வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. தன்னம்பிக்கைக் கட்டுரைகள், வெறும் வார்த்தைகளால் அலங்கரிக்கப்படக் கூடாது. அது, வாசகனின் தோளில் கை போட்டு, நடந்து கொண்டே, சுவாரசியமாக செல்வது போல இருக்க வேண்டும் என்பதற்கு, உதாரணமாய் வெளிவந்திருக்கிறது இந்த நூல். மைக்கேல் ஜாக்சன் முதல் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா வரை, 30 பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை அழகாக விவரித்து அதன் மூலம், வாழ்வைப் புரட்டும் மந்திரத்தை சொல்கிறார் ஆசிரியர். திரையில் சூப்பர்மேன் வேடத்தில் நடித்த […]

Read more

தருணம் பார்க்கும் தருணங்கள்

தருணம் பார்க்கும் தருணங்கள், சொ.சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 320, விலை 240ரூ சொல்லாட்சிக் கலையில் சிறந்து விளங்கும் முனைவர் சொ. சேதுபதியின் 22 இலக்கியக் கட்டுரைகளின் இனிய தொகுப்பே இந்த நூல். இலக்கியக் கட்டுரைகளின் அடி நாதமாக, மானிடநேயம், உயிரிரக்கம் ஒலித்துக் கொண்டிருப்பது நூலின் சிறப்பு. தொல்காப்பியம் முதல், தொடுக்கும் முகநூல் முடிய, நுவல்பொருளை வாழ்வியல் நோக்கில் வைத்துப் பார்க்கும் சிந்தனைகளின் தொகுப்பு இந்த நூல். தருணம் எனும் சொல்கொண்டு, சொல் விளையாட்டைச் சுடரச் செய்துள்ள திறம் பாராட்டத்தக்கது. கவிதை, சிறுகதை, […]

Read more

தினகரன் பொங்கல் மலர்

தினகரன் பொங்கல் மலர், தினகரன், பக். 240, விலை 100ரூ. மும்பை தாராவியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை உடன், இந்த மலர் துவங்குகிறது. கடந்த ஆண்டு 1500 குடும்பங்கள், தாராவியில் ஒரே இடத்தில் பொங்கலிட்டு, கொண்டாடி உள்ளனர். வெள்ளம், வறட்சி என தமிழகம் அவதிப்பட்டு வரும் நிலையில், கோவில் குளங்களில் நீர் சேமிப்பது குறித்த முன்னோர் தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரை வரவேற்கப்படத்தக்கது. கர்நாடக சங்கீத வாத்தியங்களில் ஒன்றான கடம், தயாரிக்கப்படுவது குறித்த கட்டுரை, நாய்கள் கண்காட்சி குறித்த, தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே!

காஷ்மீர் இந்தியாவுக்கே!, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 303, விலை 250ரூ. கடந்த, 1947ல் நடந்த இந்தியா பாக்., போர் பின்னணியை முழுமையாக விளக்குகிறது இந்த நூல். ஆசிரியர் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், ராணுவ செயல்பாடுகளையும், நுணுக்கங்களையும் எளிமையாக விவரிக்கிறார். போரின் நிகழ்வுகள், அதில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகம், அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறை என, அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் உரிமை கோரும் பாகிஸ்தானின் நடவடிக்கையை ஏற்க மறுப்பதற்கான காரணத்தை ஆதாரங்களுடன் பேசுவது கடினம். அத்தனை எளிமைப்படுத்தி இருக்கிறார், நூலாசிரியர். காஷ்மீர் […]

Read more

அர்த்தநாரீஸ்வரம்

அர்த்தநாரீஸ்வரம், இரா.த. பாலாஜி, முரண்களரி வெளியீடு, பக். 112, விலை 100ரூ. தற்போது, எஸ்.ஆர்.எம்., சிவாஜிகணேசன் பிலிம் இன்ஸ்ட்டியூட்டின் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பாலாஜியின், ஏழு சிறுகதைகளைக் கொண்ட நூல் இது. வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மனம் தளர வேண்டாம் என்பதை சொல்லும் ‘தன்னம்பிக்கை’, இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைச் சொல்லும் ‘தாகம்’, மனம் விட்டுப் பேசுங்கள், பகைமை உணர்ச்சி வேண்டாம் என்று விளக்கும் ‘எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’, ஆடம்பரச் செலவு அவசியம் அற்றது என்று சுட்டிக் காட்டும், ‘ராயல் […]

Read more

இந்திய நாட்டுப் பண்பாடு

இந்திய நாட்டுப் பண்பாடு, சௌரி, சேது அலமி பிரசுரம், பக். 176, விலை 110ரூ. ராமாயண காலம் முதல் இந்தியாவில் நிலவிய பண்பாட்டை இந்த நூல் விவரிக்கிறது. வால்மீகி ராமாயணத்தின் துணை கொண்டு, பண்டைய சமூகப் பழக்க வழக்கங்கள், கோமாதா நம் குலமாதா என்று ஏன் வழிபடுகிறோம், பசு பராமரிப்பின் பயன், 84 சித்தர்கள், கி.பி. 800 முதல் கி.பி. 1200 வரையுள்ள, 400 ஆண்டுகளில் இந்திய மக்களிடையே சமத்துவ சமுதாய உணர்வைப் பரப்பினர் (பக். 113) ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தெய்வக்கலையாக நடனம் […]

Read more

ஸ்ரீவாமன முனிவர் அருளிய மேருமந்திர புராணம்

ஸ்ரீவாமன முனிவர் அருளிய மேருமந்திர புராணம், உரையாசிரியர் வீடுர் கு. அப்பாசாமி சாஸ்திரியார், ஜைன இளைஞர் மன்றம், பக். 1008, விலை 600ரூ. தமிழில் இயற்றப்பட்ட பழைமையான காவியங்களுள் ஒன்று ஸ்ரீவாமன முனிவரால் இயற்றப்பட்ட இந்த மேருமந்தர புராணம். இந்நூல் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கூடும் என்கிறது பதிப்புரைக் குறிப்பு. இப்புராணம், 1406 செய்யுள்களையும், 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் கதைச் சுருக்கமும் தரப்பட்டிருக்கிறது. அருக நெறியைப் பரப்புவதற்காக உருவான காவியம் இது. ஸ்ரீ புராணத்தில் வரும் மேரு, மந்தரர் ஆகிய இரு […]

Read more

ஹோமியோபதி தத்துவம்

ஹோமியோபதி தத்துவம் (ஆர்கனான் வழியில் விளக்கம்), பழ. வெள்ளைச்சாமி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 435, விலை 300ரூ. ‘முள்ளை முள்ளால் எடு’ என்பது நம்மூர் பழமொழி. அதுபோல ‘ஒத்ததை ஒத்ததால் குணப்படுத்து’ என்பது டாக்டர் ஹானிமன் கண்டுபிடித்த ‘ஹோமியோபதி’ மருத்துவத்தின் தத்துவமாகும். ஹோமியோபதி முறையில் பல புத்தாணடுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நூலாசிரியர், தனது சிகிச்சை அனுபவங்களை இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறார். ஒரு ஹோமியோபதி மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை’ ஆர்கனான்’ என்ற தத்துவ நூலில் டாக்டர் […]

Read more

ஏணிகள் தோணிகள் ஞானிகள்

ஏணிகள் தோணிகள் ஞானிகள், கோ.மணிவண்ணன், திருமகள் நிலையம், பக். 296, விலை 190ரூ. கீழிருப்பவரை மேலே உயர்த்தப் பயன்படுவது ஏணி. ஆழ நீர்நிலையைக் கடக்க உதவுவது தோணி. இவ்விரண்டுமே பயனாளிகளுக்காகக் காத்திருக்கின்றன. பயனாளிகள் இவற்றைத் தவிர்த்தால் நஷ்டம் ஏணிகளுக்கும் தோணிகளுக்கும் அல்ல. இவ்விரு சாதனங்களின் மானுட வடிவமாகத் திகழ்பவர்கள்தாம் ஞானிகள். திருநாவுக்கரசர், வள்ளலார், ரமணர், மகாகவி பாரதி, சங்கரர், ராமானுஜர், சைதன்யர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் எனத்தொடரும் அந்த அருளாளர் பரம்பரையின் நோக்கம், மானுட மேம்பாடு மட்டுமே. நூலாசிரியர், ‘பாபாஜி சித்தர் ஆன்மிகம்’ இதழில் […]

Read more

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.336, விலை 300ரூ. தினமணியில் 2000-2001இல் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக மலர்ந்திருக்கிறது. இன்று மக்களுடைய மனதை ஆட்டிப் படைக்கும் காட்சி ஊடகத்தின் தொழில் நுட்பங்களை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது. சின்னத் திரைக்காக ஒரு காட்சியைப் படம் பிடிப்பது என்பது அவவ்ளவு எளிதானதல்ல என்பதை இந்நூலைப் படிக்கும் யாரும் உணர முடியும். ஷாட்-இல் எத்தனை வகைகள் உள்ளன? எடுக்கப்போகிற காட்சிக்கு ஏற்ப கேமரா கோணம் எப்படி மாறுபடுகிறது? ஒருவரை உயர்வாகக் காட்ட […]

Read more
1 17 18 19 20 21 336