நம்மோடுதான் பேசுகிறார்கள்

நம்மோடுதான் பேசுகிறார்கள், சீனிவாசன் – பாலசுப்ரமணியன், வம்சி புக்ஸ், விலை 200ரூ. மொழி என்பது ஒரு குழுவின் அலங்காரம் மொழியை ஊமையாக்கும் ஓவியம் ஓவியத்தைப் பேச வைக்கும் மொழி -இது எனது ஒரு கவிதை. இந்தக் கவிதைக் கருவுக்குக் காரணமாக இருந்தவை நண்பர் சீனிவாசனின் ஓவியங்கள். அவர் ஒரு சிறந்த ஓவியர். சுதந்திரமான தன் மனதை இன்னும் சுதந்திரமாகக் கித்தானில் பறக்க விடுபவை அவரது வண்ணங்களும், கோடுகளும். ஓவியர் சினிவாசனும் அவரது சக ஓவியரும் நண்பருமான பாலசுப்ரமணியமும் ஓவியம் சார்ந்து உரையாடிப் பகிர்ந்து கொண்ட […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், விலை 180ரூ. தலைமுறைகள் யாதுமாகி ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்கிறது. கொள்ளுப்பாட்டி அன்னம்மாவுக்கு பத்து வயதில் திருமணம் நடக்கிறது. அதன் பிறகான அவளது வாழ்க்கை அடுப்படியின் கரியோடு உறைந்து போகிறது. கொள்ளுப்பேத்தி நீனா ஐஏஎஸ் படிக்கிறாள். இந்த தலைமுறை இடைவெளியை வலியோடும், உறுதியோடும் தாங்கிக்கொண்டு கல்வியையும், நம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார் அன்னம்மாவின் மகள் தேவி. காலக் கடிகாரத்தின் பெண்டுலம்போல தேவியின் மகள் சாரு அம்மாவின் வாழக்கையையும் தன்னையும் பற்றி நினைத்தபடி இருக்கிறாள். […]

Read more

ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி பதில்கள்

ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி பதில்கள், தொகுப்பு ஜெயசிம்ஹன், எழில்முத்து. ஜே.கே. வாசகர் வட்டம் வெளியீடு, விலை 150ரூ. ஜே.கே.வின் பார்வை கல்பனா பத்திரிகை 1979ல் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பத்திரிகை. இது சிறுகதை, குறுநாவலுக்கு முக்கியத்துவம் தந்த பத்திரிகை. இதில் அவர் எழுதிய வலுமையான கட்டுரைகள், கேள்வி பதில் பகுதிகள் ஆகியவை இடம்பெற்ற பக்கங்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. கலைஞர் கருணாநிதியை ஜெயகாந்தன் சந்தித்து எடுத்த நேர்காணல் மிகமுக்கியமானது. அதேபோல் எம்.ஜி.ஆருக்கு அர்த்தமுள்ள கேள்விகள் என்ற பெயரில் அவர் முன்வைத்திருக்கும் கேள்விகளைப் படிக்கும்போது […]

Read more

அண்ணா அருமை அண்ணா

அண்ணா அருமை அண்ணா, ஜி. விசுவநாதன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 90ரூ. பள்ளிக்கூட மாணவர் பருவத்தில் இருந்தே அறிஞர் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, கல்லூரி படிப்பின்போது அவரோடு அடிக்கடி அளவளாவும் வாய்ப்பைப் பெற்று 26 வயதிலேயே அண்ணாவால் பாராளுமன்ற உறுப்பினராக அனுப்பப்பட்டு, தொடர்ந்து சட்டசபை உறுப்பினர், அமைச்சர் என்று அரசியலில் நிறைய முத்திரைகளை பதிப்பித்தவர் வி.ஐ.டி.பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் ஜி. விஸ்வநாதன். அண்ணாவை தொடர்ந்து கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று 4 முதல் அமைச்சர்களுடன் அரசியல் பணியாற்றிய ஜி. விஸ்வநாதன், அண்ணா பற்றி முழுமையாக […]

Read more

நேரு குடும்ப வரலாறு

நேரு குடும்ப வரலாறு, முஹம்மத் யூனுஸ், விகடன் பிரசுரம், விலை 210ரூ. பொது வாழ்க்கையில், குறிப்பாக அரசியலில் மனிதர்கள் எப்படி சந்தர்ப்பவாதிகளாகி, சுயநலம் பேணி, நாட்டையும் மக்களையும் மறந்து, மாறி விடுகின்றனர் என்றும், உண்மை நண்பர்கள், பகைவர்கள் எப்படி செயல்பட்டனர் என்றும் ஒரு 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பல முக்கிய முடிவுகள் எப்படி விளைந்தன என்றும் சுவைபட கூறுகிறது இந்த நூல். நான்கு பகுதிகளாக இந்நூல் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக காந்தீய கொள்கைகளை, சுதந்திரப்போராட்டம் – அதற்காக ஏற்பட்ட இன்னல்களை, இடர்களை தெளிவாக்குகிறது. […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 250ரூ. தன்னம்பிக்கையும், மன உறுதியும் இல்லாத காரணத்தினால்தான் பலருடைய பொன்னான காலம் வீணாகி அவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஒருவரது திறமையை வளர்க்க ஒரு ஆசிரியரே, வழிகாட்டியோ நிச்சயம் தேவை. அந்த ஆசிரியர் ஒரு புத்தகமாகவோ, மனிதனாகவோ ஏன் நமது மனதாகக்கூட இருக்கலாம். எனவே, திறமை வளர்க்கும் வழிகளை எல்லாவற்றிலும் தேடுங்கள் என 62 […]

Read more

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. சின்னத்திரை கலையின் ஒவ்வொரு பகுதியும் தனி நூலாக வெளியிடும் அளவிற்கு விரிவானவை என்றாலும் சின்னத்திரையின் தோற்றம், அதன் கருவிகளின் இயக்கம், கலை நுட்பங்களில் விளக்கம், காட்சி ஊடகப் படைப்பாக்கத்தின் நுணுக்கம், தொழில் நுட்பங்களின் மாற்றம் என அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியது இந்நூல். தொலைக்காட்சி பற்றி நம் முன்னோர்கள் கற்பனை செய்ததிலிருந்து இன்று வரையிலும் வரலாற்றுப் பாதையின் முக்கிய மைல்கற்கள் சுவையுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சின்னத்திரை பற்றிய பல்வேறு தொழில்நுட்பச் சொற்களை இயன்றவரை தமிழில் படைத்திருப்பதும், […]

Read more

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள்

நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டைத் திரைக்கலைஞர்கள், பி.வெங்கட்ராமன், மணிவாசகர் பதிப்பகம், விலை 50ரூ. நடிக மன்னன் பி.யூ. சின்னப்பா, திரைப்பட டைரக்டர் ப. நீலகண்டன், கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள், புகழின் உச்சத்தைத் தொட்டவர்கள். அவர்களின் நூற்றாண்டு விழா ஒரே நேரத்தில் கொண்டாடப்படுகிறது. எனவே மூவரின் சிறப்பை விவரிக்கும் இந்த நூலை எழுதியுள்ளார் பி. வெங்கட்ராமன். இவரும் புதுக்கோட்டைக்காரரே! இன்னும் நிறைய தகவல்களுடனும், படங்களுடனும் இதை பெரிய புத்தகமாக வெளியிடலாமே! நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   —- சிவரகசியம், கீர்த்தி, சங்கர் பதிப்பகம், […]

Read more

பெண்களும் நலவாழ்வும்

பெண்களும் நலவாழ்வும், நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 100ரூ. மனிதனைக் கருக்கொண்டு உருவாக்கும் பெண் மக்கள் நோயின்றி வாழ்ந்தால்தான், நல்ல மக்கள் செல்வத்தை உலகிற்குத் தர இயலும். மனித இனத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் மக்களை மனதில் கொண்டு பெண்ணின் உடல்கூறு அமைப்புகளை விளக்கி அவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களைக் குறித்தும், அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பெண்கள் மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவர் நா. மோகன்தாஸ் எழுதியுள்ள இந்நூல் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாகும். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   […]

Read more

கவுரி கருமை காளமேகம்

கவுரி கருமை காளமேகம், (தமிழாய்வுக் கட்டுரைகள்), க. கதிரவன், இராசகுணா பதிப்பகம், பக்.130, விலை 168ரூ. செவ்விலக்கியங்களும் கேரள உணவுகளும் இந்த நூல் பல்வேறு அரங்குகளில் படிக்கப்பெற்ற 11 கட்டுரைகளின் தொகுப்பு. சங்க இலக்கியம், இரட்டைக் காப்பியங்கள், பக்தி இலக்கியம், தனிப்பாடல், இக்கால இலக்கியம் ஆகிய தளங்களில், ஆசிரியருக்குள்ள புலமையைக் காட்டுகிறது. நூலாசிரியர், தனது அறிமுக உரையினைத் தற்சிறப்பு பாயிரம் என்னும் பெயரில் அமைத்து, உள் தலைப்புக்களுக்குப் படலம் என்று பெயரிட்டுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வு நெறிமுறைகளுக்கேற்ப கருதுகோளுடன் சிறந்த ஆய்வு முடிவையும் தருகிறது. […]

Read more
1 19 20 21 22 23 336