தாயில்லாமல் நான் இல்லை

தாயில்லாமல் நான் இல்லை, சம்சுல் ஹூதா பானு, கோதை பதிப்பகம், பக்.204, விலை ரூ.200. ஒவ்வொருவருக்கும் தனது குழந்தைப் பருவம் குறித்த முதல் நினைவு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். சிலருக்கு வாழ்நாளெல்லாம் அந்நினைவு பசுமையாக இருக்கும். பலருக்கு ரண வேதனையாக இருக்கும். அந்தப் பலரில் ஒருவராக தனது வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார் இந்நூலாசிரியர். மூன்று அண்ணன்கள், ஓர் அக்காவுக்குப் பிறகு ஐந்தாவது குழந்தையாக பெண்ணாகப் பிறந்த நூலாசிரியர், குழந்தைப் பருவத்திலேயே தாயைப் பறிகொடுத்துவிடுகிறார். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டும் இன்று சிறந்த குடும்பத் தலைவியாகப் பரிணமித்துள்ளார். […]

Read more

நாகராஜா கோவில்

நாகராஜா கோவில்,  சிவ.விவேகானந்தன்,  காவ்யா பதிப்பகம், பக். 306. விலை  ரூ.300. கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவில் என்ற ஊரின் பெயருக்கு காரணமாக அமைந்த நாகராஜா கோயில் குறித்த ஆய்வு நூல் இது. கோயில் அமைப்பு, கட்டடக் கலை, சிற்பக் கலை, வழிபாடு, திருவிழாக்கள் உள்ளிட்டவை குறித்து அரிய தகவல்களுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர். ஒரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்து, இப்போது சமண, சைவ, வைணவக் கோயிலாக நாகராஜா கோயில் மாறிய வரலாறு விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. கோயில் அமைப்பு மற்றும் கட்டடக் கலை குறித்து […]

Read more

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும்

கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும், ந.அறிவரசன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக்.236, விலை ரூ.200. சங்கப் பாடல்களில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர்தான். அவர் தம்முடைய பாடல்களில் இயற்கை சூழல், இயற்கைக் காட்சிகள், இயற்கையோடு இயைந்த மக்களின் வாழ்க்கைமுறை போன்றவற்றையே பெரிதும் காட்சிப்படுத்துவார். குறிஞ்சிக் கபிலரான அவரை, “இயற்கைக் கவிஞர்’ என்றும் போற்றலாம் என்கிறது இந்நூல். கபிலரின் இயற்கையோடு இயைந்த வாழ்வு, கபிலரின் படைப்பும் பாடுபொருளும், கபிலரின் பாடல்களில் மொழிநடை ஆகிய மூன்று உட்தலைப்புகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். முதல் பகுதியில் கபிலரின் பிறப்பு, குலம், பெயர்க் […]

Read more

மனம் செய்யும் மாய வித்தை

மனம் செய்யும் மாய வித்தை, ரவி வல்லூரி, தமிழில் சுசர்ல வெங்கடரமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ. பலவிதமான பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து இருக்க முடியும் என்றும், மனதை கூர்மையாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்வதன் மூலம், மனம் தானாகவே வலிமை பெற்றுவிடுகிறது என்பதையும் விளக்கும் இந்த நூல், ஆரோக்கியத்துடனும், மனதிடத்துடனும் வாழ்வதற்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்து இருக்கிறது. பிராணாயாமத்தின் சக்தியைக் கூறும் அதேசமயம், யூடியூப் மூலம் வெளிவரும் போலிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. போதையில் இருந்து மீள்வதற்கான வழிகள், […]

Read more

மகா பெரியவா

மகா பெரியவா, வீயெஸ்வி, விகடன் பிரசுரம், விலை 350ரூ. காஞ்சி மடாதிபதியாக இருந்தவரும், பக்தர்களால் மகா பெரியவா என்று அழைக்கப்பட்டவருமான சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் விரிவான வாழ்க்கை வரலாறு இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. அவர் நிகழ்த்திய அற்புதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவர் பிறந்தது முதல் முக்தி அடைந்தது வரை நடைபெற்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கைக் குறிப்பை விவரித்து வரும் அதே நேரம், இடையிடையே காஞ்சிப் பெரியவர் வழங்கிய உரைகளின் சுருக்கமும் தரப்பட்டு இருக்கிறது.  காஞ்சிப் பெரியவருக்கும், ஆங்கிலேயரான பால்பிரண்டன் […]

Read more

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.100. இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது சிந்துவெளி நாகரிக கண்டுபிடிப்பு. அதன் தொன்மையையும், பண்பட்ட வாழ்க்கை முறையையும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த பழமையான நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய நுால் இது. இந்த நுாலில், ஏழு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் சிந்து எனும் புதிர் என்ற தலைப்பில் துவங்குகிறது. அடுத்து, வரலாற்றின் ரயில்பாதை, முதல் முத்திரை, முதல் பானை ஓடு என கட்டுரைகளில் தலைப்புக்கு ஏற்ப தகவல்கள் […]

Read more

சிறிது சிறிதாய்… பெரிது பெரிதாய்…

சிறிது சிறிதாய்… பெரிது பெரிதாய்…, தஞ்சை எழிலன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.125. அறிவியல், ஆன்மிக செய்திகள் என திரட்டி நுால் வடிவமாக்கப்பட்டுள்ளது. நேர்மறை சிந்தனைகள் தான் வளத்தை தரும் என்பதை சொல்லும் குட்டிக் கதைகளும் உள்ளன. மக்களின் நேர்மையை சோதிக்க நினைத்த மன்னன் நடமாடும் தெருவில் கற்குவியலை போட்டான். வண்டி ஓட்டிகள் ஒதுங்கிச் சென்றனர். நடுரோட்டில் கற்குவியல் போட்டவனை வசைபாடி சென்றனர் சிலர். அதை அகற்ற யாரும் முயலவில்லை. நெல் மூட்டையை சுமந்து வந்த விவசாயி கற்குவியலை ஒதுக்கினார். விவசாயியின் நெல் மூட்டை பக்கத்தில் […]

Read more

பீ கேர் ஃபுல்

பீ கேர் ஃபுல், மதுரை சத்யா, செங்கனி பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100. அனுபவங்களால் கற்றுக் கொண்டதை கவிதை போல் வெளிப்படுத்தும் முயற்சி. சொற்குவியலின் தொகுப்பு நுால். சிறிய கவிதை வடிவில் நடப்புகள் சொல்லப்பட்டுள்ளன. முதல் கவிதை, ‘அன்பின் கண்ணாடியை கழற்றிய பின்பே நம்மால் விரும்பப்பட்ட செயல்களை எல்லாம் குருட்டுத்தனம் என்கிறோம்’ என உள்ளது. இது போல் நேரடியாக கருத்துக்களை சொல்லும் கவிதைகள் அடங்கிய புத்தகம். ஒன்றை சொல்லும் முன் ஆயிரம் முறையும், எழுதும் முன் பல்லாயிரம் முறையும் யோசிக்க வேண்டும் என்ற முன்னுரையுடன் வெளிவந்துள்ள நுால். […]

Read more

மாண்டிசோரி கல்வி என்றால் என்ன?

மாண்டிசோரி கல்வி என்றால் என்ன?, மீனாட்சி சிவராமகிருஷ்ணன், முல்லை பதிப்பகம், விலைரூ.20. மாண்டிசோரி கல்வி முறை பற்றி சுருக்கமாக விளக்கும் நுால். கற்பித்தல் முறையில் தலைகீழ் மாற்றங்களை பரிந்துரைக்கும் நடைமுறைகளை கொண்டது. சிறு தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த கற்றல் முறையை உருவாக்கிய டாக்டர் மரியா மாண்டிசோரி பற்றி சுருக்கமான அறிமுகத்துடன் துவங்குகிறது இந்த நுால். தொடர்ந்து கற்பித்தல் உத்திகள் பற்றி சுருக்கமாக பேசப்பட்டுள்ளது. மாற்றுமுறை கல்விக்கான அறிமுக நுால். – ராம் நன்றி: தினமலர், 26/12/221. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை, நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலைரூ.100. இந்திய வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது சிந்துவெளி நாகரிக கண்டுபிடிப்பு. அதன் தொன்மையையும், பண்பட்ட வாழ்க்கை முறையையும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த பழமையான நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய நுால் இது. இந்த நுாலில், ஏழு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதி தொகுக்கப்பட்டுள்ளன. முதலில் சிந்து எனும் புதிர் என்ற தலைப்பில் துவங்குகிறது. அடுத்து, வரலாற்றின் ரயில்பாதை, முதல் முத்திரை, முதல் பானை ஓடு என கட்டுரைகளில் தலைப்புக்கு ஏற்ப தகவல்கள் […]

Read more
1 3 4 5 6 7 8