இளைப்பாறும் சுமைகள்

இளைப்பாறும் சுமைகள், குன்றக்குடி சிங்காரவடிவேலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. அடிமாடுகள் படும் அவஸ்தைகள் இளைப்பாறும் சுமைகள் என்ற சிறு கதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். குன்றக்குடி சிங்காரவடிவேலு எழுதியுள்ள 15 சிறுகதைகளைக் கொண்ட இந்த தொகுப்பை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. தமிழில், ஜாம்பவான் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களோடு, ஒப்பிடும் அளவுக்கு இளம் எழுத்தாளர்களும், வந்துகொண்டே இருக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்கள் ஒன்றை, மற்றொன்று முந்திச் செல்வதுபோல், ஜாம்பவான்களை, இளம் எழுத்தாளர்கள் முந்தி செல்வதும் நடந்துகெண்டு […]

Read more

இயற்கை வழியில் இனிய பிரவசம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்)

இயற்கை வழியில் இனிய பிரவசம் (ஒரு தகப்பனின் அனுபவ குறிப்புகள்). ப. கலாநிதி, செம்மை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 80, விலை 70ரூ. பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை கட்டாயமா? இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கால்மாட்டில், விளக்கேற்றி வைத்து விட்டதால், ஆங்கில மருத்துவ முறைகள், அரியணையில் அமர்ந்துவிட்டன. பெரும்பாலான பிரசவங்கள், அறுவை சிகிச்சையில் முடிகின்றன. அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமானதற்கு கூட்டுக்கு குடும்ப வாழ்வு சிதைந்ததும் ஒரு காரணம். இன்றைய நிலையில் மீண்டும், மரபு வழி மருத்துவ முறைகளின் […]

Read more

தாய்மைப் பொருளாதாரம்

தாய்மைப் பொருளாதாரம், காந்தியப் பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பா, இயல்வாகை குவாவாடீஸ், பக். 196, விலை 120ரூ. அமெரிக்க உதவி தூக்கு கயிறுக்குச் சமம் அமெரிக்காவின் உதவி தூக்கு கயிறுக்கு சமமானது. இப்படி சொன்னவர் காந்திய பொருளியல் அறிஞர் ஜே.சி. குமரப்பா. இந்த விமர்சனம் அந்த நாளில் பலத்த எதிர்ப்பை சந்தித்தபோதும், குமரப்பாவின் பின்வாங்கவில்லை. இந்திய மண்ணுக்குரிய பொருளாதாரத்தை காந்திய சிந்தனையின் அடிப்படையில், கட்டமைக்க முற்பட்டவர் குமரப்பா. இந்த நூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளவர் வெ. ஜீவானந்தம். எளிய நடையில், மொழியாக்கம் உள்ளது. […]

Read more

எழுத்து இதழ்த் தொகுப்பு

எழுத்து இதழ்த் தொகுப்பு, சி.சு.செல்லப்பா படைப்புகள், தொகுப்பு கி.அ. சச்சிதானந்தன், சந்தியா பதிப்பகம், சென்னை. முன்னோடியின் முகம் தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவர் சி.சு.செல்லப்பா. தன் வாழ்நாள் முழுவதையும், இலக்கியத்துக்காகச் செலவிட்டார். அவர் நடத்தி வந்த எழுத்து இதழைச் சிற்றிதழ்களின் முன்னோடி எனச் சொல்லலாம். எழுத்து இதழைத் தொடர்ந்து தான் அதன் மூலம் அறிமுகமானவர்களால், நடை, பிரக்ஞை, கசடதபற, யாத்ரா போன்ற இதழ்கள் தமிழ் இலக்கியத்துக்காக மலர்ந்தன. க.நா. சுப்ரமண்யத்தின் சமகாலத்தவரும் அவரின் நேர் எதிர் இலக்கியக் கோட்பாட்டாளராகவும் சி.சு.செ. இருந்தார். க.நா.சு-வும் […]

Read more

நாடாளுமன்றம் 2014

நாடாளுமன்றம் 2014, இரா. பாஸ்கர், ஸரிகமபதநி, சென்னை, விலை 100ரூ. முடிவுகள் சொல்லும் கணக்கு நாடாளுமன்றத் தேர்வு முடிந்து ஏழு மாதங்கள் உருண்டோடிவிட்டன. உங்கள் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர் பெற்ற வாக்குகளைக்கூட நீங்கள் அறிந்துகொள்ள முடியும். உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் முன்னிலை பெற்ற கட்சி எது என்று உங்களுக்குத் தெரியுமா? அந்தத் தகவல்களை அவ்வளவு சுலபமாகத் திரட்டிவிட முடியாது. ஆனால் இரா. பாஸ்கர் தொகுத்து வழங்கியுள்ள நாடாளுமன்றம் […]

Read more

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும், வெ. இறையன்பு, ஐ.எஸ்.ஏ., நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 221, விலை 140ரூ. எழுத்தாலும், பேச்சாலும் இளைஞர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டி வரும் இந்நூலாசிரியர், பிரபலமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் ஒருவர். இவரது இந்நூல் இதுவரை 6 பதிப்புகளைக் கண்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் குறித்து போதிய விபரங்கள் இல்லாததால், இத்தேர்வில் பங்கெடுப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்தது. […]

Read more

மகளிர் மகிமை

மகளிர் மகிமை, பி. முஹம்மது சல்தான் ஃபாஜில் தேவ்பந்தி, பி.எம். கலிலூர் ரஹ்மான் மன்பஈ, அமானத் அறக்கட்டளை, சென்னை, பக். 384, விலை 140ரூ. ஆண் பெண் இரு பாலரும் ஒன்றாகப் பேசுவதிலும், பழகுவதிலும் எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். இரு பாலருக்கும் உள்ள ஒழுக்க முறைகள் என்ன – என்பன போன்ற விஷயங்கள் எல்லா சமயங்களிலும் வரையறுக்கப்பட்டுள்ளன. முன்பு இவை முறையாக போதிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டால், பாலியல் குற்றங்கள் என்பது நாட்டில் மிக மிகக் குறைவானதாகவே இருந்தன. இன்றோ இக்குற்றங்கள் பல்கி பெருகி சர்வசாதாரண […]

Read more

கிளைக்குத் திரும்பும் இலைகள்

கிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. பட்டுப்போயின மரங்கள்! பாட்டெடுக்கும் குயில்கள்! மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: […]

Read more

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தானகிருஷ்ணன், நிழல் வெளியீடு, சென்னை, பக். 140, விலை 150ரூ. தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தந்தவர் டி.எஸ். பாலையா. கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பன்முகத்திறன் கொண்ட டி.எஸ். பாலையாவுக்கு இதுவரை ஒரு நிறைவான நூல் இல்லை. அந்தக் குறையை தீர்த்துவைத்திருக்கிறது இந்நூல். பாலையா நடித்திருக்கும் அனைத்துப் படங்களையும் கால வரிசைப்படுத்தித் தந்திருப்பது சினிமா ஆய்வாளர்களுக்கு உதவும் பணி. பாலையாவின் ஆரம்பகால படங்களின் பிரதி எதுவும் கிட்டாத […]

Read more

தமிழர் நெல்

தமிழர் நெல், ஓம் பதிப்பகம், சென்னை, பக். 64, விலை 60ரூ. தமிழர்களின் உணவு, கலாச்சாரம், விழாக்கள் போன்ற அனைத்திலும் நெல்லும் அரிசியும் ஒன்றாகக் கலந்திருப்பதைத் தவிர்க்க முடியாது. பாரம்பரியமான அந்த அரிசி அன்று நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதாய் இருந்தது. இன்று சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல வியாதிகளுக்குக் காரணமாகிவிட்டது. அதற்குக் காரணம். இரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள்தான். இவற்றால் நம் பாரம்பரிய அரிசியின் தன்மைகெட்டு, நோய்க்கான இடமாக இக்கால அரிசி மாறிவருவதைச் சுட்டிக்காட்டுவதோடு, இன்றும் நம்மிடம் உள்ள பாரம்பரிய அரிசிகள் எவை, […]

Read more
1 103 104 105 106 107 336