ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?, எம்.ராமச்சந்திரன், வசந்த்பதிப்பகம், பக்.656, ரூ.700. ஏற்றுமதி தொழில் செய்வது தொடர்பான அனைத்து தேவையான விவரங்களும் அடங்கிய நூல். ஏற்றுமதி தொழில் செய்வதற்கு செய்ய வேண்டியவைகளான நிறுவனப் பெயர் அமைப்பது, அந்த நிறுவனம் பிரைவேட் நிறுவனமா அல்லது, பார்ட்னர்ஷிப்பா என்று முடிவு செய்வது, பான் கார்டு வாங்குவது, வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்குவது, வங்கியில் கடன் வாங்குவது, ஏற்றுமதி பொருளுக்கு இன்சூரன்ஸ் எடுப்பது உட்பட பல அடிப்படை விஷயங்கள் தெளிவாக விளக்கப்படுகின்றன. எந்தெந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், மதிப்பு […]

Read more

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்

வைணவமும் வைணவத் திருத்தலங்களும், எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 420ரூ. உலகின் மிகப் பழமையான சமயங்களில் ஒன்றான வைணவ சமயத்தின் தனித்துவங்கள், அவை தொடர்பான விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆலய வழிபாடு, பன்னிரு ஆழ்வார்கள், வைணவ பெரியோர்கள், குரு பரம்பரை ஆகிய அனைத்தும் மிக விரிவாக இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திருத்தலங்கள், அவை தொடர்பான வரலாறு, அந்த ஆலயங்கள் அமைந்து இருக்கும் இடம், அவற்றுக்கு எப்படிச் செல்வது என்பது போன்ற அனைத்து பயனுள்ள தகவல்களும் இதில் […]

Read more

நதிபோல ஓடிக்கொண்டிரு

நதிபோல ஓடிக்கொண்டிரு, இரா.காயத்ரி, தினத்தந்தி பதிப்பகம், விலை 100ரூ. தன்னிடம் உள்ள அளப்பரிய ஆற்றலை உணர முடியாமல், சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், மேற்கத்திய கலாச்சாரங்களின் தாக்கங்கள் இன்றைய இளைஞர்களைத் திசை திருப்புகின்றன. அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இந்த நூலை பேராசிரியர் முனைவர் இரா. காயத்ரி படைத்துள்ளார். “சுமைகளைக் கண்டு நீ துவண்டு விடாதே இந்த உலகத்தைச் சுமக்கும் பூமியே உன் காலடியில்தான்” “நீ விழுந்தபோதெல்லாம் தாங்கிப் பிடித்த கை நீ மனம் உடையும் போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் கை தனியே […]

Read more

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும்

காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும், டாக்டர் சு. நரேந்திரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.300, விலை ரூ.250. காலனி ஆதிக்கத்தின்போது நிகழ்ந்த அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்து நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அந்தக் காலகட்டத்தில் மருத்துவத் துறை எவ்வாறு இருந்தது என்பதை பதிவு செய்யும் படைப்புகள் பெரிய அளவில் வெளியாகவில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. சங்ககாலம் முதல் சமகாலம் வரை மருத்துவம் கடந்த வந்த பாதையை தரவுகளுடன் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். […]

Read more

கருத்தியல் பற்றிய சிந்தனைகள்

கருத்தியல் பற்றிய சிந்தனைகள், தேவி பிரசாத் சட்டோபாத்தியாய, தமிழில்: சே.கோச்சடை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட்., பக்.204, விலை ரூ.170. இந்தியப் பண்பாட்டு மரபியலில் ஆக்க அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவை உருவாகி வளர்ந்தமை பற்றி இந்நூல் கூறுகிறது. அதேபோன்று ஏற்கெனவே உருவாகி வளர்ந்திருக்கும் இந்தியாவின் பகுத்தறிவு மரபு, செயலறிவுக் கூறுகள், மெய்யியல், அறிவியல் ஆகியவற்றில் நாம் மேலும் வளர்த்தெடுக்க வேண்டியவை பற்றியும் இந்நூல் கூறுகிறது. பண்டைய இந்தியாவின் செழுமையான அறிவியல், பகுத்தறிவு வளர்ச்சி, ஆதிக்க சக்திகளின் திட்டமிட்ட மெய்யியல் பரப்பலால் […]

Read more

நான்காம் தடம்

நான்காம் தடம், ரா.ஆனந்தக்குமார், விஜயா பதிப்பகம், பக். 670, விலை 600ரூ. சமகால தந்த்ர மார்க்கத்தின் உச்ச குரு என, ஓஷோவால் குறிப்பிடப்பட்டவர், ஜார்ஜ் இவானோவிட்ச் குர்ட்ஜிப். இவர், ருஷ்ய பேரரசின் ஆட்சிக்குட்பட்ட அர்மேனியாவில் பிறந்தவர். பல மார்க்கங்களை கற்றறிந்து, அதன்பின் முற்றிலும் மாறுபட்ட மெய்த்தேடலை கண்டுபிடித்தவர். அந்த ஞானத் தேடலை நுட்பமாக விவரிக்கும் பொருட்டு விழைந்தெழுந்துள்ளது இந்நூல். நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும்

மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும், ராஜதுரை, என்.சி.பி.எச்., பக். 278, விலை 230ரூ. அழகு, அறம், அரசியல் உள்ளிட்ட, கார்ல் மார்க்ஸின் பரிமாணங்கள். உலக இலக்கிய ஆளுமைகளான ஆன்டன் செகோவ், ஆல்பெர்ட் காம்யூ, மேரி ஷெல்லி உள்ளிட்டோர் படைப்புகள் மீதான மதிப்பீடுகளை கட்டுரைகளாக வடித்துள்ளார், இந்நூல் ஆசிரியர். இனவாதம், வர்க்கச்சுரண்டல், ஆணாதிக்கம் என்பனவற்றிற்கு எதிராக போராடிய போராளிகளை பற்றிய கட்டுரைகளும் இதில் உள்ளன. நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

பதிலிகள்

பதிலிகள், மணிநாத், காவ்யா, பக். 140, விலை 150ரூ. முற்போக்கு சிந்தனை, மனித நேயம், அடித்தட்டு மக்களிடம் அக்கறை, நேர்த்தியான படைப்பாக்கம் கொண்ட பதிலிகள் எனும் இந்நூலானது, லவகுசா பாலம், அவலம், நீர்க்கோடுகள், பசி, உறுத்தல் உள்ளிட்ட 15 சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலில் உள்ள சிறுகதைகள், செம்மலர், தாமரை, வண்ணக்கதிர், கல்கி, மக்கள் வீதி, கணையாழி உள்ளிட்ட இதழ்களில் ஏற்கனவே வெளியாகி வாசகர்களின் வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026541.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

நமது கச்சத்தீவு

நமது கச்சத்தீவு, செ.ராசு, வேலா வெளியீடு, பக். 126, விலை 100ரூ. தமிழக மீனவர்களின் கலைந்த கனவு, கச்சத்தீவு. இந்தியாவில் நெருக்கடி நிலை, தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்தபோது, கட்சத்தீவு தாரை வார்க்கப்படுகிறது. ராமேஸ்வரம் மீனவர்களால் இதை இன்னும் ஏற்கமுடியவில்லை. தமிழர்கள் எழுப்பிய செபஸ்தியர் ஆலயம், அவர்களின் வழிபாட்டுத் தலமாய் இன்றும் கச்சத்தீவில் இருக்கிறது.ஆனால், தமிழர்களால் அங்கு சென்று வழிபட அனுமதி இல்லை. இது ஏன் என்பது குறித்து விரிவாக விவரிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027242.html இந்தப் புத்தகத்தை […]

Read more

வெட்டப்படும் கட்டை விரல்

வெட்டப்படும் கட்டை விரல், ச.மருது துரை, அகரம் வெளியீடு. தஞ்சையைச் சேர்ந்த மருத்துவரும் கவிஞருமான ச.மருது துரை கடந்த இருபதாண்டுகளில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.  அறிவியல் தொழில்நுட்பத் தளங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை மருத்துவம் அடைந்திருந்தாலும் அது சமுதாயத் தளத்தில் பிரதிபலிக்காதது ஏன், சாமானியனுக்கும் நலவாழ்வு என்ற தத்துவத்தைத் தொலைத்துவிட்டு நகர்ப்புற நட்சத்திர மருத்துவமனைகளை முதன்மைப்படுத்தியது எது என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான காரணங்களை விளக்குவதோடு தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறார் மருதுதுரை. நன்றி: தி இந்து, 6/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 4 5 6 7 8