நீலகேசி

நீலகேசி, கயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், பக் 312, விலை 190ரூ. நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். பாண்டியர் உபசேனாதிபதி இளைய நம்பியும் யவனப் பெண் ஹீராவும் அறிமுகமாகும் முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே நாவல் சூடு பிடித்து விடுகிறது! சின்னச் சின்ன அத்தியாயங்களில் வேக, வேகமாக நகர்ந்து கதை முடியும்போது சிறந்த ஒரு சரித்திர நாவலைப் படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம். அக்காலத்தில் சேர மண்ணை சீரும் சிறப்புமாக ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் காலத்தில் எரித்திரியக் […]

Read more

தமிழ்த்தென்றலின் சமூக நோக்கு

தமிழ்த்தென்றலின் சமூக நோக்கு, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், என் வெள்ளிமயில், விலை 145ரூ. தமிழ்த் தென்றல் என்ற உடனேயே நினைவிற்கு வருபவர் திரு.வி.கல்யாண சுந்தரனார். முதல் தலைப்பே நூலிற்கும் பெயராய் அமைந்துள்ளது. மொத்தம், ஏழு தலைப்புகளில் கட்டுரைகளாகவும், நூல் விமர்சனங்களாக, பதினாறு கட்டுரைகளும் விளக்கப்பெறுகின்றன. திரு.வி.க.,வின் சிந்தனைகள், அவரது வாழ்வில் நிகழ்ந்த புரட்சிகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க., எந்த ஒரு மொழியையும் வெறுப்பவர் அல்லர். அவரே, ஆங்கிலம், வடமொழி, பாலி முதலிய மொழிகளை அறிந்திருந்தார் (பக். 26). தாய் மொழிப்புலமை பெற்ற பின் […]

Read more

தமிழகத்தில் எமதர்மன் வழிபாடு

தமிழகத்தில் எமதர்மன் வழிபாடு, மு.செல்லன், அன்னம், பக்.153, விலை ரூ.150. உயிரைப் படைப்பதற்கு ஒரு கடவுள் இருந்தால், உயிரை எடுப்பதற்கும் ஒருவர் வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்தான் எமன். மேலும், எமன் பற்றிய தொன்மைக் கதைகள், கர்ணபரம்பரைக் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், ரிக் வேதம், அதர்வண வேதம், விஷ்ணுதர்மோத்ர புராணம், மகாபாரதம், கருட புராணம், பெளத்தம், கடோபநிஷத் முதலிய பலவற்றிலும் எமன் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. எமன் உலகத்தை இயக்குபவன் என்றும், சூரியக் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது. சீனர்கள் எமனை ‘பின்இன்&39’ என்கின்றனர். அவர்தான் […]

Read more

மனம் மயக்கும் கலை – ஹிப்னாடிசம்

மனம் மயக்கும் கலை – ஹிப்னாடிசம், ஹிப்னோ ராஜராஜன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், பக்.368, விலை ரூ.380. ஹிப்னாடிசம் என்றால் பிறரைத் தன்வசப்படுத்தும் கலை என்பதை மட்டுமே பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அது நம் மனத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் கலை என்பதோடு, தியானம், மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சி, கண்களுக்குச் சக்தியூட்டுதல், யோக நித்திரை போன்றவற்றைச் சார்ந்த பயிற்சியாகவும் இக்கலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். ஹிப்னாடிசத்தின் வரலாறு, அதன் முன்னோடிகள் பற்றி விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஹிப்னாடிசத்தின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை […]

Read more

நாட்டுப்புற இலக்கிய வரலாறு

நாட்டுப்புற இலக்கிய வரலாறு, பேராசிரியர் க. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 240ரூ. நாட்டுப்புற இலக்கியம் பற்றிய தகவல்களை விளக்கமாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் பேராசிரியர் க. சண்முகசுந்தரம். நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

சித்தர்கள் கூறும் இரகசியங்கள்

சித்தர்கள் கூறும் இரகசியங்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.கற்பூரசுந்தரபாண்டியன், கல்வியாளர் சாந்தா பாண்டியன், ஆர்.கே.எஸ். பதிப்பகம், விலை 200ரூ. சித்தர்களின் தத்துவங்கள், நெறி, பாதை போன்றவற்றைப் பற்றி இந்த நூல் விளக்குகிறது. அதேபோல் சித்தர் நெறிக்கு அடிப்படையான யோகப் பயிற்சி முறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது. சித்தர்கள் அருளிய நோய்தீர்க்கும் மருந்துகள் பற்றியும், தமிழகத்தில் சித்தர்கள் ஜீவசமாதியான இடங்களைப் பற்றிய பட்டியலும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் (நினைவு மலர்)

விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் (நினைவு மலர்),  சேகர் பதிப்பகம், தொகுப்பாசிரியர்: ம.அய்யாசாமி, பக். 236, விலை ரூ.150. பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, தங்கள் பெயருக்கு முன்பு ஊரின் பெயரை சேர்த்துக்கொண்டு புகழ் படைத்தவர்கள் வரிசையில் கவிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரமும் ஒருவர். தெ.பொ.மீ., மு.வ., கா.அப்பாத்துரை, கவிஞர் கண்ணதாசன், தோழர் பா.ஜீவானந்தம், கவிஞர் சுரதா, கி.வா.ஜ. முதலியவர்களுடன் நெருங்கிப் பழகியவர். கல்வெட்டு, சிற்பம், கட்டடம், ஓவியம், கோட்டை, கோயில் முதலியன குறித்து பல நூல்களையும் எழுதியுள்ளார். துணை இயக்குநராகவும், மாலையிட்ட மங்கை என்ற […]

Read more

ஆகாயச் சுரங்கம்

ஆகாயச் சுரங்கம், சி.ராமலிங்கம், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. விண்கல் முதல் விண்கலம் வரை, கோள்கள் முதல் செயற்கைக் கோள்கள் வரை இயற்கை, செயற்கை என்று எத்தனையோ அற்புதங்களைச் சுமந்துகொண்டு பரந்து விரிந்து கிடக்கிறது வானம். உயர்ந்து அதனை உற்றுப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடத்தை அது கற்றுத் தருகிறது. தோண்டத் தோண்ட வளரும் சுரங்கமாக தொலைவில் இருக்கும் ஆகாயத்தை தொட்டுவிடும் தூரத்தில் கொண்டுவந்து காட்டியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/8/2017.

Read more

மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள்

மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. பெண்களின் பங்களிப்பு வரலாற்றில் காலங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. ஆனால், இன்றைக்குப் பல துறைகளிலும் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், புற்றுநோய் தாக்குதலிலிருந்து உத்வேகத்துடன் மீண்டெழுந்த பேராசிரியர் மோகனா, இதுவரை பரவலான கவனிப்பைப் பெறாமல் போன 10 பெண் விஞ்ஞானிகளைப் பற்றி இந்நூலின் வழியே அறியத்தருகிறார். பழங்காலப் பெண் கணிதவியலாளர்கள் தொடங்கி, மேரி ஆன்னிங், சாவித்திரிபாய் புலே, கமலா சோகோனி உள்ளிட்ட ஆளுமைகளின் செயலூக்கம், வாசிக்கையில் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. […]

Read more

தமிழுக்கு ஆஸ்கார்

தமிழுக்கு ஆஸ்கார், வெ.மு.ஷாஜகான் கனி, மீனாட்சி புத்தக நிலையம், பக்.160, விலை ரூ.110. உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருது, ஆஸ்கார் விருது. 1929 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலப் படங்களுக்குத்தான் ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டது. 1947 முதல் ஆங்கிலம் அல்லாத அயல்மொழிப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை ஒரு தமிழ் திரைப்படம் கூட , ஓர் இந்திய மொழிப்படம் கூட ஆஸ்கார் விருது பெறவில்லை. இந்தியப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்றாலும், ஐந்து இந்தியர்கள் ஆஸ்கார் விருது […]

Read more
1 2 3 4 5 6 7