தக்கர் கொள்ளையர்கள்

தக்கர் கொள்ளையர்கள், இரா. வரதராசன், கிழக்கு பதிப்பகம், பக்.224, விலை 200ரூ. வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்நூலாசிரியர், இத்துறை தொடர்பான மிகப் பழைமையான ஆவணங்களைத் தேடி நாடு முழுவதும் பயணம் செய்து, பலவகையான அரிய தகவல்களைத் திரட்டியுள்ளார். அந்த வகையில் தக்கர் கொள்ளையர்களைப் பற்றிய தனியான தொகுப்பே இந்நூல். பாரசீகத்தில் முஸ்லிம் மதத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு இந்தியா வந்த நாடோடி பழங்குடியினரும், இங்குள்ள ஹிந்து பழங்குடியினரும் இணைந்து உருவாக்கியதே இந்த தக்கர் குற்றச் செயல்பாடுகள். இவர்கள் சுமார் 8000 ஆண்டுகளாக இந்தியாவின் வட […]

Read more

முதுமை ஒரு முழுநிலா

முதுமை ஒரு முழுநிலா (வினா விடையில் முதியோர் நல மருத்துவம்), டாக்டர் வ.செ.நடராசன், வானதி பதிப்பகம், பக்.223, விலைரூ.150. முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் பற்றி கேள்வி-பதில் வடிவில் எழுதப்பட்டுள்ள சிறப்பான நூல் இது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் 35 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறையாக முதியோர் நல மருத்துவத் துறையை ஏற்படுத்தியவர் டாக்டர் வ.செ.நடராசன். முதுமையை வெற்றிகரமாக எதிர்கொண்டு தரமான வாழ்க்கையை வாழ்வதற்கு முதுமை, உடல் நலம், மூளை நரம்பு நோய்கள், மூட்டு-எலும்பு தொல்லைகள், உடற்பயிற்சி, மன நலம், உணவு முறைகள், […]

Read more

எமகாதக எத்தர்கள்

எமகாதக எத்தர்கள்,  ஹரி கிருஷ்ணன்,  கிழக்கு பதிப்பகம், பக்.152 , விலை ரூ.140. பிறரை ஏமாற்றுவதற்கும் திறமை வேண்டும். இந்த நூலில் அப்படிப்பட்ட திறமைசாலிகளின் சாகசக் குற்றச் செயல்கள் விறுவிறுப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்ததன் நூல் வடிவம் இது. பிரான்சின் ஈபில் டவரை விலை பேசி விற்பது, கள்ளநோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விடுவது போன்ற சாகசமான குற்றச் செயல்களைச் செய்த விக்டர் லுஸ்டிக் என்பவனைப் பற்றிய தகவல்கள் அதிகம். அதுபோன்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளிடம் புரூக்ளின் பாலத்தை […]

Read more

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும்

தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும், டி.வி. ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தகநிலையம், விலை 100ரூ. தமிழ் நாடக மேடை முதன் முதலில் தோன்றியதிலிருந்து இன்று வரை கண்டிருக்கும் மாற்றம், ஏற்றம் என்று அத்தனையையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். கடைச்சங்க காலம் முதலே நாடகக் கலை இருந்தது என்பது முதல், தமிழ் நாடகக் கலைக்கு வித்திட்ட சி.கன்னையா, சங்கரதாஸ் சுவாமிகள், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, பம்மல் சம்பந்தம் முதலியார் என்று நாடகபிதாமகர்கள் பற்றிய தகவல்கள், அக்காலத்திய பிரபல நாடகங்கள், தற்காலத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நாடகக்குழுக்கள், அவர்களின் சிறந்த நாடகங்கள் […]

Read more

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும்

திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும், முனைவர் ப. கமலக்கண்ணன், காவ்யா, விலை 150ரூ. திராவிட இயக்கம் சமூக நீதி, இட ஒதுக்கீடு, தமிழ்மொழி ஆகியவற்றின் மேம்பாட்டுக்காகப் பல்வேறு களப் போராட்டங்களை முன்னின்று நடத்தியது. திராவிட மொழியியலின் தந்தை என அழைக்கப்படும் கால்டுவெல் ‘தமிழ் மொழி தனித்து இயங்கும் வல்லமைமிக்கது’ என்று முதன் முதலாகக் கூறினார். தமிழில் பிற மொழிக் கலப்புக்கு எதிராக மறைமலையடிகள், திரு.வி.க. தேவநேயப் பாவாணர் போன்ற மூத்த தமிழறிஞர்கள் தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்தனர். திராவிட இயக்கம் மற்றும் தனித்தமிழ் இயக்க வரலாற்றை […]

Read more

அவன் தாள் வணங்கி… (அறுபத்து மூவர் வரலாறு)

அவன் தாள் வணங்கி… (அறுபத்து மூவர் வரலாறு), செ. சீனிவாசன், கற்பகம் புத்தகாலயம், பக். 206, விலை 150ரூ. பழைமை இலக்கியம் (புராணம்) புதுமைப் பொலிவு பெற்றுள்ளது. பெரிய புராணம் எனப் போற்றப்படும் திருத்தொண்டர் புராணத்தை, பலர், அறுபத்து மூவர் கதைகளாக உரைநடையில் எழுதியுள்ளனர். ஆனால், இந்நூலில், ஒவ்வொரு நாயன்மார் பற்றியும் சுருக்கமாக, உரைநடையில், 10 வரியளவில் ஒரு குறிப்பை முதலில் வைத்து, அவ்வடியார் வரலாற்றை விரிவாக உரைப்பா (புதுக்கவிதை) பாங்கில், சிறிய சொற்களால் சீரிய கருத்துகளைச் செதுக்கியுள்ளார். இவர் தொழில் முறைக் கவிஞர் […]

Read more

63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள், ஆலயப் பிரியர் சிவ. சுந்தரம், சுந்தரா பதிப்பகம், பக். 496, விலை 300ரூ. சிவநெறி பரப்பிய, 63 நாயன்மார்களின் பணி மிகப் பெரிய சாதனை. சுந்தரமூர்த்தி நாயனார் சுருக்கமாக கூறியதை, சேக்கிழார் சுவாமிகள் ‘திருத்தொண்டர் புராணம்’ என்று விரிவாகச் சொன்னார். அக்காவியம் பின்னர் பெரியபுராணம் என வழங்குகிறது. அப்புராணச் செய்யுள்களுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க., கோவை சி.கே.சி., போன்றோர் விரிவுரை எழுதினர். அவற்றை எல்லாம் இக்கணினியுலகில் படிக்க வாய்ப்பில்லாதோர், மிக எளிய தமிழில் படிக்கத் தக்க முறையில் இந்நூல் வெளிவந்துள்ளது. சிவனடியார்களுக்குத் […]

Read more

தமிழ் பண்பாட்டு அடையாளங்கள்

தமிழ் பண்பாட்டு அடையாளங்கள், ந. முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 95, விலை 80ரூ. பண்பாட்டுத் தடயங்களே மொழியின், அது பேசும் இனத்தின் முன்னேற்றப் பதிவுகள். சம கால தமிழ் மண்ணின் அடையாளங்களை எட்டு தலைப்புகளில் ஆசிரியர் எடுத்து எழுதியுள்ளார். தன் வாழ்வியல் அனுபவங்களை சமூக சிந்தனைகள் கலந்து, கருத்தரங்க நோக்கிலும் இதழ்களிலும், எழுதியதன் தொகுப்பு இது. ஆசிரியரின் அனுபவ முதிர்ச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவாக இனிக்கிறது. வெகுசனப் பண்பாட்டில் மருந்து கடை விளம்பரங்கள், புத்தகமோ புத்தகம், பதிப்பக அரசியல் பின்புலம், தமிழ்ப் […]

Read more

ஜிப்ஸியின் துயர நடனம்

ஜிப்ஸியின் துயர நடனம், யமுனா ராஜேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 325ரூ. சென்ற நூற்றாண்டின் மகத்தான மார்க்சிய கலை ஆளுமைகள் குறித்த ஒரு நினைவுகூரலாகவே யமுனா ராஜேந்திரனின் இந்நூல் உள்ளது. ஆளுமைகள், பண்பாட்டு வரலாறு, அரசியல், பயணக் கட்டுரைகள் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது இந்தப் புத்தகம். ஆளுமைகள் பகுதி யில் ரோஸா லக்ஸம் பர்க் பற்றிய கட்டுரை சிறப்பானது. போலந்திலிருந்து வந்த யூதப் பெண்மணி இவள். ஜெர்மானிய ஒடுக்குமுறையாளர்களின் கட்டளையின்படி படுகொலை செய்யப்பட்ட ஜெர்மானிய தொழிலாளர்களுக்காகப் போராடி ய வீரப் […]

Read more

கழகத்தின் கதை (அ.தி.மு.க. தொடக்கம் முதல் இன்று வரை)

கழகத்தின் கதை (அ.தி.மு.க. தொடக்கம் முதல் இன்று வரை), மருததுவர் இராமதாஸ், புதிய அரசியல் பதிப்பகம், பக். 288. ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத நோக்குடன் தொடங்கிய அ.தி.மு.க., இன்று ஊழல் சுனாமியாக மாறியிருக்கிறது என்பதைக் காட்டும் நூல். இதை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் எழுதி யிருக்கிறார். அவருடைய கருத்தில் அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டுமே கெட்டவர்கள் அக்கட்சியின் தொண்டர்கள் அனைவரும் நல்லவர்கள் என்ற பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது. தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரு கட்சி களையும் ஆதரித்த பா.ம.க., நிறுவனர் […]

Read more
1 2 3 4 7