அருந்தவச் செல்வர் அரிராம் சேட்  சின்னராசு

அருந்தவச் செல்வர் அரிராம் சேட்  சின்னராசு, முத்தப்பா, யூகே மேக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.272,  விலை  ரூ.200. த.பி.சொக்கலால் ராம்சேட் பீடி நிறுவனத்தை நடத்திய த.பி.சொக்கலால் ராம்சேட்டின் வரலாறு இந்நூலின் முதல் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு அவருடைய மகன் அரிராம் சேட்டின் வரலாறு நூல் முழுக்க மிகச் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளது. அரிராம் சேட் சிறுவயதிலேயே கார்களின் மீது அளவுக்கதிகமான காதல் கொண்டிருந்தது, இளைஞனாக ஆன பிறகு பல மாடல்களில் பல நவீனமான கார்களை வாங்கிப் பயன்படுத்தியது, தன்னிடம் வேலை செய்பவர்கள், தன்னுடைய உறவினர்களுக்கு மட்டுமல்லாமல், எல்லாருக்கும் […]

Read more

கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள்

கம்பனிலிருந்து பாரதிதாசன் வரை சில பதிவுகள்,  ம.பெ.சீனிவாசன், மீனாட்சி புத்தகநிலையம், பக்.200, விலை ரூ.180; கம்பராமாயணம் தொடர்பான ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஏழாவது கட்டுரையான கம்பனும் பாரதிதாசனும் கட்டுரை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை பழமைச் சிமிழுக்குள் அடைக்கும் முயற்சி என்று ஐயப்படுகிறவர்களுக்கு விளக்கம் அளிக்கும் முயற்சியான பின்னுரை, எட்டாவது கட்டுரையாகத் தோன்றிவிட்டது. கம்பராமாயணம் இன்று வரை போற்றப்படுவதற்குக் காரணம் அதன் உலகியல் அடித்தளமே என்பதை விளக்கும் கம்பனில் உலகியல் கட்டுரை, கம்பராமாயணத்தில் கம்பர் குறிப்பிடுகிற சில பொருள்களை வைத்து, அவர் குறிப்பிடுவது திருமாலிருஞ்சோலை, […]

Read more

காலமெல்லாம் கண்ணதாசன்

காலமெல்லாம் கண்ணதாசன், ஆர்.சி.மதிராஜ், தமிழ் திசை பதிப்பகம், விலை 130ரூ. திரைப்படக் கவிஞர்கள் தாங்கள் படித்தவற்றையும் கேட்டவற்றையும் தங்கள் சிந்தனைக் கேற்ப பாடலாக வடித்தார்கள். அது நம் மூளையைத் தொட்டது. ஆனால் கண்ணதாசன் தம் அனுபவங்களைப் பாடலாக்கிக் கொடுத்தார். அது நம் இதயத்தைத் தொட்டது. வாழ்க்கைக்குப் பல படிப்பினைகளைக் கொடுத்தது. அதனால் கண்ணதாசன் பாடல்கள் காலம் கடந்து நிற்கிறது’ என்ற பாடலாசிரியர் முத்து லிங்கம் முன்னுரையுடன் துவங்குகிறது, இந்நுால். கண்ணதாசன் பாடல்களைத்தான் காலம் முழுக்க எல்லாரும் எழுதி, சிலாகித்து, கொண்டாடி விட்டார்களே, இவர் புதிதாக […]

Read more

முக்தி அளிக்கும் மலை! முதல்வனாய் நின்ற மலை!

முக்தி அளிக்கும் மலை! முதல்வனாய் நின்ற மலை!, கோ.தியாகராஜன், நந்தினி பதிப்பகம், பக். 80, விலை 90ரூ. திருமாலும், பிரம்மாவும் அடிமுடி காண முடியாத இறைவன் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் சிறப்பு மட்டுமல்லாமல், அவரின் பல்வேறு பெருமைகளை தனித்தனி தலைப்புகளில் அழகாக நமக்கு தந்திருக்கிறார் நுாலாசிரியர். சிவ பக்தர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 10/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

குறுந்தொகை ஓவியம்

குறுந்தொகை ஓவியம், வெ.பரமசிவ பாண்டியன், வனஜா, பக். 242, விலை 100ரூ. சங்க இலக்கியங்களில், 4 முதல், 8 அடிகள் கொண்ட, 401 காதல் பாடல்களின் தொகுப்பே எட்டுத் தொகை. எட்டாத காதலின் சுவை நம் மனதை எட்டி தொட்டு இழுக்கும். இதில் உள்ள பறவை, விலங்கு, மனித பாசப் போராட்டங்கள். 205 புலவர்கள் இதைப் பாடியுள்ளனர். கபிலர், பரணர், அவ்வையார் போன்ற புகழ் பெற்ற, 205 புலவர்களும், பெயரே தெரியாத, 10 புலவர்களும் பாடியுள்ளனர். கடந்த, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல்களைப் […]

Read more

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?, எம்.ராமச்சந்திரன், முன்னாள் வங்கி ஏற்றுமதி இறக்குமதித் துறைத் தலைமை அதிகாரி,வசந்த் பதிப்பகம், பக். 650, விலை 700ரூ. ஏற்றுமதித் தொழில் என்பது வருமானம் ஈட்டும் தொழில். அதே சமயம் அதைப் பின்பற்ற ஏராளமான விதிகளும், நடைமுறைகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ள வசதியாக, தமிழில் இந்த நுால் வந்திருப்பது சிறப்பாகும். ஏற்றுமதி – இறக்குமதிக்கான கொள்கை, 2002 – 2007ல் வந்த பின், பலரும் இத்தொழிலில் அதிக முனைப்பு காட்டுகின்றனர். உலக அளவில், 200 நாடுகள் இத்தொழிலில் […]

Read more

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு, நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 100ரூ. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, சாதிக்கொடுமை தலைவிரித்து ஆடியபோது, சமுதாய சீர்திருத்த எண்ணங்களை மக்களிடம் விதைத்து மறுமலர்ச்சி உண்டாக்கிய பகவான் வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு மனதைத் தொடும் வகையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கிறது. புத்தகத்தில் ஆங்காங்கே பகவான் வைகுண்டரின் அகிலத்திரட்டில் இருந்து சிந்தனையைத் தூண்டும் வாசகங்களைக் கொடுத்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 5/2/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027989.html […]

Read more

பேசும் பரம்பொருள் – பகுதி-2

பேசும் பரம்பொருள் – பகுதி-2, சுதா சேஷய்யன், வானதி பதிப்பகம், பக். 480; ரூ.350 ஒவ்வொரு தெய்வத்தின் தோற்றத்தையும், நமது பாரத நாடு எத்தகைய பாரம்பரியத்தைக் கொண்டது என்பதையும் விரிவாகவும், வாசிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் கதை மூலம் நூலாசிரியர் விளக்கியுள்ளார். விநாயகரின் ஒவ்வொரு அங்கத்தைப் பற்றியும்,தோப்புக்கரணம் என்பதன் பொருளையும், விநாயகருக்கு ஒற்றைக்கொம்பன் என்ற பெயர் எப்படி வந்தது, இடது கொம்பை விநாயகர் தானே ஒடித்து எழுத்தாணியாக்கிய சம்பவத்தையும் எத்தனை முறை படித்தாலும் திகட்டாதவிதத்தில் அழகுற விளக்கியுள்ளார். இதேபோல வீரம், துணிச்சலுக்கு அதிபதியான துர்க்கை […]

Read more

வாழ்க்கை ஜெயிப்பதற்கே..!

வாழ்க்கை ஜெயிப்பதற்கே..!, ஞானசேகர்; யூனிக் மீடியா, பக்.198, விலை ரூ.160. வாழ்க்கை சவால் நிறைந்தது. அதை எதிர்கொள்வதற்கு பல எளிய வழிகள் உள்ளன என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள ஆற்றலை அறிந்து முன்னேற வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த கட்டுரையாளர் மிக நேர்த்தியாக பல கருத்துள்ள உண்மை சம்பவங்களையும், கதைகளையும் மிகச் சுருக்கமாக எடுத்துரைத்துள்ளார். இந்நூலில் உள்ள 36 கட்டுரைகளும் தூதன் மாத இதழில் 3 ஆண்டுகள் வெளிவந்ததன் தொகுப்பாகும். இளைய சமுதாயத்தினரை சிந்திக்க வைக்கவும், தோல்விகளைக் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்.456, விலை ரூ.360; சந்தனக் கடத்தல் வீரப்பனை நூலாசிரியர் சந்தித்துப் பேட்டிகள் எடுத்த சம்பவங்களின் தொகுப்பு, திகில் நாவல் வடிவில் உருவாகியுள்ளது. வீரப்பன் சபாரி சூட் அணிந்து கையைக் கட்டியிருக்கும் பழைய போட்டோ மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வீரப்பனின் புதிய போட்டோவை தனது பத்திரிகையில் பிரசுரிக்க நூலாசிரியர் நிருபர் குழுவை அனுப்புவதில் தொடங்கும் விறுவிறுப்பு, நூலின் கடைசிப் பக்கம் வரை நீடிக்கிறது. வீரப்பனைச் சந்திக்க இரண்டரை நாள் 300 […]

Read more
1 3 4 5 6 7 8