பாரதியார் ஆய்வுக்கோவை

பாரதியார் ஆய்வுக்கோவை, கங்கை புத்தகநிலையம், சென்னை, விலை 250ரூ. நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் என்ற கொள்கையோடு உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப் புதுநெறி காட்டிய இருபதாம் நூற்றாண்டின் ஈடிணையற்ற தமிழ்க்கவிஞர் மகாகவி பாரதியார். அவரது 125வது பிறந்த நாள் விழாவையொட்டிச் சிறப்பு வெளியீடாக வந்தது இந்த நூல். இதில் 80 அறிஞர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. பாரதியாருடைய படைப்புகளைப்பற்றி மதிப்பீடாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன. அவரது கவித்திறம், உரைத்திறம், உவமைநலம், கற்பனை வளம், அணிநயம், பாரதியாரின் வரலாறு, வாழ்வியல் அனுபவங்கள், அவரது அரசியல், ஆன்மிக, […]

Read more

அயல் பசி

அயல் பசி, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-7.html உலகம் முழுவதும் பரவியிருக்கும் பலவகையான உணவு கலாசாரங்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஷாநவாஸ். நன்றி: தினத்தந்தி, 14/1/2015.   —- டாக்டர் உ.வே.சா. வாழ்க்கையும் தொண்டும், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. தமிழிலக்கியக் கருவூலங்களை, அரும்பாடுபட்டு, அலைந்து திரிந்து, தேடிக் கண்டுபிடித்து நுணுகி ஆராய்ந்து அச்சேற்றிப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையும், குறிப்பிடத்தக்க தொண்டுகளையும், முக்கிய நிகழ்வுகளையும் தொகுத்தளித்திருக்கிறார் […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, நிழல் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. தமிழ் சினிமா உலகில் வரலாறு படைத்த சிறந்த நடிகர் டி.எஸ். பாலையா. தொடக்கத்தில் வில்லனாக நடித்து வந்த பாலையா, பின்னர் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றார். அவ்வளவு ஏன்? சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒரு படத்தில் அவருக்கு ஜோடி பத்மினி. சொந்தக் குரலிலும் பாடி இருக்கிறார் பாலையா. எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் உள்பட பிரபல நடிகர்களுடன் நடித்துள்ள பாலையா இளைய தலைமுறையுடனும் நடித்துள்ளார். 100 படங்களுக்கு […]

Read more

புதையல் ரகசியம்

புதையல் ரகசியம், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 165ரூ. 5000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆட்சி செய்த மன்னர்களும், ராணிகளும் தலைநகர் கெய்ரோவுக்கு 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்சார் என்ற இடத்தில் புதைக்கப்பட்டனர். அவர்கள் மரணத்திற்குப் பிறகும் சொர்க்கத்தில் வாழ்வார்கள் என்று எண்ணி அவர்கள் உடலோடு விலை மதிப்பில்லாத புதையல்களும் புதைக்கப்பட்டன. இத்தகைய கல்லறைகளை உள்ளடக்கிய பிரமிப்பை தரும் பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் இளம் வயதில் அரியணை ஏறிய மன்னர் டூடங்காமுன் […]

Read more

ஈழக்கனவும் எழுச்சியும்

ஈழக்கனவும் எழுச்சியும், ஜெகாதா, நக்கீரன், சென்னை, விலை 300ரூ. தனி ஈழம் கோரி, இலங்கையில் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தி கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டம் முடிவடைந்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப்புலிகளின் வீரப்போரை விரிவாகக் கூறுகிறது இந்நூல். சம்பவங்களை ஆதாரங்களுடனும், தெளிவாகவும் விவரிக்கிறார் ஆசிரியர் ஜெகாதா. பிரபாகரனுக்கும் மாத்தையா செய்த துரோகத்தைப் படிக்கும்போது, நெஞ்சம் பதைபதைக்கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட மாத்தையா, கடைசி முறையாக மனைவியைப் பார்க்க விரும்பியபோது, அந்த துரோகியைக் காண நான் விரும்பவில்லை என்று கூறிவிடுகிறார் அந்த வீரப்பெண். […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-377-2.html வாழ்ந்த மண்ணில் மேல் ஒரு மனிதன் வைக்கிற பற்றும் பாசமும் வார்த்தைக்கு அடங்காதவை. சொந்த பூமியை மனிதன் இழந்து, வெறும் நினைவுகளோடு மட்டும் நிற்பதுதான் இன்றைய வாழ்க்கை நிர்பந்தம். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெடுத்து, இன்னொரு மண்ணில் வீசி எறிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் ஜடமல்ல. வீசியெறிந்த இடத்தில் வேரூன்றி அவன் நிலை கொள்ள முயல்கிற […]

Read more

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கல்வியை கடல் என்பார்கள். ஆனால் நூலாசிரியர் கல்வியை பூங்கா என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுமையான கருத்துக்களுக்கும், நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குரு வணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக் கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். […]

Read more

ஆசைக்கிளியே அழகிய ராணி

ஆசைக்கிளியே அழகிய ராணி, அனுராதாரமணன், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ. 480க்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 365க்கு மேற்பட்ட நாவல்களையும் எழுதியவர் அனுராதா ரமணன். கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, கதையை வேகமாகக் கொண்டு செல்வதில் வல்லவர். அதனால்தான் இவருடைய 4 நாவல்கள் தமிழிலும், ஒரு கதை தெலுங்கிலும், ஒரு கதை கன்னடத்திலும் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றிவாகை சூடின. ஆசைக்கிளியே அழகியராணி, உனக்காக உமா, குயில் வேட்டை ஆகிய மூன்று நாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. மூன்று கதைகளையும், முக்கனிகளுடன் ஒப்பிடலாம். வழக்கமான முத்திரையை இக்கதைகளில் ஆழமாகப் […]

Read more

இளைப்பாறும் சுமைகள்

இளைப்பாறும் சுமைகள், குன்றக்குடி சிங்காரவடிவேலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. அடிமாடுகள் படும் அவஸ்தைகள் இளைப்பாறும் சுமைகள் என்ற சிறு கதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். குன்றக்குடி சிங்காரவடிவேலு எழுதியுள்ள 15 சிறுகதைகளைக் கொண்ட இந்த தொகுப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. தமிழில், ஜாம்பவான் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களோடு, ஒப்பிடும் அளவுக்கு இளம் எழுத்தாளர்களும், வந்துகொண்டே இருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் ஒன்றை, மற்றொன்று முந்திச் செல்வதுபோல், ஜாம்பவான்களை, இளம் எழுத்தாளர்கள் முந்தி செல்வதும் நடந்துகெண்டு […]

Read more

எழுத்து இதழ்த் தொகுப்பு

எழுத்து இதழ்த் தொகுப்பு, சி.சு.செல்லப்பா படைப்புகள், தொகுப்பு கி.அ. சச்சிதானந்தன், சந்தியா பதிப்பகம், சென்னை. முன்னோடியின் முகம் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் சி.சு.செல்லப்பா. தன் வாழ்நாள் முழுவதையும், இலக்கியத்துக்காகச் செலவிட்டார். அவர் நடத்தி வந்த எழுத்து இதழைச் சிற்றிதழ்களின் முன்னோடி எனச் சொல்லலாம். எழுத்து இதழைத் தொடர்ந்து தான் அதன் மூலம் அறிமுகமானவர்களால், நடை, பிரக்ஞை, கசடதபற, யாத்ரா போன்ற இதழ்கள் தமிழ் இலக்கியத்துக்காக மலர்ந்தன. க.நா. சுப்ரமண்யத்தின் சமகாலத்தவரும் அவரின் நேர் எதிர் இலக்கியக் கோட்பாட்டாளராகவும் சி.சு.செ. இருந்தார். க.நா.சு-வும் […]

Read more
1 102 103 104 105 106 336