்ட அலை தொடாத அலை

தொட்ட அலை தொடாத அலை, எஸ். சங்கரநாராயணன், நிவேதிதா பதிப்பகம், பக். 288, விலை 220ரூ. திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாம்சங்களை அழகாக விவரிக்கிறது. அழகான எழுத்து நடையில் நாவலில் வரும் மனிதர்களை காலத்தை ஒட்டிச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் சொற்றொடர்கள் பொங்கிப் பிரகாசிக்கின்றன என்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள் என்பது நிச்சயம். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

காதல் வழியும் கோப்பை

காதல் வழியும் கோப்பை, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், விலை 120ரூ. அன்றாட வாழ்வின் அபத்தங்களையும், விசித்திரங்களையும் பேசுகின்றன, யுவகிருஷ்ணாவின் கதைகள். மனிதர்கள் தங்கள் ஆசைகளுக்காகவும், கனவுகளுக்காவும், உருவாக்கிகொள்ளும் வழிமுறைகளை அங்கதத்துடன், சுவாரஸ்யத்துடனும் சொல்கின்றன இந்தக் கதைகள். நன்றி: தினமலர், 13/1/2017.

Read more

மகாசக்தி மனிதர்கள்

மகாசக்தி மனிதர்கள், என். கணேசன், தினத்தந்தி பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. நம் இந்திய நாட்டு யோகிகளும், சித்தர்களும் கற்பனைக்கும் எட்டாத அபூர்வ சக்திகளைப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். நம்மை அவர்கள்பால் வசீகரிப்பது அவர்கள் செய்து காட்டிய அற்புதங்கள் தான். இந்த மகாசக்தி படைத்த மனிதர்களில் ஏற்கனவே மிகவும் அதிகமாக அறியப்பட்ட பெயர்களோடு, பொதுவில் அதிகம் அறியப்படாத யோகிகள் பலர் புரிந்த அற்புதச் செயல்களை மிக விரிவாக இந்த நூலில் எழுதியிருக்கிறார் ஆசிரியர். அவற்றைப் படிக்கும்போது, நமக்கு ஏற்படும் பிரமிப்பும், ஆச்சரியமும் அளவிட முடியாதவை. […]

Read more

இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்

,இணையக் குற்றங்களும், இணையவெளிச் சட்டங்களும், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ் விலை 225ரூ. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித சமூகத்திற்கு கிடைத்த அளப்பரிய வசதி இணையம். ஆனால், வசதி, வளர்ச்சியுடன் சேர்ந்து, தவறுகளும், பிரச்னைகளும் எழுவது வழக்கம். அந்த வகையில், இணையக் குற்றங்கள் தற்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அதை கட்டுப்படுத்த, நவீன சட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இணையம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான குற்றங்களும், அதை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் […]

Read more

மாணவர்களுக்குரிய பொதுக் கட்டுரைகள்,

மாணவர்களுக்குரிய பொதுக் கட்டுரைகள், புலவர் நன்னன், ஏகம் பதிப்பகம், பக். 200+192, விலை 80+75ரூ. தமிழறிஞர் மா.நன்னன், பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளும், பல மேடைகளில் பேசிய பேச்சுக்களும் இவ்விரண்டு தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியரின் நுண்ணிய அறிவுத் திறனை ஒவ்வொரு கட்டுரையும் இயம்புகின்றன. இரு நூல்களிலும் முறையே, 25 + 20 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் நூலில், ‘பெண் தன் உணர்வை ஆணைப் போல் வெளிப்படுத்தாமையே அதன் சுவையைக் கூட்டும்போலும்’ என்றும் (பக்.21), ‘உண்மையறிவே மிகும்’ என்ற கட்டுரையில், வள்ளுவரின், ‘தொட்டனைத் […]

Read more

தில்லை என்னும் திருத்தலம்

தில்லை என்னும் திருத்தலம், முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம், முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய இந்த இரு நூல்களில் முதலாவது முற்றிலும் ஆங்கிலமாகும். எம்பெருமான் நடம்புரிந்த பெருமைகளை பல்வேறு பெரும் மகான்கள் பாடியும், எழுதியும் வைத்திருக்கின்றனர். திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை அத்வைத நெறிக்கு ஆதாரமான இடம். சைவநெறியைக் காட்டும் கலங்கரை விளக்கம். புராணங்கள், நாயன்மார்கள் பாடல்கள் உட்பட பல, சிவனை வழிபட்டால், சிந்தை தெளிய வழி உண்டு என்கின்றன. ஆகவே, மங்கலத்தை நமக்கு தருபவன் சிவன் என்ற கோட்பாடுகளை ஆசிரியர் இதில் விளக்குகிறார். […]

Read more

மிஷன் தெரு

மிஷன் தெரு, தஞ்சை பிரகாஷ், வாசகசாலை, பக். 112, விலை 120ரூ. அன்றைய ஒன்றிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு, கிறிஸ்தவ கள்ளர் குடும்பம் ஒன்றில், ஒற்றைப் பெண்ணாகப் பிறந்த எஸ்தர் என்கிற அழகும் அறிவும் நிரம்பிய ஒரு பெண்ணின் 33 வருட போராட்ட வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றமே இந்நாவல். அஞ்சாமை, ஆங்கிலப் புலமை, சங்கீத ஞானம், உலகம் முழுவதையும் விரும்பும் பரந்த நோக்கம் – இவையெல்லாம் கொண்டிருந்த எஸ்தர், பல்வேறு தரப்பு ஆண்களாலும் எப்படியெல்லாம் வீழ்த்தப்பட்டாள் என்பதை ரத்தமும் சதையுமாக […]

Read more
1 5 6 7 8 9