ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம்,  டி.வி.ராதாகிருஷ்ணன், குவிகம் பதிப்பகம்,  பக்.214,  விலை ரூ.180. ஹைந்தவ பக்தி இலக்கியத்தில் மகாபுராணமான ஸ்ரீமத் பாகவதம் சிறப்பான இடத்தை வகிக்கிறது. பகவத்கீதைக்கு அடுத்தபடியாக அதிக உரைகள் இயற்றப்பட்டதும் பாகவதத்துக்குத்தான். சைதன்யர், வல்லபாசார்யரின் பக்தி மார்க்கத்தின் முக்கிய தூண்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்றாகும். புராண இலக்கியத்தின் கீழ் அமைந்துள்ள இந்த நூல், பக்தி சம்பிரதாய பரவலுக்குப் பெரிதும் அடிப்படையாக அமைந்தது. இதனை இயற்றியவர் வியாசர் என்பது மரபு. நமது புராண இலக்கியங்களின் வடிவத்தையொட்டியே, கதை, கதைக்குள் கதை, கிளைக் கதை என விரிந்து […]

Read more

அறிவோம் ஆன்மிகம்

அறிவோம் ஆன்மிகம், சத்தியவதனா, சத்யா பதிப்பகம், விலைரூ.150 மன அமைதிக்கும், ஒழுக்க நெறிகளுக்கும் துணையாக அமையும் நுால். எத்தனை முறை படித்தாலும், சலிப்பு ஏற்படுத்தாத, 30 கட்டுரைகள் உள்ளன. தர்மத்தின் அளவுகோல் கருத்தும், கல்வி வளம்தரும் கோவில் விளக்கமும், கீதை உபதேசத்தை ஏன் கிருஷ்ணர் செய்தார் என்பது குறித்து எழுதப்பட்டு உள்ளது. வள்ளலாரின் போதனைகளை பட்டியலிடுகிறது. காளிதாசனின், ‘சியாமளா தண்டகம்’ தோன்றிய விதமும், நந்தி பற்றிய குறிப்புகளும் விளக்கமாக உள்ளன. குடும்பத்தில் சண்டை போடாமல் இருந்தால் கிடைக்கும் பலனும், தேர்த் திருவிழாவின் நன்மையும் பயனுள்ளதாக […]

Read more

தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும்

தொல்காப்பியரின் வண்ணக்கோட்பாடும் சங்க இலக்கியமும், முனைவர் ப.ஞானமணி, காவ்யா, விலைரூ.350 தொல்காப்பியத்தில் யாப்பியல் கோட்பாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் குறித்து விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நுால். ஆய்வில் அசை, சீர் பற்றிய அரிய தகவல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியரின், 20 வண்ணங்கள் மற்றும் அவிநயனார் கூறும், 100 வண்ணங்களையும் எடுத்துக் காட்டி விவரித்திருப்பதோடு, பண்டைய இலக்கண ஆசிரியர்களின் ஏற்புடைக் கருத்துகளையும், முரண்களையும், மறுப்புகளையும் முன்வைத்து சங்கப்பாடலில் எடுத்துக்காட்டுகளும் தந்திருப்பது சிறப்பு. வல்லிசை, மெல்லிசை, இயைபு, அளபெடை, நெடுஞ்சீர், குறுஞ்சீர், சித்திர, நலிபு ஆகிய எழுத்தடிப்படை வண்ணங்கள், […]

Read more

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும்

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம்,  பக்.280, விலை ரூ.250. கோயில் சார்ந்த குடிகளும் குடிகள் சார்ந்த கோயிலுமே தமிழர் வாழ்நெறி. ஆனால், கோயில்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் கூட அக்கோயில்களோடு தொடர்புடைய குளங்கள் குறித்து அறிந்திருப்பார்களா என்பது ஐயமே. இந்நூலில் திருக்கோயில்கள் குறித்தும், திருக்குளங்கள் குறித்தும் அரிய பல செய்திகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். திருவாரூர் கமலாலய தீர்த்தக் குளம் குறித்த முதல் கட்டுரையில் தொடங்கி, குத்தாலம், திருச்செங்கோடு, திருவேங்கடம், கும்பகோணம், திருவண்ணாமலை, தாராசுரம், சிதம்பரம் போன்ற தமிழக சிவாலயங்கள் குறித்தும், […]

Read more

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்-தத்துவம்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம்-தத்துவம், சாமி சிதம்பரனார், அழகு பதிப்பகம், பக்.160, விலை ரூ.160. “தமிழில் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய வைத்தியக் கலைதான் சித்த வைத்தியக் கலை. சித்தர்களின் வைத்தியக் கலைக்கு நிகரான கலையுடன் வேறு எந்த வைத்தியக் கலையையும் ஒப்பிட முடியாது. பொதுமக்கள் நோயின்றி வாழ்வதற்காகவே சித்தர்கள் தமது வைத்தியக் கலையை வளர்த்தனர்’ என்றும்; “சித்தர்களின் நூல்களிலே பரிபாஷைகள் பல காணப்படுகின்றன. அவற்றைப் படிக்கும் புலவர்களோ, பொதுமக்களோ அவற்றின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியாது. பரம்பரையாக சித்தர் நூல் பயிற்சி உள்ளவர்கள்தாம், அவற்றின் உண்மைப் […]

Read more

கோடிக்கால் பூதம்

கோடிக்கால் பூதம்,  அ.உமர் பாரூக், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.128, விலை ரூ.150. கரோனா இரண்டாம் அலை தனிநபர் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளைத் துல்லியமாக சித்தரிக்கும் நாவல். டேவிட், மைக்கேல், குமார் ஆகியோரை மையமாகக் கொண்டுள்ள இந்நாவல், கரோனா தொற்று உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது என்பதைக் கூறுகிறது. கேரளாவில் மதபோதகர் பணி செய்யும் டேவிட் கரோனா பொதுமுடக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் சொந்த ஊரில் தங்கியிருக்க, கேரளாவில் உள்ள பெரிய போதகர் அவனை உடனே கேரளாவுக்கு வந்து பணியில் சேரும்படி கட்டளையிடுகிறார். […]

Read more

சாயத்திரை

சாயத்திரை, சுப்ரபாரதிமணியன், காவ்யா, பக்.218, விலை ரூ.200. திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளை மையப்படுத்தி இயங்கிவரும் சாயப்பட்டறைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை கருப்பொருளாகக் கொண்டு புனையப்பட்ட நாவல் “சாயத்திரை’. ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி நஷ்டப்பட்ட சாமியப்பன், அவருடைய உதவியாளர் பக்தவச்சலம் – ஜோதிமணி, அந்நிறுவனத்தின் காவலாளி நாகன் மற்றும் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ஒரு முதியவர் (செட்டியார்) ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டு வட்டார வழக்கில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்பு, வாழ்க்கை ஆகியவை தனித்தனியே விவரிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அனைவரின் […]

Read more

தமிழக மரபுச் சுவடுகள்

தமிழக மரபுச் சுவடுகள், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம்,  பக். 344, விலை ரூ. 300.   தமிழர்களின் மரபுச் செல்வங்களில் அழிந்தவை போக, எஞ்சியிருக்கும் குறிப்பிட்ட சிலவற்றைப் பற்றி விரிவாக அறிமுகம் செய்கிறது இந்த நூல். கல்வெட்டுகளிலும் சாசனங்களிலும் (கூரை) “மேய்தல்’ என்ற சொல்லாட்சி விரவிக் கிடக்கிறது. ஆனால் மேய்தல் என்பதைத் தவறாகக் கருதி வேய்தல் என்று அதை மாற்றும் போக்கு உள்ளது. மேய்தல் என்பது சரியானது என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறார் நூலாசிரியர். மண்டபம் என்ற சொல்லுக்குப் பதிலாக “கற்பந்தல்’ என்ற சொல்லை சிராப்பள்ளி […]

Read more

நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்

நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: இரா.காமராசு, சாகித்திய அகாதெமி, பக்.288,  விலை ரூ.315. 2017 – ஆம் ஆண்டு வரலாற்றியல் ஆய்வறிஞர் நா.வானமாமலையின் நூற்றாண்டு உரையரங்கம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடத்தப்பட்டது. அந்த உரையரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றிய நா.வானமாமலை, ஆசிரியர் பணியைத் துறந்து சொந்தமாக “ஸ்டூடன்ட்ஸ் டுட்டோரியல் இன்ஸ்டிடியூட்’ என்ற தனிப்பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார். அது பின்னர் “வானமாமலை தனிப்பயிற்சி நிறுவனம்’ என்று மாறியது. 1967 – இல் அவர் “நெல்லை ஆய்வுக் […]

Read more

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எச்.வி. ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக். 176, விலை ரூ. 200. டாக்டர் அம்பேத்கர் பற்றிய எண்ணற்ற நூல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அம்பேத்கரின் மிகப் பெரும் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப்படும் இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தைப் பற்றி மிகச் சிறப்பாக இந்நூலில் விவரித்துள்ளார் நூலாசிரியர். “டாக்டர் அம்பேத்கர் அன்ட் த மேக்கிங் ஆஃப் த இந்தியன் கான்ஸ்டிடியூஷன்’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். நூலாசிரியர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டு, அரசியல் சட்ட உருவாக்கத்தைப் […]

Read more
1 6 7 8